Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

பூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை

பூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை

வீட்டின் பூஜை அறையில் விநாயகருக்கு முக்கிய இடம் உண்டு விநாயகர் சிலை, படங்கள் இல்லாத பூஜை அறைகளை பார்க்க முடியாது
எனினும் வீட்டில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. குறிப்பாக எல்லா திசையிலும் வைத்து வழிபடக்கூடாது
வடகிழக்கு மூலையில் விநாயகர் சிலையை வைப்பது சிறப்பானதாகும் மேலும் விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டில் உள்ள எந்த அறையையும் பார்த்தபடி இருக்கக் கூடாது. ஏனெனில் சிலையின் பின்புறம் வறுமையை குறிக்கும்
அதனால் விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும். விநாயகர் சிலை வெள்ளி போன்ற உலோகத்தால் ஆனது என்றால் அதனை வட கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்கலாம். அறையின் தென்  திசையில் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது
வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வழிபடலாம். கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்க கூடாது.
Find your dream property in Chennai 
Find business in your location 

பத்திரப்பதிவு: மோசடியைத் தவிர்க்க பக்கா வழிகள்

!
Posted Date : 15:12 (18/12/2013)Last updated : 11:12 (24/12/2013)
பத்திரப்பதிவு: மோசடியைத் தவிர்க்க பக்கா வழிகள்!
இந்திய அளவில் பத்திரப்பதிவு நடைமுறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. முதலிடத்தில் ஆந்திராவும், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மூன்று, நான்காம் இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் பத்திரப்பதிவில் இன்னும் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டால் முதன்மை மாநிலமாக முன்னேற்ற முடியும்? குறிப்பாக, மோசடிகளைத் தவிர்க்க எந்த மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்? இந்த விஷயங்களில் மற்ற மாநில நடைமுறைகளில் உள்ள சிறந்த விஷயங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம்!
கிரயப் பத்திரத்தில் சொத்தின் புகைப்படம் இடம் பெறும்போது, மோசடிகளை பெருமளவு குறைக்க முடியும். இதற்கான நடவடிக்கை, இந்தியாவில் முதல்முறையாக மத்தியப்பிரதேசத்தில் 2005-ல் கொண்டுவரப்பட்டது. அதாவது, கிரயப் பத்திரத்தில் குறிப்பிடும் சொத்தின் புகைப்படத்தைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்கிற நடவடிக்கையை அமல்படுத் தினார்கள்.
இதனைத் தொடர்ந்து குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களிலும் அமல்படுத்தப் பட்டது. காலி நிலங்களுக்கு ஒரு புகைப்படமும், வீடு அல்லது அடுக்குமாடி கட்டடங்களுக்கு இரண்டு புகைப்படங்கள் (முன்பக்கம் மற்றும் பக்கவாட்டுப் படம்) இணைக்கப்பட்டன. இந்த நடைமுறையைத் தமிழகத்திலும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பத்திரப்பதிவின்போது விற்பவரின் பெயரில் உள்ள பட்டா சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் சமீபத்தில் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றை (பட்டா) கிரயப் பத்திரம் பதியும்போது விற்பவர்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் தற்போது சொத்தை விற்பனை செய்ய பத்திரம் பதியும்போது, விற்பவர் பெயரில் உள்ள பட்டாவைக் கொண்டுவருவது கட்டாயம் என கோவை உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் நடைமுறையாக உள்ளது. இதைத் தமிழகம் முழுக்க  கொண்டுவர வேண்டும்.
ஆன்லைன் வில்லங்கச் சான்றிதழ்!
ஆந்திராவில் வில்லங்கச் சான்றிதழ்களை 1998-ம் ஆண்டு முதல் பதிவுத் துறையின் வெப்சைட் மூலம் பார்க்கும் வசதி (e-encumbrance) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 30 ஆண்டு காலத்துக்கான வில்லங்கத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதி கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த வசதி 2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வீட்டில் இருந்தே எப்போது வேண்டுமானாலும் சொத்து விவரங்களைப் பார்த்துக்கொள்ள முடியும். இதனால் ஏதாவது மோசடி நடந்திருந்தாலும் தெரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டிலும் இந்த நடைமுறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாம்.
பவர் ஆஃப் அட்டர்னி!
தமிழகத்தில் கடந்த 2010 முதல் பவர் ஆஃப் அட்டர்னி தொடர்பாக பல நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பத்திரப்பதிவு மோசடி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பவர் ஆஃப் அட்டர்னி தரப்பட்டிருக்கும் விஷயத்தை வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடும் வசதி தமிழகத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் எலெக்ட்ரானிக் பவர் ஆஃப் அட்டர்னி (e-General Power of Attorney) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வசதி, ஆந்திராவில் பத்திரப்பதிவு வெப்சைட்டில் உள்ளது.
பவர் ஆஃப் அட்டர்னி பத்திரம் யார் எழுதினார்கள், யார் ஏஜென்ட், அந்த பவர் பத்திரம் தற்போதும் அமலில் உள்ளதா மற்றும் அந்த பவர் பத்திரம் மூலம் எழுதப்பட்ட பிற பத்திரங்கள் எவை என்பதை ஒருசில விநாடிகளிலே தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த வசதி தமிழகத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பவர் ஆஃப் அட்டர்னி, ஒரு வருடத்துக்குதான் செல்லுபடியாகும். இதைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.
பத்திரப்பதிவு: தொடர் விவரங்கள்..!
நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் அமலில் உள்ள ஒரு சிறப்பான நடைமுறையைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம். புதுச்சேரியில் ஒரு பத்திரம் பதிவு செய்யும்போது, அந்தப் பத்திரத்தின் தாய்ப்பத்திரம் மற்றும் மூலப்பத்திரத்திலும் இந்தப் பத்திரப்பதிவு விவரம் குறிப்பிடப்படுகிறது.
உதாரணத்துக்கு, 2013-ல் பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரத்துக்கு 2002-ம் ஆண்டு தாய்ப்பத்திரம் மற்றும் 1987-ம் ஆண்டு மூலப்பத்திரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சொத்து பதிவு செய்யும்போது அசல் தாய்ப்பத்திரம் மற்றும் அசல் மூலப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த மூலப்பத்திரத்தில் 2002-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டு பத்திரப்பதிவு எண் குறிப்பிடப்படும்.
எந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட மூலப்பத்திரம் மற்றும் தாய்ப்பத்திர விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் போலிப் பத்திரங்கள் தவிர்க்கப்படுகின்றன. இந்த நல்ல நடைமுறையைத் தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.
கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை..!
இந்தியாவில் சில மாநிலங்களில் பெண்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டால், முத்திரைத்தாள் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. (பார்க்க அட்டவணை) தமிழகத்திலும் இதுபோன்ற கட்டணச் சலுகைளை அமல்படுத்தலாம். இதன்மூலம் பெண்களுக்கு கூடுதல் சமூக அஸ்தஸ்து கிடைக்கும். மேலும், குடும்பச் சொத்துகள் எளிதில் விற்கப்படுவது குறையும்.

கட்டணத்தைக் குறைக்க வேண்டும்!தமிழகத்தில் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது முத்திரைக் கட்டணம், சொத்தின் அரசு வழிகாட்டி மதிப்பில் 7% மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவிகிதமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் இதைவிட மிகக் குறைவான கட்டணம் உள்ளது.

முத்திரைத்தாள் பதிவுக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் பலரும் பத்திரம் பதிவு செய்யாமல், பவர் ஆஃப் அட்டர்னி நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்கலாம்.
குறைவான முத்திரைத்தாள் கட்டணம் உள்ள மாநிலங்கள் என்று பார்த்தால்,  குஜராத்தில் 4.9 சதவிகிதமாகவும், மஹாராஷ்ட்ரா, ஒடிஷா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 5 சத விகிதமாகவும், ஆந்திரப்பிரதேசத்தில் 4 சத விகிதமாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 சத விகிதமாகவும் உள்ளன.
குறைவான பத்திரப்பதிவு கட்டணம் உள்ள மாநிலங்கள் எவை என்று பார்த்தால், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 10,000 (அதிகபட்சம்) ரூபாயும், ஹரியானாவில் 15,000 (அதிகபட்சம்) ரூபாயும், இமாச்சலப்பிரதேசத்தில் 25,000 (அதிகபட்சம்) ரூபாயும் மஹாராஷ்ட்ராவில் 30,000 (அதிகபட்சம்) ரூபாயும் உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள சில மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தில் உச்சவரம்பு தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
இதர மாநிலங்களில் உள்ள சிறப்பான பத்திரப்பதிவு நடைமுறைகளைத் தமிழகத்தில் கொண்டுவருவதன்மூலம், தமிழகத்தில் பத்திரப்பதிவில் ஏற்படும் மோசடிகளை வெகுவாகக் குறைத்துவிடலாமே!

அகலக்கால்... அபாயம்! சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்

கஷ்டம் வரும்போதுதான் கடவுள் ஞாபகம் வரும். இப்போது சிலருக்கு கடவுளோடு நிதி ஆலோசகர்களின் ஞாபகமும் வருகிறது. கணேஷ், சுதா தம்பதிகள் ஏறக்குறைய அந்த மாதிரியான ஒரு தம்பதிதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ்(40), சுதா(36) இருவரும் என்னைச் சந்தித்தபோது இருவருமே பணியில் இருந்தார்கள். சுதாவுக்கு அரசு நிதித் துறையில் வேலை. அவர் வாங்கிய சம்பளம் பிடித்தம்போக ரூ.40,000. கணேஷ§க்கு தனியார் துறையில் விற்பனைப் பிரிவில் வேலை. அவர் வாங்கிய சம்பளம் ரூ.45,000. இவர்களுக்கு அபர்ணா (12 வயது), அர்ஜுன் (10 வயது) என இரண்டு குழந்தைகள்.
தவறான அணுகுமுறை!
இருவரும் இரண்டு ஃப்ளாட்களை வாங்கி முதலீடு செய்ததைப் பெருமையாக என்னிடம் சொன்னார்கள். முதல் ஃப்ளாட்டுக்கு ரூ.25 ஆயிரம் இ.எம்.ஐ. கட்டி வந்தார்கள். வீடு வாங்கும்போது விலை ரூ.25 லட்சம். அதன்  தற்போதைய மதிப்பு ரூ.40 லட்சத்திற்கும் மேல். இந்த விஷயம்தான் அவர்களைப் பெருமை கொள்ள வைத்திருப்பதற்கான காரணம் என்று எனக்கும் விளங்கியது.
முதல் முதலீடு வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவதாக இன்னொரு ஃப்ளாட்டை வாங்கினார்கள். அதற்கான இ.எம்.ஐ. மாதத்திற்கு ரூ.20,000. மேலும், பில்டருக்கு முன்பணமாகத் தர ரூ.3 லட்சத்தைக் கடன் வாங்கி இருந்தார்கள். அதற்கு அவர்கள் கட்டிவந்த இ.எம்.ஐ. ரூ.15,000. ஆக மொத்தம் அவர்களின் மாத வருமானத்தில் பெரும் பங்கு வீட்டுக் கடனுக்காக இ.எம்.ஐ. செலுத்துவதிலேயே செலவானது. இதனோடு அவர்களின் குடும்பச் செலவு ஒரு மாதத்திற்கு ரூ.20,000. மற்ற செலவுகள்போக, மேற்கொண்டு முதலீடு செய்வதற்கு அவர்கள் கையில் பணமில்லை.
இந்த நிலையில், அடுத்த ஒரு வருடத்தில் இன்னுமொரு ஃப்ளாட்டை வாங்கப் போவதாகச் சொன்னார்கள். ஏன் இப்படி அடுத்தடுத்து ஃப்ளாட்களை வாங்குகிறீர்கள் என்று கேட்டேன். பிற்பாடு குழந்தைகளின் திருமணத்தின்போது ஃப்ளாட்டை விற்று, செலவைச் சமாளிக்கவே இப்படி செய்வதாகச் சொன்னார்கள். அகலக்கால் எப்போதும் அபாயத்தையே விளைவிக்கும். அத்தியாவசியத் தேவைக்கு ஒரு ஃப்ளாட் போதும். குழந்தைகளின் படிப்பு, திருமணம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு ரியல் எஸ்டேட் முதலீட்டை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். மூன்றாவது ஃப்ளாட்டை வாங்கும் எண்ணத்தை சில ஆண்டு தள்ளி வையுங்கள் என்றேன். இதனால், கடன் சுமை அதிகரிப்பதைத் தடுக்கலாம். தவிர, மாத பட்ஜெட்டில் ரூ.19,000-20,000 துண்டுவிழும் என்பதை எடுத்துச் சொன்னேன்.
இன்ஷூரன்ஸ் இல்லை!
முதலீட்டில் மட்டும் இத்தனை அக்கறை யோடு இருந்தவர்கள், போதிய அளவு ஆயுள் காப்பீடு எதுவும் இல்லாமல் இருந்தது ஆச்சர்யமான விஷயம். கணேஷ், சுதா இருவருக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.40-50 லட்சம் பியூர் டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவை என்று வலியுறுத்தினேன்.
எதிர்காலத் தேவை!
முதல் குழந்தைக்கான படிப்புக்கு அடுத்த சில வருடங்களில் ரூ.8 லட்சம் வரை தேவை.  இதைச் செய்யும்முன், இரண்டாவது வீடு வாங்க அவர்கள் எடுத்திருந்த பெர்சனல் லோனை முதலில் முடிக்கவேண்டும். காரணம், இதற்கு வட்டி அதிகம்.
நான் சொன்ன யோசனைகளை கேட்டபிறகு, மீண்டும் என்னை சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போனவர்கள், போனவர்கள்தான். நீண்ட காலம் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்து என்னை சந்தித்தார்கள். அவர்கள் முகத்தில் பழையபடி கவலை ரேகை. ''சார், நீங்கள் சொன்னதைக் கேட்காமல் மூன்றாவது ஃப்ளாட்டை கையில் இருந்த நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் வாங்கிவிட்டோம். வீடு கட்டி முடிக்க தாமதமாகிறது. நீங்கள் சொன்னது போல் மாதம் 20,000 ரூபாய் துண்டுவிழுகிறது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல் வருமான உயர்வும் கிட்டவில்லை. என்ன செய்யலாம்?'' என்று கேட்டார்கள்.
எனக்கு இது புதிதல்ல. நிதி ஆலோசனைக் கேட்டு வருகிற பலரும் நான் சொல்வதைக் கேட்டு தலையைத் தலையை ஆட்டுவார்கள். பிறகு அதை அப்படியே விட்டுவிடுவார்கள். நிதி ஆலோசனை என்பது விளையாட்டுத்தனமான விஷயமல்ல. அது ஒருவரின் வாழ்க்கையை சீர்திருத்தி அமைக்கும் செயல்.
இது எனக்குத் தெரியும் என்பதால், அவர்கள் செய்த தவறை பெரிதுபடுத்தாமல், ஒரு நண்பர் போல மீண்டும் ஆலோசனைகளைத் தரத் தொடங்கினேன். தற்போதைய நிலையில் பணப்புழக்கத்திற்கு வழியே இல்லாததால், ஏதேனும் ஒரு வீட்டை விற்று, வரும் பணத்தைக் கொண்டு பெர்சனல் லோன், கோல்டு லோன்களை முதலில் அடைத்துவிட்டு வருமாறு சொன்னேன். மேலும், வருமான வரிச் சலுகைகளையும் பெற ஆலோசனை கூறினேன்.
குழந்தைகளின் படிப்பு!
இரண்டு வாரங்களுக்குப் பிறகு எனக்கு போன் செய்த கணேஷ், வீட்டை விலை பேசி முடித்துவிட்டதாகச் சொன்னார். நான் முன்னரே அவர்களுக்கு திட்டமிட்டதுபோல், குழந்தைகளின் படிப்பு, திருமணம் மற்றும் ஓய்வுக்கான சேமிப்புகளைத் தொடங்கினார்கள்.  ஆனால், அதற்கான பணம் அவர்களிடம் அதிகமில்லை.
கைதந்த டியூஷன்!
சேமிப்புக்கு என்று மீதி நிற்கும் தொகையே 1,000 ரூபாய்தான். அதனால் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா வருமானம் தேவை. அவர்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைத் திருந்தால் இந்நிலைமையை ஓரளவுக்கு சரி செய்திருக்கலாம். வரவில்லை என்பதால் எக்ஸ்ட்ரா வருமானத்தை ஈட்ட இருவரையும் பகுதி நேரமாக பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து சம்பாதிக்கச் சொன்னேன்.
முதல் இரண்டு மாதங்கள் பெரிய வருமான மில்லை என்றாலும் அடுத்து வேகமெடுத்தது. அதனால் மாதம் ஒன்றுக்கு 15,000 ரூபாய் சம்பாதித்தார்கள். அந்தப் பணத்தை வேறெதுக்கும் பயன்படுத்தாமல் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக, அவர்களின் ஓய்வுக்காலத்திற்காகப் பிரித்து மியூச்சுவல் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யச் சொல்லி நல்ல வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளையும் பரிந்துரை செய்தேன். இதை அவர்கள் செய்தால் எதிர்காலம் குறித்து கவலை இல்லாமல் இருக்கலாம். அவர்கள் செய்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது!''
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

சென்னை ரியல் எஸ்டேட்: கிரெடாய் கலந்தாய்வு கூட்டம்

  • சென்னை ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்து ரியல் எஸ்டேட் நிறுவன கூட்டமைப்பான ‘கிரெடாய்’ மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘ஜோன்ஸ் லேங் லசாலே’ சார்பில் கலந்தாய்வு கூட்டம் அண்மையில் நடந்தது.
  • கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, சந்தை நிலவரம், குடியிருப்பு சொத்து வகைகள், ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் காரணிகள், சந்தையில் உடன் நிகழக்கூடிய மாற்றங்கள், முதலீட்டுக்கான வழிகாட்டல்கள் குறித்து ஆராயப்பட்டது.
  • ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், தமிழ்நாடு ‘கிரெடாய்’ அமைப்பின் தலைவருமான சந்தீப் மேத்தா கூறியதாவது:–

  • ரியல் எஸ்டேட் என்றும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. சமீப காலமாக தங்கம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் கவனம் ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பியுள்ளது. ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடு அதிக லாபம் கொடுப்பதாக இருப்பது இதற்கு காரணம். ரியல் எஸ்டேட் முதலீடு சில ஆண்டுகளில் பலமடங்கு லாபத்தை கொடுக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

  • இடத்துக்கு ஏற்ப வருமானம் சிறிதளவு மாறுபடும் என்றாலும் மதிப்பு குறையாது. சென்னையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் செலவீனங்கள் போக சேமிப்பில் கணிசமான தொகை ஒதுக்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற சிறந்த முதலீடாக ரியல் எஸ்டேட் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
  • சந்தீப் மேத்தா
  • உலகளவில் முக்கிய நாடுகளில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியாவில் மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை 26வது இடத்தில் உள்ளது" என்றார்

புழுதிவாக்கத்தில் வீடு இடிந்து ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்!

Posted Date : 14:28 (05/04/2014)Last updated : 15:09 (05/04/2014)
சென்னை: புழுதிவாக்கத்தில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாக 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியான புழுதிவாக்கத்தில் பாரதிநகர் பிரதான வீதியில், புழுதிவாக்கம் பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள ஜெயபால் என்பவருக்கு சொந்தமான வீடு நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீட்டின் தரைத்தளத்தில் சந்திரா என்கிற ஹோட்டலும், முதலாவது மாடியில் ஒரு குடும்பமும் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு அந்த வீடு இடிந்து விழுந்தபோது ஹோட்டலில் நான்கு மேற்குவங்க இளைஞர்களில் மூவர் சாப்பிட்டுவிட்டு வெளியேற, 22 வயதான மன்சூம் ஷேக் என்பவர் மட்டும் கைக்கழுவிக் கொண்டிருந்திருக்கிறார். மன்சூம் ஷேக் மீது வீடு இடிந்து விழுந்ததும், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட அவர் ஹோட்டலைவிட்டு வெளியே சென்ற தனது நண்பர்களை தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனை காப்பாற்ற கூறியிருக்கிறார். அப்போது மீண்டும் கட்டிடம் கீழே அமுங்கியதால், மன்சூம் ஷேக் நள்ளிரவு 1 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டார்.
அதேநேரம், முதலாவது மாடியில் குடியிருந்த சிவகுமாரின் மனைவி தீபா, 3வது படிக்கும் மகள் மணிஷா, ஒரு வயது குழந்தை கீர்த்தனா மற்றும் அவர்களது உறவுக்காரப் பெண்ணான விமலா ஆகியோர் வீட்டில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விமலா கூறுகையில், ''அப்போது நான் வீட்டை பெருக்கி கொண்டிருந்தேன். சின்ன சத்தத்துடன் வீடு அசைவதை உணர்ந்து கத்திக் கொண்டே நானும் மனிஷாவும் வெளியே ஓடி வந்தோம். உண்மையில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதாகதான் நினைத்தேன். பாப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டு தீபா உள்ளே சிக்கி கதறியழுது கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து இருவரையும் பத்திரமாக மீட்டுவிட்டனர்" என்றார் பதற்றத்துடன்.

இந்த சம்பவ பற்றிய தகவல் அறிந்து உடனே வந்த மடிப்பாக்கம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி, படங்கள்: செ.கிரிசாந்

காணாமல் போன மலேசிய விமானம்: கடலுக்கு அடியில் தேடும்பணி தொடக்கம்

காணாமல் போன மலேசிய விமானம்: கடலுக்கு அடியில் தேடும்பணி தொடக்கம்
 
பதிவு செய்த நாள் - ஏப்ரல் 05, 2014, 11:39:20 AM
மாற்றம் செய்த நாள் - ஏப்ரல் 05, 2014, 11:39:56 AM
காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களை கடலுக்கு அடியில் தேடும் பணி தொடங்கியுள்ளது. விமான கருப்புப் பெட்டியின் பேட்டரி சில தினங்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல்களை கண்டறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. விமானம் காணாமல் போய் ஒரு மாத காலத்தை நெருங்கும் நிலையில், பேட்டரி செயலிழப்பதற்கு முன்னர் கருப்புப் பெட்டியை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும். சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தொலைவில் பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் இணைந்து விமானத்தின் பாகங்களை தேடி வருகின்றன. கடந்த மாதம் 8ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் எம்.எச்.370 விமானம், புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.

நான் இசைப்பிரியா

நான் இசைப்பிரியா

ஓயாத கடலின் அலைகள்
இடைவிடாது என்னுடலில் மோதியபடி
மடிந்து சரிகின்ற வேளையில்
ஆழமாய் வேர்ப் பரப்பி
விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல
என்னை இழுத்துச் செல்கிறாய்

என் காலடியிலிருந்து
ஒழுகி வழியும் நீர்த்துளிகள்
உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய்
வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும்.

அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும்
மிருகத்தின் வெறிகொண்டு
என்னை வல்லுறவு செய்கின்றாய்

சதையை ஊடுருவிய உன்னால்
என் நிலத்தின் நிணநீர் ஓடும்
எலும்புகளை என்ன செய்ய இயலும்?

என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு
அதன் அடியிலிருக்கும்
நெருப்பின் சூடு தகிக்கவில்லையா?

நீ ஏந்திய இரும்புக் கருவியும்
பாய்ச்சிய உடற்குறியும்
இனி எழுச்சியின் அமிலத்தில்
கரைந்தே போகும்

என் இரத்தத்தில் பூத்திருக்கும்
செங்காந்தள் மலர்களே
என் நிலமெல்லாம் செழித்திருக்கும்

வெகுகாலமில்லை வெகுதூரமுமில்லை.
                    - சுகிர்தராணி

ஈழ இன அழிப்புப் போருக்கு இன்னும் ஓர் ஆதாரமாக வெளிவந்திருக்கிறது இசைப்பிரியாவின் வீடியோ. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட சேனல் 4 தொலைக்காட்சி, இப்போது இசைப்பிரியா உயிருடன் நடமாடும் காட்சிகளை வெளியிட்டுள்ளது. மனதை கனக்கச் செய்யும் அந்தக் காட்சியில்... சேறு நிரம்பிய ஒரு வயல்வெளியில் இசைப்பிரியா வீழ்ந்து கிடக்கிறார். அவரது உடல் நிர்வாணமாக்கப்பட்டுள்ளது. அருகில் இலங்கை ராணுவ வீரர்கள் நிற்கின்றனர். இன்னொரு ராணுவ வீரர் கையில் ஒரு வெள்ளைத் துணியுடன் வருகிறார். அந்தத் துணியை இசைப்பிரியாவின் உடலின் போர்த்தி, அவரை அழைத்துச் செல்கின்றனர்.
''இவர்தான் பிரபாகரனின் மகள்'' என்று ஒரு ராணுவ வீரர் சொல்கிறார்.
''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா.
வெறும் மூன்று வார்த்தைகள்தான். அதை சொல்லும்போது இசைப்பிரியாவின் குரலை கவனியுங்கள்... சொல்ல முடியாத சோகம் மனதை கவ்விக்கொள்ளும். ஒரு மாபெரும் வீரப் போராட்டம் வீழ்ந்து போனதையும், எதிரிகளின் முன்னே நிர்வாணமாய் நிற்க நேர்ந்த அவமானத்தையும், கூட்டு வன்முறைக் குழுவிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் அச்சத்தையும், துடிக்கும் உயிரின் கடைசி நேர பரிதவிப்பையும்.... அந்தக் குரலில் உணரலாம். அது இசைப்பிரியாவின் குரல் மட்டும் அல்ல. அந்தக் காட்சியின் பின்னணியில் குண்டுச் சத்தங்கள் இடைவிடாமல் ஒலிப்பதைக் கேட்கலாம். அவற்றில் பல்லாயிரம் இசைப்பிரியாக்களின் உயிர் ஓலங்கள் உறைந்திருக்கின்றன. இசைப்பிரியா, அவர்களின் பிரதிநிதி.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் செய்தி வாசிப்பா ளராக, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக பணிபுரிந்த இசைப்பிரியா கொல்லப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தி மூடிவைக்கப்பட்ட படத்தை ஏற்கெனவே சேனல் 4 வெளியிட்டு இருந்தது. அந்த வெள்ளைத் துணிக்குப் பின்னே மறைந்திருந்த கதைதான் இப்போதையை வீடியோவில் உள்ளது.
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் சூழலில், இசைப்பிரியாவின் வீடியோ புதிய அழுத்தங்களை உருவாக்கியுள்ளது. இலங்கை அரசோ வழக்கம்போல, ''அது போலியான வீடியோ'' என்று புறங்கையால் மறுத்துள்ளது. அது மட்டுமல்ல... இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயகார, ''இந்தப் பொய்யான வீடியோவை மட்டும் காரணமாகக்கொண்டு, காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை இந்திய அரசு பொருட்படுத்தத் தேவையில்லை; ஏனெனில் தமிழ்நாடு மட்டுமே இந்தியா அல்ல'' என்று கூறியிருக்கிறார். மனித உரிமை என்ற அம்சத்தில் இந்த வீடியோவை அணுகும் ஒருசில மேற்குலக நாடுகள், ஒருவேளை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கலாம். இந்த வீடியோவுக்கு முன்பே காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கனடா அரசு  அறிவித்து, அதற்கு இலங்கையின் போர்க்குற்றத்தையே காரணமாகவும் கூறியுள்ளது. வேறு எந்த நாடும் இதுவரை அப்படி அறிவிக்கவில்லை.
இந்த சமயத்தில் கடந்த ஆண்டு சேனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப் படத்தை நினைவில் கொண்டுவர வேண்டும். அப்போது வெளியிடப்பட்ட பாலச்சந்திரன் புகைப்படங்களால் தமிழகத்தில் மிகப் பெரும் மாணவர் போராட்டம் வெடித்தது. கட்டுக்கடங்காத அந்தப் போராட்டம் மாநிலம் தழுவியதாகவும், அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது. இறுதியில்... ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையும், மைய நோக்கமும், அமைப்பு பலமும் இல்லாமல் மாணவர்களின் எதிர்ப்பு அரசியல் சிதறிப்போனது என்றாலும், அந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான மாணவர்களை அரசியல் படுத்தியது. அதுபோன்ற பெருந்திரள் மாணவர் போராட்டத்துக்கான எழுச்சி இப்போது பெரிய அளவில் தென்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க... அத்தகைய எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதில் மாநில அரசு முனைப்போடு இருக்கிறது. அதனால்தான் காமன்வெல்த் எதிர்ப்புப் போராட்டங்கள் அதிரடியாக முடக்கப்படுகின்றன. அதில் ஈடுபடுவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது.
இசைப்பிரியாவின் இந்த வீடியோப் பதிவு நம்மை நிலைகுலைய வைக்கிறது. இதுபோன்றுதானே ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனும் கோரமாக சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பான்? இதுபோன்றுதானே தமிழ் மக்கள் உயிர் வதையோடு உடல் சிதறி செத்திருப்பார்கள்? எந்த மண்ணில் காலூன்றி விடுதலைக் கனவுடன் போரிட்டார்களோ... அதே மண்ணில் எதிரிகளால் சிதைக்கப்பட்டு கொல்லப்படுவது அவலத்திலும் அவலம்.
பாரதி தம்பி

சாக்லெட் மாமாவும் ரகசிய கேமராவும்!

பெங்களூருவில் ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது அம்மா, சகோதரி ஆகியோரின்  படம் ஆபாசமாக இன்டர்நெட்டில் வெளியாகியிருக்கிறது. அதை போஸ்ட் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இருந்தார். போலீஸ் விசாரணையில் இறங்கியது. அந்தப் படத்தை போஸ்ட் செய்தது யார் தெரியுமா... புகார் கொடுத்தவரின் மனைவி. குடும்பச் சண்டையில் விவாகரத்து வாங்கிய அந்தப் பெண், பழைய பகையை இப்படித் தீர்த்துக்கொண்டுள்ளார். அந்தப் பெண்ணும் இப் போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபோல, ஒரே வீட்டில்  இருக்கும் கணவன், மனைவிக்குள் ஈகோ மோதல் வரும்போது, இன்டர்நெட்டில் அவதூறுச் செய்திகளை போஸ்ட் செய்வது, மார்ஃபிங் செய்து அசிங்கமாகப் படத்தை போஸ்ட் செய்வது என்று சிலர் ஈடுபடுகிறார்கள். நேரடியாக எதிர்கொள்ளத் துணிவில்லாமல் மறைமுகமாக இதுபோல மனரீதியான டார்ச்சர் கொடுக்க நினைத்து போலீஸாரிடம் சிக்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றன.
சாக்லெட் மாமாவும் ரகசிய கேமராவும்!
சென்னை, சூளைமேட்டில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹும்ஸ் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளிடம் அன் பாகப் பேசுவார். சாக்லெட் கொடுப்பார். அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விளையாடி இருக்கிறார். பிறகு அந்தக் குழந்தைகளை தகாத உறவுக்கு பயன்படுத்தி இருக்கிறார். அதைத் கேம ராவிலும் வீடியோ எடுத்து நெட்டில் உலவ விட்டிருக்கிறார். இன்டர்போல் போலீஸ் இதைக் கண்டுபிடித்து, சென்னை போலீஸுக்குச் சொல்லியது. வில் ஹும்ஸ் கைது செய்யப்பட்டார். அதன்பிறகுதான் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு விஷயமே தெரிந்தது. இந்தச் சாக்லெட் மாமாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
ஆயிரத்துக்கு பத்து!
சோழிங்கநல்லூரில் இருக்கும் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் செய்த தகிடுதத்தம் வித்தியாசமானது. நம்பர் விளையாட்டு என்ற டெக்னாலஜியைத் தெரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்தி ஆன் லைனில் மோசடி செய்திருக்கிறார். டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்வார். உதாரணத்துக்கு, ஆயிரம் ரூபாய்க்கு இவர் ஒரு பொருளை பர்ச்சேஸ் செய்கிறார் என்றால், இவரது அக்கவுன்ட் உள்ள வங்கிக்குப் போகும்போது நம்பர் விளை​யாட்டை செயல்படுத்துவார். ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதில் வெறும் பத்து ரூபாய்தான் டெபிட் ஆகும். ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் பொருளை விற்கும் கம்பெனிக்குப் போகும். அதைப் பெற்றுக்கொண்ட கம்பெனி இந்த மாணவர் கேட்ட பொருளை சப்ளை செய்துவிடும். ஆக, அந்த மாணவருக்கோ, கம்பெனிக்கோ நஷ்டமில்லை. ஆனால், வங்கிக்குத்தான் நஷ்டம். ஒருகட்டத்தில், வங்கி அதிகாரிகள் உஷாராகி போலீஸுக்கு சொல்ல... அந்த மாணவர் பிடிபட்டார்.
ரகசிய சினேகிதன்!
பிரபல வங்கியின் பின்னணியில் செயல்படும் ஐ.டி. நிறுவனம் அது! அங்கு உயர் பதவியில் இருந்த ஒரு இளம்பெண், தனது காதலனுக்காக கம்பெனியில் திருட்டுத்தனத்தைச் செய் திருக்கிறார். நீண்டகாலமாகப் பயன்படுத்​தாத வங்கிக் கணக்குகள் எவை என்று கணக்கெடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை ரகசியமாக வேறு கணக்குக்கு மாற்றியிருக்கிறார். கணக்கில் பணம் குறைவதை எதேச்சையாகப் பார்த்த கஸ்டமர் வங்கியில் விசாரிக்க... அந்தப் பெண் மாட்டிக்கொண்டார். அதற்குள், ஒரு கோடி ரூபாயைச் சுருட்டி​விட்டார். காதலன் பணத்தை எடுப்பதற்குள் போலீஸ் மடக்கிவிட்டது. அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பது கூடுதல் தகவல்.
- இப்படியாக தினமும் ஒரு சைபர் க்ரைம் சம்பவங்கள் நடக்கின்றன. வெளிநாடுகளில் ஒரு டாலருக்கு ஒரு​ வைரஸ் என்றெல்லாம் கிடைக்கிறதாம். இதை ஆன்லைனில் விலைக்கு வாங்கி தனக்கு வேண்டாதவர்களின் மெயில், செல் போன்களில் பரவவிடுகிறார்கள் சைக்​கோ குணம் கொண்ட சிலர். அவ்​வளவுதான்..! எதிர்தரப்பினரின் கம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள அத்தனை தகவல்களும் காணாமல் போய்விடும். அவர் படும் அவஸ்தையைப் பார்த்து ரசிக்கும் குரூர குணம் உள்ளவர்களை என்ன செய்வது?
தலைவனை நெருங்காத போலீஸ்!
மதுரையில் ஒருமாதத்துக்கு முன், போலி கிரெடிட் கார்டு கும்பலைப் பிடித்தார் அப்போதைய போலீஸ் டெபுடி கமிஷனர் ஃபெரோஸ்கான் அப்துல்லா. பிடிபட்டவர்கள் சொன்னதில் இருந்து உலக அளவில் அதிக பண பரிவர்த்தனை செய்யும் பணக்காரர்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக விற்கும் வெப்சைட்டுகள் இருப்பதை அறிந்து அதிர்ந்தாராம். அங்கே பணத்தை ஆன்லைனில் செலுத்தி விவரங்களை மதுரைக் கும்பல் வாங்கி மோசடி செய்திருக்கிறது. மதுரை, திண்டுக்கல், நெல்லை என முக்கிய ஊர்களில் உள்ள பிரபல ஜுவல்லரி, துணிக்கடை போன்ற 17 நிறுவனங்களில் 80 லட்ச ரூபாய் வரை போலி கிரெடிட் கார்டில் சுருட்டியிருக்கிறார்கள். இதற்கு மதுரையில் உள்ள வங்கி ஒன்றின் அதிகாரியும் உடந்தை​யாம். இந்தக் கும்பலின் நெட்-வொர்க் வெளிநாடுகளுக்கும் நீண்டிருக்கிறது. திருச்சி ரவி என்பவன்தான் தமிழகத்தில் உள்ள போலி கிரெடிட் கார்டு மோசடிக் கும்பல்களுக்குத் தலைவனாம். அவனை இன்னும் போலீஸ் நெருங்கவில்லை.  தமிழகத்தில் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை மோச​டிப் பேர்வழிகள் ஆன்லைனில் ஏமாற்றியிருக்கிறார்கள்.
தலை... உடல்... ஆபாச எஸ்.எம்.எஸ்.!
சென்னை சைபர் க்ரைம் போலீஸ் என்ன சொல்கிறது? ''60 சதவிகிதம் பேர் செல்போன் வழியாக இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். இதில் குடும்ப வன்முறைகள்கூட தொடர்புப் படுத்தப்படுகிறது. பழிவாங்கும் விதமாக, இன்டர்நெட்டில் உள்ள ஆபாசப் படங்களை எடுத்து தங்கள் குடும்பத்து நபர்களின் தலைப் பகுதியை மட்டும் அந்த உடலோடு இணைத்து போஸ்ட் செய்கிறார்கள். மனைவியின் டார்ச்சர் சகிக்க முடியாத கணவன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு மனைவிக்கே ஆபாச
எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அப்படியாவது, அவள் கவனம் வேறுபக்கம் திரும்பும் என்று தப்புக் கணக்குப் போட்டு சிக்கலில் மாட்டிக்​கொள்கிறார். இதேபோல, கணவரின் டார்ச்சர் தாங்கமுடியாத மனைவிகள் வேறு விதத்தில் கணவர் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இவர்கள் எங்களிடம் புகார் செய்வார்கள். யார் இதைச் செய்தது என்பதை தெரிந்துகொள்வதற்காகத்தான் எங்களிடம் வருகிறார்கள். எங்கள் விசாரணையில் இன்னார் என்று தெரிந்ததும், புகாரை வாபஸ் பெற்றுச் செல்கிறார்கள். நாங்களும் மனிதாபிமான முறையில் அதைக் கண்டுகொள்ளாமல்விட வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள்.
திருடப்படும் ரகசியங்கள்!
சென்னையில் உள்ள நாஸ்காம் (தகவல் தொடர்பு மற்றும் சாஃப்ட்வேர் தொழிற்சாலை​களின் கூட்​டமைப்பு) மண்டல இயக்குனர் புருஷோத்தமனிடம் இதுபற்றி கேட்டோம். ''இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் ஐ.டி. மற்றும் பி.பி.ஒ. துறைகளில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். 1.2 கோடி பேர் இந்தத் துறைகளில் மறைமுக வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். 100 பில்லியன் டாலர் புழங்கும் துறைகள் இவை. தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி தரும் துறைகள் இவை. இப்போது, டேட்டா திருட்டுதான் பெரிய பிரச்னை. வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம ஊர் சாஃப்ட்வேர் நிறுவனங்களை நம்பித்தான் தங்களின் ரகசியங்களைத் தருகின்றன. இங்குள்ள சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த ரகசியங்களைத் திருடுகின்றனர். இது தெரிந்தால், இந்திய சாஃப்ட் வேர் நிறுவனங்களின் நம்பகத்தன்மை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைப்பார்கள்? சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் எங்களிடம் வந்தார். வேலையை விட விரும்புவதாகவும் ஆனால், அவரை அந்த நிறுவனம் விடுவிக்க மறுப்பதாகவும் புகார் சொன்னார். விசாரித்தால், அவர் என்னென்ன ரகசியங்களை திருடியிருக்கிறார் என்று அந்த நிறுவனம் பெரிய பட்டியலே தருகிறது. இப்படிப்பட்டவரை என்ன செய்வது? இதேபோல், இன்னொரு நிறுவனத்தில் டேட்டா திருடிய நபரை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பினோம். பொதுவாகவே, ஐ.டி. துறையினரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்தான் இந்தத் துறையில் ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல், பாதிப்புகளும் இவர்களிடம்தான் அதிகம். அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தின் நல்லது கெட்டது குறித்து பள்ளியில் இருந்தே படிப்படியாக போதிக்க வேண்டும். அப்போது​தான், எதிர்காலத்தில் கெட்டது நடக்காது'' என்றார்.

சைபர் வார்!
இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் பெரு நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புக்கான விசேஷ 

சாஃப்ட்வேர்களை தயார் செய்கிறது ஃபிக்ஸ்-நிக்ஸ் என்ற தனியார் நிறுவனம். சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகவேல் சங்கரன் நம்மிடம் பேசினார். ''உலகின் பெரிய நாடுகளுக்கு இடையே இந்த நிமிஷம்கூட சைபர் வார் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்றாவது உலகப்போர் ஏற்பட்டால், நிச்சயமாக அது சைபர் போராகத்தான் இருக்கும். தரைப் படை, விமானப் படை, கப்பல் படை எதுவுமே  இல்லாமல் ஏ.சி. அறைக்குள் இருந்து கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்திப் பேரழிவை உண்டாக்க 

தயாராகி வருகிறார்கள். உதாரணத்துக்கு, 2010-ம் ஆண்டு 'ஸ்டக்ஸ்நெட்' என்ற வைரஸை அமெரிக்கா ஏவியது. அது, ஈரான் நாட்டு அணுமின் உலை ஒன்றை நோக்கிப் போனது. அங்குள்ள முக்கிய சிஸ்டத்தை தாக்கியது. இதனால், அது செயல் இழந்தது. அந்த அட்டாக் ரிவர்ஸ் ஆகி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய கம்ப்யூட்டர் மையங்களையும் தாக்கி சேதப்படுத்தியது. ஈரான் விடுமா? பதிலுக்கு, அமெரிக்க வங்கிகள் மீது சைபர் போர் நடத்தியது. இப்படி மாறி மாறி போர் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் முக்கிய வெப்சைட்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,191 சைபர் அட்டாக் நடந்திருக்கிறது (முழு விவரங்களுக்கு... பார்க்க  வரைபடம்). எந்த ஒரு அவசர சூழ்நிலையையும் எதிர்கொள்ள எல்லா வகையிலும் இந்தியாவும் தயாராகத்தான் இருக்கிறது. ப்ரிசம், எட்வர்ட் ஸ்நவ்டன் லீக்குக்கு பிறகு, இந்தியர்களால் தயாரிக் கப்பட்ட மென்பொருட்களை மட்டுமே மத்திய அரசு உபயோகப்படுத்த விரும்புகிறது. இந்தவகையில், சுமார் 20 இந்திய தகவல் பாதுகாப்பு(information security) சாஃப்ட்வேர் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்'' 
 என்றார்.

மெயிலைத் திறந்தால் வைரஸ் வரும்!
புதுடெல்லியில் உள்ள மைக்ரோ சாஃப்ட் இந்திய தலைமை கணினி பாதுகாப்பு அதிகாரி பா.கணபதி சுப்ரமணியத்திடம் பேசினோம். ''லாட்டரியில் நீங்கள் பரிசு வென்று இருக்கிறீர்கள் என்றோ, விலை உயர்ந்த கார் உங்களுக்கு காத்திருக்கிறது என்றோ வரும் மின்னஞ்சல்கள் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கக் கூடும். 'என் ராஜ் ஜியத்தில் பாதி தருகிறேன்’ என்றுகூட உங்களை வசியப்படுத்தலாம். ஆனால், அத்தனையும் டுபாக்கூர். உங்களை ஏமாளியாக்க செய்யப்படும் முயற்சிகள். தொடர்பே இல்லாத, முகமறியாத நபர் எதற்காக இப்படித் தர முன்வருகிறார் என நாம் யோசிப்பதில்லை. அந்த அஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கும் டாக்குமென்ட்களை நாம் தயக்கமின்றி திறந்து பார்த்தவுடன், ‘malware’ என்று அழைக்கப்படும் தீங்கிழைக்கும் வைரஸ்கள் யாருடைய அனுமதியுமின்றி நம் கணினியில் வந்து அமரக்கூடும். நம் கணினியில் நாம் வைத்துள்ள மற்ற டாக்குமென்ட்கள் மற்றும் சாஃப்ட்வேர்களை அழிக்கக் கூடும். வங்கித் தளங்களில் நாம் பயன் படுத்தும் பாஸ்வேர்டை நமக்குத் தெரியாமல் பதிவுசெய்து, இந்த வைரஸை பரப்பியவருக்கு பரிமாற்றம் செய்யும். தவிர, அந்த வைரஸ் வெகுவேகமாக நம் கணினியையும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற கணினிகளுக்கும் வேகமாகப் பரவக்கூடும்.  Phishing  என்று அழைக்கப்படும் தூண்டில் இன்னொரு வகை அட்டாக். நிஜமான இணையதளம் போன்றதொரு தோற்றத்தில் தயாரிக்கப்படும் போலி தளங்கள் Phishing site   என அழைக்கப்படுகின்றன.

உதாரணத்துக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இணையத்தளம் போன்றதொரு போலியான தளத்தின் முகவரியுடன் உங்களுக்கு ஒரு மெயில் வரலாம். அத்தகைய இணைய தளங்களுக்குச் சென்று நாம் நம்முடைய பாஸ்வேர்டு கொடுத்து ஓப்பன் செய்யும்போது, நம் விவரங்கள் அந்தப் போலி தளத்தை இயக்கும் நபருக்குப் போய் சேருகிறது. பிறகென்ன? அந்த வசூல் ராஜாக்கள் நம்முடைய வங்கிக் கணக்குகளில் இருந்து சுல பமாகப் பணத்தைத் திருடுகின்றனர்'' என்றவரிடம், ''இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் இருந்து நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.
''போலி சாஃப்ட்வேர்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். தீங்குகள் தரக்கூடிய பல வைரஸ் மற்றும் நாசம் விளைவிக்கக் கூடிய சாஃப்ட்வேர்கள் அத்தகைய போலிகளுடன் மறைந்து வரலாம். ஆண்டாண்டு காலமாக நாம் சேர்த்து வைத்திருக்கும் தகவல்கள் ஒரு நொடியில் காணாமல் போய்விடும். எந்த பிரபல நிறுவனத்தின் சாஃப்ட்வேர்களை பயன்படுத்தினாலும் அவற்றின் லேட்டஸ்ட் வெர்சன்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவை மூலமும் வைரஸ் பரவும் ஆபத்து உண்டு. உங்கள் கணினியில் வேறு நபர்களின் மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிஃபென்டர் என்ற மென்பொருளை இலவசமாகத் தருகிறது. www.microsoft.com என்ற முகவரியில் இருந்து நீங்கள் அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தடுப்பு சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துவது சரியல்ல. அத்தகைய சாஃப்ட்வேர்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, அதனால் சில சமயங்களில் பிரச்னைகள் ஏற்படும்'' என்று எச்சரிக்கை செய்தார்.
கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் சமாளிக்கலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது? உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.
- பாலகிஷன்

கேடு விளைவிக்கும் சுய மருத்துவம்!

 ,,,

டம்பு அனலாக் கொதிக்குது... தொண்டையில எச்சில்கூட விழுங்க முடியலை. அதுக்கு ஏதாவது மாத்திரை கொடுங்க'' - இன்று மருந்துக்கடையில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய வார்த்தைகள் இவை. டாக்டரைப் பார்க்க டோக்கன் வாங்கி, மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டும். கன்சல்டேஷன் ஃபீஸ் என்ற பெயரில் நூறோ, இருநூறோ மருத்துவருக்கு அழ வேண்டும். அவர் நான்கு - ஐந்து நாட்களுக்கு எழுதித் தரும் மருந்தை, மொத்தமாக வாங்கவேண்டும் என்பதால், பலரும் மருத்துவரை அணுகுவதற்குப் பதில் நேராகப் போய் நிற்கும் இடம் மருந்துக் கடை. நன்கு படித்தவர்களோ, இன்டர்நெட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் என்ன பிரச்னை, அதற்கு என்ன மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 'கூகுள் சர்ச்’ செய்துவிட்டு, மருந்து வாங்கிச் சாப்பிடுகின்றனர். இப்படி, மருந்துக்கடையில் டாக்டர் பரிந்துரை இன்றி, சுயமாக மருந்து வாங்குதல் (over the counter) அதிகரித்துவிட்டது. இந்தச் சுய மருத்துவத்தின் பாதிப்புகள் பற்றி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மருத்துவப் பேராசிரியர் பாலமுருகேசன் விரிவாகப் பேசுகிறார்.
'மக்கள் அதிக அளவில் மருந்துக்கடைகளில் வாங்குவது வலி நிவாரணிகள்தான். இபுப்ரூஃபென் (ibuprofen), கீட்டோப்ரூஃபென் (ketoprofen), நேப்ராக்ஸன் (naproxen) போன்ற வலி நிவாரணிகளை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அல்சர், இதயப் பிரச்னை, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஜலதோஷம் பெரும்பாலும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. எந்தவித மருந்தும் இல்லாமல் ஏழே நாட்களில் தானாகவே சரியாகிவிடும். எனினும், ஜலதோஷம் வந்தால் உடனே குணமாக வேண்டும் என்று மருந்துக்கடைக்குச் சென்று, வலி நிவாரணி, ஆன்டிஹிஸ்டமின், ஆன்டிபயாடிக்ஸ் என்று மருந்துகளின் ஒரு சேர்க்கையை வாங்குகிறோம். இதற்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளே தேவை இல்லை. இதைப்போல் ஆன்டிபயாடிக்ஸைத் தவறாகப் பயன்படுத்தும்போதுதான், 'ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ்’ உருவாகி மருத்துவ உலகுக்குப் பெரும் பிரச்னையாக விளங்குகிறது.
நோய்க்கு அளிக்கப்படும் மருந்தை எதிர்க்கும் தன்மையைக் கிருமி பெறுவதற்கு, 'ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ்’ என்கிறோம்.
நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கடைக்காரரின் கவனக்குறைவுதான் ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்ஸ் உருவாக முக்கியக் காரணம்.
மருந்தின் செயல்பாடு என்பது அளவு, வயது, ஒருவரது எடை, கிருமியின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஒருவருக்கு எவ்வளவு மாத்திரை கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு அதை எடுத்துக்கொள்ள, பரிந்துரைக்க வேண்டும் என்பது டாக்டருக்கு மட்டுமே தெரியும்.
ஒரு நோய்க்கு ஐந்து நாட்களுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளும்படி டாக்டர் பரிந்துரைக்கும்போது, நோயாளி, இரண்டு நாட்களில் நோயில் இருந்து பூரண குணம் அடைந்ததும் மாத்திரை போடுவதை நிறுத்திவிடுவார். நோய்க் கிருமி முற்றிலுமாக ஒழிய ஐந்து நாட்கள் மாத்திரை எடுத்திருக்க வேண்டும். இரண்டு நாட்களில் நிறுத்தியதால் கிருமி அழியாமல், அந்த மருந்து எதிராகச் செயல்படும் தன்மையை அடைந்துவிடும். பிறகு, மீண்டும் நோயை ஏற்படுத்தும்போது, அந்த மாத்திரை பலன் அளிக்காது. 'ஸ்டீராய்ட்’ என்பது, இருமுனைக் கத்தி போன்றது. 'ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ்’, 'இடியோபதிக் த்ராம்போசைட்டோபீனிக் பர்புரா’ போன்ற பல்வேறு நோய்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக, 'ஸ்டீராய்ட்’ பயன்படுகிறது. ஆனால், அதைச் சரியாக உபயோகப்படுத்தாவிட்டால், சர்க்கரை நோய், கண்புரை போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். பல மருந்துக் கடைகளில் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவை தாராளமாகக் கிடைக்கின்றன' என்றவர், இதைத் தடுக்கும் முறைகளை விளக்கினார்.
எந்த ஓர் உடல்நலப் பிரச்னைக்கும் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
மருத்துவர் ஆன்டிபயாடிக்ஸை, குறிப்பிட்ட கால அளவுக்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினால், அறிகுறிகள் சரியானதும் நிறுத்தாமல் முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றுக்கு டாக்டர் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளை, மீண்டும் காய்ச்சல் வந்ததும் நாமாக வாங்கிச் சாப்பிடுவது கூடாது.
தலைவலி போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
பி.ஃபார்ம் படிக்காமல் மருந்துக்கடையில் பணிபுரிபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலோபதி மருந்துகள் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் அலோபதி மருத்துவர் மட்டுமே அறிவார். அலோபதி மருந்துகளை ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- மு.ஜெயராஜ் படங்கள்: எஸ். தேவராஜன், எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்

Buying And Selling Land Plot House And Residential Property


  • Hi Every One We Doing Buying And Selling  Land Plot House And Residential  Property And All Commercial Property  Agriculture Property In Chennai  Redhils Area And North  India Chennai Redhils Pammathukulam Gandhi Nagar  And Lakhshmipuram And Alamathi And Edpalayam And Avadi Velanoor Area.........9884342786......9551994407,,,,,,,,,,,,,

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left