Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிப்பதில் புதிய சிக்கல்

சென்னை,
கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெளிவாக இல்லாததால், சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல்சென்னை கொளத்தூர், லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 29), மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார். ஆனால் ரெயில் சென்றுவிட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்திலேயே படுத்து தூங்கினர். அப்போது அவர்களது 5 மாத குழந்தை யாழினியை மர்ம பெண் ஒருவர் தூக்கிச் சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணின் உருவம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த கடத்தல்காரியை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தெளிவாக இல்லைதனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகள், குழந்தை கடத்தல் வழக்கில் ஏற்கனவே பிடிப்பட்ட பெண்கள் என பல்வேறு தரப்பினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் குழந்தையை கடத்திச் சென்றது யார்? என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பழுதாகியிருந்ததால் கடத்தல்காரியின் முகம் தெளிவாக பதிவாகவில்லை. ரெயில் நிலையத்தில் பிற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமே குழந்தையை தூக்கிச்சென்ற பெண் அடையாளம் காணப்பட்டார். ஆனாலும் அவளது முகம் தெளிவாக இல்லை.
திருவான்மியூரில் யாழினி?திருவான்மியூர் பகுதியில் யாழினி தோற்றத்தில் ஒரு குழந்தை இருப்பதாக திருவான்மியூர் போலீசார் நேற்று ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார், ராஜாவுடன் அங்கு சென்று பார்த்தபோது அது யாழினி இல்லை என தெரிந்தது.
ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கண்காணிப்பு கேமராவில் பதிவான சுடிதார் அணிந்த அந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும். அந்த பெண்ணின் உருவத்தை தெளிவான புகைப்படமாக மாற்ற ஸ்டூடியோவிற்கு அனுப்பியுள்ளோம். அந்த புகைப்படம் வந்த பின்னர் அதனை மற்ற போலீஸ் நிலையங்களுக்கு அனுப்புவோம். 2 நாட்களில் குற்றவாளியை அடையாளம் காண்போம்’’ என்றார்.

உயர் போலீஸ் அதிகாரியின் ‘செக்ஸ்’ தொல்லை: உரையாடலை ‘செல்போனில்’ பதிவு செய்து பெண் போலீசார் வெளியிட்டனர் சென்னையில் பெரும் பரபரப்பு

undefined
பாலியல் தொல்லை தாங்க முடியாததால், உயர் போலீஸ் அதிகாரி ஆபாசமாக பேசியதை செல்போனில் பதிவு செய்து, பெண் போலீசார் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், சென்னை போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான உரையாடல்

‘இந்திரன் கெட்டது பெண்ணால.... சந்திரன் கெட்டது பெண்ணால... நம்ம அண்ணன் கெட்டது எதனால’ என்று ஒரு திரைப்பட பாடல் உள்ளது. இந்த பாடலை தற்போது, சென்னையில் பணியாற்றி வரும் உயர் போலீஸ் அதிகாரியை பார்த்து, மற்றவர்கள் பாடத்தொடங்கியுள்ளனர்.

அதற்கு காரணம், உளவுப்பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஐகோர்ட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடந்த 2 நாட்களாக ‘வாட்ஸ் அப்பில்’ ஒரு பரபரப்பான ‘ஆடியோ பைல்’ உலாவிக்கொண்டிருக்கிறது.

அதாவது, பெண் போலீசின் அழகை வர்ணித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும் உரையாடல்தான் அது. அந்த பெண்ணின் அழகில் மயங்கி அந்த ‘மன்மதராசா’ போலீஸ் அதிகாரி உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், அதற்கு அந்த பெண் போலீஸ் பயந்து பயந்து பதில் சொல்லுவதுமாக உள்ளது.

அந்த உரையாடல் மூலம் அந்த பெண் போலீசுக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருப்பதாக தெரியவந்து உள்ளது.

பாலியல் தொல்லை

அந்த உரையாடலின்போது, அந்த பெண் போலீஸ் அருகில், யாரோ சிலர் நின்றுகொண்டு சொல்லிக் கொடுப்பது தெரிகிறது. அவர்கள் மெல்ல பேசுவதுகூட கேட்க முடிகிறது. இந்த உரையாடல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்குள் நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட பெண் போலீசை, அந்த உயர் அதிகாரி கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகவும், அதை தாங்க முடியாமல், பெண் போலீசார் சிலர் கும்பலாக சேர்ந்து, அந்த அதிகாரி பேசியதை பதிவு செய்து, ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளதாகவும், இதுகுறித்து டி.ஜி.பி., போலீஸ் கமிஷனரிடமும் புகார் செய்ய தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு அதிகாரி

இதுபோல, ஏழுகிணறு காவல் நிலையத்தில் உள்ள ஒரு அதிகாரி பற்றிய ஆதாரமும் தயாராக வைத்திருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் கேட்டால் தர தயாராக இருப்பதாகவும் ஒரு பெண் போலீசின் கணவர் எழுதியது போன்ற ஒரு கடிதமும் உலா வந்துகொண்டிருக்கிறது

உஷாரய்யா உஷாரு...

undefined
கிராமத்தில் தனது வீட்டுத் திண்ணையில் உடல்  நலக்குறைவு காரணமாக சற்றுச் சோர்வாக அமர்ந்திருந்தார் அந்தப் பெண்மணி. அப்போது, ஆர்ப்பாட்டத்தோடு வாகனத்தில் வந்து இறங்கினர் சிலர். ‘அபாரமாய் வெளுக்கும் சலவை சோப்பை அஞ்சே ரூபாய்க்குத் தருகிறோம். வாங்கிக்கங்க... வாங்கிக்கங்க...’ என்று கூவினார்கள். 

கூடவே, குஷியூட்டும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டார்கள். ‘ஒவ்வொரு சோப்புடனும் ஒரு கூப்பன் தருவோம். அதை சுரண்டிப் பார்த்தால், டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் கிடைக்கக்  கூடும். உங்களுக்கு வேண்டிய பரிசை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்’ என்று முழங்கினார்கள். திண்ணைப் பெண்மணியிடமும், ‘அஞ்சு ரூபாய்தானேக்கா... வாங்கிக்கங்க. உங்களுக்குப் பரிசும் கிடைக்கலாமே?’ என்று அன்புக் கோரிக்கை விடுத்தார்கள். 

சரி, போனால் போகுது என்று ஐந்து ரூபாய்க்கு ஒரு சோப்பை வாங்கினார் அவர். அவருக்கு கொடுத்த டோக்கனை சுரண்டிப் பார்க்க, அதில் ‘முதல் பரிசு’ என்றிருந்தது. அப்பெண்மணிக்குத் தலைகால் புரியவில்லை. உடல்நலக்குறைவுகூட ஓடி மறைந்துவிட்டது போன்ற உணர்வு. தனக்கு டி.வி. வாங்கிக்கொள்வதா அல்லது பிரிட்ஜ் அல்லது வாஷிங்மெஷினை தேர்வு செய்வதா என்று இனிய குழப்பத்தில் மூழ்கினார் அவர். அதற்குள் விஷயம் கிராமமெங்கும் தீயாய் பரவிவிட்டது. பாய்ந்து வந்து சோப்புகளை அள்ளத் தொடங்கினார்கள்.  திண்ணை அக்காவுக்கோ தனக்கு எப்போது பரிசு கொடுப்பார்கள் என்ற பதற்றம். சோப்புக்காரர்களிடம் மெதுவாய் அவர் கேள்வியைப் போட, ‘வாங்கக்கா... வீட்டுக்குள்ளே போய் பேசுவோம்’ என்று அழைத்தது அந்த ‘டீம்’. ‘சரி, வீட்டுக்குள் வைத்துத்தான் பரிசைக் கொடுப்பார்கள் போல’ என்று உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் போனதும், தட்டு, பூரி தேய்க்கும் கட்டை, கரண்டி, லொட்டு லொசுக்கு என்று சில பொருட்களைக் கடைபரப்பினார்கள். 

பார்வையிலேயே அவை படு மலிவானவை என்பது தெரிந்தது.  ‘மூவாயிரம் மதிப்புள்ள இந்தப் பொருட்களை ‘கம்பெனி’ உங்களுக்கு வெறும் 1500 ரூபாய்க்குத் தருது... வாங்கிக்கங்க’ என்றார்கள். பெண்மணிக்கு எரிச்சல். ‘அது சரி, நீங்க பரிசா தருவதா சொன்ன பொருள் எங்கே?’ என்றார் அவசரமாய். ‘நீங்க இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டால், நாங்கள் ஊருக்குச் சென்று அனுப்பிவைப்போம்’ என்று காதில் சூட்டுவதற்கு சரம் சரமாய் மாலை தொடுத்தார்கள். 

பெண்மணி கோபமாகிவிட்டார், ‘எனக்கு எந்தப் பொருளும் வேணாம், நீங்க போயிட்டு வாங்க’ என்று ஐந்து ரூபாயோடு போகட்டும் என்று அவர்களை வெளியே துரத்தினார். அவர்களிடம் சோப்பு வாங்கிய மக்கள் கும்பல் தங்களுக்கு எப்போது பரிசு கிடைக்கும் என்று சூழ்ந்து நச்சரிக்க, ‘விரைவில் வெள்ளித் திரையில் காணுங்கள்’ என்று ‘டாட்டா’ காட்டிவிட்டு, ‘சோப்பு’ போடுவதற்கு அடுத்த ஊருக்கு வேனை கிளப்பிவிட்டார்கள். சோப்பு பார்ட்டிகள் உங்கள் ஊருக்கும் வரக்கூடும், ஜாக்கிரதை!

சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள நடை பயணம்

undefined
நமது நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை மற்றும் கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டேக்) சார்பில் சென்னை ஐகோர்ட்டு இயங்கி வரும் பாரம்பரிய கட்டிட வளாகத்தின் உள்ளே நேற்று ‘பாரம்பரிய நடை’ பயணம் நடைபெற்றது. இந்த பாரம்பரிய பயணத்தில் மாணவிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு பெண் ஒருவர் பங்கேற்றார்.

அவர்களுக்கு, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றின் பாரம்பரியம், வரலாறு மற்றும் கட்டிட கலைக்கு சான்றாக உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து கலை மற்றும் கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளையின் சென்னை ஒருங்கிணைப்பாளர் சுஜாதா சங்கர், பாரம்பரிய கமிட்டியை சேர்ந்த ராஜா ஆகியோர் எடுத்துக்கூறினார்கள்.

இதுகுறித்து சுஜாதா சங்கர் கூறுகையில், “நமது நாட்டில் உள்ள பழமைவாய்ந்த பாரம்பரிய கட்டிடங்களைப்போல இப்போது கட்டுவதற்கு கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பருவத்துக்கு ஏற்றவாறு தொழில்நுட்பம் மற்றும் கலை நயத்துடன் கட்டுவதற்கு என்ஜினீயர்கள் இல்லை. ஆகவே கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இந்த பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து, வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ள செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பாரம்பரிய நடை பயணத்தை மாதந்தோறும் நடத்தி வருகிறோம்.”

மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி பணி

undefined
த்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 250 பணியிடங்கள் உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எம். டி.சி.. சுரங்கம் மற்றும் தாதுவளங்களை விரிவுபடுத்துதல் போன்றவை சார்ந்த பணிகளை இந்த நிறுவனம் கவனிக்கிறது. மத்திய உருக்குத் துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் 'நவரத்தினா' அந்தஸ்து பெற்றது.

தற்போது என்.எம்.டி.சி. நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி (டெக்னிக்கல்) பணிக்கு 201 இடங்களும், எக்சிகியூட்டிவ் டிரெயினி (அட்மினிஸ்ட்ரேசன்) பணிக்கு 49 இடங்களும் நிரப்பப்படுகிறது. மொத்தம் 250 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 126 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 68 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 18 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 38 இடங்களும் உள்ளன. இனி தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு: 


விண்ணப்பதாரர்கள் 24-3-15 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 24-3-1988-ந் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

கல்வித் தகுதி:

சிவில், செராமிக்ஸ், கம்ப்யூட்டர் அன்ட் இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, மினரல் பிராசசிங், மைனிங் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும், பெர்சனல், பைனான்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன், முதுகலை டிப்ளமோ படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:


எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் ஓராண்டு கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

கட்டணம்: 


எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் வழியே கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். முன்னதாக அனைத்து விவரங்களையும் படித்து அறிந்து கொள்வதுடன், புகைப்படம் மற்றும் கையப்பத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க ஆரம்பிக்கவும். பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி குறிப்பிட வேண்டும். இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பித்ததும், பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். நகல் எதையும் அனுப்பத் தேவையில்லை. எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள், புகைப்படம் ஒட்டிய அனுமதி அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

முக்கிய தேதிகள்:

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 24-3-15
தேர்வுக்கான அனுமதி அட்டை பதிவிறக்கம் : 27-4-15 முதல்
எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாள் : 17-5-15

மேலும் விரிவான விவரங்களை www.nmdc.co.in  என்ற இணையதள முகவரியில் பார்க்கலா

குறைந்த சேமிப்பு, நிறைந்த லாபம் தரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர பொதுமக்கள் ஆர்வம்

undefined
இந்திய அஞ்சல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு’ திட்டத்தில் சேர, தபால் அலுவலகத்தில் கைகுழந்தைகளுடன் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.

‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’

இந்திய அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’ கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தால் பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு தேவையான பணத்தை, அவர்களின் சிறுவயதிலிருந்தே பெற்றோர் அல்லது காப்பாளர்கள் சேமிப்புக்கு உறுதுணையாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது குழந்தைகளின் காப்பாளர்கள் ஒன்று அல்லது 2 குழந்தைகளின் பெயரில் 10 வயது வரை சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

இந்த ஆண்டு முதல் ஆண்டு என்பதால் சலுகை காலமாக மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி முதல் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகள் பெயரில், வரும் டிசம்பர் 1-ந்தேதி வரை கணக்கு தொடங்கலாம். இந்த சேமிப்பு கணக்கை தபால் அலுவலகம் அல்லது வங்கிகளில் தொடங்கலாம்.

வருமான வரிவிலக்கு

இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடாக ஆயிரம் ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ.1 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.100-ன் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

செலுத்தும் தொகைக்கு 80-சி யின் கீழ் வருமான வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. 2014-2015 நிதியாண்டில், இக்கணக்குகளின் வருடாந்திர வட்டி விகிதம் 9.1 சதவீதம் கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது. விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பெண் குழந்தைகளின் 18-ஆவது வயதிலிருந்து 50 சதவீதம் வைப்புத் தொகையினை உயர்கல்விக்காகவும், திருமணத்திற்காகவும், கணக்கிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 21 ஆண்டுகள் முடிந்த பின்னர் கணக்கை முடித்துக் கொள்ளலாம். திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும், கணக்கை எவ்வித வட்டி இழப்புமின்றி முடித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. இதனால் சென்னையில் உள்ள தபால் அலுவலகங்களில் கைகுழந்தைகளுடன் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

வங்கிகளிலும் இந்த திட்டங்கள் தொடங்கப்படுவதால், அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு தகவலை அனுப்பி உள்ளது. அதில், ‘‘இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது, அதன் மூலம் எவ்வளவு பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை தினசரி ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்,’’ என்றும் அறிவித்துள்ளது.

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு அதிகாரி வேலை

ணுசக்தி நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 110 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று 'நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)'. அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் அணுசக்தி திட்டங்களுக்கான இடம் தேர்வு செய்தல், திட்டம் வடிவமைத்தல், கட்டுமானம் செய்தல், அணுஉலை இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனிக்கிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளை 'எக்சிகியூட்டிவ் டிரெயினி' பணியில் நியமிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. 39 பின்னடைவு பணியிடங்கள் உள்பட மொத்தம் 110 இடங்கள் நிரப்பப்படுகிறது. பிரிவு வாரியாக மெக்கானிக்கல்- 55 பேர், எலக்ட்ரிக்கல் -15 பேர், எலக்ட்ரானிக்ஸ் - 8 பேர், கெமிக்கல் - 15 பேர், இன்ஸ்ட்ருமென்டேசன்- 7 பேர், இண்டஸ்ட்ரியல் அன்ட் பயர்சேப்டி- 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் ஓராண்டு பயிற்சிக்குப் பின் 'சயின்டிபிக்' அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இதில் சேர்வதற்கான இதர தகுதி விவரங்கள் கீழே...

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 20-3-15 தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ள என்ஜினீயரிங் பிரிவுகளில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:


இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-3-15-ந் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.

விரிவான விவரங்களை www.npcilonline.co.in   என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்

காதலித்து திருமணம் செய்ததால் மிரட்டல் கடத்தப்பட்ட மாணவியை சென்னையில் தேடி அலையும் கணவர்

undefined
காதல் மனைவியை கவுரவக்கொலை செய்து விடுவார்கள். எனவே அவரை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என்று சென்னையில் மனைவியை தேடி அலையும் கணவர் போலீசை கேட்டுக்கொண்டார்.

மாணவியின் காதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்தவர் மார்க் ராஜீவ் (வயது 24). சொந்த ஊரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

இவர், சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. இறுதியாண்டு படிக்கும் சுருதியை உயிருக்கு உயிராக காதலித்தார். சுருதி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை கோபாலகிருஷ்ணன் ஊட்டி நகராட்சி அ.தி.மு.க. துணைத்தலைவர் ஆவார்.

சுருதியின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த கோபாலகிருஷ்ணன், மகளுக்கு பெங்களூருவில் வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்தார். ஆனால் சுருதி தாய்-தந்தையை ஏமாற்றி விட்டு, காதலன் மார்க் ராஜீவை கடந்த 11-ந் தேதி அன்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

கடத்தல்

இந்த நிலையில் எனது வீட்டுக்கு அடியாட்களுடன் வந்த கோபாலகிருஷ்ணன், மனைவி சுருதியை கடத்திச் சென்று விட்டார் என்றும், என்னையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார் எனவும் ராயக்கோட்டை போலீசில் கடந்த 14-ந் தேதி பரபரப்பு புகார் மனு ஒன்றை மார்க் ராஜீவ் கொடுத்தார். அந்த மனு மீது ராயக்கோட்டை போலீசார் கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த செய்தி, தினத்தந்தி நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது. இதை எடுத்துக்கொண்டு, மார்க் ராஜீவ் தனது தாயாருடன், நேற்று சென்னை வந்தார். பின்னர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து எனது மனைவியை பெரம்பூரில் உள்ள ஒரு வீட்டில் சிறை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது என்றும், அவரை பத்திரமாக மீட்டுத்தரவேண்டும் எனவும் கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் சென்று அவர் முறையிட்டார்.

கவுரவக்கொலைக்கு வாய்ப்பு

கமிஷனர் அலுவலகத்தில் மார்க் ராஜீவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நானும் கேரளாவை சேர்ந்தவன் தான். சுருதியும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். வெவ்வேறு மதமும் எங்கள் காதலுக்கு குறுக்கே நின்றது. அதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை அவரது தந்தை கவுரவக்கொலை செய்து விட வாய்ப்பு உள்ளது. எனவே, எனது மனைவியை போலீசார் பத்திரமாக மீட்டுத்தர வேண்டும்’’ என்றா

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left