Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளனர், உயர் வருமானம் பெறுகின்றனர் ஆய்வில் கண்டுபிடிப்பு

undefined
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளனர் என்றும், உயர் வருமானம் ஈட்டுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ‘ஐகியூ’ அளவு மிகவும் அதிகமாக உள்ளது என்றும், அவர்கள் அதிகமான அளவு வருமானம் ஈட்டுகின்றனர் என்றும்  ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதியஆய்வானது சுமார் 3,500 பிறந்த குழந்தைகளிடம், 30 வருடம் நடத்தப்பட்டதில், ஒருவருடம் தாய்ப்பால் குடித்து  வளரும் குழந்தையானது, நீண்டகாலம் பலன்களை பெறுகிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு குழுவில் இடம்பெற்று இருந்த பிரேசில் நாட்டு  பல்கலைக்கழகத்தின் தலைமை ஆசிரியர் டாக்டர் பெர்னார்டோ லெஸ்சா ஹோர்டா பேசுகையில்,

‘நீண்டநாட்கள் தாய்ப்பால் கொடுப்பது, 30 வருடங்கள் வரையில் அவர்களுடைய புத்திசாலித்தனத்தை மட்டும் உயரசெய்யாது, தனிப்பட்ட மற்றும் சமூகத்தின்  தரப்பிலும் பிரதிபலிக்கும். எப்படியென்றால் கல்வியில் சிறந்து விளங்குதல், வருமானம் அதிகம் பெறுவதிலும் முன்னேற்றம் காரணமாக.’ என்று குறிப்பிட்டு  உள்ளார். டாக்டர் ஹோர்டாவின் ஆய்வு குழு, 1982-ம் ஆண்டு பிரேசில் மற்றும் பெலோடாஸில் பிறந்த குழந்தைகள் சுமார் 6,000 பேரது தகவல்களை பெற்றது.

குழந்தை பருவத்தில் இருந்து அவர்களது டேட்டாக்கள் அனைத்தையும் ஆய்வு குழு பெற்று உள்ளது.  ஆய்வில் இடம்பெற்றவர்கள் அனைவரும், 30 வயது வயதில் ‘ஐ.கியூ.’ டெஸ்டிற்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில் இடம்பெற்றவர்களில் பாதிபேரது கல்வி  முன்னேற்றம் மற்றும் வருமானம் குறித்தான தகவல்களும் பெறப்பட்டது. ஆய்வில் அவர்களுடைய புத்திசாலித்தனம் உயர்ந்தது கணப்பட்டது. நீண்ட நாட்கள் தாய்ப்பால் குடித்தவர்கள் கல்விஅறிவு மற்றும் வளர்ந்ததும் பெறும் வருமானம் மற்றும் எல்லா காலங்களிலும் புத்திசாலித்தனம் உள்ளவர்களாக உள்ளனர் என்று    தி லான்சட் உலகளாவிய சுகாதாரம் பத்திரிகையில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. நீண்ட காலம் தாய்ப்பால் குடித்தவர்கள் என்பது 12 மாத காலம் மற்றும் அதற்கு மேற்பட்ட காலம் ஆகும்.

முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டுவர்கள் என்பதை குறிப்பிட்டது. வயிற்றுக் கோளாறு, ஆஸ்துமா ஆகியவற்றில் இருந்து தாய்ப்பால் காக்கிறது என்றும், வாழ்க்கையில் சுகாதார பலன்களை அளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த ஆய்வு பிரிட்டனில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்று அமலுக்கு வந்தது. இங்கிலாந்து அரசு நிறுவனம் சமீபத்தில், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒரு அதிரடி திட்டத்தை தொடங்கியது. 6 வாரங்களுக்கு மேல் கொடுத்தால் ரூ.12,000 வரை கிப்ட் வவுச்சரும், 6 மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சரும் கொடுப்பதாக அறிவித்தது குறிபிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. நான்கில், ஒரு பெண் மட்டுமே இங்கிலாந்து நாட்டில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறார் என்றும், நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுப்பது என்ற எண்ணிக்கை உலகளவில் இங்கிலாந்தில்தான் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாமான நாட்கள் தாய்ப்பால் கொடுப்பது அவர்களது புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம்

undefined
மெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பு சார்பில் சுமார் பத்து லட்சம் பேரின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. இதில் புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அமெரிக்க துணை கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

உலக ஐக்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும். ஆனால் வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையின்படி, இது மிகவும் குறைந்த மதிப்பீடு ஆகும். புகையிலையால் புதிதாக 5 நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் எரிக் ஜேகப்ஸ் கூறியதாவது:-

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கத்தினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான முன்னேற்றம்.

இங்கிலாந்து மருத்துவ ஆய்வில் சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர இந்த பழக்கம் காரணமாக புதிதாக ஐந்து வகை நோய்கள் தாக்கி பலர் இறந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நோய்கள் ஆய்வின் போது கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதை ஆராய்ச்சியாளர்கள் தனிக் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். இதில் புகைப்பழக்கத்தால் ரத்த நாளம் சிதைவு, குடல் புண், இருதய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசம் சம்பந்தமான பல நோய்கள் வரும் வாய்ப்புகள் இரு மடங்காக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

குடலுக்கு சரியாக ரத்த ஓட்டம் ஏற்படாதநிலையில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவிதமான நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

வாட்சப்பில் வாலிபர் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை

undefined
மனாமா,

சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்தது. அதற்கு அந்த வாலிபர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  எனவே அந்த பெண் ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது

தீவிரவாதிகள் தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு, தீவிரவாதிகளுக்கு எதிராக போர் துனிசியா அதிபர் சபதம்


துனிஸ்,

துனிசியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கருணையின்றி நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சபதம் செய்து உள்ளார்.

ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிஸ் சுற்றுலா தலம் ஆகும். அங்கு பாராளுமன்றத்தையட்டி, பார்டோ தேசிய அருங்காட்சியகம்  உள்ளது. அந்த அருங்காட்சியகத்தை நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் 3 பேர் நுழைந்தனர். அங்கிருந்தவர்களை அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் உயிர் பிழைப்பதற்காக நாலாபக்கமும் ஓட்டம் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 17 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஒருவர் உள்நாட்டு சுற்றுலாப்பயணி என தெரியவந்துள்ளது. ஒருவர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான், கொலம்பியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தாக்குதலில் 40 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 சுற்றுலாப் பயணிகளை பணயக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து பாராளுமன்றத்தில் இருந்து உடனடியாக எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இன்னும் துனிசியாவில் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை சுட்டு வீழ்த்தும் பணியில் ராணுவம் இறங்கி உள்ளது. இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கருணையின்றி நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர்  பெஜி கெய்ட் சபதமிட்டுள்ளார். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரையில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை ராணுவம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திய அகமது அல் ரூயிஸி, லிபிய படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனவே இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி இருக்கக்கூடும் என்ற யூகம் எழுந்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலால் துனிசியாவில் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

மூக்கில் சதை வளர்ச்சி நடிகர் அஜித்குமாருக்கு ’ஆபரேஷன்’

undefined
சென்னை,

அஜித்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்தார். ஒரு பந்தயத்தில் அவர் கலந்து கொண்டபோது, முதுகில் அடிபட்டது. இதற்காக அவருடைய முதுகில், ’ஆபரேஷன்’ நடந்தது. ஆபரேஷனுக்குப்பின் அஜித்குமார் முழுமையாக குணம் அடைந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த வருடம் அவர் ஐதராபாத்தில் நடந்த ’ஆரம்பம்’ படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, காலில் பலத்த அடிபட்டது. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டபின், தொடர்ந்து அவர் நடித்து வந்தார்.’

’’அடிபட்ட காலில் ’ஆபரேஷன்’செய்து கொண்டால் பிற்காலத்தில் பாதிப்பு இருக்காது. ஆனால், ஆபரேஷனுக்குப்பின் மூன்று மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும்’’ என்று டாக்டர்கள் கூறினார்கள். அத்தனை நாட்கள் ஓய்வு எடுக்க முடியாது என்பதால், காலில் ’ஆபரேஷன்’ செய்து கொள்வதை அஜித்குமார் தள்ளிப்போட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், அவருடைய மூக்கின் உள்பக்கம் அதிக சதை வளர்ச்சி காரணமாக, மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதற்காக, அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இன்று காலை 5-30 மணிக்கு ’ஆபரேஷன்’ நடந்தது.

மூக்கின் உள்ளே வளர்ந்திருந்த சதை, ’ஆபரேஷன்’மூலம் நீக்கப்பட்டது. அஜித்குமாருக்கு பிரபல காது-மூக்கு-தொண்டை நிபுணர் டாக்டர் கே.ராஜசேகர், ’ஆபரேஷன்’ செய்தார். ஆபரேஷனுக்குப்பின், அஜித் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுத்தபின், அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி, அஜித் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகள் ஐஸ்வர்யா தயாரிக்கிறா

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left