Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

Shalin Maria Lawrence :

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

ஜெயலலிதா பதவிக்கு வந்தவுடன் ஒரு விஷயம் மட்டும் கண்டிப்பாக செய்திருப்பார் . அது தன் அரசியல் எதிரிகளை பழிவாங்குவது . அதில் மட்டும் தான் அவர் தீவிரமாக இருந்திருப்பார் .
சொத்துக்குவிப்பும் , ஜோசிய பைத்தியக்காரத்தனங்களும் , மக்கள் நலன் புறக்கணிப்பும் 1989 ஆம் ஆண்டு சசிகலாவுடன் போயஸ் தோட்டத்தில் வந்து குடியேறிவைகள் .

தற்கொலை முயற்சிகளுக்கும் மனப்பிறவிழற்கும் பரிச்சயமான நடிகை ஜெயலலிதாவை அரசியல்வாதி ஜெயலலிதா ஆக்குகிறார் சசிகலா .
தன் alter – ego வாக சசியை பார்க்கிறார் ஜெயலலிதா .
கிடைக்காத அன்பு கிடைத்த பூரிப்பில் ஆளகிடைத்த மாநிலத்தை தோழியின் காலடியில் சமர்பிக்கிறார் ‘Iron lady ‘
1991 ஆண்டு முதல் 2016 வரை அதிமுக ஆட்சி என்ற பெயரில் நம்மை ஆண்டது இன்று ‘வேலைக்காரி’ என்று பலரால் விமர்சிக்கப்படும் சசிகலா மற்றும் அவரது குடும்பம் .
கூட்டணியாய் செய்த அனைத்து அநீதிகளுக்கு ஜெயலலிதாவின் sticker மட்டுமே ஒட்டப்படுகிறது .
புதியதாய் கிடைத்த குடும்பத்தின் அரவணைப்பில் நாடு நாசமாய்ப்போய்
கொண்டிருப்பதை மறந்து ஆழ்ந்த நித்திரையில் தள்ளப்படுகிறார் முதல்வர் .
நித்திரை தெளிந்த நேரம் எல்லாமே
முடிந்திருந்தது . திருத்தி கொள்ள நேரம் கிடைக்கவில்லை , சுதந்திரமும் கிடைக்கவில்லை .
33 வருடங்களாக நடத்தப்படும் சதுரங்க நாடகம் முடிவு பெறுகிறது .
ராணி சாய்கிறது .
Modi Magic in TN ADMK…

இந்த 33 வருடங்களாக மக்களை எலி கறி சாப்பிடவைத்ததும் , கஞ்சி தொட்டி திறப்புகளும் , சாதி கலவரங்களும் , சசி பெருமாளை பலிவாங்கியதும் , கோவனை ஜெயிலில் தள்ளியதும் , மாற்று திறனாளிகளை கொன்றதும் , நீரில் என் நகரத்தை அழித்ததற்கும் ,உயிர் காக்கும் மருத்துவமனையை சதிகூடாரமாக மாற்றியதும் இன்னும் லட்சம் ஆராஜகங்களை செய்ததும் இந்த ஒற்றை நாற்காலிக்காக என்றால் … அது உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும் .
Shalin
ஜெயலலிதா

'சசிகலா இப்படித்தான் மிரட்டுவார்!' கங்கை அமரன் அனுபவக் கதை

‘முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நிச்சயம் மிரட்டியிருப்பார்” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி.

சசிகலா

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன காரணம்?
என்னுடைய கருத்து யாருக்கும் ஆதரவு கிடையாது. தமிழ்நாட்டின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு மனக்குமுறலுடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரது மனநிலையை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பேட்டியின் போது சசிகலா, மிரட்டியதாக தெரிவித்தார். நிச்சயம் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பையனூர் பங்களாவை சசிகலா என்னிடம் எப்படி மிரட்டி வாங்கினார் என்பது எனக்குத் தெரியும். அதுபோல இன்னும் சில வி.வி.ஐ.பி.க்களிடமிருந்து சசிகலா தரப்பு சொத்துக்களை மிரட்டி வாங்கி உள்ளது.
உங்களை சசிகலா எப்படி மிரட்டினார்?
பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லுங்கள். அவர் எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்று சொல்லி உள்ளனர். இதனால் என்னுடைய மனைவி மிகவும் பயந்து விட்டார். ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் சசிகலாவிடம் போனில் பேசினேன். அதற்கு அவர், அப்படியா… நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதன்பிறகு அதுபோன்ற மிரட்டல் போன் அழைப்புகள் இல்லை. ஆனால் என்னுடைய வீட்டை போலீஸார் மப்டியில் கண்காணித்தனர். என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணித்தனர். இவ்வாறு மறைமுகமாகவே எனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. பையனூர் பங்களாவை என்னிடமிருந்து பெறப்பட்ட போது எனக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் இடம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை சசிகலா நிறைவேற்றவில்லை.
சசிகலாவை நீங்கள் எதிர்ப்பதற்கு இதுமட்டும்தான் காரணமா?
சசிகலா குடும்பத்தினர் பலரிடமிருந்து சொத்துக்களை வாங்கி குவித்து விட்டனர். இதன்பிறகும் அவர்கள் தங்களது செயல்பாட்டிலிருந்து மாறவில்லை. மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் பதவி ஆசையில் சசிகலா செயல்படுகிறார். ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அவரது மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவின் பதவியில் அமர ஆசைப்படலாமா. ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி, கட்சியினரிடையும், மக்களிடையையும் ஆதரவை பெறாமல் முதல்வராக சசிகலா ஆசைப்படுகிறார். தமிழகத்தில் குடிநீர் பிரச்னை, வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் சசிகலா பதவியேற்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார். இதுபோல சசிகலாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நான் மட்டுமல்ல… மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீங்கள் பா.ஜ.க.வில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா?
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் அதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஒரு அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், தேச மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமை கொண்டு இருக்கிறேன். பா.ஜ.க.வில் இருப்பதில் பெருமைக் கொள்கிறேன்” என்றார்.
Thanks   By Anandhavikatan

அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள்

 

அஞ்சு வருஷத்துல மூணு பேரு, இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள்

எங்க ஸ்டேட் கர்நாடகாவுல சிலபல வருஷம் முந்தி பீஜேப்பீ பவர்ல இருந்தாங்க. அந்த டைம்ல, எடியூரப்பா, சதானந்த கௌடா, ஜெகதீஷ் ஷெட்டர்னு மூணு சீஎம்கள் இருந்தாங்க. அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள் பிடிக்காம, அடுத்த எலக்‌ஷனில் காங்கிரஸ் ஜெயிச்சி, சித்தராமய்யா முதல்வர் ஆனார். கடந்த மூணரை வருஷமா அவர்தான் சீ.எம். பீஜேப்பீ ரூலில் சிலபல ஆட்கள் பண்ணிய டுபாக்கூர்களும் காரணம். ஜனார்த்தன் ரெட்டி ஒரு உதாரணம்.
என்ன திருகுதாளம் போட்டாலும் டமில்நாட் போல வராது. பீஜேப்பீல வந்த மூணு பேருமேகூடப் பழுத்த அரசியல் அனுபவம் உள்ளவங்க. ஆனால் டமில்நாட்ல அதெல்லாம் தேவையில்ல போலன்னு இப்போ தெரிஞ்சிட்டதால, இவங்கல்லாம் செம்ம காண்டுல இருக்காங்க. டமில்நாட்ல சி.எம் ஆக என்னன்ன தகுதிகள் வேணும்னு யோசிச்சா, கட்டாயம் பீஹார்தான் நினைவு வரும். பீஹார் பத்தி, ட்ரெய்ன்ல ஆடு கோழியெல்லாம் ஏத்துவாங்க, மொக்க ஊர்ன்னு இப்போகூட பலரும் பேசுவாங்க. அரசியலிலும் அதேதான்.
இருந்தாலும், என்னதான் தலைகீழா தண்ணி குடிச்சாலும், அரசியலில் டமில்நாட் போல வராது. சினிமா, இலக்கியம் இந்த ரெண்டுலயும் நம்மூரு எந்த நிலைல இருக்குன்னு ஒலகத்துக்கே தெரியும். அரசியலிலும் அப்படித்தான் இருந்திச்சு. ஆனால் இலைமறை காய்மறையா. இப்போதான் வெளிப்படையா வெடிச்சி சிதறிருக்கு.
மொத்தமா எல்லாத்துலயும் ஊத்தி மூடியிருக்கும் டமில்நாட்டைப் பார்த்து, இதெல்லாம் போனமாசமே நடக்கும்னு எதிர்பார்த்தேன். அதுல ஒரு குட்டியூண்டு ஏமாற்றம்.
களப்பிரர் காலம் பத்திப் படிச்சிருப்பீங்க. இதோ அதையெல்லாம் பார்த்து அனுபவிக்கும் காலம். சுக்ஹானுபவம்.
இவண்ணம், கன்னடிக டமிலன் சென்தேள் சென்காயிரம்

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left