Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா

பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா

இப்போதும் பொருந்துகிறது ரஞ்சித் போன்றவர்களின் அறியாமை யை காணும் போது
பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம்.. நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா என்கிறார் இளம் இயக்குனர் ரஞ்சித்
ஏன் அண்ணலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் அண்ணல் அம்பேத்கர் மீது மரியாதை உண்டு .. ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து உயர்ந்த பதவிகளை தன் திறமை மூலம் பெற்றவர்.. தான் பிறந்த மதத்தின் இழிவுகளை போக்க தன் சார்ந்த மக்களை புத்தமதம் தழுவ செய்தால் புனிதராகிவிடலாமென்ற நினைத்து மாறியவர்
அதிலிருந்தே தான் தாழ்ந்தவர் என்ற எண்ணம் கொண்டிருந்தாரென அறிய முடிகிறது..
தான் சார்ந்த சமூக பின்னணியில் இருந்து மிகப்பெரிய மாற்றத்தை வடமாநிலங்களில் குறிப்பாக மராட்டியத்தில் அவரால் கொண்டுவர முடியவில்லையே வெகுமக்களை ஒருங்கிணைக்காத
அல்லது வெகுமக்கள் ஆதரவில்லாத எதுவும் எந்த மாற்றத்தையும் தர முடியாது.. ஆனாலும் அம்பேத்கர் வாழ்க என்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் பெரியாரை நாங்கள் ஏற்கவேண்டுமெனில் ஜெய்பீம் என அழைக்க வேண்டுமென்ற நிபந்தனை நிச்சயமாக தலித் மக்களை வெகு தூரத்தில் வைக்கவே பயன்படும்
இப்போது மெச்சபட்டிருக்கிற நிலை பெரியாரின் கைத்தடி தந்தது என்பதை உணரவேண்டும்.. தோளில் துண்டை போட கூட அனுமதிக்காத சமூக சூழலை மாற்றி ..
பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தது திராவிடம்.. வாடா முனியா என்றழைத்த காலத்தில் மேடை போட்டு முனியாண்டி அவர்களே என விளித்து பழக சொன்னது திராவிடம்.. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமில்லாமல் நாடும்,இனமும் முன்னேறாதென்ற நம்பிக்கையில் உரத்து நின்றது பெரியாரும் திராவிடமும் தான்..
..
தெளிவு போதாமை அல்லது சிறிய வெற்றியின் மமதை இவ்வாறு பேச வைத்திருக்கிறது.. இதே இப்போது இந்த துணிவோடு தமிழகத்தில் கதைக்க முடிகிறதே ..அதற்கு காரணம் பெரியார் திராவிடம்.. இதே போல் மகாராஷ்ட்ராவில் பேசிவிட்டு நடமாட முடியாது .. அந்தளவிற்கு மிக கொடூரமான மனபோக்கை தலித்கள் மீது கொண்டிருக்கிறார்கள்..
குடியரசு தலைவரையே வெளியே நிறுத்துகிற சூழல்
இங்கே 52 லேயே பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக்கியவர் பெரியார் .. திலகர் உடலை தொட கூட காந்தியை அனுமதிக்காத வரலாறெல்லாம் படியுங்கள் ரஞ்சித்.. இரண்டு சினிமாவில் தலித்திய சிந்தனையை படமாக்கிவிட்டால் எல்லாம் அறிந்தவரென்றோ போராளியென்றோ நினைத்துக்கொண்டு களம் இறங்குகிறீர்
ஒடுக்கபட்ட மக்களுக்காக கால்நூற்றாண்டுக்கு மேலாக பாடுபடும் போராடும் தோழர்.திருமாவிடம் கேட்டுபாருங்கள் பெரியார் யாரென்று தெரியும்
பெரியாரை முன்னெடுக்காவிடில் பெரியாருக்கல்ல இழுக்கு
பெரியாரை முதன்மைப்படுத்த இவர் வேண்டுமென்பதில்லை.. தமிழகத்தில் பெரியாரை திராவிடத்தை கலைஞரை தாக்கினால் பெரிய ஆள் ஆகிவிடலாமென்ற பழைய வறட்டு சிந்தனையின் விளைந்தது தான் இந்த பெரியாரை ஏற்கிறோம் ஜெய்பீம் என சொல்ல தயாரா.. என கேட்பது..
..
பாசிசம் அஞ்சும் ஓரு பெயருண்டு.. இந்த பெயரை கேட்டாலே பாசிசத்தின் குலைநடுங்கும் ..அந்த பெயர் பெரியார்.. ஆனால் ஜெய்பீம் என சொல்லி பாருங்கள் கடித்து குதறிவைக்கும் .. அண்ணல் அம்பேத்கர் அறிவாளி என்பதில் மாற்றுகருத்தே இல்லை ஆனால் .. நல்ல அரசியல் தலைவராகவோ..
தொலைநோக்கு சிந்தனையாளராகவோ.. மக்களின் நாடிதுடிப்பை அறிந்து அவர்கள் மனதை மாற்றியவரில்லை.. ஆனால் பெரியார் .. பிராமணீயத்தின் (ஆரியத்தின்) ஆணிவேரையே அசைத்தவராக.. சமூகநீதிக்காக.. சமநீதிக்காக.. ஒவ்வொரு விடயத்திலும் தொலைநோக்கோடு சிந்தித்து கல்வி வேலைவாய்ப்பு கருத்து சுதந்திரம் பெண்கள் கல்வி அவர்களின் உரிமை என எல்லா படித்தளங்களிலும் கவனம் செலுத்தி புதியதொரு விடியலை தந்தவர்.. நாடு விடுதலை அடைந்ததையே கறுப்புநாளென்றவர்.. சமூகவிடுதலை இல்லாமல் நாடு விடுதலை அடைந்து பயனில்லை என்றவர்.. பெரியார் தொலைநோக்கி..
..
எங்களுக்கு பெரியார் போதும்.. நீங்கள்
ஜெய்பீமையே முன்னெடுங்கள்.. அப்போது தெரியும் .. பெரியாரின் மேன்மை தளர்ந்து விழும் போது தூக்கி நிறுத்த ..ஆம்..
கடைசியில் பெரியார் தான் வந்து நிற்பார்
..
ஆலஞ்சியார்

இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழியை பயன்படுத்த கூடாது

இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழியை பயன்படுத்த கூடாது

இலங்கை முஸ்லிம்கள் எந்த சூழ்நிலையிலும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் அரபு மொழியை பயன்படுத்த கூடாது என்று இலங்கை அரசு ஆணை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
மிகவும் மடமையான செயல் எந்தவொரு மொழியும்
அதன் வளமும் பிற மக்களோடு தொடர்பினை ஏற்படுத்தவே தவிர மொழி தீவிரவாதமாகாது .. எந்த மொழி திணிப்பையும் எப்படி ஏற்பதில்லையோ அதைப்போல அந்தந்த மொழி அறிந்தோர் அதன் பயன்பாட்டை நிறுத்தவேண்டுமென சொல்வது அறிவுடை செயல் அல்ல..
இஸ்லாம் அரபுமொழி என்றாலே அது தீவிரவாதத்தின் வாசலென கட்டமைக்கபட்டிருப்பதற்கு ஒருவகையில் அந்த மொழி வழக்கை கொண்ட மதபோதகர்களின் செயல்பாடும் இஸ்லாத்தை அரபி மொழியோடு மட்டுமே தொடர்புபடுத்தியதும் அதை ஒரு “புனித” நிலைக்கு கொண்டுபோய் வைத்ததும் காரணம் .. இஸ்லாம் பயங்கரவாதத்தை எங்குமே எடுத்தியம்பாத போது சிலர் தங்கள் அதிகாரவரம்பை நிலைநிறுத்த செய்த செயல்கள் அதற்கு வேதத்தை .. எது எப்போது எந்த காலகட்டத்தில் இறங்கியது எதற்காக அதை செயல்படுத்தபட்டதென்ற அறிவின்மையால் .. நேரடி மொழியாக்கமென்ற பெயரில் அதன் உட்பொருள் அறியாமல் மேலெழுந்தவாரியாக மக்களிடையே திணிக்கப்பட்டதும்.. அதை தீவிரவாத மார்க்கமென வல்லரசுகள் நம்பவைத்ததும் இவர்களின் பழைய “புனித போர்” Holy War வேறொரு பரிணாமத்தை அடைந்து அதில் முஸ்லிம்கள் மீது உலகளாவியளவில் தீவிரவாதிகள் என்ற “அடைமொழி”யை வைத்துவிட்டார்கள் ..பொது சமூகம் ஒருவித பயத்தோடு இஸ்லாமியர்களை காண கூடிய சூழலை உருவாக்கியதில் சில வல்லரசுகளுக்கு உரிய பங்கு எவ்வளவோ அதிலும் சற்றும் குறையாமல் இஸ்லாமிய அமைப்புகளின் மத போதகர்கள் மதத்தை ரட்சிக்கவந்தவர்களென சொல்லிக்கொண்டோரின் பங்கும் உண்டு
..
மொழி என்பது ஒரு ஊடகம் .. சில மொழிகள் செத்தொழிந்து போயின காரணம் எந்தவொரு மொழியும் அதன் சிறப்பு இலக்கணத்தில் இருக்கவேண்டும் மக்கள் மொழியாக இருந்தால் அதை எந்த சக்தியாலும் அழித்திட முடியாது .. தமிழ் நிலைத்து நின்றதற்கு “திணைமரபு ” இலக்கணமே காரணம் .. சமஸ்கிருதம் செத்ததற்கு இலக்கணமில்லாததே காரணம் .. தெய்வமொழி என்பதாலோ.. நிலைத்திடாது அரேபிய மொழி அந்த மண்ணின் மொழி அதை மதத்தின் மொழியாக கருதியதால் இந்த இழிநிலை ..
வெகுமக்கள் பேசுகிற மொழியும் கூட..
..
ஜப்பான் மற்றும் சீன நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களில் அரபு மொழி எழுத்துக்களை பயன்படுத்தி சந்தை படுத்தி வருவதை நாம் அறிய முடிகிறது.. 54 நாடுகளில் பேசபடுகிற மொழி கீழைநாடுகளின் ஒருவித மதரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய மொழி பல்வேறு நாடுகளின் அலுவல் மொழியாகவும் இருக்கிற மொழியை இலங்கை போன்ற வளைகுடா பொருளாதாரத்தை பெரிதும்
நம்பியிருக்கிற நாட்டில் தடை என்பது கேலிகூத்காக முடியும்…எந்த ஒரு மொழியும் எப்படி பயங்கரவாத மொழியாக அமைய முடியும் அதற்கான சாத்தியங்கள் எவ்வாறு ஏற்படும் என்கிற சராசரியான அறிவு கூட இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு இல்லை என்று தான் நாம் கூற முடியும். இதன் பின்னில் குறிப்பாக சில பௌத்த துறவிகள்..? இது போன்ற வெறுப்பு தன்மைக்கு காரணம் என்று ஸ்ரீ லங்கா மீடியாக்கள் கருத்து தெரிவித்துள்ளன
..
#மொழி
..
ஆலஞ்சியார்

திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா

திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா

எப்படியும் வீழ்த்திவிடவேண்டுமென கங்கணம்கட்டி செயல்பட்டாலும் திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா ..
அடித்தளம் சரியாக கட்டபட்டிருக்கிறதென்றார் அண்ணா
..
எத்தனை சூதுகள் நயவஞ்சகங்கள் கூடஇருப்போரையே கூர்தீட்டி எம்மிடமே திருப்பிய தந்திரங்கள் தாங்கள் தமிழர்களென எம்மவரை வாயாலேயே சொல்லவைத்து எவ்வளவு பார்த்தாயிற்று .. ஒரு மொழியை அழித்தொழிக்க நினைத்தால் முதலில் பேசும் மக்களிடம் பிரிவினையை உண்டாக்கு .. இனத்தின் கலாச்சாரத்தை அழிக்க நினைத்தால் முதலில் நூலகத்தை கொளுத்து மக்களிடமிருந்து கல்வியை பிடுங்கு இதைதான் ஆரியம் மிக சாதூர்யமாக நடந்திவந்தது .. திராவிட இயக்கம் தோன்றியதன் பின்னால் தான் மக்களிடையே கல்வியை பற்றிய விழுப்புணர்வும் நமதான உரிமை அது என்ற தெளிவும் வந்தது எங்கே நம்மிடம் உள்ளதெல்லாம் இதுவரை கட்டி காத்ததெல்லாம் நாம் மட்டுமே அனுபவித்ததெல்லாம் போய்விடுமோ என அஞ்சி மெல்ல பழைய நிலைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை படிபடியாக செய்துவருகிறது ஒவ்வொரு முறையும் வெகுண்டெழுந்து போராட வேண்டியிருக்கிறது .. நீட் தேர்விற்கு அனுமதியை ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது துரோகி மாஃபா பாண்டியராஜனை கொண்டு கையெழுத்திட்டு இன்று அதை நீக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது எதையும் நேரடியாக எதிர்க்க முடியாமல் திரைமறைவிலேயே நகர்த்தும் வேலை தெரிந்தவர்கள் ..
..
இன்றல்ல ஆரம்பம் தொட்டே எல்லாவற்றையும் தமிழர்களுக்கு எதிராகவே செய்பவர்கள் .. தமிழ்நாடு என பெயரிட வேண்டுமென கேட்டபோது
திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டவர்கள் தமிழ் நாடென்று கேட்கிறார்கள் என கு.க.பாளையம் ராஜகோபால்(ராஜாஜி) டெல்லிக்கு தகவல் அனுப்பிய போது
அன்றைக்கு நாட்டிற்குள்ளே நாடா என நாடாளுமன்றம் கேட்டபோது…அண்ணா சொன்னார்
இந்தியாவே நாடு அல்ல துணை கண்டம் .. நாடென்றால் ஒற்றை கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே இனம் மொழி கொண்டதாக இருக்கவேண்டும்
பன்முக தன்மை கொண்ட பல்வேறு இன மொழி கலைச்சாரம் கொண்டது இந்தியா அதில் தமிழர்களுக்கென ஒரு நாடு என்றார் .. எதை செய்தாலும் அதில் தமிழ்நாட்டிற்கு தமிழ்மொழிக்கு தீங்கிழைப்பதையே கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசு ..
..
மெல்ல திணிக்கலாமென்று எண்ணத்தில் இந்தி ஆங்கிலம் மட்டுமே என்ற சுற்றறிக்கையை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறார் திரு.ஸ்டாலின் தமிழகத்தில் எந்தவடிவில் வந்தாலும் நசுக்கபடுவீர்களென எச்சரித்து திமுக தன் கடமையாற்றியிருக்கிறது இந்தி வேண்டுமென பேசிய மாபொசியை கூட கடந்துதான் கரிபூசியிருக்கிறோம் .. எத்தன் வழிகளுண்டோ முயற்சி செய்யுங்கள் .. பேரருளாளன் கலைஞர் மறைந்தவுடன் பெரிய வெற்றிடம் என்றெல்லாம் பேசி திரிந்து யார்யாரையோ மெருகேற்றி வெளிச்சம் போட்டுகாட்டி சாந்துபூசி .. கடைசியில் இங்கு திராவிட இயக்கத்தின் வேர் ஆயிரம் அடி ஆழ சென்று விரிந்து ‘தரு’ பரந்து விரிந்து நிழல் தருகிறது என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள் ..
..
திமுக தமிழகம் காக்கும்
..
ஆலஞ்சியா

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left