Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.

  1. காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில்,
  2. தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. “அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!” என்று அரச கைக்கூலிகள் அறிவித்தபின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது.
    போராட்டம்
  3. மாணவர்கள்மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.
    பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். “மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.
  4. அரசியல் பேசக் கூடாது.” அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.
    இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும்.
  5. இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும்.
  6. அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டிப் புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களைச் சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?
  7. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், “தேசியக் கொடி பிடித்தால்,
  8. தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது” என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்
  9. . “ஜனகண மண” பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவைச் சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
  10. தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும்பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
  11. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை.
  12. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.
  13. ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில்
  14. , பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.
    போராட்டக் களத்திற்குள் இடது சாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசைப் பீதியுற வைத்துள்ளது.
  15. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள்.
  16. இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.
  17. இனிவரும் காலங்களில் இடது சாரி அமைப்புகள்மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம்.
  18. “தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்” என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம்.
  19. அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
    சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடது சாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
  20. (நாம் தமிழர் என்ற வலது சாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)
    மேலும்,
  21. “பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், “தோழர்” என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்” சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
  22. அதன் அர்த்தம் என்ன? இடது சாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?
  23. பெற்றோரே பிள்ளைகளைக் காட்டுக் கொடுக்க வேண்டும்” என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
  24. Written By Kalai Marx 
  25. https://youtu.be/hf80oy0gK3g   

சென்னை போலீஸ் ஆட்டோ வுக்கு தீ வைக்கும் வீடியோ

சென்னை போலீஸ் ஆட்டோ வுக்கு தீ வைக்கும் வீடியோ , பத்தி எரியும் தீ வைத்தது யார் உண்மை முகம் பாரீர்
சென்னை கலவரத்தில் நடந்தது என்ன?

மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம் ஓயவில்லை

வெற்றிவிழாவாக மாற வேண்டியதை சோக விழாவாக மாறியது யார்?
தடியடி நடத்த கமிஷனர் ஜார்ஜுக்கு உத்தரவு இட்டது யார்? அல்லது அவர் தன்னிச்சையாக செய்தாரா?
முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களை குறை சொல்ல இயலாதும, அவரால் என்ன செய்ய இயலுமோ, வாக்குறுதி அளித்தபடி செய்து முடித்துவிட்டார்.
டில்லிவரை சென்று அவசர சட்டம் கொண்டு வருவதற்குண்டான அனைத்து வேலைகளையும் செய்தது, அவசர சட்டம் கொண்டு வந்தது, சட்டபேரவை சிறப்பு கூட்டம் கூட்டி அதை சட்ட வடிவமாக்கியது ..அனைத்தும் சீராகத்தான் சென்று கொண்டு இருந்தது. அதே வேளையில் போராட்டமும் அறவழியில், அமைதியாகத்தான் நடந்து கொண்டு இருந்து.
போராட்ட குழுவினரின் முயற்சியையும் மழுங்க செய்ய வேண்டும், அதன் மூலம் அவர்களை சோர்வடைய செய்ய வேண்டும், முதல்வர் பன்னீர் அவர்களுக்கு இதற்குண்டா புகழ் கிடைக்க கூடாது, அவரும் கவுக்கப் படவேண்டும் என்று, பக்கா திட்டம் போட்டு அப்பாவி பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, இரண்டு தரப்பினருக்குமே தீராத கஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது யார்?
காவல்துறையை வைத்தே கலவரத்தை தூண்டும் உத்தியை முதல்வரால் செய்ய இயலாது, அந்த அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை.
அத்தனைக்கும் விடை, கமிஷனர் ஜார்ஜ் என்பவர் கையில் உள்ளது, அவர் விசாரிக்கப்பட வேண்டும், இதை உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டு,நடத்த வேண்டும்.
கமிஷனர் ஜார்ஜ் கண்டிப்பாக பதவி விலகவேண்டும்.

சென்னை மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம் ஓயவில்லை, மீனவர்கள் முழு ஒத்துழைப்புடன் நடந்து கொண்டு தான் இருக்கிறது,
வீரிய மிக்க இளைஞர்கள் சுமார் 300 பேர்கள் குழுமி உள்ளார்கள், இந்த கூட்டம் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.
அவர்கள் மூன்று கோரிக்கைகளை முன்னுறித்தி போராட்டத்தை தொடர்கிறார்கள். 

Haja Deen 

மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம்

எங்களுடைய 3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி 300க்கும் மேற்பட்டோர் மெரீனாவில் நடத்தி வரும் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.*
1* *ஜல்லிக்கட்டுக்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தை 9வது பிரிவில் சேர்க்க முதல்வர் உறுதி அளித்தால் போராட்டம் கைவிடப்படும்.*
*காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை இன்னும் இவர்கள் நீக்கவில்லை.*
*மேலும் பீட்டா அமைப்புக்கு எதிராகத் தடை எதுவும் இன்னும் விதிக்கப்படவில்லை.*
2. *போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை வழக்குகள் எதுமின்றி விடுதலை செய்ய வேண்டும்*
3. *போராட்டத்தில் மறைந்தவர் குடும்பத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும்*
ஜல்லிக்கட்டு தடை

இதில் அரசியிலும், சினிமா பின்னணியும், சமூக விரோதிகளுக்கும் இடம் கொடுக்காமல் நடைபெற்றால் நலம்
_____________=____=___=_____________
*10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற போராட்டம் இப்போது 300 பேருடன் நீடித்து …
spread this… support them…

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left