Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்

  தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து ஆவணப்படுத்தலாம் என்ற முயற்சியில் இறங்கினோம்..குடிநீர் பஞ்சம் பெரிய அளவில் இருப்பது அனைவரும் அறிந்ததே..ஆயினும், களத்திற்கு சென்ற போதுதான் புரிந்தது நிலைமை நாம் நினைப்பதை விட பன்மடங்கு மோசமாக உள்ளது..
களத்தில் சகோதரிகளும் தாய்மார்களும் பேசிய சில வார்த்தைகளை மட்டும் கனத்த இதயத்தோடு இங்கு பதிவிடுகிறேன்..

குளித்து சுத்தமா இருனு சொல்றாங்க..தூய்மை பத்தி எல்லாம் பேசுறாங்க…ஆனால, எங்க மாதவிடாய் காலத்தில கூட குளிக்க முடியல..எங்களை சுத்தமா வைச்சுக்க முடியல…குளிச்சு 5 நாள் ஆச்சு…என்ன செய்ய சொல்றீங்க…
3 நாள் கழித்து 1 குடம் தண்ணீர் பத்து ரூபாய்னு வாங்கிட்டு வந்து அதுல சமைச்சு நானும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டிருக்கோம்…3 நாளா சமைக்கிறதுக்குக் கூட தண்ணியில்ல…
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்
சாக்கடை தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்குது…வேற வழி…காசு இருக்கிறவங்க காசு கொடுத்து தண்ணீரை வாங்கிக்கிறாங்க…நாங்க ஏழைங்க என்ன செய்ய முடியும்…
ராமாநாதபுரம், சிவகங்கை அருகே உள்ள கிராமங்களில் குழந்தைகள் ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் காட்சியைப் பார்த்த உடன் உள்ளமெல்லாம் அப்படி ஒரு வலி…அனைத்துக் குழந்தைகளும் தர்ஷிணியாகவே என் கண்களில் பட்டனர்…
குடிநீர் பஞ்சம் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் நிலவுகின்றது என்பதை அரசு உடனே புரிந்து கொண்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்…டாஸ்மாக் கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதிலும் காட்ட வேண்டும்….இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும் கூட பல இடங்களிலும், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப நீரையும் ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கொடுக்கும் சகோதரிகளையும், தாய்மார்களையும் பார்க்க முடிந்தது…ஆட்சியாளர்கள் கவனத்திற்கு நாம் குடிநீர் பிரச்னையில் அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றோம் என்பதை இப்போதாவது உணர்ந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்..
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் Written by Senthil Velu
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புதிய தலைமுறையின் சாமானியரின் குரல் நிகழ்ச்சியில்..” தண்ணீர் கண்ணீர்

இந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல்

இந்தி பூர்வீக மொழியா

 
 

 இந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல்

முகலாய (இஸ்லாமிய) மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போது அரசவையிலும் , படை பிரிவிலும் , நீதிமன்றங்களிலும், பேச பொதுவான ஒரு மொழி தேவைப்பட்டது அப்போது அரபி , ஃபார்ஸீ மூலம் இஸ்லாமிய மன்னர்களால் உருது உருவாக்கப்பட்டது பின்னர் பரந்து விரிந்த இந்தியாவில் வட்டார வழக்கு மொழிகளை காட்டிலும் வேகமாக பரவியது உருது மொழி …

 இந்தி பூர்வீக மொழியா

உருது மொழி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதால் இந்த உருது மொழியை இந்தியாவின் விடுதலைக்கு முன்பே உருதுக்கு பதில் வேறு மொழி கொண்டு வர ஆர் எஸ் எஸ் பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து நாக்பூரில் உருவாக்கப்பட்டது தான் “இந்தி”
உருது மொழியின் சொல்லாடலும் சமஸ்கிருத எழுத்துகளை கொண்டும் உருமாற்றம் செய்து இந்தி என பெயர் சூட்டி சில சொல்லாடல்களையும் , சமஸ்கிருத வார்தைகளையும் இணைத்து இந்தி மொழி உருவானது ….

இந்தி திணிப்பால் இந்தியாவின் முதன்மை மொழியாகிவிட்டது “இந்தி”

உதாரணத்திற்கு 1942 ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் ஆங்கிலேயர் களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதும் போது உருது மொழியில் எழுதிய சான்று தான் கிழே உள்ள கடித நகல் …
குறிப்பு :- இந்தி உருவானது பற்றிய சிறு தகவல் தான் நேரம் கிடைத்தால் இந்தி உருவானது பற்றிய முழுமையான தகவல் இன்ஷாஅல்லாஹ்
ஜெ. ரஹிம்

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் உக்ரைனில் பஞ்சம் ஏற்பட்டதற்கு, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் என்ற, அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்பு அபாரமானது.

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்

Stalin Tamil News

ஸ்டாலின் கொண்டு வர விரும்பிய கூட்டுத்துவ பண்ணை முறையை, கூலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். ஏனென்றால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படவிருந்தன. நிலவுடமையாளர்கள், கூலாக்குகள் கைது செய்யப் பட்ட காலத்தில், அவர்கள் தம்மிடம் இருந்த பயிர்களை அழித்து, கால்நடைகளை கொன்றனர்.
சோவியத் மக்களுக்கு, அதனால் ஏற்பட்ட சொத்து இழப்புக்களை யாராவது கணக்கிட்டார்களா? ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர், உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருந்த வெண் படைகளும், அவர்களுக்கு உதவியாக போர் புரிந்த பன்னாட்டுப் படைகளும், கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தார்களா?
Russian Stalin mems
Russian Stalin mems

Russian Stalin mems

அவர்கள் செய்த நாச வேலைகள் எத்தனை? அவர்களால் அழிக்கப் பட்ட கிராமங்கள் எத்தனை? தீ மூட்டி எரிக்கப் பட்ட வயல்களினால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? கொள்ளையடிக்கப் பட்ட பயிர்கள், கால்நடைகளால், இளம் சோவியத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அவற்றை யாராவது கணக்கிட்டார்களா?
உலகம் முழுவதும், எதிரிக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதற்காக, படையினர் இவ்வாறான நாச வேலைகளில் ஈடுபடுவது வழமையானது. வெண் படையினர், கூலாக்குகள் செய்த நாச வேலைகள், அதனால் உண்டான பொருளாதார இழப்புக்கள் குறித்த தகவல்கள் எங்கே? ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை? அப்படி ஒன்று நடந்ததை கூட சொல்லாமல் மறைப்பது ஏன்?
எதிர்ப்புரட்சியாளர்களின் நாசவேலைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், அழித்தொழிப்புகள் எல்லாவற்றையும், அவற்றை எதிர்த்துப் போராடிய ஸ்டாலின் என்ற தனி மனிதனின் கணக்கில் எழுதும், அறிவுஜீவிகளின் திறமை வியக்க வைக்கிறது
Written & Thanks By Kalai Marx
சராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம்

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

அகண்ட இந்து பாரதக் கனவு

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது.. விரைவில், யாழ்ப்பாணத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப் படலாம். மாடு திருடியவனை சாகும் வரை அடித்ததை நியாயப்படுத்தும் கனவான்கள், திடீரென மாட்டின் மீது பாச மழை பொழிவது கவனிக்கத் தக்கது.
முகநூல் எங்கும் “மாடு எங்கள் குடும்ப உறுப்பினர்” என்று உணர்ச்சிகரமான ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதனின் உயிரை விட, மாட்டின் உயிர் மேலானது என்று வாதாடுகின்றனர். மாடு திருடினால் கடுமையான தண்டனை வழங்குவது சரிதான் என்கிறார்கள். விரைவில், திருட்டுக்கு கை வெட்டும் “இந்து – ஷரியா” சட்டத்தை முன்மொழிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதைத் தான்… இதையே தான் இந்துத்துவா பாசிச சக்திகள் யாழ்ப்பாணத்தில் கொண்டு வர விரும்புகின்றன. இதற்காகவே இந்திய துணைத் தூதரகமும், சிவசேனையும் தீயாக வேலை செய்து கொண்டிருந்தன. அவர்களது முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. இந்து பேரினவாதம் யாழ்ப்பாணத்தில் காலூன்றி வருகின்றது.
சிரியாவில் உள்ள ஐ.எஸ். என்ற இஸ்லாமிய தேசம் மாதிரி, யாழ்ப்பாணத்தில் இந்து தேசத்தை உருவாக்கலாம். சிரியா, ஈராக் இரண்டு நாடுகளினதும் எல்லைகளை அகற்றி ஒன்று சேர்க்கும் நோக்குடன் தொடங்கப் பட்டது தான் ஐ.எஸ்.
ISIS என்ற அதன் ஆரம்ப கால பெயரே அந்த நோக்கத்தை வெளிப் படுத்துகின்றது. அதே பாணியில் இந்தியா, இலங்கை எல்லைகளை அகற்றி இரண்டையும் ஒன்றாக்கும் நோக்கில் இந்துத்துவா சக்திகள் செயற்படுகின்றன. இனி என்ன? அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

Written By Kalai Marx

ஆர் எஸ் எஸ் அதன் உண்மை முகமும் அதன் தீவிர வாத முயற்சியும்

 

ஆர் எஸ் எஸ் அதன் உண்மை முகமும் அதன் தீவிர வாத முயற்சியும்

ஆர் எஸ் எஸ்

  1. ஆர் எஸ் எஸ்RSS ஐ சேர்ந்த நாதுராம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை படுகொலை செய்தான்.

பின்னர் அது இஸ்மாயில் இல்லை, RSS ஐ சேர்ந்தவன் என்று நிரூபணம் ஆனது.
2. மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஹம்மது அக்லாக்கை படுகொலை செய்தார்கள், பின்னர் அது ஆட்டிறைச்சி என்று நிரூபணம் ஆனது.

3. சுவாதியை பிலால் மாலிக் படுகொலை செய்ததாக பரப்பினார்கள். பின்னர் பிலால் மாலிக் கொலை செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது.
4. ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறினார்கள். பின்னர் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று நிரூபணம் ஆனது.
5. தென்காசி, மாலேகான், சம்ஜோத்தா ரயில், பீகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பை நடத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் என்றார்கள், பின்னர் அது RSS தீவிரவாதிகள் என்று நிரூபணம் ஆனது.
6. சத்தியமங்கலத்தில் நள்ளிரவில் கோவில் சிலையை சேதப்படுத்தி, தென்காசியில் நள்ளிரவில் கோவில் தேரை எரித்து, பொழுது விடியும்போது முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்ததாக போஸ்டர் ஒட்டினார்கள், பின்னர் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 48 மணிநேரத்திற்கும் முன்பே போஸ்டர் அடித்து விட்டதாக விசாரணையில் வாக்குமூலம் கொடுத்தார்கள்.
7. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களில் ஆர் எஸ் எஸ் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு முஸ்லிம்கள் செய்ததாக பரப்பப்பட்டு பின்னர் விளம்பரத்திற்காகவும், கட்சியில் பதவி பெற வேண்டும் என்பதற்காகவும் தங்களுக்கு தாங்களே பெட்ரோல் குண்டு வீசியதாக கண்டுபிடிக்கப்பட்டது.
8. குஜராத்தில் சபர்மதி ரயிலை முஸ்லிம்கள் எரித்ததாக கூறி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். பின்னர் ரயில் உள்ளிருந்து தீப்பிடித்து எரிந்ததாக விசாரணையில் நிரூபணம் ஆனது.
9. கோவிலில் மாட்டிறைச்சியையும், பள்ளிவாசலில் பன்றியையும் வீசி மதக்கலவரத்தை தூண்டினார்கள். கர்நாடகா மாநிலத்தில் நள்ளிரவில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி தேசிய கொடியை தீ வைத்து கொளுத்தி அருகில் போட்டார்கள். பின்னர் அனைத்திலும் RSS ஐ சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
10. பாபர் மஸ்ஜிதில் ராமன், லட்சுமணன், சீதையின் சிலையை வைத்து ராமன் பிறந்ததாக கூறி பள்ளிவாசலை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.
இப்படி ஆயிரமாயிரம் பட்டியலிட முடியும்….
தமிழா உறங்காதே
புதைத்துவிடுவார்கள்…
தமிழா உறங்காதே புதைத்துவிடுவார்கள்

மதுவுக்கு எதிராக போராடும் அன்பு மணி ராமதாஸ்

மதுவுக்கு எதிராக போராடும் அன்பு மணி ராமதாஸ்

அன்பு மணி


அன்பு மணி


இணையத்தில் உலாவரும் ஒருசெய்தி என்னவென்றால் நெடுஞ்சாலையில் இருக்கும் மது கடைகள் மூடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி காரணம் அல்ல, எதோ வடக்கே இருக்கும் ஊனமுற்ற ஒருவர் தான் கரணம் என்று ஒரு செய்தி உலாவருகிறது .
உண்மை என்னவென்றால் சிகரெட் மற்றும் மது பான தடை ஏற்படுத்த 10 வருடத்திற்கு முன்பே அன்பு மணி வித்திட்ட ஒரு முயற்சி தான் itc மற்றும் காஜா பீடி கம்பெனிகள் வேறு தொழிலை நோக்கி நகர தூண்டியது
காஜா பீடி தைலம் விக்கவும் itc காரன் கோதுமை மாவு மற்றும் பிசுகட் வியாபாரம் நோக்கி நகர காரணமாய் இருந்தது
உண்மை இப்படி இருக்க எதோ வடக்கத்தி காரன் தான் இதற்க்கு காரணம் என்று ஊடகங்கள் உண்மையை திரித்து கூறி வருகிறது என்னை பொறுத்த வரையில் மதுவுக்கு எதிராக மிக சிறப்பாக களப்பணி ஆற்றி வருகிறார் அன்பு மணி ராமதாஸ்…
குறிப்பு நான் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவன் அல்ல
Abu Meeran Tahir

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left