Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக! Dr. S. Ramadoss அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மூவர் சாவு
காவல்துறை ஒடுக்குமுறை கண்டிக்கத்தக்கது
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக!
Dr. S. Ramadoss அறிக்கை
தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலும், அதை மூடி மறைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கடல் வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பேரழிவு ஆலையை மேலும் 600 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்ததைக் கண்டித்தும், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் பகுதியில் தூத்துக்குடி மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியிருக்கிறது. ஆனால், தங்களின் போராட்டத்தை மதித்து, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வராததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தூத்துக்குடி பகுதியில் உள்ள 18 கிராம மக்கள் அறிவித்திருந்தனர். இது ஒருவகையான அறவழிப் போராட்டம் தான் என்பதால் அதை அமைதியாக நடத்த பொதுமக்களைஅனுமதித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டக்காரர்களுடன் முன்கூட்டியே பேச்சு நடத்தி போராட்டச் சூழலை தவிர்த்திருக்க வேண்டும்.
ஆனால், அதை செய்யாத மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் போராட்டத்தை ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தின. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்கும் நோக்குடன் தூத்துக்குடி பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். அதுமட்டுமின்றி ஏராளமான காவல்துறையினரை குவித்து மக்களை மிரட்டும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டது. தமிழக அரசின் இந்த ஒடுக்குமுறை காரணமாகவே போராட்டக்காரர்கள் சில இடங்களில் பொறுமை இழந்தனர். இதைக் காரணம் காட்டி காவல்துறை தடியடி, கண்ணீர்புகைக் குண்டு வீச்சு என ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்வினையாற்றியதன் விளைவாக போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறையினரின் ஒடுக்குமுறையையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அங்கும் தமிழகக் காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தவிர ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை காவல்துறையினர் அகற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் தவிர மேலும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களில் ஒருவரின் பெயர் ஜெயராமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அதுகுறித்த செய்திகளை தமிழக அரசு இருட்டடிப்பு செய்துள்ளது. ஒரு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அணுகுமுறையே காரணம் ஆகும். தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்; இந்த நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானவை; இவற்றுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் விரிவாக்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. 1994 முதல் 2004 வரையிலான காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்; 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாற்றுகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கும், அப்பகுதியில் உள்ள பல்லுயிர்வாழ் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. அதை மதித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு வாக்குறுதி அளித்திருந்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். அதை செய்யத் தவறியது தமிழகத்தை ஆளும் பினாமி ஆட்சியாளர்களின் மிகப்பெரிய தோல்வியாகும்.
தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும் தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதுடன், அவர்களுக்கு காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
Dr. S. Ramadoss

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை  (இதுதான் உண்மை கள நிலவரம் )

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை பலர் காயப்பட்டுள்ளனர் (இதுதான் உண்மை கள நிலவரம் ) இந்த கொலை மக்களை பயமுறுத்தவே மக்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்யவே தூத்துக்குடி மக்கள் ஆலையை மூட கூறி பல ஆண்டுகலாய் அறவழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி பார்த்தார்கள் அவர்களோடு கூட வே அரசியல் வாதிகள் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர் அரசு எதற்கும் செவிசாய்க்க வில்லை
ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தள்ளி போட்டுக்கொண்டே வந்தது அதோடு மத்திய அரசும் ஏன் என்றும் கூட கேட்கவில்லை ஆதலால் இன்று மக்கள் சொல்லிவைத்தற்போரால் பல்லாயிர கணக்கான மக்கள் இன்று சாலையில் இறங்கி போராடினார்கள்! அரசோ அவர்களை ஒடுக்கத்தான் நினைகிறது

பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர்

அதனுடைய வெளிப்பாடு தன இன்று நடந்த துப்பாக்கி சூடு ஒருவறில்லை இருவரில்லை பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர் பலர் காயப்பட்டுள்ளனர் இந்த அரசு யாருக்கான அரசு? மக்கள் இதற்க்கு முன்பு பொறுமையாக தானே தங்கள் உரிமைக்காக போராடினர் எத்துணை வருடம் எத்துணை உயிரிழப்பு எத்துணை மக்கள் நோய் வயப்பட்டனர் இருந்தும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை

அரசுதான் மக்களை இன்று வீதியில் இறங்கி போராட வைத்தது

இந்த அரசுதான் மக்களை இன்று வீதியில் இறங்கி போராட வைத்தது இந்த அரசுதான் அப்பாவி மக்களை இன்று சுட்டு தள்ள உதிரவிட்டது இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் பலர் காயப்பட்டுள்ளனர் (இதுதான் உண்மை கள நிலவரம் ) இந்த கொலை மக்களை பயமுறுத்தவே மக்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்யவே

இனி எதுக்காவது போராட்டம் அது இதுன்னு மக்கள் ஒன்று கூடினால் சுட்டுவிடுவோம் என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள் காவல்துறை மற்றும் மத்திய மாநில அரசுகள்
தூத்துக்குடி மாவட்டத்துக்கு Mobile மற்றும் TV தொடர்புகள் துண்டிக்க தமிழக அரசு மறைமுக ஆணை- செய்தி..
காஷ்மீரிலும் இதைதான் செய்தார்கள்.
மக்களே கவனமாக இருங்கள்..

மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர்

மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர்

மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர் முஸ்லீம்கள் நாங்கள் அதிகமாக இருக்கின்ற இடத்தில் இந்துக்கனள ஒரு போதும் நாங்கள் தாக்கியதில்னல நல்ல நண்பர்களாகதான் இருக்கின்றோம் அப்படியே நாங்கள் தாக்கினோம் என்று பல ஊடகங்கள் சொல்லிருந்தால் அது Bjp Rss பயங்கரவாதிகளின் சதியாகும்,

எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில்தான் எங்களுக்கு எதிரி இந்து அல்ல Bjp Rss தான் எங்கள் எதிரி என்று கூருவோம்.
தராவீஹ் தொழுகைக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு! மீரட்டில் கலவரம்!!!
மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர்
 பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர்தாக்குதல் நடத்தினர்

மீரட் நகரில் இரவு தொழுகை நடத்திய முஸ்லிம்கள் மீது Bjp கட்சி காரர்கள் Rss பயங்கரவாதிகள் இரு பயங்கரவாத அனமப்பினர் உட்பட பல இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது.
“ரமலான் மாத இரவு தொழுகைக்கு வந்த ஏறத்தாழ 100 முஸ்லிம்களை அவர்கள் துரத்தி தாக்கியதாகவும் பின்னர் ஒருவருக்கொருவர் கற்களை கொண்டு, தாக்கிக்கொண்டதாகவும் கூறினர் அப்பகுதி மக்கள்.
தொழுகை நடந்த பகுதி இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி, ஆகையால் தொழுகையை வெளியே நடத்தக்கூடாது எனவும், பள்ளிவாசலுக்கு உள்ளேயே நடத்தி கொள்ளவேண்டும் எனவும் அப்பகுதி பிஜேபி பயங்கரவாத அரசு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Written By 

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது

சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது  காட்டுமிராண்டிகள் கையில் நாடு சிக்கி சீரழியும் நிலையிலும் தென்னகம்  இந்த திராவிட நாடு சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது
உண்மையில் ஒரு ராயல் சல்யூட்.. 221 சட்டமன்ற உறுப்பினரும் சபைக்கு வந்ததும் விலைபோக மனநில்லாமல் கொஞ்சம் நேர்மையாய் நடந்துக்கொண்டதும் மகிழ்ச்சியை தருகிறது
சுயமரியாதையை கற்பித்த தமிழ் மண்  இன்று நல்ல பாடத்தை கருநாடகத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்
மானத்தை அடகுவைத்து பதவிக்காக விலைபோகாமல் உரத்துநின்றார்கள் பாருங்கள் அதை தமிழக அதிமுக அடிமைகள் உணரவேண்டும் ₹150 கோடி அமைச்சர்பதவி தருவதாக சொல்லியும் அசைய மறுத்தவர்கள்
அதிமுகஅடிமைகளுக்கு ₹10 கோடிக்கே நாக்கை தொங்கபோட்டு அலைவார்கள்.. மோடியின் காலை நக்கிப்பிழைப்பவர்கள்.. சுயமரியாதை என்னவென்று இதையெல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.. அதிமுகவின் அடிமைகளே
மிக தெளிவாக காய் நகர்த்தினால் சனநாயகமும் சட்டமும் வகுத்து தந்த நெறிமுறைகளிலிருந்து மாறாமல் நின்று எதிர்த்தால் இந்த பாசிச பழைமையை காட்டுமிராண்டிகளை விரட்டிவிடலாமென்று உணர்த்தியிருக்கிறது


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதை உணர வேண்டும்..மிக சாதூர்யமாக நம்மில் பிரிவை.. பேதத்தை உண்டாக்கி சாதிவெறியர்களாய் நிற்கவைத்து ..வெறியேற்றி வெறியேற்றி நம்மை குலைக்கவைத்து

ஏதோ தேசபிமானிகள் போல வேடமணிந்து நம்மை கடித்து குதறும் ஓநாய்களாய் பாசிச ஆரியகும்பல் நிற்கிறது
தொடர்ந்து நம் உரிமைகளை பறித்து. உயர்பதவிகள் ஆக்ரமித்து நீதிபரிபாலசபை வரை தன் கோரபற்களை நீட்டி எல்லா நன்மைகளையும் நலன்களையும் குறிப்பிட்ட மூன்று விழுக்காட்டிற்கு கொண்டு சேர்க்கும் ஒரு குறிகோளோடு ஆர்எஸ்எஸ் இயங்குகிறது அதன் சொற்படி ஆடும் அடிமைகளை ..அதிகாரிகளாக்கி நினைத்ததை சாதிக்க நினைக்கும் ஆனால் அதற்கு தென்னகம் பேரிடைஞ்சலையாய் இருக்கிறது
இன்றைய தினம் இந்திய சனநாயகம் மீண்டும் எழுந்தது மூர்ச்சையாகி கிடந்த நிலையிலிருந்து 
மறுத்தெழுந்தது

தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் தேசபக்தகட்சியினர் வெளியேறினர்

உச்சநீதிமன்றம் இந்த விடயத்தில் நேர்மையாக செயல்பட்டது  சபாநாயகரை நம்பாமல் சட்டமன்ற அதிகாரிகள் கணக்கெடுக்கவேண்டுமென்றும் நேரலையென்றும் உத்தரவிட .. 200 மேற்பட்ட கேமெராக்கள் வேறுவழியின்றி  ஓடிப்போனார் தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் தேசபக்தகட்சியினர் வெளியேறினர்
கர்நாடகம் உணர்த்தும் செய்தி  ஒன்றுபடு இல்லையேல் இரத்தவெறிக்கொண்டு அலையும் பாஜகவிடம் சிக்கி சின்னாபின்னமாக வேண்டிவரும்
நாட்டை சூறையாடிவிடுவார்கள் எதற்கும் அஞ்சாத கயமைகுணம் கொண்டவர்களிடமிருந்து

தென்னத்து நுழைவுவாயில் அடைக்கபட்டது  Grand entry என்ற பலே அடிமை பன்னீரின் ஆசை நிராசையானது

Grand entry என்ற பலே அடிமை பன்னீரின் ஆசை நிராசையானது
Grand entry என்ற பலே அடிமை பன்னீரின் ஆசை நிராசையானது


கர்நாடகம் தப்பித்தது 

இனி இந்திய தேசம்
..
ஆலஞ்சியார்

மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில்

மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது

மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது அதில் சில ஆவடியில் உள்ள ராணுவ சீருடை நம் மதிப்பிற்குரிய ஊறுகாய் மாமி நிர்மலா அவர்களின் உத்தரவின் பேரில் மூடுவிழா கண்டது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும்?

மோடி ஆட்சி இனி காலி

மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில்
மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில்

இந்தியாவில் இருந்து வெகு விரைவில் துடைத்து எறியப்பட வேண்டிய ஓர் தீய சக்தி தான் மோடி
மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது

ராணுவ சீருடை

அதில் சில ஆவடியில் உள்ள ராணுவ சீருடை நம் மதிப்பிற்குரிய ஊறுகாய் மாமி நிர்மலா அவர்களின் உத்தரவின் பேரில் மூடுவிழா கண்டது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும்.
ராணுவ வீரர்களின் உடைகளுக்கான செலவை அவர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்த போகிறார்களாம் இதனால் நாடு முழுவதும் 12,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது….
ராணுவ வீரர்களின் சீருடை தயாரிக்கும் உரிமையையே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது எந்த மாதிரியான பாதுகாப்பு என்பது தெரியவில்லை. இனி தீவிரவாதிகள் மிக எளிதாக அதிகாரப்பூர்வ ராணுவ உடையில் கூட வலம் வரலாம்….
அடுத்தது இன்னொரு பேரிடி நம் கேடி அரசால் காத்திருக்கிறது. அது என்னவென்றால்
ரயில்வே பள்ளிகள் மற்றும் ரயில்வே மருத்துவமனைகளை மத்திய அரசு வரும் 2019 க்குள் முழுமையாக மூடிவிடுமாம்.
அடுத்து வரும் காங்கிரஸ் அரசு மூடியதை திறக்கும். ஆனால் 2019 க்கு பின் பாஜக என்னும் ஒரு கட்சியே இந்திய அரசியல் வரலாற்றில் இருந்து துடைத்தெறிய படும் பரவாயில்லையா?
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ரயில்வே துறையில் பணியாற்றும் ஆங்கிலேயர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிகள், சென்னை, திருச்சி, மதுரை, அரக்கோணம், ஈரோடு, ஜோலார்பேட்டை, போத்தனூர், விழுப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, ரயில்வே பணியில் இல்லாதவர்களின் பிள்ளைகளையும் இந்தப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். மிகக் குறைந்த கட்டணத்தில், ஏழை எளிய குடும்பங்களின் பிள்ளைகளும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்ற தெற்கு ரயில்வேயின் திடீர் அறிவிப்பு, இங்கு படித்துவரும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், சில நூறு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோர் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இயங்கிவரும் ரயில்வே பள்ளிகள் 2019-ல் மூடப்படும். இங்கு படிக்கும் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது’ என ரயில்வே பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படித்துவரும் சுமார் 6,800 மாணவ, மாணவிகள் இங்கு பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ரயில்வே பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன.
அடுத்ததாக, ரயில்வே மருத்துவமனைகளையும் மூடப்போவதாக வெளியாகியுள்ள செய்தி, இந்த மருத்துவமனைகளை நம்பியுள்ள ரயில்வே தொழிலாளர்களைப் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள ரயில்வே மருத்துவமனை, ரயில்வே தொழிலாளர்களுக்காக பிரிட்டிஷ் அரசால் 1925-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 500 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் சிகிச்சை, மருந்துகள் என அனைத்தும் இலவசம். தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள், சுமார் ஒன்றரை லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என சுமார் ஐந்து லட்சம் பேர் இந்த மருத்துவமனைகளால் பயனடைந்துவருகிறார்கள். காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவம் தொடங்கி இதய அறுவை சிகிச்சை வரை பல சிறப்பு மருத்துவப் பிரிவுகள் இந்த மருத்துவமனையில் உண்டு. பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் டி.ஜே.செரியன் இந்த மருத்துவமனையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

மருத்துவமனை களையும் மூட மத்திய அரசு நடவடிக்கை

இந்த மருத்துவமனையை மட்டுமல்ல, அரக்கோணம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் மருத்துவமனை களையும் மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் ரயில்வே மருத்துவமனை களில் 2,597 டாக்டர்களும், 54,000 துணை மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மருத்துவமனை கள், தனியார் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
மக்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தை யும் மூடிவிட வேண்டும்’ என்று கங்கணம் கட்டி கொண்டு மோடி செயல்படுகிறார். இதுபோல் மன்மோகன் அவர்கள் கேவலமாக செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நரேந்திர மோடி அரசு

இந்திய ரயில்வேயை ‘மறுசீரமைப்பு’ செய்வதற்காக ஒரு கமிட்டியை அமைத்தது ரயில்வே பள்ளிகள் மற்றும் ரயில்வே மருத்து வமனைகள் உள்பட எல்லா வற்றையும் மூடுவதற் கும், ரயில்வேயை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதற்கும் அச்சாரம் போடுவதாக விவேக் தேப்ராய் கமிட்டியை அது அமைத்தது. இந்த கமிட்டி பல ‘முக்கிய’ பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் விளைவுதான், இந்த மூடல் நடவடிக்கை.
மைய (Core) வேலைகளை மட்டும்தான் ரயில்வே செய்ய வேண்டும்; மையம் அல்லாத (Non Core) வேலைகளை ரயில்வே செய்யக் கூடாது என்பது விவேக் தேப்ராய் கமிட்டியின் முக்கியமான பரிந்துரை.
ரயில்களை இயக்குவது என்பதுதான் ரயில்வேயின் மைய வேலை. இது தவிர பாதுகாப்பு உட்பட எல்லாவற்றையும் அவுட்சோர்சிங் செய்துவிட வேண்டும் என்கிறது விவேக் தேப்ராய் கமிட்டி

பாதுகாப்புப்படை என்கிற ஓர் அமைப்பு தேவையே இல்லை

ரயில்வே பாதுகாப்புப்படை என்கிற ஓர் அமைப்பு தேவையே இல்லை’ என்பது இந்த கமிட்டியின் ஆபத்தான பரிந்துரைகளில் ஒன்று. அதாவது, ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப்படையை இனி கலைத்துவிடுவார்கள். அதற்குப் பதிலாக, அந்தப் பணியை தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைத்து விடுவார்கள். ரயில்களில் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது எந்த அளவுக்குப் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்குமே புரியும்.
பயணிகள் ரயில்களையும் சரக்கு ரயில்களையும் இயக்குவதற்கு உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப் போகிறார்கள். இவற்றையெல்லாம் அமல் படுத்த, ‘ரயில்வே வளர்ச்சி ஆணையம்’ அமைக்கப் போகிறார்கள். அதற்காக, மத்திய அமைச்சரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில்வே சட்டத்தைத் திருத்தியே ரயில்வே ஆணையம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை யில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அந்த ஆணையத்தை மத்திய அரசு அமைக்கிறது.ரயில்வே வளர்ச்சி ஆணையம் அமைக்கப்பட்டு விட்டால், அனைத்தையும் அதுதான் முடிவு செய்யும். ரயில்வே நேர அட்டவணை, வழித்தடங்கள் உள்பட அனைத்தையும் அந்த ஆணையமே முடிவு செய்யும். தனியாரை அனுமதிப்பதால்,அரசு இயக்கும் ரயில்களில் பாதி குறைந்து விடும். பாதி ரயில்கள் தனியாருக்குப் போய்விட்டால், ரயில்வே தொழிலாளர்களில் பாதிப் பேர் வேலையை இழப்பார்கள். முக்கிய ரூட்களைத் தனியாருக்குக் கொடுத்துவிடுவார்கள். இதனால், ரயில் வேயின் வருமானத்தில் பாதி குறைந்துவிடும். உபரி யாகும் பாதித் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமாட்டார்கள். தெற்கு ரயில்வேயில் ஒரு லட்சம் தொழிலாளர்களும், சுமார் ஒன்றரை லட்சம் ஓய்வூதிய தாரர்களும் உள்ளனர்.
ரயில் தொழிலாளர்கள், அவர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மீதான அக்கறையில் பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் ஆங்கிலேய அரசு அன்று திறந்தது. யார் மீதான அக்கறை யில் இவற்றையெல்லாம் மோடி அரசு மூடுகிறது? வெள்ளைக்காரனை காட்டிலும் கேவலமான கொலைகாரனாக அல்லவா இந்த மோடி மஸ்தான் அரசு இருக்கிறது. உலகிலேயே அதிகம் பேர் பணிபுரியும் நிறுவனங்களின் பட்டியலில், எட்டாவது இடத்தில் உள்ளது இந்திய ரயில்வே. இந்த நிறுவனத்தை, அதன் பெருமை சிதையாமல் காப்பாற்றுவதே சரியான முடிவாக இருக்கும்.
ஊழல்வாதி என்று குற்றம் சாட்டப்பட்ட லாலு ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ரயில்வேத்துறை எவ்வாறு? லாபத்தோடு இயங்கியது.
இந்த மோடி அரசு செய்யும் அணைத்து தவறுகளையும் நான் ஆதரித்தால் தான் எனக்கு ஹிந்து என்னும் அடையாளம் கிடைக்கும் என்றால் தக்காளி எனக்கு ஹிந்து என்னும் அடையாளமும் வேண்டாம் பிராமணன் என்னும் அடையாளமும் வேண்டாம். நான் முதலில் இந்தியன்.

மன்மோகன் ஆட்சியில்

உடனே ஈழத்தில் 1.75 லக்ஷம் னு ஆரம்பிப்பாங்க. அதை நினைத்து நானும் கண்ணீர் விட்டு வருந்தினேன். அதே சமயம். ராஜீவ் காந்தியோடு உடன் இருந்த 14 அப்பாவிகளும் குண்டினால் இறந்தது தமிழர் போராளி பத்மநாபா மட்டும் அல்லாமல் அவர் உடனிருந்த 12 நபர்கள் அந்த 12 நபர்களில் டீ கொடுத்த சிறுவனும் அடக்கம். அந்த சிறுவன் உட்பட அனைவரும் கோடம்பாக்கத்தில் இறந்தது முதலான பல விஷயங்கள் என் கண் முன்னாடி வந்து, வந்து போகுது.
காங்கிரஸ் ஆட்சியில் இந்த திருமுருகன் போன்ற பிரிவினை வாதிகள் எல்லாம் அட்ரசே இல்லாமல் இருந்தார்கள். உடனே காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தியாவில் இருந்து பாக் பிரிந்தது என்னும் பழைய பஞ்சாங்கத்தை தூக்கி கொண்டு வந்து விடுவீர்கள்.
இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலை காட்டிலும் மோடி பெரிய ஆளா? அவராலேயே அன்று பிரிவினையை தடுக்க முடியவில்லை. மோடியால் என்ன செய்திருக்க முடியும். சுருக்கமாக சொன்னால் பட்டேல் பாக் பிரிவினைக்கு ஆதரவாக ஒட்டு போட்டார். காந்தி அதற்கு எதிராக ஒட்டு போட்டார். பட்டேல் ஏன்? அவ்வாறு. செய்தார்
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 2 நாடுகளில் உள்ள இன்றைய மொத்த மக்கள் தொகை 36 கோடி ஏற்கனவே நம் நாட்டின் அதிக மக்கள் தொகை நமக்கு ஒரு முட்டுக்கட்டை. இதில் அந்த 36 கோடி கூடுதல் சுமை. பிரிவினை வாத எண்ணம் கொண்ட அந்த 36 கோடி பேர் இந்தியாவுக்கு ஒட்டு போட்டால் அதன் விளைவு எவ்ளவு? பயங்கரமாக இருக்கும்.
மேலும் ஒரு காஷ்மீரையே நம்மால் சமாளிக்க முடியல. மோடி பவருக்கு வந்தும் காஷ்மீரில் இன்னமும் கல் எறிதல் நடந்து கொண்டு தான் இருக்கு. சமீபத்தில் கூட நாம் திருமணி என்னும் ஒரு அப்பாவியை இழந்தோம். பாக், பங்களாதேஷ் லாம் இன்றும் இந்தியாவோடு இருந்திருந்தால் நம் நாட்டில் மேலும் ஒரு 10, 12 காஷ்மீர் இருக்கும். கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஆக எல்லாம் நன்மைக்கே.
இப்பகூட ஒன்னும் கெட்டுபெய்டல. இன்னும் 1 ஆண்டு அவகாசம் இருக்கு. அதற்குள் மோடி தனது அரசாங்கம் செய்த தவறுகளை திருத்தி கொண்டால் மீண்டும் மோடி சர்க்கார் ஆட்சிக்கு வரும் இல்லையேல்
மோடி ஆட்சி இனி காலி.
எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததன் விளைவு தொடர்ந்து 25 ஆண்டுகளாக வென்று கொண்டிருக்கும் கோரக்பூர் தொகுதியிலேயே பாஜக மண்ணை கவ்வியது. அது தான் 2019 இல் இந்தியா முழுவதும் நடக்கும்
Written by KrishNa Prashad

கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது

கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது

கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது மிரட்டல்,கடத்தல், ஊழல்.. மாஃபியா …இது போன்ற அரசியல்தான் நடைபெற்று வருவதாக தற்போது செய்தி வெளியிட்டிருக்கிறது
காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் பாஜகவால் கடத்தபட்டு டெல்லிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்..
பாஜக வின் எம் எல் ஏ ராமூலு எம்எல்ஏக்கள் நாளை நடைபெறும் மெஜாரிட்டி நிருபிக்கும் சட்ட மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கவேண்டுமென பகிரங்கமாக எச்சரிக்கிறார்.. வெளிப்படையாகவே
மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது  

கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது
கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது

ஆஷிபாவை எட்டுநாள் கோயிலில் வைத்து கற்பழித்தது தெரியுமில்லே என காங் ,ஜனதாதள எம்எல்ஏக்கள் மிரட்டபடுவதாக அதிர்ச்சியூட்டும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட தொடங்கியிருக்கிறது.. இது ஒரு வெளிப்படையான மிரட்டல் .. மற்றவர்களுக்கு தரப்படும் எச்சரிக்கை..
பாஜகவால் இந்திய அரசியல் மேன்மையை முழுவதுமாக சீரழித்து விட்டது குறைந்தபட்ச நியாயம் தர்மங்கள் கூட கடைப்பிடிக்கபடுவதில்லை அதிகார போதையில் என்ன செய்கிறோமென தெரிந்தும்
அந்தளவு கீழே செல்கிறார்கள்.. சனநாயகம் மிக ஆபத்தான காலத்தின் அருகில் நிற்கிறது
இந்திய ஜனநாயகத்தின் குரல் வலை முழுவதும் நெறிக்கும் பட்டு விட்டது. இந்தியா எனும் தேசம் உலகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்கியது இப்போது இந்த கயவர்களால் வெட்கி தலைகுனிவை சந்திக்கிறது..
..
நாளை எதுவும் நடக்கலாம் .. ரகசிய வாக்கெடுப்பை ஏற்காத உச்ச நீதிவான்கள்.. கையை உயர்த்தி ஆதரவை எதிர்ப்பு/ஆதரவு தரவேண்டுமென சொல்லியிருக்கிறார்கள்.. பாஜக வழக்கறிஞர் முகில் ரோஹகத்கி .. காங்.ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட பாஜகவிற்கு வாக்களிப்பார்கள் என்பதிலிருந்தே இவர்கள் சதி நமக்கு புரியும்.. வெளிப்படையான மரபுகள் மீறபடும்.. ஆட்சி அதிகார போதையில் எல்லைமீறிய செயல்கள் அரங்கேற்றபடலாம்..
நாளைய நிகழ்வு அது எந்த நிலைபாடாக இருந்தாலும் .. அனைத்து அட்டூழியங்கள் செய்து வெற்றிபெற்றாலும் அறநெறியோடு எடியூரப்பாவை தோற்கடித்தாலும் .. நிச்சயம்
சரித்திரத்தில் நிச்சயம் இடம்..

கர்நாடகவில் மாஃபியா

நேர்மையான அரசியலை செய்து ஆட்சிக்குவர எந்தகாலத்திலும் விரும்பாத இயக்கம் ஆர்எஸ்எஸ் .. அனைத்து உயர்பதவிகளும் ஊடுறுவி உள்ள ஆர்எஸ்எஸ் .. இந்திய ஜனநாயக மாண்புகளின் குரல்வலையை கடித்து குதறுகிறது .. உச்சபட்ச நீதிபீடம் முதல் அனைத்தும் சொல்பேச்சை கேட்க வைத்திருக்கிறது.. பாஜகவின் அத்துமீறல்களும் அடாவடிகளும் ..மிரட்டல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியவைத்தல் .. மீறுகிறவர்களை .. எதிர்பாளர்களை முற்போக்கு பேசுவோரை கொலை செய்தல் .. அடிபணிய மறுத்தல் வருமானவரித்துறை காவல்த்துறை மூலம் மிரட்டல் என ஆடுகிற பேயாட்டம் மக்களிடத்தில் பெரும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.. இவர்களின் செயல்கள் மாபெரும் மக்கள் புரட்சியை நோக்கி இந்தியாவை இட்டுச் செல்கிறது .
..
சனநாயகத்தின் சுவாசத்தை நிறுத்த முயலும் இந்த பாசிசவாதிகளை ..இந்திய அரசியல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் நாளே உண்மையான விடுதலை நாள்.. ..நாளை ஒருவேளை தோற்க்கலாம் .. ஆனால் பாசிசத்தின் கொடூர பற்கள் நம்மை கடித்து குதறிக்கொண்டே இருக்கும்.. அதன்பற்களை பிடிங்கியெறி வேண்டும்.. அதன் தொடக்கமாக நாளை பெங்களுரூ விதான்சபா..இருக்கட்டும்..
..
சனநாயகம்
..கர்நாடகவில் மாஃபியா ஆலஞ்சியார்   

உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது

உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது நீதிபரிபாலன முறை மீதான நம்பிக்கையை பொய்க்க செய்கிறது

உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது நீதிபரிபாலன முறை மீதான நம்பிக்கையை பொய்க்க செய்கிறது
சட்டம் மிக தெளிவாக யாரை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டுமென சொல்லியிருக்கிறது அதிக இடங்களை பெறுவோர் ..மட்டுமல்ல பெருபான்மையை எட்டியவர்கள் அல்லது இணைந்து பெருபான்மையை தருகிறவர்கள்..
பாஜகவிற்கு பெருபான்மையெனும் மாஜிக் நம்பர் magic number இல்லை .. ஆனால் அந்த கூட்டு எண்ணை தருகிற காங் ஜனதா கட்சிக்கு
வாய்ப்பு மறுக்கபட்டு .. அவர் கேட்ட ஏழுநாட்களை விட அதிகமாக இன்னுமொரு ஏழுநாட்களை வைத்துக்கொள் எது வேண்டுமானாலும் செய்துகொள்..ஆனால் சட்டமன்றத்தில் பெருபான்மையை நிரூபி!

நள்ளிரவில் கூடி நீதிமான்கள் விவாதித்தார்கள்

நள்ளிரவில் கூடி நீதிமான்கள் விவாதித்தார்கள் விடிய விடிய பேசி கடைசியில் கவர்னர் அதிகாரத்தில் தலையிட முடியாதென்று .. தடைவிதிக்க மறுத்தார்கள்.. தலையிட முடியாதென்று தெரிந்தும் கவர்னருக்கு உத்திரவிட முடியாதென தெரிந்தும் ஏன் வீணான விடிய விடிய கதைக்கவேண்டும்.. ஒற்றை இரவில் அல்லது அமர்வில் சட்டசிக்கலை தீர்க்கமுடியாதுதான் .. ஆனால் கண் முன்னே நடக்கும் ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தும் தார்மீக பொறுப்பு நீதிமான்களுக்கு வேண்டாமா.. எப்படி நிரூபிப்பீர்கள் உங்களுக்குதான் பெருபான்மை இல்லையே என்று நீதிபதி கேள்விக்கு .. தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றால்தான் கட்சிதாவல் சட்டம் பொருந்துமென்கிறார் அதாவது நிறைந்த நீதிமன்றத்தில் உறுப்பினர்கள் விலைபேசபடுவார்கள் என சொல்லியிருக்கிறார் .. மற்ற கட்சியிலிருந்து வென்று வந்தவரின் ஆதரவை பெறுவது அந்த கட்சியின் அனுமதியில்லாமல் பெறுவது .. அதை நியாயபடுத்துவது எவ்வளவு கேவலம்.. பெருபான்மை உள்ள கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் மரபென்றால் கோவாவிலும் திரிபுராவிலும் ஏன் காங்கிரஸை ஆட்சியமைக்க அழைக்கவில்லை.. ஒருவேளை கோவா திரிபுராவிற்கென வேறு சட்டபுத்தகம் நீதி இருக்கிறதா..இப்போது கோவா திரிபுராவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோர இருப்பதாக செய்திகள் வருகின்றன .. இப்போது உச்சநீதிமன்றம் என்ன சொல்ல போகிறது..
..
இப்போதே விலைபேச தொடங்கியிருக்கிறார்கள் வருகிற ஆறு பேருக்கும் மந்திரி பதவி.. ₹100 கோடி என செய்திகள் வருகிறது .. மத்தியில் அவர்கள் ஆள்வதால் .. பணம் மாற்றம் மிக எளிதாக நடக்கும் .. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குதிரைபேர அரசியல் குறுக்குவழியில் ஆட்சியை பிடிப்பது .. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத மாநிலத்தில் .. இரு உறுப்பினர்கள் இருந்தால் போதும் அதிகாரத்திற்கு வந்துவிட எந்தவிதமான அயோக்கியதனத்தையும் செய்ய தயங்கவில்லை .. அத்தனை சனநாயக மரபுகளும் காற்றில் பறக்கவிடபடுகிறது 29 தொகுதிகளில் கட்ட்வச்ச காசை கூட பறிகொடுத்த கட்சி எங்கணம் அதிக இடங்களில் வெல்ல முடிகிறது..
..
எல்லாவற்றையும் திருவாளர்.பொதுசனம் பார்த்துக்கொண்டிருக்கிறான் .. என்பதை மதிப்பிற்குரிய நியாயவான்கள் கருத்தில் கொள்ளவேண்டும் .. ஆட்சியாளர்களும் தான்
Democratic assassination
..
ஆலஞ்சியார்

தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்

  தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்
தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள் மங்களூரில் ஈஸ்வரி மேன்பவர் சொல்யூஸன்ஸ் லிமிட்டட் என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. அந்த நகரத்தில் பஞ்ரங் தள் (இந்த அமைப்பு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அணி. விஸ்வ ஹிந்து பரிஷத் என்பது ஆர்எஸ்எஸின் கலாச்சார அமைப்பு) குண்டர்கள் மால்களையும் கடைகளையும் அவ்வப்போது தாக்குவதால் ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்க வேண்டுமென்றால், இந்த நிறுவனத்திடமிருந்துதான் ஆட்களை வாடகைக்கு அமர்த்த வேண்டும்.
அவர்களை அமர்த்திக்கொண்டுவிட்டால், பஜ்ரங் தள் குண்டர்கள் அந்த மால்களை நெருங்க மாட்டார்கள்.
இப்படி பஜ்ரங் தள்ளுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த நிறுவனத்தை நடத்துவது ஷரன் பாம்ப்வெல். இவர்தான் தெற்கு கர்நாடக பஜ்ரங் தள்ளின் அமைப்பாளர். புரியவில்லையா? பஜ்ரங் தள் குண்டர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கிறது ஒரு நிறுவனம்; அந்த நிறுவனத்தை நடத்துவது பஜ்ரங் தள் அமைப்பாளர் – குழப்பமாக இருக்கிறதா?
குழப்பமே வேண்டாம். முதலில் கடைகளை பஜ்ரங் தள் தாக்கும். பிறகு, ஈஸ்வரி மேன்பவர் ஆட்கள் உங்களை அணுகி பாதுகாப்பு அளிப்பதாக சொல்வார்கள். நீங்கள் ஒப்புக்கொண்டால், பாதுகாவலர்கள் அனுப்பப்படுவார்கள். அந்தப் பாதுகாவலர்கள் பஜ்ரங் தள்ளைச் சேர்ந்தவர்கள். அவர்களை அனுப்பிவைப்பது பஜ்ரங் தள் அமைப்பாளர்!! அதாவது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் அவர்களே.. பாதுகாவலர்களை அனுப்புவதும் அவர்களே..

இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்  

தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்
தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்

2008 செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்ட்ராவில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், விசைத் தறி தொழிற்சாலைகள் நிறைந்த மாலேகாவ்ன் பகுதியில் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. இது குறித்த புலன் விசாரணையைத் துவங்குகிறார் ஹேமன்த் கார்கரே. இந்த ஹேமந்த் கார்கரேவின் விசாரணையின்போதுதான், மாலேகாவ்ன் குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்து பயங்கரவாத அமைப்பான அபினவ பாரத் இருப்பது தெரியவருகிறது.
இதைத் திட்டமிடுவதில் முக்கியப் பங்கு வகித்தவர் லெப்டினன்ட் கர்னல் புரோஹித். இந்த குண்டுவெடிப்புகளை நடத்த ஆட்களை சப்ளை செய்தவர், ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் முன்னாள் தொண்டரான சாத்வி பிரக்யா சிங் தாகுர். இந்த வழக்கை விசாரித்துவந்த ஹேமந்த் கார்கரே அதே ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின்போது கொல்லப்படுகிறார்.

பயங்கரவாத அமைப்புகள் என்றாலே இஸ்லாமிய அமைப்புகள்

இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகள் என்றாலே இஸ்லாமிய அமைப்புகளும் நக்ஸல் அமைப்புகளும்தான் மனதில் தோன்றும்  ஆனால், இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள், இவற்றைவிட பயங்கரமானவை. காரணம், அவை இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மதத்தின் பெயரால் செயல்படும் அமைப்புகள். இருந்தபோதும், பொதுவாக இந்த அமைப்புகள் குறித்தும் அவை எப்படி செயல்படுகின்றன, எந்தெந்த பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டன, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், இவற்றை இயக்குவது யார் என்பதெல்லாம் பெரிதாக பேசப்படுவதில்லை.
இந்த நிலையில்தான் பத்திரிகையாளரான தீரேந்திர கே. ஜா இந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் Shadow Armies. வெளியிட்டிருப்பது Juggernaut பதிப்பகம். இதில் எட்டு இந்து பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 1. சனாதன் சன்ஸ்தான் 2. பஜ்ரங் தள் 3. ஹிந்து யுவ வாஹினி 4. அபினவ பாரத் 5. ஸ்ரீ ராம சேனா 6. ராஷ்ட்ரீய சீக் சங்கட் 7. ஹிந்து ஐக்கிய வேதி 8. போன்சாலா மிலிட்டரி ஸ்கூல்.

குண்டுவெடிப்பின் பின்னணி

ஒவ்வொரு அமைப்பைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அசர வைக்கின்றன. மாலேகாவ்ன் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த அபினவ பாரத் அமைப்பை ஒரு கட்டத்தில் இயக்கியது கோபால் கோட்ஸேவின் மகளும் ‘தேச பக்தர்’ வீர் சாவர்க்கரின் தம்பியான நாராயண் சாவர்கரின் மருமகளுமான ஹிமானி சாவர்க்கர்!!
அதேபோல, உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்ய நாத்திற்காக மாநிலம் முழுவதும் கலவரங்களிலும் கொலைகளிலும் ஈடுபடும் அமைப்புதான் ஹிந்து யுவ வாஹினி!!
பெயர்களைப் பாருங்கள்.. ஸ்ரீ ராம சேனா, ஹிந்து ஐக்கிய வேதி, சனாதன் சன்ஸ்தான்….இந்த அமைப்புகளைப் பற்றி கேள்வியெழுப்பினாலே இந்து விரோதி என்று பட்டம்கட்ட ஏதுவாக வைக்கப்பட்ட பெயர்கள்..
ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இந்தியா எவ்வளவு பெரிய அபாயத்தில் உள்ளது என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது சுரீரென உரைக்கிறது. விலை. 499/-
நன்றி:தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள் Muralidharan Kasi Viswanathan

தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு

 தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு 

தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு  தவ்ஹீத் ஜமாஅத்’ இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் என்னும் பிஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று நிருபிக்கப்பட்டதால் அந்த அமைப்பில் இருந்து சில தினங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்
2017-இல் பிஜே, ஒரு பெண்ணுடன் நடத்திய சல்லாப உரையாடலை எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட போது அது பொய் தகவல் என்றும் அதை நீக்குமாறும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததோடு, என்னை ஆபாசமாக திட்டித் தீர்த்தார்கள். அந்த ஆடியோ உரையாடல் 2018-இல் உண்மை என்று நிருபிக்கப்பட்டு அந்த அமைப்பின் உறுப்பினர்களே தங்கள் தலைவர் பிஜேயை தண்டித்திருக்கிறார்கள்.

2016 இல் காதல் தினத்தை ‘காமுகர் தினம்’ என்றும் அதை இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்று இவர்கள் போஸ்டர் அடித்து மீட்டிங் போட்டு காதலர்களை அசிங்கப்படுத்திய போது அவர்களுடன் நடத்திய எதிர்வினைக்காக, என்னை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அந்த அமைப்பின் செயலாளர் பேசிய வீடியோ இன்றும் யூடிப்பில் உள்ளது
 

பல விவாதங்கள் அவர்களோடு நடத்திய போதும் நான் எழுப்பிய குரான் குறித்த எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் நான் பயந்து ஓடியதாக புளுகித்தள்ளினர்.
2017 இல் பெரியாரிய தொண்டர் பாருக் இறைமறுப்பு கொள்கையாளர் என்பதற்காக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அச்சம்பவத்தை இவர்கள் நியாயப்படுத்தினர். ஒரு கட்டத்தில் கருப்பு தீவிரவாதிகள் என்று பெரியார் தொண்டர்களை இழிவுப்படுத்தினர். இவர்களை தமிழ்நாட்டிலுள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் புறக்கணித்திருந்த போதும் பிஜேபியின் வாய் திறமைக்காக ஒரு கூட்டம் இருக்கவே செய்தது.
எந்த வாய் குறிப்பிட்ட இஸ்லாமிய மக்களை முட்டாள்களாக்கி அரசியல் செய்ததோ, அதே வாய் சல்லாப உரையாடல் ஆடியோவில் மாட்டிய போது பிஜே, “அது டப்பீங் குரல், அவன் நானில்லை” என்று சாதித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அனைத்தும் உண்மை என்று நிருபிக்கப்பட்ட பிறகு ‘தவ்ஹீத் ஜமாஅத்’ தலை குனிந்து நிற்கிறது.
காமுகர்கள் என்று காதலர்களை இழிவுபடுத்திய அதே பிஜே இன்று காமுகனாக இருந்ததற்காக தண்டிக்கப்படுகிறார்.
காதலும், காமமும் அருவெறுப்பானதும் சட்டக் குற்றத்திற்கும் உட்பட்டதல்ல. ஆனால் மதபோதகர்கள் கடுமையாக இவற்றை மக்கள் முன் விமர்சிக்கிறார்கள். மக்கள் முன் தங்களை மனித குணாம்சங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக நிருவிக் கொண்டு திரை மறைவில் செய்யும் கள்ளத்தனங்கள் தான் அருவெறுப்பானது அசிங்கமானது என்பதை நம்ப மறுக்கிறார்கள்.
இனி தவ்ஹீத் ஜமாஅத் தங்கள் வாய் ஜாலங்களை நிறுத்திக் கொள்வது அவர்களது நடத்தைக்கு அழகு!
எனது வாதங்கள்:
https://www.youtube.com/watch?v=wXAPf46-P5U
https://www.youtube.com/watch?v=GS8ZH1EH2YU
தவ்ஹீத் ஜமாஅத் – விவாத அழைப்பு :
https://mobile.facebook.com/ThouheedJamath/photos/a.340617859290568.86761.338454826173538/1134052829947063/?type=3
©Yuma JAHARO [தமிழச்சி]
15/05/2018
#தவ்ஹீத்_ஜமாஅத் | #இஸ்லாமிய_ஏகத்துவ_பிரச்சாரம் | #இஸ்லாம் | #TNTJ | #PJ | #onlinePJ |

பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை

பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை

பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லைபாஜக அடுத்த ஜனநாயக படுகொலையை நிகழ்த்த தயாராகிவிட்டது! நிகழப்போகும் இடம் கர்நாடகா  பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. 104 இடங்கள் தான் கிடைக்கும் போல தெரிகிறது. பெரும்பான்மை பெற 111 இடங்களில் வெற்றி பெற வேண்டும்

 காங்கிரஸ் கட்சி  தயாராக உள்ளது

காங்கிரஸ் கட்சி ஜனதா தளத்தை ஆதரிக்க தயாராக உள்ளது, கூட்டணி பேசி முடித்து விட்டார்கள், அவர்களின் தற்போதைய எண்ணிக்கை 114. ஆனால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா, என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொம்மை வழக்கில் அதிக எண்ணிக்கையுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து பெரும்பான்மை நிரூபிக்க கால அவகாசம் அளிக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள்
அதே உச்ச நீதி மன்றம் கோவா சட்டபேரவை தேர்தல் வழக்கில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அறுதிப்பெரும்பான்மை வைத்திருக்குமேயானால், அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்று சொல்கிறது. இங்கே பிரச்னை என்னவென்றால் என்ன உருண்டு புரண்டாலும் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை 
எதாவது கட்சியை உடைத்தால் தான் உறுப்பினர்கள் தேறுவார்கள். என்ன செய்யப்போகிறார் கவர்னர் என்பது அனைவரும் அறிந்ததே! பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து விட்டு, எம்ல்ஏக்கள் விலை பேசப்படுவார்கள்! வோட்டு எண்ணிக்கை இன்னும் முடிவடையாதலால், பாஜக இன்னும் கீழே சென்றால் இந்த கூத்துக்கள் நடக்க வாய்ப்பிருக்காது! பொறுத்திருந்து பார்ப்போம் 

Saravanan Anna Durai

4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ,4300 கோடி செலவு செய்த மத்திய பாஜக அரசு

 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ,4300 கோடி செலவு செய்த மத்திய பாஜக அரசு

4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ,4300 கோடி செலவு செய்த மத்திய பாஜக அரசு மொத்தம் ரூ.953.54 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதுமத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் பதவியேற்றது முதல் தற்போது வரை விளம்பரங்களுக்காக செய்துள்ள மொத்த செலவின் தொகையை தெரிவிக்குமாறு மும்பையைச் சேர்ந்த அனில் கால்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.
4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ,4300 கோடி செலவு செய்த மத்திய பாஜக அரசு
4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ,4300 கோடி செலவு செய்த மத்திய பாஜக அரசு
அதில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரூ.4 ஆயிரத்து 300 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் விமர்சனங்களுக்கு இடையில் 2017-ஆம் ஆண்டில் இந்த செலவில் இருந்து ரூ.308 கோடி குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பாக  நிதி ஆலோசகர் தபன் சூத்ரதார் வெளியிட்ட தகவல்களில் கூறி இருப்பதாவது:-
நிதியாண்டு மற்றும் துறை ரீதியாக மத்திய அரசு விளம்பரங்களுக்காக செய்த மொத்த செலவுகளின் விவரம் பின்வருமாறு:
2014 ஜூன் முதல் 2015 மார்ச் வரை:அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.424.85 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.448.97 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.79.72 என மொத்தம் ரூ.953.54 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2015-16 நிதியாண்டு: அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.510.69 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.541.99 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.118.43 என மொத்தம் ரூ.1,171.11 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2016-17 நிதியாண்டு:அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.463.38 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.613.78 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.185.99 என மொத்தம் ரூ.1,263.15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டு:டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.475.13 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.147.10 செலவு செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.333.23 செலவு செய்துள்ளது. ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை மொத்தம் ரூ.955.46 கோடி செலவு செய்யப்பட்டுள்ள
Thanks By Dinathanthi

ஜூம்ஆ தொழுகைக்கு ஆதரவாக திரண்ட இந்து சகோதரர்கள்

ஜூம்ஆ தொழுகைக்கு ஆதரவாக திரண்ட இந்து சகோதரர்கள்

ஜூம்ஆ தொழுகைக்கு ஆதரவாக திரண்ட இந்து சகோதரர்கள்  ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் பள்ளிவாசல்களில் இடப்பற்றாக்குறை காரணமாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை அருகில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது..
சமீப காலமாக தீவிர இந்துத்துவ சக்திகள் பொதுவெளியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துபவர்களின் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்..குறிப்பாக குருகிராம் மாவட்டத்தில் மிரட்டல் அதிகமாக இருந்தது… 

ஜூம்ஆ தொழுகைக்கு ஆதரவாக திரண்ட இந்து சகோதரர்கள்
ஜூம்ஆ தொழுகைக்கு ஆதரவாக திரண்ட இந்து சகோதரர்கள்

ஆனால் குருகிராம் மாவட்டத்தை சேர்ந்த இந்து சமூகத்தின் 150 முக்கிய பிரமுகர்கள் கையொப்பம் இட்ட மனுவை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கி
“” முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் இடப்பற்றாக்குறை காரணமாக வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை வெளியில் செய்வது காலங்காலமாக நடைபெற்று வருகிறது என்றும் இதனால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் இந்துக்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என்பதால் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளனர்…
இன்றைய ஜும்ஆ தொழுகை 47 பொது இடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது…
Colachel Azheem

பொம்மி நாயக்கன்பட்டியில் நடந்தது என்ன?

பொம்மி நாயக்கன்பட்டியில் நடந்தது என்ன?

பொம்மி நாயக்கன்பட்டியில் நடந்தது என்ன? தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் பொம்மிநாயக்கன் பட்டியில் தலித்_ இசுலாமியர் கலவரம் என்ற செய்தி உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வரும் வேலையில் கலவரத்தின் உண்மை நிலவரத்தை நாங்கள் ஆய்வு செய்ததில்

குழாய்ச் சண்டை, வாய்க்கால் வரப்புச்சண்டை,திருவிழாச்சண்டை

பொம்மிநாயக்கன் பட்டியைப் பொறுத்தவரையில், குழாய்ச் சண்டை, வாய்க்கால் வரப்புச்சண்டை,திருவிழாச்சண்டை என்று எது நடந்தாலும் அது தலித்_ இசுலாமியர் பிரச்சினைதான் இப்படி இருக்கும் சூழலில் இந்த முட்டல் மோதல்கள் அடிக்கடி நடப்பவை தான் அதை அவர்களுக்குள்ளாகவே பேசித்தீர்த்துக்கொள்வார்கள், ஆனால் தற்போது இந்தப்பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக வெடிக்கக் காரணம் என்ன? இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்ததில் புலப்பட்ட உண்மை என்னவெனில்

பொம்மி நாயக்கன்பட்டியில் நடந்தது என்ன?
பொம்மி நாயக்கன்பட்டியில் நடந்தது என்ன?

காலம் காலமாக மாரியம்மன்,காளியம்மன் போன்று தெய்வங்களை வணங்கி வந்த மக்களிடம் புதிதாக இந்தவருடம் தெற்குத்தெருவைச்சார்ந்த ஸ்டிக்கர்கடை ராதாகிருஷ்ணன் என்பவர் பிஜேபியில் பொறுப்பாளராக உள்ளார், இவர் விநாயகர் சதூர்த்தி விழாவைத் துவங்கி உள்ளார், இதைப்பார்த்த ஊர்த்தலைவர் விஜயராமன் ( ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர்) இந்திராக்காலணியிலும் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதூர்த்தி கொண்டாடி உள்ளார். சரி இதுக்கும் கலவரத்துக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?

விநாயகர் சதூர்த்தி

வடமாநிலங்களில் மட்டுமே நடந்துகொண்டிருந்த விநாயகர் சதூர்த்தி மெல்ல மெல்ல சென்னையில் ஊடுருவியது, தற்போது தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களிலும் பரவி பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டை மழுங்கடிக்கச்செய்யும் வேலையை நூதனமாகப் புகுத்தப்பார்க்கிறார்கள் இதன் மூலம் சங்பரிவார்கள் சேரிக்குள் நுழைந்து விட்டார்கள் என்று சொல்லவருகிறேன். சரி விசயத்துக்கு வருவோம்…

பொம்மிநாயக்கன் பட்டியில் தலித்_ இசுலாமியர் கலவரம்

எங்களுக்குள் பாதை,சுடுகாடு பிரச்சினை உள்ளது அதை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்வோம் இதைப் பயன்படுத்தி சங்பரிவார்கள் ஊடுருவுவதை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறோம்
மேலும் RSS,BJP யின் நரித்தனம், பாதிக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களை ஏற்கனவே ராதாகிருஷ்ணன் இருக்கிற தைரியத்தில் தலித் இசுலாமியர்களுக்கிடையே பிரச்சினையை ஊதிப்பெரியதாக்க முனைகிறார்கள் உங்கள் எண்ணம் நிறைவேற ஒருபோதும் விடுதலைச்சிறுத்தைகள் அனுமதிக்கமாட்டோம்.

தியாகத்தலைவர்

இந்தப் பிரச்சினையில் எமது #தியாகத்தலைவர் அவர்கள் மாவட்டக்கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசி எங்க மக்களை ஊருக்குள் அனுமதியுங்கள், சுமுகமான சூழல் உருவாக வழிசெய்யுங்கள் நாளை ஒரு குழு உங்களை சந்திக்க வருவார்கள்.ஒத்துழைப்புத்தாருங்கள் என்று கூறினார்.அதன் அடிப்படையில் இன்று நாங்கள் மாவட்டக்கண்காணிப்பாளரைச் சந்திக்க இருக்கிறோம்.இன்று scst அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வர இருக்கிறார்கள் இதுவும் எமது தியாகத்தலைவர் தலையீட்டால்தான் சாத்தியமானது…
இசுலாமியர்களே ! உங்கள் தொப்புள்கொடி உறவுகள் தான் நாங்கள்.உங்களோடு வேறெந்த சாதிக்காரனும்

பொம்மி நாயக்கன்பட்டியில் நடந்தது என்ன?
பொம்மி நாயக்கன்பட்டியில் நடந்தது என்ன?

இணங்கிப்போகமாட்டான்.மேலும் நமக்குள் பிளவு ஏற்படுத்துவதுதான் சங்பரிவாரின் வேலை.எல்லாசாதிக்கார்ரும் பிரிந்து கிடக்கிறார்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டார்கள்,பார்ப்பனியத்துக்கு சிம்மசொப்பனமாய் விளங்குவது இசுலாமியர்களும்,சிறுத்தைகளும் தான், எனவே தான் நமக்குள் மோதல்களை உருவாக்க புழுகுமூட்டையோடு வருகிறான் நாம் எச்சரிக்கையோடு செயல்படாவிட்டால் விழைவு மிக மோசமாக ஆகிவிடும்,பார்ப்பனியத்துக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக நாம் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.
#எரிபடும்சேரிகளிலும்மிதிபடும்மசூதிகளிலும்புறப்படும்_விடுதலைச்சூறாவளி
என்ற எமது தலைவர் கூற்றுக்கிணங்க தலித் இசுலாமியர் ஒற்றுமை வலுப்படுத்த கரம் கோர்ப்போம்
(குறிப்பு::: இந்தக்கலவரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை சும்மா பொய்யான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம்)
பொம்மிநாயக்கன்பட்டியில்டந்ததுஎன்னபாடகி தேனி இளமதி
 

வன்புணர்வுப் புகழ் மதவாதப்புகழ் மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள்

வன்புணர்வுப் புகழ் மதவாதப்புகழ் மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள்

வன்புணர்வுப் புகழ், மதவாதப்புகழ், மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள் என மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அனுப்புகிறது  மொத்தத்தில் இந்த பணக்கார நாய்களும், உயர்சாதி நாய்களும் தலைமுறை தலைமுறையாக படித்து டாக்டர் ஆகவேண்டும்  எங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆகிவிடக் கூடாது. அதானடா உங்களுக்கு வேணும்? அதுக்குத்தானடா இவ்வளவு சைக்கோத்தனமும், சாடிசமும்? ரத்தவெறி பிடித்த மிருகங்கள்கூட ஒருநொடியில் தன் இரையைக் கடித்து கொன்றுவிடுகிறது  ஆனால் பாஜகவும், அதன் கால் நக்கும் அதிமுகவும், தமிழக நடுத்தர/ஏழை, பிற்படுத்தப்பட்ட/தலித் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் கனவுகளைத் தொலைத்த மரண வலியைத் தந்திருக்கிறார்கள்
மஞ்சள் பையும், கையில் கொஞ்சம் பணமும் வைத்துக்கொண்டு கவுன்சிலிங்கின் போது பதற்றத்துடன் அலையும் கருத்த தோல் அப்பாக்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தலைமுறையாக படித்து நல்ல வேலைக்கு போய்விட்ட எங்கள் அப்பாக்களே, “எது எங்கே இருக்கும்? எங்கே எதைப் படித்தால் நல்லது?” எனத் தடுமாறுவார்கள் எனும்போது, தன் மகன்/மகளை முதல்தலைமுறை பட்டதாரியாக்க அலையும் இவர்களின் நிலை இன்னமும் மோசம். எங்கள் அப்பாக்களுக்கு எதுவுமே தெரியாது என்றால், அந்த மாணவர்களின் அப்பாக்களுக்கு சுத்தமாக எதுவுமே தெரியாது. எல்லாவற்றுக்கும், “சார் சார்..” என்றோ, “தம்பி தம்பி,” என்றோ யாரின் பின்னாடியாவது போய் உதவி கேட்டபடியே நாள்முழுதும் தவிப்பார்கள். இத்தனைக்கும் கவுன்சிலிங்க் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்தான். மிஞ்சிப்போனால் சென்னை. அதற்கே இந்தப் பாடு படுவார்கள்.

வன்புணர்வுப் புகழ் மதவாதப்புகழ் மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள்

இந்த அப்பாவிகளைத்தான் ராஜஸ்தான் போன்ற இந்தி தவிர எதையுமே அறியாத எருமைமாடுகள் வாழும், வளர்ச்சியே அடையாத பாழடைந்த, வன்புணர்வுப் புகழ், மதவாதப்புகழ், மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள் என மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அனுப்புகிறது
இந்த சாடிசத்தை ஆதரிக்கும் கூட்டம் இன்னொரு கூட்டம் அத்திம்பேர், மாமி, மாமா வழிகாட்டுதலுடன், “இந்த டிபார்ட்மெண்ட் இந்தக் கல்லூரியில் படித்தால் இந்த வேலை கிடைக்கும்,” என கூகிள் மேப் போட்டதைப் போல சகல வழிகாட்டுதல்களுடன் வாழ்க்கையை வசதியாக அணுகும் மேம்பட்ட சமூகம். பல நூறு ஆண்டுகளாய் கல்விக்கும், பெஞ்ச் தேய்க்கும் வேலைக்கும் பழக்கப்பட்டுவிட்ட அந்தச் சமூகத்தில் எப்போதும் எவனாவது எங்காயாவது இருப்பான். தங்கவோ, திங்கவோ அவர்களுக்கு பிரச்சினை இல்லை. லட்சம் லட்சமாக கொடுத்து கோச்சிங் சென்டர் போன தெம்பிலும், இரவு தங்கி, காலையில் தின்ற தெம்பிலும் ஜம் என தேர்வெழுதுவார்கள். ஆனால், கூட்டமில்லாமல் போகும் LSS பஸ்ஸில் போகாமல் சாதா பஸ்ஸில் போனால் 2ரூ மிச்சம் பிடிக்கலாம் என கால்கடுக்க காத்திருந்து பயணிக்கும் எங்கள் மஞ்சள்பை அப்பாகளும், அவர்களின் அப்பாவிக் குழந்தைகளும் எங்கே போவார்கள்? காலண்டர் ஆணியில் பையை மாட்டிவிட்டு பக்கத்து கலைக்கல்லூரிக்கோ, அப்பன் தொழிலுக்கோ பிள்ளையை அனுப்புவார்கள்.
மொத்தத்தில் இந்த பணக்கார நாய்களும், உயர்சாதி நாய்களும் தலைமுறை தலைமுறையாக படித்து டாக்டர் ஆகவேண்டும்  எங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆகிவிடக் கூடாது. அதானடா உங்களுக்கு வேணும்? அதுக்குத்தானடா இவ்வளவு சைக்கோத்தனமும், சாடிசமும்? ரத்தவெறி பிடித்த மிருகங்கள்கூட ஒருநொடியில் தன் இரையைக் கடித்து கொன்றுவிடுகிறது. ஆனால் பாஜகவும், அதன் கால் நக்கும் அதிமுகவும், தமிழக நடுத்தர/ஏழை, பிற்படுத்தப்பட்ட/தலித் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் கனவுகளைத் தொலைத்த மரண வலியைத் தந்திருக்கிறார்கள்
ஆனால் நிலைமை இப்படியே நீடிக்காது. காலம் மாறும். எங்களின் சம உரிமைக்காக மட்டுமே நியாயமாகப் போராடிய எங்களை பழிவெறி மிக்க சாடிஸ்டுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பாஜகவும் சரி, இதை ஆதரிக்கும் பார்ப்பனர்களும் சரி, ஈபிஎஸ்/ஓபிஎஸ்சும் சரி, நீட் தேர்வுக்கு ஜால்ரா அடிக்கும் விஷமிகளும் சரி… ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். கோபத்தையும், வெறியையும் தேக்கி வைத்துக் காத்திருக்கிறோம். காலம் வரும். தக்க பதில் சொல்வோம்.
-அசோக்.R (டான் அசோக்)

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left