Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

என்ன கொடுமை சார் இது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்ன கொடுமை சார் இது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெங்களூருவில் தாயின் கண் எதிரே அரங்கேறிய தலைகுனிவு சம்பவம் நடுரோட்டில் இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தை

பெங்களூரு

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தந்தையான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடித்து உதைத்த சம்பவம் தொடர்பான படங்கள் முகநூலில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மகள்

பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து உதைக்கும் படங்களை வெளியிட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பெங்களூருவில் இந்த தலை குனிவு சம்பவம் அரங்கேறி இருப்பதாக நிவேதிதா குறிப்பிட்டு இருந்தார்.

இந்த படங்களை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நிவேதிதா சக்ரவர்த்தி கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர்

‘‘நானும் எனது தோழி அர்ச்சனாவும் அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ரோட்டில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவளது தந்தையும் மதுரையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை அந்த பெண்ணின் தாய்(பள்ளி ஆசிரியை) வேடிக்கை பார்த்துக்கொண்டு கணவருக்கு ஆதரவாக அந்த பெண்ணை அவர் பங்கிற்கு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை அந்த ரோட்டில் சென்றவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

நான் இளம் பெண்ணை அடித்த நபரின் பிடியில் இருந்து தலை முடியை விடுவித்தேன். அதற்குள் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். அந்த நபரை பின்னால் தள்ளிவிட்டு எனது காரில் அந்த பெண்ணை ஏற்றினேன்.

ஆனால் அந்த நபர் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு காரை எடுக்கவிடாமல் தடுத்தார். இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து 3 பேரையும் அல்சூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அந்த பெண் யாரையோ விரும்புவதாகவும், இதுபற்றி அறிந்த தந்தை நடுரோட்டில் அவரை தாக்கி உள்ளார். அந்த பெண் என்ன சொல்ல வருகிறார் என்றுகூட அவர் கேட்கவில்லை. மாறாக வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மதுரைக்கு இழுத்து சென்று தாங்கள் விரும்பும் நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்.’’

இவ்வாறு கம்ப்யூட்டர் என்ஜினீயரான நிவேதிதா சக்ரவர்த்தி கூறினார்.

தலைகுனிவு சம்பவம்

போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது சம்பந்தப்பட்ட 3 பேரும் இது எங்கள் குடும்ப விவகாரம் நாங்களே பேசி தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டதாகவும் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

பெங்களூருவில் நடுரோட்டில் அதுவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மகளை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மனிதபிமானம் எங்கே? விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்து சென்ற மக்கள்

கொல்கத்தா,

மொபைல் போன் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும் பலரும் புகைப்படம் எடுப்பதற்கு அதனை பயன்படுத்தி வருகின்றனர்.  அரசியல் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி, தலைவர்கள் உரை, முக்கிய இடங்கள் என எல்லா பகுதிகளிலும் ஏதேனும் ஒரு சம்பவத்தை மக்கள் தங்களது மொபைல் போனில் படம் பிடிப்பது என்பது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பேருந்து ஒன்று மோதியதில் காயமடைந்து கிடந்த பெண் ஒருவரை காப்பாற்றாமல் பலரும் புகைப்படம் எடுத்து சென்ற அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.  விபத்தில் சிக்கி அரை மணிநேரத்திற்கும் மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டதால் மரணமடைந்து விட்டார்.

அவருக்கு உரிய நேரத்தில் உதவி செய்திருந்தால் மரணத்தில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கலாம் என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.  பொதுமக்களிடம் மனிதாபிமானம் குறைந்து வருவதை எடுத்து காட்டும் விதமாக நடந்துள்ள இந்த சம்பவம் குறித்த தகவலின்படி, மேற்கு வங்காளத்தில் 28 வயது கொண்ட அப்சா கட்டூன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு கணவர் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.

அப்சாவின் மகள்களான ஹாசா மற்றும் அக்ஷா ஆகியோரை பள்ளி கூடத்திற்கு ஏற்றி சென்ற பேருந்து ஒன்று மோதியதில் அப்சா படுகாயத்துடன் சாலையில் கிடந்துள்ளார்.  ஆனால் அவரை காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை.  இறுதியாக, பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அப்சாவை சித்தரஞ்சன் தேசிய மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அப்சாவின் சகோதரர் சித்திக், தனது சகோதரிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என கூறியுள்ளார்.  அப்சா தனது பெயர் மற்றும் கணவரின் தொலைபேசி எண்ணை நினைவிழப்பதற்கு முன்பு தெளிவாக அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.  ஆனால், அடிப்படை சிகிச்சை கூட அவருக்கு அளிக்கப்படவில்லை என்பதை எனது சகோதரர் கண்டுள்ளார் என்று அப்சாவின் சகோதரரான சித்திக் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி தரும் விசயமும் நடந்துள்ளது.  விபத்து பகுதிக்கு 5 மீட்டருக்கு அருகே ரேசன் கடை ஒன்று உள்ளது.  ஆனால் ஒருவரும் உதவிக்காக வரவில்லை.  அப்சாவின் கணவர், புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கு திரும்பி வந்து உணவளிப்பேன் என கூறி சென்றுள்ளார் என சித்திக் துயரத்துடன் கூறியுள்ளார்.  பேருந்து ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.  எனினும் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளன

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left