Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற! வரலாறு முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாடு என அண்ணாவால் பெயரிடப்பட்ட இந்த நிலப்பரப்பு எந்தக் காலத்திலுமே இந்தியா என இப்போது வழங்கப்படுகிற நிலபரப்புடன் இணைந்து இருந்ததில்லை
பாண்டிய மன்னனின் மகன்கள் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தங்களுக்குள் அடித்துக்கொண்டு அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கஃபூரை அழைத்து (ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் சண்டையில் இப்போது தமிழகத்தை மோடி ஆள்வதைப் போல) வந்தபோது கூட, அவர்களது கையாட்களின் ஆட்சி இங்கே மிஞ்சிப்போனால் 50 ஆண்டுகள்தான் நீடித்தது
மவுரியர் காலமானாலும், பேரரசர் அக்பர் காலம் ஆனாலும் சரி, தென்னகம் தனி ஆட்சி தான் தனி நாடு தான் அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் கூட அதிகபட்சம் கர்நாடகா வரையில்தான் அவர்களால் வர முடிந்தது
ஆங்கிலேயர் வந்தபின் தான் தென்னகம், குறிப்பாக தமிழகம் இந்தியா எனப்படுகிற நிலப்பரப்பில் இணைந்த ‘அசம்பாவிதம்’ நடந்தது
ஆக, நமக்கும் அவர்களுக்கும் இடையே மொழியில், கலாச்சாரத்தில், குறிப்பாக ‘நாகரீகத்தில்’, ‘பண்பில்’ வேற்றுமை இருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல. அது வரலாற்று வேற்றுமை இன வேற்றுமை! மரபணு வேற்றுமை!
மக்களவை என்பது மாநிலங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அவை. அங்கே தமிழ் எம்பிக்கள் பதவி ஏற்கும்போது “தமிழ் வாழ்க” என தங்கள் மொழியையும், “பெரியார் வாழ்க” என தங்கள் வழிகாட்டியையும் நினைவுகூர்ந்து பதவி ஏற்கிறார்கள்

தமிழ்நாடு வேறு ஏனைய பாரதம் வேறு

ஆனால் அங்கிருந்த காட்டுமிராண்டிகள் உடனே “ஜெய் ஸ்ரீராம்” என்றும், “பாரத் மாதா கீ ஜே” என்றும் கூச்சல் எழுப்புகிறார்கள் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரி பாரதமாதா என நாம் சொன்னோமா? இல்லை. அவர்கள்தான் சொல்கிறார்கள்
நேற்று, “தமிழ்நாடு வேறு ஏனைய பாரதம் வேறு,” என உலகுக்கே காட்டிக்கொடுத்திருக்கிறார்கள் இந்த வட இந்தியர்கள்! ஆனால் ‘Anti Indian‘ பட்டமோ நமக்கு!
காலம்காலமாக இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் என சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் சராசரி இந்தியர்கள். ஆனால் சயீத் அன்வர் எனும் பாகிஸ்தானிய பேட்ஸ்மேன் சென்னையில் 194 அடித்து உலக சாதனை புரிந்தபோது எழுந்து நின்று கைதட்டிய சென்னை மக்களையும், அவர்களின் பண்பையும் இந்நேரத்தில் நான் நினைவுகூர்கிறேன்
பாகிஸ்தான் மீதே பண்பு பாராட்டிய தமிழகம் எங்கே? சொந்த நாட்டின் ஒரு மாநில மக்களின் மீதும், அவர்களின் எம்பிக்கள் மீதும், மொழியின் மீதும் பகைமை பாராட்டும் வடநாடு எங்கே!
ஆங்கிலேயர்கள் நமக்கு எவ்வளவோ தீமைகளையும், நன்மைகளையும் ஒருசேரச் செய்திருக்கிறார்கள்
நம்மைக் கொள்ளை அடித்த அதேவேளையில் நமக்கு கல்விக் கதவுகளை திறந்துவிட்டவர்கள் அவர்கள்தான்
மனுதர்மம் எனும் அடிமைசாசனத்தைத் தாண்டி சுதந்திர உலகம் என்று ஒன்று உண்டு, அங்கு அறிவியல் என்று ஒன்று உண்டு என நமக்குக் காட்டியவர்கள் அவர்கள்தான்
ஆரிய கலாச்சாரத்தின் ஊடுருவலால் நாசமாகப் போயிருந்த நம்மையும், சமஸ்கிருதம் கலந்திருந்த நம் மொழியையும் நாம் மீட்டெடுக்கத் துவங்கியதெல்லாம் பின்னர் நீதிக்கட்சி, திராவிட இயக்கம் என ஒவ்வொன்றாக நடந்த படிநிலைகள்
இந்தியாவின் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஆங்கிலேயர்கள் கல்வியைக் காட்டினார்களே தவிர அதை சரியாக அறுவடை செய்ய திராவிட இயக்கம் போன்றதொரு ஆதிக்க எதிர்ப்பு இயக்கம், சுய மரியாதை இயக்கம் அவர்களுக்கு வாய்க்கவில்லை
கம்யூனிசம் கூட இன்று பார்ப்பனர்களின் கூடாரமாக சுருங்கிப்போனதை நாம் பார்க்கிறோம்
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக ஒரு பெருந்தீமையையும் அவர்கள் நமக்குச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்! சிங்கங்களின் கூட்டத்தை நாகரீகமற்ற
பண்பற்ற கழுதைப்புலிகளின் கூட்டத்தோடு ஒட்டவைத்து விட்டுப் போய்விட்டார்கள்! எண்ணிக்கையில் அதிகம் என்கிற ஒரே காரணத்தினால் கழுதைப்புலிகள் நம்மை ஆள்வதைவிடவும் ஒரு பேரவலம் என்ன இருக்க முடியும்!
இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!
-டான் அசோக்
ஜூன்19, 2019

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா எனச் சிலர் கேட்கிறார்கள் ஆமாம்  சில இடங்களில் நடைமுறையில் இருந்தது!
முதலில் சோவியத் சட்ட அமைப்பு பற்றிய சுருக்கமான புரிதல் வேண்டும். அதனை நிகழ்காலத்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடலாம்
அதாவது, ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான சட்ட்டங்கள் இயற்றி வைத்திருக்கலாம். அதே நேரம், எல்லோருக்கும் பொதுவான சோவியத் சட்டமும் இருக்கும்
தீர்ப்புகள் தவறென்று மேன்முறையீடு செய்தால், அல்லது சட்டங்களில் முரண்பாடுகள் காணப்பட்டால் சோவியத் சட்டமே இறுதியானது
அந்த வகையில், ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்த குடியரசுகளில் ஷரியா சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது
ஆனால் அது சோவியத் சட்ட அமைப்புடன் சமாந்தரமாக அமுல்படுத்தப் பட்டது. அதாவது, அந்த இடங்களில் இரண்டு வகையான நீதிமன்றங்கள் இயங்கும். ஒன்று சோவியத் நீதிமன்றம். மற்றது ஷரியா நீதிமன்றம்.
ஷரியா நீதிமன்றத்தை நாடுவதா அல்லது, சோவியத் நீதிமன்றத்தை நாடுவதா என்பது அங்குள்ள மக்களின் தெரிவு
இதன் மூலம் இரண்டு வகையான நீதித்துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து எது முற்போக்கானது என்பதை மக்கள் தாமாக முடிவு செய்து கொள்வார்கள்
காலப்போக்கில் பெருமளவு வழக்குகள் சோவியத் நீதிமன்றங்களினால் தீர்க்கப் பட்டமை வரலாறு.
உண்மையில் ஷரியா நீதிமன்றங்கள், சோவியத் நீதிமன்றங்களுக்கு கீழ்ப்படிவானவை. அதன் அர்த்தம் நாகரிக உலகிற்கு மாறான தீர்ப்புகளை வழங்க முடியாது
உதாரணத்திற்கு, திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்ட வேண்டுமென ஷரியா நீதிமன்றம் தீர்ப்புக் கூறுவது தடுக்கப் பட்டிருந்தது
தற்காலத்தில் ஷரியா சட்டத்தை கொண்டிருக்கும் பாகிஸ்தான போன்ற நாடுகளிலும் இது போன்ற நிலைமை உள்ளது
ஷரியா நீதிமன்றத் தீர்ப்பில் அதிருப்தி அடைந்தவர்கள் சோவியத் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம்
உதாரணத்திற்கு, விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு பாதகமான தீர்ப்பு கூறப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண் சோவியத் நீதிமன்றம் சென்று தனக்குரிய நீதியை பெற்றுக் கொள்ள முடியும் இந்த விடயத்தில் சோவியத் சட்டமே இறுதியானது
பெரும்பாலான இஸ்லாமியர் அல்லாத மக்கள் மத்தியில் ஷரியா சட்டம் தொடர்பாக தவறான எண்ணம் காணப் படுகின்றது  உலகில் பல வகையான சட்ட அமைப்புகள் உள்ளன
உதாரணத்திற்கு இலங்கையில் இருப்பது ரோமன்- டச்சு சட்டம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நெப்போலியன் காலத்து சட்டம் உள்ளது
அதே மாதிரி ஷரியா என்பதும் இஸ்லாமிய மதம் சார்ந்த பொதுவான சட்ட அமைப்பு தான் அதிலும் சட்டத் துறை சார்ந்த அறிஞர்கள் தமக்குள் முரண்படும் அளவிற்கு நான்கைந்து ஷரியா பிரிவுகள் உள்ளன
Kalaimarx 

ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு

ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு

ஜெய்பீம் உவைஸி அவர்களால் பாராளுமன்றத்தில் முழங்கபட்ட இந்த மந்திரம், இனி பாரதம் முழுதும் ஒலிக்கும் சூழல் உருவாகி உள்ளது
ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு  புனே நகருக்கு அருகே உள்ள ‘பீமா’ என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் ! 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்

தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது

அப்போது,இந்துமத வேதப்பண்பாடுகளும்,மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன
தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும் அதனால்
அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும். தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது
இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும்,சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்
1817 டிசம் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்றஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்கரைதான் போர்க்களம்.
2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, ‘கோகலே’ தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்.500 மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம். போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்
பார்ப்பனப் படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின பாஜிராவ் கைதானான் பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு இரத்தத்தால் முடிவுரை எழுதியது மகர் ரெஜிமண்ட்.
வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட ‘பீமா’ நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது  1927 ஜனவரி 1 ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார் அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக ஜெய் பீம் எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.
இந்துமத வேத,சாஸ்திர,சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும்,தலித்துகளும்,பிற்படுத்தப் பட்டவர்களும்,சிறுபான்மையினரும் இணைந்துநடத்திய ஆயுதப் போராட்டத்தின் 200வது வீரவணக்கநாள் 1.1.2018.
– நன்றி தோழர் Aasif
Find Property in Chennai 

எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம்

 எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம்

அண்மைக் கால‌த்தில் ஈரானுக்கும் ஒமானுக்கும் இடையிலான‌ கட‌ற்பிராந்திய‌த்தில் நான்கு எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம் என்று அமெரிக்காவும், ச‌வூதி அரேபியாவும் தெரிவிக்கின்ற‌ன‌
ஆனால் ஐரோப்பிய‌ ஒன்றிய‌ம் கூட‌ அதை நம்ப‌த் த‌யாராக‌ இல்லை. சுயாதீன‌மான‌ விசார‌ணை நட‌த்த‌க் கோருகின்ற‌து
அதே நேர‌ம் சில‌ விசித்திர‌மான‌ போக்குகளை அவ‌தானிக்க‌க் கூடிய‌தாக‌ உள்ள‌து ஈரானில் ஜ‌ப்பானிய‌ தூதுவ‌ர் பேச்சுவார்த்தை நட‌த்திக் கொண்டிருந்த‌ நேர‌ம் ஜ‌ப்பானிய‌  எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌து
இப்படியான நேரத்தில் ஈரான் தாக்குதல் நடத்த துணியுமா என்பது கேள்விக்குறி

தாக்குத‌லுக்குள்ளான‌ எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ளில் வேலை செய்த‌ யாரும் கொல்ல‌ப் ப‌ட‌வோ, காய‌ம‌டைய‌வோ இல்லை  அவ‌ர்க‌ள் உரிய‌ நேர‌த்தில் பாதுகாப்பாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்
அது ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌க் க‌ப்ப‌லும் வெடித்து சித‌றிய‌தாக‌வோ அல்ல‌து எண்ணைக் க‌சிவு ஏற்ப‌ட்ட‌தாக‌வோ த‌க‌வ‌ல் இல்லை

அது ஒரு பொற்கால‌ம்:

அது ஒரு பொற்கால‌ம்  ஐம்ப‌துக‌ளில் இல‌ங்கையில் வெளிவ‌ந்த‌ ப‌த்திரிகை ஒன்றில் முஸ்லிம் பெண்க‌ளும் உழைக்கும் வ‌ர்க்க‌ப் பிர‌திநிதிக‌ளாக‌ ம‌திக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்
த‌ற்கால‌ ஊட‌க‌ங்க‌ளை முஸ்லிம் பெண்க‌ளை பூர்க்கா அணியும் ம‌த‌ம் காவிக‌ளாக‌ ம‌ட்டுமே சித்த‌ரிக்கின்ற‌ன‌  ம‌த‌ அடையாள‌ அரசிய‌லும், முத‌லாளித்துவ‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லும் ஒன்றுட‌ன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்க‌ ம‌க்க‌ளை பிரித்து வைப்ப‌தில் க‌ணிச‌மான‌ அள‌வு வெற்றி பெற்றுள்ள‌ன‌
Kalai Marx

உங்கள் அன்போடும்,ஆசியோடும் ஜோதிமணி பெருமிதம்

உங்கள் அன்போடும்,ஆசியோடும்  ஜோதிமணி பெருமிதம்

உங்கள் அனைவரின் அன்போடும்,ஆசியோடும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டேன் ஜோதிமணி பெருமிதம்
இந்த நெகிழ்ச்சி யான தருணத்தில் கரூர் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்கும்,திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணியின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்!

ஜோதிமணி பெருமிதம்

உங்கள்,அன்பையும்,நம்பிக்கையையும் எப்பொழுதும் காப்பாற்றுவேன். கரூர் பாராளுமன்றத் தொகுதியின்,தமிழகத்தின்போர்க்குரலாக ஒலிப்பதில் எப்பொழுதும்,எவ்வித சமரசமும் செய்துகொள்ளமாட்டேன்
மீண்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
ஜோதிமணி முதல் பெண் பாராள மன்ற உறுப்பினர் ஆகிறார் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது முதல் வெற்றி பதவியேற்பு

உங்கள் அனைவரின் அன்போடும்,ஆசியோடும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இந்த நெகிழ்ச்சி யான தருணத்தில் கரூர் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்கும்,திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்! உங்கள்,அன்பையும்,நம்பிக்கையையும் எப்பொழுதும் காப்பாற்றுவேன். கரூர் பாராளுமன்றத் தொகுதியின்,தமிழகத்தின்போர்க்குரலாக ஒலிப்பதில் எப்பொழுதும்,எவ்வித சமரசமும் செய்துகொள்ளமாட்டேன். மீண்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Posted by Jothimani Sennimalai on Tuesday, 18 June 2019

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left