Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தீவிரவாதிகள் தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு, தீவிரவாதிகளுக்கு எதிராக போர் துனிசியா அதிபர் சபதம்


துனிஸ்,

துனிசியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கருணையின்றி நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சபதம் செய்து உள்ளார்.

ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிஸ் சுற்றுலா தலம் ஆகும். அங்கு பாராளுமன்றத்தையட்டி, பார்டோ தேசிய அருங்காட்சியகம்  உள்ளது. அந்த அருங்காட்சியகத்தை நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் 3 பேர் நுழைந்தனர். அங்கிருந்தவர்களை அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் உயிர் பிழைப்பதற்காக நாலாபக்கமும் ஓட்டம் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 17 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஒருவர் உள்நாட்டு சுற்றுலாப்பயணி என தெரியவந்துள்ளது. ஒருவர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான், கொலம்பியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தாக்குதலில் 40 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 சுற்றுலாப் பயணிகளை பணயக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து பாராளுமன்றத்தில் இருந்து உடனடியாக எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இன்னும் துனிசியாவில் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை சுட்டு வீழ்த்தும் பணியில் ராணுவம் இறங்கி உள்ளது. இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கருணையின்றி நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர்  பெஜி கெய்ட் சபதமிட்டுள்ளார். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரையில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை ராணுவம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திய அகமது அல் ரூயிஸி, லிபிய படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனவே இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி இருக்கக்கூடும் என்ற யூகம் எழுந்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலால் துனிசியாவில் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

கிறிஸ்தவ தேவாலயங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல், பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

லாகூர்,  

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
 
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூர் அருகே உள்ளது யுஹானாபாத். இங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்திலும், ஏசு கிறிஸ்து தேவாலயத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். -அப்போது தலீபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 2 பேர் இந்த தேவாலயங்களை குறி வைத்து வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 6 பேர் உடல் சிதறி பலியானார்கள் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியது.

பெண்கள், குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லாகூர் ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடித்ததும் பீதி அடைந்த பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓடினர். இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமான ஒரு வாலிபரை ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் அடித்துக்கொன்றது. பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்தது. இதற்கிடையே காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும், சிலர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

குண்டுவெடிப்பு தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 80 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு விரைவில் தடை


புதுடெல்லி,

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவிலும் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அந்த இயக்கத்துக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும் விரைவில் முறைப்படி தடை விதிக்கப்பட உள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இதற்கான தடை விதிக்கப்படும். இதுதொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left