Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

Kalai Marx லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kalai Marx லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் உக்ரைனில் பஞ்சம் ஏற்பட்டதற்கு, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் என்ற, அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்பு அபாரமானது.

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்

Stalin Tamil News

ஸ்டாலின் கொண்டு வர விரும்பிய கூட்டுத்துவ பண்ணை முறையை, கூலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். ஏனென்றால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படவிருந்தன. நிலவுடமையாளர்கள், கூலாக்குகள் கைது செய்யப் பட்ட காலத்தில், அவர்கள் தம்மிடம் இருந்த பயிர்களை அழித்து, கால்நடைகளை கொன்றனர்.
சோவியத் மக்களுக்கு, அதனால் ஏற்பட்ட சொத்து இழப்புக்களை யாராவது கணக்கிட்டார்களா? ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர், உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருந்த வெண் படைகளும், அவர்களுக்கு உதவியாக போர் புரிந்த பன்னாட்டுப் படைகளும், கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தார்களா?
Russian Stalin mems
Russian Stalin mems

Russian Stalin mems

அவர்கள் செய்த நாச வேலைகள் எத்தனை? அவர்களால் அழிக்கப் பட்ட கிராமங்கள் எத்தனை? தீ மூட்டி எரிக்கப் பட்ட வயல்களினால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? கொள்ளையடிக்கப் பட்ட பயிர்கள், கால்நடைகளால், இளம் சோவியத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அவற்றை யாராவது கணக்கிட்டார்களா?
உலகம் முழுவதும், எதிரிக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதற்காக, படையினர் இவ்வாறான நாச வேலைகளில் ஈடுபடுவது வழமையானது. வெண் படையினர், கூலாக்குகள் செய்த நாச வேலைகள், அதனால் உண்டான பொருளாதார இழப்புக்கள் குறித்த தகவல்கள் எங்கே? ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை? அப்படி ஒன்று நடந்ததை கூட சொல்லாமல் மறைப்பது ஏன்?
எதிர்ப்புரட்சியாளர்களின் நாசவேலைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், அழித்தொழிப்புகள் எல்லாவற்றையும், அவற்றை எதிர்த்துப் போராடிய ஸ்டாலின் என்ற தனி மனிதனின் கணக்கில் எழுதும், அறிவுஜீவிகளின் திறமை வியக்க வைக்கிறது
Written & Thanks By Kalai Marx
சராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம்

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

அகண்ட இந்து பாரதக் கனவு

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது.. விரைவில், யாழ்ப்பாணத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப் படலாம். மாடு திருடியவனை சாகும் வரை அடித்ததை நியாயப்படுத்தும் கனவான்கள், திடீரென மாட்டின் மீது பாச மழை பொழிவது கவனிக்கத் தக்கது.
முகநூல் எங்கும் “மாடு எங்கள் குடும்ப உறுப்பினர்” என்று உணர்ச்சிகரமான ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதனின் உயிரை விட, மாட்டின் உயிர் மேலானது என்று வாதாடுகின்றனர். மாடு திருடினால் கடுமையான தண்டனை வழங்குவது சரிதான் என்கிறார்கள். விரைவில், திருட்டுக்கு கை வெட்டும் “இந்து – ஷரியா” சட்டத்தை முன்மொழிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதைத் தான்… இதையே தான் இந்துத்துவா பாசிச சக்திகள் யாழ்ப்பாணத்தில் கொண்டு வர விரும்புகின்றன. இதற்காகவே இந்திய துணைத் தூதரகமும், சிவசேனையும் தீயாக வேலை செய்து கொண்டிருந்தன. அவர்களது முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. இந்து பேரினவாதம் யாழ்ப்பாணத்தில் காலூன்றி வருகின்றது.
சிரியாவில் உள்ள ஐ.எஸ். என்ற இஸ்லாமிய தேசம் மாதிரி, யாழ்ப்பாணத்தில் இந்து தேசத்தை உருவாக்கலாம். சிரியா, ஈராக் இரண்டு நாடுகளினதும் எல்லைகளை அகற்றி ஒன்று சேர்க்கும் நோக்குடன் தொடங்கப் பட்டது தான் ஐ.எஸ்.
ISIS என்ற அதன் ஆரம்ப கால பெயரே அந்த நோக்கத்தை வெளிப் படுத்துகின்றது. அதே பாணியில் இந்தியா, இலங்கை எல்லைகளை அகற்றி இரண்டையும் ஒன்றாக்கும் நோக்கில் இந்துத்துவா சக்திகள் செயற்படுகின்றன. இனி என்ன? அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

Written By Kalai Marx

ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது

அல்லிராஜா சுபாஸ்கரன்
லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம் இருபது மில்லியன் பவுன்ஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கை செல்வதாக வெளிவந்த தகவல், பலதரப் பட்ட வாதப் பிரதிவாதங்களையும், எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியதால், அந்தப் பயணத்தை இரத்து செய்வதாக ரஜனி அறிவித்திருந்தார்.
ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது:
//லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.//
வீடுக‌ள் க‌ட்டிக் கொடுப்ப‌து என்ப‌து ஒரு வியாபார‌ “போட்டி” அல்ல‌. அது முத‌லீட்டுக்கான அருமையான‌‌ வாய்ப்பு. ஒரு நாட்டில் போர் முடிந்த‌ பின்ன‌ர், அழிவில் இருந்து மீள‌க் க‌ட்டியெழுப்ப‌ முத‌லாளிக‌ளுக்கு கிடைக்கும் வாய்ப்புக‌ள். ஏற்க‌ன‌வே ஆப்கானிஸ்தான், ஈராக்கில் பெரிய‌ அள‌வில் ந‌ட‌ந்த‌து. அமெரிக்க‌ அர‌சே டென்ட‌ர் போட்டு யார் யாரெல்லாம் முத‌லிட‌லாம் என்று தெரிவு செய்த‌து.
அங்கெல்லாம் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் மூலதன பலம் கிடையாது. அது அந்தளவு பெரிய நிறுவனம் அல்ல. ஆனால், இலங்கையில் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் பண பலம் உள்ளது. “இலவச” வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் பின்னணியில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு தொழிற்துறையில் முதலீடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.
லைக்கா நிறுவனம், ஐரோப்பாவில் வரி கட்டாமல் ஏமாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தான், வவுனியாவில் 150 வீடுகள் கட்டப் பட்டன. உண்மையில் அந்த “தான தர்மம்” கூட, லைக்கா பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணத்தை விடக் குறைவு! 
முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அல்லது கன்சவேர்ட்டிவ் கட்சிக்கான நிதியாக, £2.2 மில்லியன் பவுன்ஸ் “தானம்” செய்திருந்த விடயம் ஏற்கனவே அம்பலமானது. முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சனின் தேர்தல் செலவையும் லைக்கா பொறுப்பேற்றிருந்தது.
லைக்காவின் மொத்த வருடாந்த வருமானம் சுமார் 1.5 பில்லியன் பவுன்கள். பிரித்தானியாவில் வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், போர்த்துக்கலுக்கு சொந்தமான மாடேயிரா தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கில் வைப்பிலிடப் படுகின்றது. வருமான வரி மட்டுமல்ல, மதிப்புக் கூட்டு வரியும் (VAT) கட்டாமல் பெருந்தொகைப் பணம் பதுக்கப் படுகின்றது. இதற்கென இருபதுக்கும் குறையாத போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. சட்டவிரோத கருப்புப் பணத்தை தூய்மைப் படுத்துவதும், அதை இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்குவது மட்டுமே இந்தப் போலி நிறுவனங்களின் வேலை.
லண்டன் தபால் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் கட்டுக் கட்டாக பண நோட்டுக்கள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப் படுவது கண்டுபிடிக்கப் பட்டது. அதை அடுத்து, பாரிஸ் நகரில் உள்ள லைக்கா கிளை அலுவலகம் கடந்த வருடம் பொலிஸ் சோதனைக்கு உள்ளானது. அங்கு 130,000 யூரோ தாள்களும், மேலதிகமாக வங்கியில் இருந்த 850,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப் பட்டன. பிரான்ஸில் பதினேழு மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் பிரெஞ்சுக் கிளை நிர்வாகி Alain Jochimek உட்பட ஒன்பது பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது.
(முழுமையான விபரங்களுக்கு இந்த இணைப்பில் வாசிக்கவும்:The French Connection: How Paris Police Closed In On Cameron’s Biggest Donor)
மேலும் இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன், ஐரோப்பிய தீவிர வலதுசாரி அரசியல்வாதிளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார். பாரிஸ் பொலிஸ் சோதனையில் பிடிபட்டு கம்பி எண்ணிய அலென் ஜோகிமிக் இஸ்ரேலிய அரசுடன் தொடர்புடைய யூத வலதுசாரி நிறுவனம் ஒன்றை  நடத்துகிறார். பிரிட்டனில், முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூன், முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் போன்றோர் கன்சவேர்ட்டிவ் கட்சியை சேர்ந்த வலதுசாரிகள். கன்சர்வேட்டிவ் கட்சி, ஈழப்போர் நடந்த காலத்தில் வெளிப்படையாகவே சிறிலங்கா அரசை ஆதரித்திருந்தது.
தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் அகராதிப் படி, “லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு இனத் துரோகி!” இருப்பினும், ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் யாரும் லைக்காவின் கிரிமினல் வேலைகளை கண்டுகொள்வதில்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். அவர்கள் யாரும் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்ல, மாறாக முதலாளித்துவ ஆதரவு வலதுசாரிகள்.
//”லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு “ஈழத் தமிழர்”. “தனது செலவில்(?)” தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்…”// என்று போலித் தமிழ்த்தேசியவாதிகள் லைக்காவின் கிரிமினல் குற்றங்களுக்கு துணைபோகின்றனர். இனம் இனத்தோடு தான் சேரும். வர்க்கம் வர்க்கத்தோடு தான் சேரும். பணம் பணத்தோடு சேரும்.
எதிர்பார்த்த‌ மாதிரியே அர‌சிய‌ல் நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ர‌ஜ‌னிகாந்துக்கு எதிராக‌வே க‌ம்பு சுற்றுகிறார்கள். “லைக்கா மாமா ந‌ல்ல‌வ‌ராம், ர‌ஜ‌னி மாமா கெட்ட‌வ‌ராம்!” என்று குழ‌ந்தை – ஊட‌க‌விய‌லாள‌ர் ஒருவ‌ர் சிணுங்குகிறார். இவர் கஜேந்திரகுமார் – விக்னேஸ்வரன் தலைமையில் நம்பிக்கை வைத்திருப்பவர். அவரைப் போன்றே தீவிர வலதுசாரிகளான த.தே.ம.மு. கட்சி ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் பிரபல நடிகரான ரஜனிகாந்திற்கு எதிராக கம்பு சுற்றுவதன் மூலம், லைக்காவின் குற்றங்களை மறைப்பதற்கு உதவுகிறார்கள்.
திரைப்ப‌ட‌ த‌யாரிப்பாள‌ரான‌ லைக்கா நிறுவ‌ன‌ம் நினைத்தால் ர‌ஜ‌னியை ம‌ட்டும‌ல்ல‌, ந‌மீதாவையும் கூட்டி வ‌ந்து விள‌ம்ப‌ர‌ம் தேட‌ முடியும். எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து மாதிரி, முத‌லீட்டாள‌ர் இருக்க‌ கூத்தாடிக‌ளை எதிர்க்கிறார்க‌ள். இது அவ‌ர்க‌ள‌து முத‌லாளிக‌ளுக்கு ஆத‌ர‌வான‌ வ‌ர்க்க‌க் குணாம்ச‌த்தின் வெளிப்பாடு.
இந்த விடயத்தில் ரஜனிகாந்த் நல்லவர் என்று சொல்ல வரவில்லை. அவருக்கும் சில அரசியல் ஆதாயங்கள் இருக்கலாம். தனக்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே தனது இலங்கைப் பயணம் தொடர்பான தகவலை வெளிவிட்டிருக்கலாம். ஒரு காலமும் அரசியல் பேசாத ரஜனி, பயணத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கமளித்த கடிதத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.
ஏற்கனவே, ரஜனிகாந்த் தன்னை இந்துத்துவா சார்பானவராக காட்டி வந்துள்ளார். இந்தக் கடிதத்திலும் புலிகளின் ஈழ விடுதலைப் போரை “புனிதப் போர்” என்று குறிப்பிடுள்ளார். இவ்வளவு காலமும் ஒன்றில் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமே புனிதப் போர் என்ற கருதுகோளை கொண்டிருந்தனர். தற்போது இந்து மத அடிப்படைவாதிகள் அதைப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். புலிகளின் ஈழ விடுதலைப் போர், இந்துத்துவா வாதிகளின் கண்களுக்கு புனிதப் போராகத் தெரிகின்றது.
லைக்கா இல‌ங்கைக்கு அழைப்ப‌தாக சொன்ன‌தும், அத‌ற்கு எழுந்த‌ எதிர்ப்பும், அத‌ன் விளைவாக‌ ப‌ய‌ண‌த்தை இர‌த்து செய்த‌தும் முன்கூட்டியே திட்ட‌மிட‌ப் ப‌ட்ட‌ நாட‌க‌மாக‌ இருக்க‌லாம். இவ‌ர்க‌ள் எல்லோரையும் பாஜ‌க‌ பின்னால் இருந்து ஆட்டுவித்திருக்கிற‌து.
ர‌ஜ‌னிகாந்தின் க‌டித‌த்தில் பாஜ‌க‌ அர‌சிய‌லே தொக்கி நிற்கிறது. அத்துட‌ன் ர‌ஜ‌னியின் வ‌ருகையை எதிர்ப்ப‌தாக‌ காட்டிக் கொண்ட‌ ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும், ம‌றைமுக‌மான‌ இந்திய‌ அடிவ‌ருடிக‌ள் தான். அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே, இந்து ம‌த‌வெறி அமைப்பான‌, சிவ‌சேனையின் வ‌ருகையை வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.
Written By Kalai Marx

உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.

  1. காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில்,
  2. தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. “அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!” என்று அரச கைக்கூலிகள் அறிவித்தபின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது.
    போராட்டம்
  3. மாணவர்கள்மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.
    பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். “மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.
  4. அரசியல் பேசக் கூடாது.” அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.
    இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும்.
  5. இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும்.
  6. அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டிப் புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களைச் சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?
  7. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், “தேசியக் கொடி பிடித்தால்,
  8. தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது” என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்
  9. . “ஜனகண மண” பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவைச் சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
  10. தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும்பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
  11. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை.
  12. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.
  13. ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில்
  14. , பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.
    போராட்டக் களத்திற்குள் இடது சாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசைப் பீதியுற வைத்துள்ளது.
  15. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள்.
  16. இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.
  17. இனிவரும் காலங்களில் இடது சாரி அமைப்புகள்மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம்.
  18. “தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்” என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம்.
  19. அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
    சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடது சாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
  20. (நாம் தமிழர் என்ற வலது சாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)
    மேலும்,
  21. “பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், “தோழர்” என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்” சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
  22. அதன் அர்த்தம் என்ன? இடது சாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?
  23. பெற்றோரே பிள்ளைகளைக் காட்டுக் கொடுக்க வேண்டும்” என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
  24. Written By Kalai Marx 
  25. https://youtu.be/hf80oy0gK3g   

ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்

 

அலை அலையாக ஜல்லி கட்டுக்கு ஆதரவு தரும் வெளி நாட்டு  தமிழர்கள்

பீட்டாவே த‌மிழ‌ர்க‌ளின் மிக‌ப் பெரிய‌ எதிரி” என்று ப‌ட‌ம் காட்டிய‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! ஒரு க‌ண‌ம் சிந்திப்பீர். த‌மிழ‌ர்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி, வீடுக‌ளை எரித்த‌து, சொத்துக்க‌ளை நாச‌மாக்கிய‌து த‌மிழ‌க‌ காவ‌ல்துறை தான்.
த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் இத‌ற்கு தீர்வு வ‌ந்து விடுமா? அப்போதும் இதே “த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை” தானே இருக்க‌ப் போகிற‌து? த‌னித் த‌மிழ் நாட்டில் த‌மிழ்ப் பொலிஸ் த‌மிழ‌ர்க‌ளை அடிக்காதா?
அர‌ச‌ இய‌ந்திர‌ம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் க‌ருவி தான். அது சிங்க‌ள‌ அர‌சாக‌ இருந்தால் என்ன‌, த‌மிழ் அர‌சாக‌ இருந்தால் என்ன‌, அட‌க்குமுறை ஒன்று தான். அட‌க்க‌ப் ப‌டும் ம‌க்க‌ளும் ஒன்று தான்.
இது அர‌சிய‌லில்‌ அடிப்ப‌டையான‌ பால‌ பாட‌ம். இந்த‌ நிலைமையை மாற்றுவ‌த‌ற்கு த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. அத‌ற்கொரு ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்
Written by Kalai Marx 
 
 
Copy செய்து #பகிருங்கள்… மெரினா அனைத்து லைவ் வீடியோ கமெண்ட்களிலும் போஸ்ட் செய்யுங்கள்..
044 24951490,
044 24951492,
044 24951493,
044 24951494,
044 24951495.
If police attacked anyone just dial the above Human rights commission, Share this to all….
.
காவல்துறை தாக்கினால் மேற்கண்ட human rights எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
 
நெஞ்சுக்குள் நீதி….
நேற்று போலிஸ் அடக்குமுறையை ஏவிவிட்டதும் போராட்டக்களத்தில் தம்பி தங்கைகள்…. கடற்கரையில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்ற போது மனம் பதபதைத்தது… ஒரு பெரிய அலை வந்திருந்தாலும் என்னவாகியிருக்கும் … அப்போது மீனவர்கள் அருகில் உள்ள குப்பத்தில் இருந்து ஓடி வந்த காட்சி…. அவர்களை விடுங்கள் கடலிலே பிறந்து கடலிலே வாழ்பவர்கள் …. சீமான் அங்கு ஏன் வரவேண்டும் ? அதுவும் கடல் மார்க்கமாக?
மீனவர்கள் வந்ததை பற்றி சிலாகித்து பேசுபவர்கள் இவரை பற்றி வாய் திறக்கவில்லையே…. ஏன்? அரசியலா? பாராட்டி எல்லாம் கூட பேச வேண்டாம்…. சிலர் கேவலமாக எழுதுகிறார்கள்…. அரசியல் பண்ண கடல் மார்க்கமாக சென்று இருக்கவேண்டாம்… பத்திரிக்கை பேட்டி போதுமே…. இல்லை பஸ் மறியல் பண்ணயிருக்கலாமே…. ஏன் அங்கு செல்ல வேண்டும்

கொஞ்சம் யோசிச்சு பாருங்கய்யா…
பாராட்டவேண்டாம் ….. திட்டாமல் இருங்க….

ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு ஜனநாயக போராட்டம்

  1.  ஜல்லிக்கட்டு போராட்டம்  தமிழ்நாட்டில்  ஒரு ஜனநாயக போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது.
  2. இது வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயம் அல்ல. தற்போது இடது சாரிகளும் கூடப் போராட்டக் களத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
  3. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம். ஆனால், போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு விட்டுக் கொடுக்காது
  4. . இவ்வளவு நாளும் மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 360 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
  5. .இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது.
    ஜல்லிக்கட்டு தடை
  6. வலது சாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே “ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்” என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  7. வணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசுகின்றன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
  8. அதன் மூலம் பாரவையாளர் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்கின்றன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை மூடி மறைக்கின்றன.
  9. அரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம்
  10. . குறிப்பாக இடது சாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்திலிருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.
  11. ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்கின்றன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நிற்கிறார்கள். வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்
  12. Written By Kalai Marx

பீட்டா த‌மிழின‌ எதிரி / "TAMILS vs PETA"

  1. பீட்டா த‌மிழின‌ எதிரி / “TAMILS vs PETA” “த‌மிழ் நாட்டின் அர‌பு வ‌ச‌ந்த‌ம்”
  2. “TAMILS vs PETA” என்றெல்லாம் வ‌ட‌ இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு போராட்ட‌ங்க‌ளைச்சித்த‌ரிக்கின்ற‌ன‌.
  3. ச‌ந்தேக‌த்திற்கிட‌மின்றி பீட்டா ஒரு என்.ஜி.ஓ. தான். ஆனால், பெரும் முத‌லாளிக‌ளுக்கு த‌லையிடியாக‌ இருந்த‌ என்.ஜி.ஓ. மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் அத‌ன் ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் ப‌ல‌ பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.
  4. உதார‌ண‌த்திற்கு, முய‌ல், மான் போன்ற‌ வ‌ளர்ப்பு மிருக‌ங்க‌ளின் தோல்க‌ளிலிருந்து த‌யாரிக்க‌ப் ப‌டும் உடைக‌ளுக்கு எதிராக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து. அத‌னால், ப‌ண‌க்கார‌ வீட்டுப் பெண்க‌ள் அணியும் விலை உய‌ர்ந்த‌ உடைக‌ளின் விற்ப‌னை வீழ்ச்சி க‌ண்ட‌து.
    பீட்டா த‌மிழின‌ எதிரி
  5. இத‌ற்கு முன்ன‌ர் ஸ்பெயின் நாட்டில் ந‌ட‌க்கும் மாடு பிடிக்கும் விளையாட்டைத் த‌டை செய்ய‌ வேண்டுமென‌ பீட்டா போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌து
  6. . ஸ்பெயினில் விளையாட்டின் முடிவில் மாட்டை விர‌ட்டி ஈட்டி எறிந்து கொல்வார்க‌ள். அத‌னோடு ஒப்பிடும்பொழுது த‌மிழ‌க‌ ஜ‌ல்லிக்க‌ட்டு குரூர‌மான‌து அல்ல‌.
    பீட்டா த‌மிழின‌ எதிரி
  7. இந்திய‌ பீட்டா அமைப்பில் இந்துத்துவா – பிராம‌ண‌ர்க‌ள் இருப்ப‌து ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம். அதாவது, பிராம‌ண‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌மான‌ மாமிச‌ உண‌வின் மீதான‌ வெறுப்புண‌ர்வு, கோமாதா வ‌ழிபாடு போன்ற‌ன‌ பீட்டாவின் கொள்கையுட‌ன் ஒத்துப் போகின்ற‌ன‌. ஆனால், ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் பீட்டாவின் அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளுட‌னும் ஒத்துப் போவார்க‌ள் என்று சொல்ல‌ முடியாது.
  8. யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தில், “பீட்டாவின் பெய‌ரில் ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌மிழின‌ ம‌ர‌புரிமையை அழிப்ப‌தாக‌” அறிக்கை வாசித்தார்க‌ள்.
    ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில், பீட்டா ப‌ன்னாட்டு வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் வெறுப்புக்கு ஆளாகி உள்ள‌து.
  9. இங்கே என்ன‌வென்றால் அதையே ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌மாக‌ காட்டும் அப‌த்த‌ம் ந‌ட‌க்கிற‌து.
    இது அறியாமையில் நேர்ந்த‌ த‌வ‌றாக‌ தெரிய‌வில்லை.
  10. இந்துத்துவா பிராம‌ண‌ர்க‌ள் பீட்டாவுக்குள் ம‌றைந்து நிற்ப‌து அவ‌ர்க‌ள‌து சுய‌நல‌ம். அதே மாதிரி, பன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் ஜ‌ல்லிக்க‌ட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் பின்னால் ம‌றைந்து கொள்ள‌லாம்.
  11. IT ஊழிய‌ர்க‌ள் போன்ற‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ரும் தெருவுக்கு வ‌ந்து போராடுகிறார்க‌ள் என்றால், அங்கே அவ‌ர்க‌ள‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளும் பாதுகாக்க‌ப் ப‌டுகின்ற‌து என்று அர்த்த‌ம். அவ‌ர்க‌ள‌து வேலைக்கு உத்த‌ர‌வாத‌ம் உண்டு என்று அர்த்த‌ம்.
  12. த‌மிழ‌க‌ விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை மர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ மான்சாண்டோ போன்ற‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளை எதிர்த்து இவ‌ர்க‌ள் போராட‌வில்லை.
  13. இனிமேலும் போராட‌ப் போவ‌தில்லை. “த‌மிழ‌ர்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்த‌ மான்சாண்டோ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தை எதிர்ப்போம்” என்று வழ‌மையான‌ த‌மிழ்த் தேசிய‌ கோஷ‌த்தின் கீழ் போராட‌லாம். அதெல்லாம் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.
  14. இப்போதும் த‌மிழ் விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலை ப‌ற்றி எதுவும் அறிய‌ விரும்பாத‌வ‌ர்க‌ள் தான், ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ “த‌ன்னெழுச்சியாக‌” வ‌ந்து போராடினார்க‌ள். பீட்டாவை த‌மிழின‌ எதிரி யாக‌ சித்த‌ரிப்ப‌து, உண்மையான‌ எதிரியின் திசைதிருப்பும் உத்தி. ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் அந்த‌ப் பொறிக்குள் விழுந்து கொண்டிருக்கிறார்க‌ள்.
  15. பீட்டா த‌மிழின‌ எதிரி
  16. பீட்டா த‌மிழின‌ எதிரி என்றால், மான்சாண்டோ த‌மிழின‌ ந‌ண்ப‌னாக இருக்க‌ முடியாது. முள்ளிவாய்க்கால் த‌மிழ் இனப்‌ப‌டுகொலையை ஆத‌ரித்த‌ IMF த‌மிழரின் ந‌ண்ப‌னாக‌ இருக்க‌ முடியாது. ‌ த‌ன‌து எதிரியைச் ச‌ரியாக‌ இன‌ம் காண‌ முடியாத‌ கும்ப‌லுக்குள், எதிரி இல‌குவாக‌ ஒளிந்து கொள்ள‌ முடியும். அது தான் ந‌ட‌க்கிற‌து
  17. பீட்டா த‌மிழின‌ எதிரி Written By Kalai Marx ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு பின்னால் உள்ள‌ ஆதிக்க‌ சாதியின‌ர்

ரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய நகரம்

ரஸ்யாவின் ஆச்சிரிய படவைக்கும் ரகசிய நகரம்

ரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய  நகரம்  ர‌ஷ்யாவில் “ந‌க‌ர‌ம் எண் 40” என்ற‌ இர‌க‌சிய‌ ந‌க‌ர‌ம் உள்ள‌து. சுமார் ஒரு மில்லிய‌ன் பேர் வ‌சிக்கும் அந்த‌ ந‌க‌ர‌த்தில் எல்லா வ‌ச‌திக‌ளும் உள்ள‌ன‌. அங்குத் தான் அணுக் குண்டு செய்யும் தொழிற்சாலையுள்ள‌து. அணு விஞ்ஞானிக‌ள் குடும்ப‌த்தோடு த‌ங்கியிருக்கின்ற‌ன‌ர்.

  1. சோவிய‌த் யூனிய‌ன் இருந்த‌ கால‌த்தில், ஸ்டாலின் காலத்தில் அந்த‌ ந‌க‌ர‌ம் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ ந‌க‌ரை நிர்மாணித்த‌வ‌ர்க‌ளும், அங்கு வ‌சிப்ப‌வ‌ர்க‌ளும், ஸ்டாலின் கால‌த்தில் “த‌ண்ட‌னைக் கைதிக‌ளாக‌” அனுப்ப‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள். அத‌னால் வெளியுல‌குட‌ன் தொட‌ர்ப‌ற்று த‌னித் தீவாக‌ வாழ‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
    மறைக்க பட்ட ரகசிய நகரம்
  2. சோவிய‌த் கால‌த்தில் எந்த‌ப் பொருளுக்குத் த‌ட்டுப்பாடு இருந்தாலும் அங்கே எல்லாம் தாராள‌மாக‌ கிடைத்த‌ன‌.
  3. அங்கு வேலை செய்ப‌வ‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌மும் அதிக‌ம். (இப்போதும் எப்போதும்). இன்றைய‌ ர‌ஷ்யாவில் கூட‌ மிக‌வும் பாதுகாப்பான‌ ந‌க‌ர‌ம். இர‌வு 12 ம‌ணிக்கும் பிள்ளைக‌ள் த‌னியாக‌ச் செல்ல‌க்கூடிய‌ அள‌வுக்கு பாதுகாப்பான‌து.
  4. ந‌க‌ர‌ம் எண் 40 ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. அங்கு இப்போதும் வெளியூர்க் கார‌ர்க‌ள் செல்ல‌ முடியாது
    இர‌க‌சிய‌மாக‌ க‌மெரா கொண்டு சென்று ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.
    மேற்க‌த்திய‌ தயாரிப்பான‌ அந்த‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம், அணுக் க‌திர் வீச்சால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் பிர‌ச்சினையை ஆராய்கிற‌து. அங்கு வாழும் மக்க‌ளுக்கு எந்த‌க் குறையும் இல்லாத‌ போதிலும், அணுவைப் பிள‌க்கும் தொழில‌க‌த்தில் வேலை செய்ப‌வ‌ர்க‌ள் கதிர் வீச்சுக‌ளால் பாதிக்க‌ப் ப‌டுவ‌து ம‌ட்டுமே பிர‌ச்சினை.
  5. மறைக்க பட்ட ரகசிய நகரம் குழைந்தைகள் விளையாடும் காட்சி

    அந்த‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் இன்னொரு உண்மையும் சொல்கிற‌து. ஸ்டாலின் கால‌த்தில் த‌டுப்பு முகாம்க‌ளில் த‌ண்ட‌னை அனுப‌வித்த‌ ப‌ல‌ர் இது மாதிரியான‌ ந‌வீன‌ ந‌க‌ர‌ங்க‌ளை அமைத்த‌ன‌ர். அங்கு இப்போது முன்னாள் கைதிக‌ளின் பிள்ளைக‌ள் வ‌ச‌தியாக‌ வாழ்கின்ற‌ன‌ர்.
  6. City no 40 in Russia, Read more news in English
  7. Written By Kalai Marx

 

தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்! ஆதாரம் தைப் பொங்கல்!

தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்!
ஆதாரம் தைப் பொங்கல்!
வருடந்தோறும் தமிழர்கள் ளால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

இன்றைய சூடான், எகிப்திய பகுதிகளில் வாழ்ந்த பண்டைய ஆப்பிரிக்கர்கள் எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு இடையில் சூரிய வட்டம் பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன.
பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர்.
பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் “அவ்வல்” ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு.
தமிழர்கள் தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். இது பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும்.
தமிழர்கள்

தமிழர்கள்
 தமிழர்கள்  Written By Kalai Marx

இர‌ண்டாம் உல‌க‌ப்போர் வ‌ர‌லாற்றில் இருட்ட‌டிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ உண்மை

“இர‌ண்டாம் உல‌க‌ப்போர் வ‌ர‌லாற்றில் இருட்ட‌டிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ உண்மை” இது
– ஜேர்ம‌னி முற்றாக‌ தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு முன்ன‌ரே, 1943 ம் ஆண்டு சோவிய‌த் யூனிய‌னில் நாஸிக‌ளின் போர்க்குற்றங்களை‌ விசாரிக்கும் நீதிம‌ன்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌.
– போர்க்குற்ற‌ நீதிம‌ன்ற‌ அம‌ர்வுக‌ள் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் முன்னிலையில் ந‌ட‌ந்துள்ள‌ன‌. பாதிக்க‌ப் ப‌ட்ட‌ யூத‌ர்க‌ள் வ‌ழ‌ங்கிய‌ சாட்சிய‌ங்க‌ள் யாவும் ப‌திவு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. குற்றம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌, நூற்றுக்க‌ண‌க்கான‌ நாஸி கிரிமின‌ல்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
– நாஸிக‌ள் கைப்ப‌ற்றிய‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ளில் தான், முத‌ன் முத‌லாக‌ யூத‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
– லாட்வியா, உக்ரைன் போன்ற‌ சோவிய‌த் குடிய‌ர‌சுக‌ளை சேர்ந்த‌ தேசிய‌வாதிக‌ள் நாஸிகளுட‌ன் ஒத்துழைத்த‌ன‌ர். பெரும்பாலும் அவ‌ர்க‌ளே யூத‌ர்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். நாஸிக‌ள் அவ‌ற்றை ஆவ‌ண‌ப் ப‌டுத்தி வைத்த‌ன‌ர்.
இர‌ண்டாம் உல‌க‌ப்போர் இன‌ப்ப‌டுகொலைக்கு த‌ப்பிய‌ யூத‌ர்க‌ள், சோவிய‌த் செம்ப‌டையில் சேர்ந்து கெரில்லாத் தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்தி இருந்த‌ன‌ர்.
– மேற்கத்திய‌ நாடுக‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ நியூர‌ன்பேர்க் போர்க்குற்ற‌ விசார‌ணை நீதிம‌ன்ற‌ம், நான்கு நாஸி குற்ற‌வாளிக‌ளை ம‌ட்டும் தூக்கிலிட்ட‌து.
– ப‌ல‌ருக்கு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்ட‌ ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை, ஆயுள் த‌ண்ட‌னையாக‌ மாற்ற‌ப் ப‌ட்டு, சில‌ வ‌ருட‌ங்க‌ளின் பின்ன‌ர் விடுத‌லை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
நியூர‌ன்பேர்க் நீதிம‌ன்ற‌ விசார‌ணைக‌ளில் நாஸி குற்ற‌வாளிக‌ள் வ‌ழ‌ங்கிய‌ வாக்குமூல‌ங்க‌ள்
– //சோவிய‌த் யூனிய‌ன் ஜேர்ம‌னிக்கு எதிராக‌ போர் தொடுப்ப‌த‌ற்கு முன்ன‌ர் முன் எச்ச‌ரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ சோவிய‌த் யூனிய‌ன் மீது ப‌டையெடுத்தோம்.//
– //யூத‌ர்க‌ள் எல்லோரும் க‌ம்யூனிஸ்டுக‌ள் என்ப‌தால் தான் யூத‌ர்க‌ளை கொன்றோம். குழ‌ந்தைக‌ளை விட்டுவைத்தால் அவை நாளை பெரிய‌வ‌ர்க‌ளாக‌ வ‌ள‌ர்ந்த‌ பின்ன‌ர் எதிரிக‌ளாக‌லாம் என்ப‌தால் யூத‌க் குழ‌ந்தைக‌ளையும் கொன்றோம்.//
இர‌ண்டாம் உல‌க‌ப்போர் சோவிய‌த் செம்ப‌டை வென்றிருக்கா விட்டால், நாஸிக‌ள் இனப்படுகொலை ஆதார‌ங்க‌ள் அனைத்தையும் அழித்து விட்டிருப்பார்க‌ள். ஏற்க‌ன‌வே ப‌ல‌ த‌ட‌ய‌ங்க‌ள் அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌. ஆனால், செம்ப‌டை மிக‌ வேக‌மாக‌ முன்னேறிய‌தால் எல்லாவ‌ற்றையும் அழிக்க‌ முடிய‌வில்லை. சோவிய‌த் இராணுவ‌ம் ஜேர்ம‌னியை பிடித்திரா விட்டால், நியூர‌ன்பெர்க் நீதிம‌ன்ற‌மும் ந‌ட‌ந்திருக்காது
 
இர‌ண்டாம் உல‌க‌ப்போர் Written By Kalaimarx

இர‌ண்டாம் உல‌க‌ப்போர்

 

ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்

ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்

ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்
ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்

  1. உலகில் தமிழரைத் தவிர மற்ற இனங்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழ்வதாக நினைத்துக் கொள்வது அறியாமை.
  2. உலகில் அப்படி எந்த இனமும் கிடையாது.
  3. சிலர் ஜேர்மனியரை உதாரணமாகக் காட்டப் பார்ப்பார்கள் அதனால் ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள் சில குறிப்புகள்.
  4. 19 ம் நூற்றாண்டுவரையில் ஜெர்மானியர்கள் என்ற தேசிய இன அடையாளம் ஏற்படவில்லை. பண்டைய காலத்தில் பிராங், பிரஷியர், சாக்சன் என்று பல்வேறு இனங்களாகப் பிரிந்திருந்தார்கள்.
  5. பகைமை கொண்டு மோதிக் கொண்டார்கள். சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்திலும் அது ஒரே நாடாக இருக்கவில்லை.
  6. – கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து ஜெர்மானியர்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இருபதாம் நூற்றாண்டுவரையில் தொடர்ந்து கொண்டிருந்தன.
  7. ஒருவரை ஒருவர் நேரில் கண்டால் இரத்தம் குடிக்கும் அளவிற்கு பகை வளர்ந்திருந்தது.
    ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்
    ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்

    இரத்தம் குடிக்கும் அளவிற்கு பகை வளர்ந்திருந்தது     
    கத்தோலிக்க பிரான்ஸில் இருந்து அகதியாகப் புலம்பெயர்ந்த புரட்டஸ்தாந்து பிரெஞ்சு மக்கள், ஜெர்மனியில் வாழ்ந்தனர். வடக்கே உள்ள ஹெஸ்ஸன் வரையில் குடியேறி இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பிரெஞ்சு மொழியில் தேவாலய வழிபாடு நடத்தினார்கள்.
  8. அவர்கள் அகதிகளின் வம்சாவளியினர் என்பதால் ஜெர்மனியில் இரண்டறக் கலந்து விட்டனர்.
    – இன்றைய ஜெர்மன் நாட்டில் எல்லோரும் ஜெர்மன் மொழி பேசுவோர் அல்ல.
    ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்
    ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்

    சிறுபான்மை இனங்களின் மொழி உரிமை மதிக்கப் படுவதில்லை
  9. சிறுபான்மை இனங்களின் மொழி உரிமை மதிக்கப் படுவதில்லை ஜெர்மன் பேரினவாதம் அவற்றின் மீது மேலாதிக்கம் செய்கின்றது அங்குச் சிறுபான்மை மொழிகள் இருக்கும் விடயம் வெளியுலகில் தெரியாவதவாறு அடக்கப் பட்டுள்ளனர்.
    – தென் கிழக்கு ஜெர்மனியில் வாழும் சேர்வர் மொழி உலகில் அழிந்து வரும் மொழிகளில் ஒன்று. (அவர்களைச் செர்பியர்களுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது.
  10. இது ஜெர்மன் போன்றதொரு மொழி பேசும் இனம்.) முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் அவர்களுக்கு ஒரு தன்னாட்சிப் பிரதேசம் இருந்தது. இன்று அப்படி எதுவும் இல்லை.
    – வட மேற்கு ஜெர்மனியில் பிரீசிய மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழ்கிறார்கள். அது தனித்துவமான மொழி. ஜெர்மன் மொழியைவிட டேனிஷ் மொழியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஆனாலும் என்ன? அவர்களுக்கென்று தனி மாநிலம் கூடக் கிடையாது
  11. – முதலாம் உலகப்போருக்கு முன்பிருந்தே ஜெர்மானியர்கள் இடது சாரிகள், வலது சாரிகள் என்று கொள்கை அடிப்படையில் இரண்டாகப் பிரிந்திருந்தனர்.
  12. முதலாம் உலகப்போர் முடிந்தவுடனே, பல நகரங்களில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்தது. மியூனிச், ஹம்பூர்க், பெர்லின் போன்ற நகரங்களில் சோவியத் அரசு பிரகடனம் செய்யப் பட்டிருந்து.
  13.                                      ஈவிரக்கமின்றி அடக்கினார்கள்
    – தீவிர தேசியவாதிகளைக் கொண்ட வலது சாரி துணைப்படையினர் கம்யூனிஸ்ட் புரட்சிகளை ஈவிரக்கமின்றி அடக்கினார்கள். பல நூற்றுக் கணக்கானோர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.   ஜெர்மானியர்களுக்கு எதிராக ஜெர்மானியர்கள் போரிட்டனர்
  14. அதாவது, ஜெர்மானியர்களுக்கு எதிராக ஜெர்மானியர்கள் போரிட்டனர்.
    இப்போது கூறுங்கள்….
    ஜெர்மானியர்கள் ஒற்றுமையாக ஒரே இனமாக வாழ்கிறார்களா?
  15. ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள் Written by Kalai Marx 

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left