Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தின் பிரதிநிதி இல்லாத மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நாள் கருப்பு தினம்

தமிழகத்தின் பிரதிநிதி இல்லாத மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நாள் கருப்பு தினம்

தமிழகத்தின் பிரதிநிதி இல்லாத மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நாள் கருப்பு தினம்
தமிழகத்திலிருந்து யாரும் அமைச்சராகவில்லை ஒருவேளை நிர்மலாவோடு முடித்துக்கொள்ளலாமென எண்ணியிருக்கலாம்
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகசெட்டியார் தந்த தமிழகத்தில் இன்று யாருமில்லாமல் இருப்பது வியப்பை தரவில்லை ஏனெனில் சில மரபுகள் வழக்கங்கள் எல்லாம் மீரபடுவது தான் பாசிசத்தின் தொடக்கம்.
இந்தியாவின் முதல் ஊழல்வாதி டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆனால் ஏனோ அதிகம் பேசபடாமல் மறுக்கபட்டது/மறுக்கபட்டது
தமிழகத்திலிருந்து சிறந்த ஆளுமைகள் டி.டி.கே ..வெங்கட்ராமன் என பார்பனியர்கள் என புகழ்ந்தார்கள் ஏனோ சண்முகம் செட்டியாரை மாறனை, பாலுவை ராசாவை சிதம்பரத்தை
மறக்க திறமைகளை மறுதலிக்க முயற்சிக்கிறார்கள் .. முதல் ஊழல்வாதியை உத்தமராக்க தெரிந்தது ஆனால் நிரூபிக்க முடியாமல் கட்டிசமைத்த பொய்களால் திராவிடர்களை பழிசொல்ல பழி ஏற்க செய்ய முடிகிறது ..
கலைஞர் சொல்வார் மாறனின் மகன் என்பார்கள் பார்பனிய குஞ்சென்றால் திருஞானசம்பந்தர் என்பர்
 

தமிழகத்தின் பிரதிநிதி

திராவிட வழிவந்த (கா.கா.கே.க) கட்சியிலிருந்து வந்த பொன்.ராதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் இணை அமைச்சரென்றாலும் சிறியளவிலான பங்களிப்பது .. சீதாராமனையெல்லாம் தமிழக பிரதிநிதியாக சொல்லமுடியாது ..தமிழக மக்கள் துரத்தியடித்து தூத்திவாரினார்கள் என்பதால் இடமில்லை அதே கேரளத்திலிருந்து ஒரு இடம்கூட கிடைக்காத போதும் கேரள பாஜக தலைவர் முரளிதரன் இணையமைச்சராக்கபட்டிருப்பது கவனித்தல் கொள்ளவேண்டும் ..
அதிமுக பன்னீர் மகனுக்கு தரபோவதாக செய்திகள் வந்து கடைசியில் தரவில்லை
மந்திரிசபையில் யாரை அமர்த்துவதென்பது பிரதமரின் தனிவிருப்பம் .. இந்த தேர்தலே வாக்குபதிவு இயந்திரங்கள் பலசரக்குகடையில் கிடைத்ததில் வந்த வெற்றியென்பதும் தமிழகம் போல விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் அவர்கள் சூழ்ச்சி முறியடிக்கபடும் என்பதால் வடமாநிலங்களில் செட்டிங் செய்யபட்டதென்றாலும் வந்த வெற்றி ஜனநாயகத்தின் கருப்பு பக்கங்களாய் நிகழ்ந்தவைகள்
..
தமிழகத்தின் பிரதிநிதி இல்லாத மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நாள் கருப்பு தினம்
Black Day of Democracy..
..
ஆலஞ்சியார்

சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன

சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு  பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன

சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு  பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன
இதில் கொடுமை என்னவெனில் “எலைட்” தலித்கள் என அறியபடுவோர் தான் அதிகளவில் “புறம்”பாடுகின்றனர் யாருக்கு கல்வி மறுக்கபட்டு திராவிடத்தால் கிடைத்ததோ அவர்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் இன்று கல்வியில் ஒரளவு சரியான நகர்வை கண்டுவிட்டபிறகு பொருளாதாரத்திலும் நல்ல நிலை வந்தவிட்டபிறகும் சமுதாயத்தின் அங்கீகாரம் என்பது இன்னும் சமூக கலாச்சார மாற்றம் ஏற்படவில்லை என்ற உண்மையை மறுக்கவில்லை
ஆனால் பிற மாநிலங்களில் இதுபோல “மேம்பாடு ” கிடைத்திருக்கிறதா என்ற உண்மை நிலையை உணராமல் பிற்படுத்தபட்ட பிரிவினர்களும் இதே கேள்வியை கேட்கின்றனர்
எதற்கெடுத்தாலும் முன்பே இந்த புரட்சி நடந்திருக்கிறது.. என “புளித்தமாவை”யே திரும்ப திரும்ப சொல்கிறார்கள்
கலைஞர் வந்து தான் செய்தாரென்பதை ஏற்கமுடியாது
பெரியார் இல்லாவிட்டாலும் படித்திருப்போம்.. இன்றைக்கும் சாதி ஒழிந்துவிட்டதா .. சாதியை வளர்ப்பதே திராவிடம் தான் என்றெல்லாம் பேசுகிறார்கள்…
பேசுங்கள் எதையும் அறிந்துக்கொண்டு அறிந்ததை ஆய்ந்து உண்மைதானா என விளங்கி பின் விமர்சனம் செய்யுங்கள்
..
சாதியை பார்த்துதானே தேர்தலில் ஆளை நிறுத்துகிறார்கள் என கேட்போருக்கு மறுக்கவில்லை.. அந்தந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களின் பிரதிநிதியாய் அதே சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்துவதென்பது இயல்பான ஒன்று ‍
அதில் கூட சில இடங்களில் பிற சமூகத்தவரை நிறுத்தியிருக்கிறது.. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றி முக்கியம் என்பதும் அதே வேளை கொள்கை சார்ந்தவர்களை நிறுத்தவேண்டியதும் அவசியம்.. குறைகளே இல்லையா என கேட்டால் உண்டு ஆனாலும் பிற கட்சிகளை விட திமுக மிக நேர்மையாக நடந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது

கலாச்சாரத்திற்கு திமுக செய்ததைப்போல வேறு எந்த கட்சியும் செய்ததில்லை

இனம் மொழி கலாச்சாரத்திற்கு திமுக செய்ததைப்போல வேறு எந்த கட்சியும் செய்ததில்லை காரணம் அடிப்படையிலிருந்து மாறாத கொள்கைப்பிடிப்பே காரணம்.. தமிழ்மொழியை செம்மொழியாக்கியதொன்றே போதும்.. வள்ளுவனுக்கு சிலை வடித்து வானுயர புகழ் சேர்த்தது
தமிழ்ப்புத்தாண்டை தை மாதமென்ற சட்டமேற்றியது ..பின் வந்த ஆரியமங்கை தான் சார்ந்த இனத்தின் கலாச்சார திணிப்பை மீண்டும் கொண்டுவந்தார்.. தமிழனின் பண்பாட்டை கட்டிகாப்பதில் எப்போதும் திமுக பின்வாங்கியதில்லை
..
எந்தவொரு திட்டமானாலும் உடனே சில அறிவுஜீவி..?கள் நாங்கள் ஏற்கனவே சிந்தித்தது நாங்கள் சொல்லிதான் செய்தது திமுக என உளற தொடங்கியிருக்கிறார்கள்
ஏன் அதற்கு முன் இருந்த ராஜாஜி பக்தவச்சலம் போன்றவர்களின் காங்கிரஸ் ஆட்சியில் செய்திருக்கவேண்டியதுதானே.. அல்லது மகோரா ‌மற்றும் ஜெயா ஆட்சியில் கேட்டு பெற்றிருக்கவேண்டியதுதானே என்றால் பதில் இல்லை .. பதில் வராது.. ஏனெனில் இவர்களையெல்லாம் அருகில் அண்டவிடுவதே இல்லை அல்லது இவர்களை ஒரு பொருட்டாக மதித்ததில்லை.. அது எந்த சாதி மதத்தினராக இருந்தாலும் கலைஞரை தவிர மற்றவர்கள் நடத்திய விதம் அப்படிதான்..காரணம் சிந்திக்கும் திறனற்ற எடுப்பார்கைப்பிள்ளையை போல அடுத்தவரின் நிழலில் அறிவில் குளிர்காய்கிறவர்களாக இருந்தார்கள் ..
அல்லது அவர்களிடம் கேட்க ஒருவித பயமிருந்தது.. ஆனால் கலைஞர் எல்லோரையும் கடுமையாக எதிர்க்கிறவர்களின் கருத்தையும் உள்வாங்கியகிறவராக அவர்களின் கருத்தை கோரிக்கைகளை ஏற்கிறவராக அதில் நியாமிருந்தால் நடைமுறைபடுத்த தயங்காதவராக இருந்தார்.. இந்திய வரலாற்றில் உச்சபட்ச ஜனநாயகவாதியாக திகழ்ந்தவர் கலைஞர் மட்டும்தான்
..
பெரியார் இல்லையென்றாலும் படித்திருப்போம் .. சரி..
ஆராயிரம் பள்ளிகளை மூடினாரே மூதறிஞர்..? என நம்பபட்ட ராஜாகோபால் (ராஜாஜி) அப்போது அவருக்கெதிராக ஏன் யாரும் அசையவில்லை
குலக்கல்வி கொண்டுவந்து அவனவன் சாதி தொழிலை செய்யுங்களென சொன்னபோது என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள் .. காமராஜரை நிறுத்தி ராஜா கோபாலையை புறமுதுகிட்டு ஓட செய்தது பெரியார் தானே .. ஆராயிரம் பள்ளியை மூடிவிட்டார் நீயாவது திறந்து எம்ம பிள்ளைகள் படிக்க ஏற்பாடு செய் என்ற கோரிக்கைதானே .. ஊரெங்கும் துவக்கப்பள்ளி வர காரணமாக இருந்தது
பள்ளி திறந்தும் யாரும் வர மாட்டேங்கிறாங்கய்யா என்ற போது மதிய சோறு போட்டாவது பசங்களை படிக்க வைத்தது திராவிடம்தானே
மதிய உணவிற்கு போதிய நிதி ஆதாரம் இல்லையென்ற போது பணக்காரர்கள் செல்வந்தர்கள் என கையேந்தி.. கடைசியில் விவசாயிகளிடம்.. முதல் மரைக்காய சாமிக்கும் இரண்டாவது மரைக்காய ஊர்கோவிலுக்கும் தரிங்க மூணாவது மரைக்காய எனக்கு தாங்க பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்றாரே
இதற்கெல்லாம் மூலகாரணமாக ராஜாகோபாலையை வீழித்தி நம் குழந்தைகள் படிககணுமென்ற பாடுபட்ட பெரியாரை ..இவர் இல்லாவிட்டாலும் படிச்சிருப்போமென்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம்
பெரியாரின் வழிவந்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதானே நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தி..படிப்படியாக உயர்நிலை மேல்நிலையென கிராம்தோறும் கொண்டு சேர்த்தார் ..மாவட்டம் தோறும் கலைக்கல்லூரி
தொழில்நுட்ப கல்லூரியென ..செய்து இந்தியாவிலேயே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரியை நிறுவியது இந்த பெரியாரின் நேரடி சீடர் கலைஞர் தானே.. பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மகளிர் கல்லூரி மாவட்டம்தோறும்
ஏன் முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணம் இல்லை.
அடுக்கிகொண்டு போகலாம்..
கல்வியில் புரட்சியை செய்தது திராவிடம்தான்..
..
இவையெல்லாவற்றையும் அனுபவித்து கொண்டே என்ன செய்தது திராவிடம் என்பவர்களை எப்படி அழைப்பது
ஈத்தரைகள்..
..
ஆலஞ்சியார்

பார்பனர்கள்கள் தமிழர்களா?

பார்பனர்கள்கள் தமிழர்களா?

பார்பனர்கள்கள் தமிழர்களா?  கும்பகோணம் மடத்தின் தலைவர் காஞ்சி பெரியவர்
தமிழை நீசமொழி என்றார் சமஸ்கிருதம் மட்டுமே தெய்வத்தோடு பேசும் மொழி என்றெல்லாம் தெய்வத்தின் குரலில் அளந்தார்
ஆனால் பார்பனர்கள் தங்களை தமிழர்களாக தேசியளவில் முன்னிறுத்தினாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஏச மறப்பதில்லை தமிழர்களை அவர்கள் தங்களின் பிரதான எதிராளியாகவே கருதுகிறார்கள் காரணம் அவர்கள் தங்களின் கோட்பாட்டிற்குள் வருவதில்லை/ அடைக்கமுடியவில்லை
பாஜக வின் ராகவனும் பத்ரியும் தமிழை எப்படி காட்டுமிராண்டி மொழியென்று பெரியார் சொல்லலாம் கூடவே எங்கள் #தமிழ்மொழி என சேர்த்துக்கொள்கிறார்கள்..
..
#பெரியார்
முதலில் மிகதெளிவாக சொன்னார்..
மொழியில் சீர்திருத்தம் செய்யாமல் எந்த மொழியும் வளராது..சமகாலத்திற்கு பொருந்துகிறார்ப்போல் வடிவமைக்கப்படாமல் இருப்பதைதான் பெரியார் குறிப்பிட்டார் ..
பெரியார் சீர்திருத்தம் செய்த தமிழ் மொழியின் எழுத்துக்கள் தான் இந்த கணணி யுகத்திலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது..
தமிழைப்படித்து விட்டு சாமியாராக போனவர்கள் அதிகம் பட்டினத்தார் தாயுமானவர், வள்ளலார் போன்றோர்..அதையும் பெரியார் பலஇடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்..
தமிழ் படித்து விட்டு மடமை பேசியவனே அதிகம் யாரும் பகுத்தறிவு பேசவில்லை என்றும் குட்டுவைத்தார் பெரியாரை ஒரு பிரேமிற்குள் அடைத்துவிடமுடியாது அவர் தனக்கு மொழிப்பற்றோ இனப்பற்றோ நாட்டுபற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடப்பற்று என்று சொன்னவர்..

பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும்?

விடயத்திற்கு வருவோம்..
பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும் #இனத்தால்..தமிழனில்லாத ஆரியர்கள்..
வடமொழி கலப்பிலேயே பேசும் சமஸ்கிருதத்தை பேச்சுவழக்கில் தமிழோடு கலக்கும் ..இவர்கள் தமிழர்கள் அல்லர்..
தமிழ் மொழி பேசுவதால் மட்டுமே தமிழன் என்று பொருள்கொள்ளமுடியாது..
எனக்கு ..ஆங்கிலம் தெரியும் பிரஞ்சு தெரியும் எனவே நான் ஆங்கிலேயன் பிரஞ்சுகாரன் என ராகவன் கோஷ்டி சொல்லுமா

புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாப்பானை.. இப்படிதான் பாடினார்
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாப்பானை.. இப்படிதான் பாடினார்..
#அண்டிப்பிழைக்க_வந்தஆரியக்கூட்டம்
#பெரியார் பாப்பான் என்றே அழைக்கவும் சொன்னார் பிராமணன் என்றெழ்த்தால் நாம் அவன் சொல்லும் நால்வர்ண கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவராவோம் அவன்
நம்மவன் இல்லையென்றார்.. தன்னை தமிழனென சொல்லி திரிகிறான் அதிலிருந்து வேறுபட்டு இனங்கானவே திராவிடன் என்ற சொல்லி பயன்படுத்தியதாகவும் சொன்னவர் பெரியார்
..
#பாப்பான்..
தமிழ் இனத்தின் பிரதான எதிரி..
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ..இனத்தின் பெருமைக்கு மிகப்பெரிய இடையூறாய் இருக்கும் இவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள் தொடர்ந்து தமிழர்களை கிண்டல் செய்வதும் தங்களை உயர்வாக எண்ணி மகிழ்வதும் ஒருவகை மனநோய்
..
தமிழ் செம்மொழியாவதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தவனும் பாப்பான் தான்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போது தினமலர் இனி விலைவாசி குறைந்து விடும் என கிண்டலடித்தது குறிப்பிடதக்கது செத்த மொழி சமஸ்கிருதத்தை உயர்த்திபிடிக்கவே மும்மொழியென பெயரில் ஏதேனும் ஒன்றை கற்கலாமென சொல்லி .. பிற மொழிக்கு ஆசிரியர் கிடைக்கவில்லையென கதையடித்து சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிற முயற்சிதான் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் ..
அதேபோல்
ஹிந்தி மொழியில் இரண்டே இலக்கியம் தான் ராமாயணமும் ரெயில்வே கைடும் என்றார் அண்ணா.. மொழி வளமில்லாத தனக்கென்று தனி இலக்கணமில்லாத உருது மற்றும் ஹிப்ரூ மொழி வளத்தை தனக்காக்கி கொண்ட பேசும் மொழி ஒருநாட்டின் பொதுமொழி என்பது கையிருப்பு இல்லாமல் கதையளப்பதைப்போல சிதைந்து போகும் மொழி உயர்ந்ததெனில் விரும்பி கற்பார்கள் பிழைப்பிற்காக எனில் அதில் எந்த பயனும் ஏற்படபோவதில்லை ..
..
தமிழ் மீதும் தமிழர்கள் மீது தீராபகை கொண்டு திரியும் பார்புகளை அறிவுக்கொண்டு வெல்வோம்
#எம்மொழி_செம்மொழி ..
..
ஆலஞ்சியார்

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left