Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது

உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது நீதிபரிபாலன முறை மீதான நம்பிக்கையை பொய்க்க செய்கிறது

உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது நீதிபரிபாலன முறை மீதான நம்பிக்கையை பொய்க்க செய்கிறது
சட்டம் மிக தெளிவாக யாரை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டுமென சொல்லியிருக்கிறது அதிக இடங்களை பெறுவோர் ..மட்டுமல்ல பெருபான்மையை எட்டியவர்கள் அல்லது இணைந்து பெருபான்மையை தருகிறவர்கள்..
பாஜகவிற்கு பெருபான்மையெனும் மாஜிக் நம்பர் magic number இல்லை .. ஆனால் அந்த கூட்டு எண்ணை தருகிற காங் ஜனதா கட்சிக்கு
வாய்ப்பு மறுக்கபட்டு .. அவர் கேட்ட ஏழுநாட்களை விட அதிகமாக இன்னுமொரு ஏழுநாட்களை வைத்துக்கொள் எது வேண்டுமானாலும் செய்துகொள்..ஆனால் சட்டமன்றத்தில் பெருபான்மையை நிரூபி!

நள்ளிரவில் கூடி நீதிமான்கள் விவாதித்தார்கள்

நள்ளிரவில் கூடி நீதிமான்கள் விவாதித்தார்கள் விடிய விடிய பேசி கடைசியில் கவர்னர் அதிகாரத்தில் தலையிட முடியாதென்று .. தடைவிதிக்க மறுத்தார்கள்.. தலையிட முடியாதென்று தெரிந்தும் கவர்னருக்கு உத்திரவிட முடியாதென தெரிந்தும் ஏன் வீணான விடிய விடிய கதைக்கவேண்டும்.. ஒற்றை இரவில் அல்லது அமர்வில் சட்டசிக்கலை தீர்க்கமுடியாதுதான் .. ஆனால் கண் முன்னே நடக்கும் ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தும் தார்மீக பொறுப்பு நீதிமான்களுக்கு வேண்டாமா.. எப்படி நிரூபிப்பீர்கள் உங்களுக்குதான் பெருபான்மை இல்லையே என்று நீதிபதி கேள்விக்கு .. தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றால்தான் கட்சிதாவல் சட்டம் பொருந்துமென்கிறார் அதாவது நிறைந்த நீதிமன்றத்தில் உறுப்பினர்கள் விலைபேசபடுவார்கள் என சொல்லியிருக்கிறார் .. மற்ற கட்சியிலிருந்து வென்று வந்தவரின் ஆதரவை பெறுவது அந்த கட்சியின் அனுமதியில்லாமல் பெறுவது .. அதை நியாயபடுத்துவது எவ்வளவு கேவலம்.. பெருபான்மை உள்ள கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் மரபென்றால் கோவாவிலும் திரிபுராவிலும் ஏன் காங்கிரஸை ஆட்சியமைக்க அழைக்கவில்லை.. ஒருவேளை கோவா திரிபுராவிற்கென வேறு சட்டபுத்தகம் நீதி இருக்கிறதா..இப்போது கோவா திரிபுராவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோர இருப்பதாக செய்திகள் வருகின்றன .. இப்போது உச்சநீதிமன்றம் என்ன சொல்ல போகிறது..
..
இப்போதே விலைபேச தொடங்கியிருக்கிறார்கள் வருகிற ஆறு பேருக்கும் மந்திரி பதவி.. ₹100 கோடி என செய்திகள் வருகிறது .. மத்தியில் அவர்கள் ஆள்வதால் .. பணம் மாற்றம் மிக எளிதாக நடக்கும் .. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குதிரைபேர அரசியல் குறுக்குவழியில் ஆட்சியை பிடிப்பது .. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத மாநிலத்தில் .. இரு உறுப்பினர்கள் இருந்தால் போதும் அதிகாரத்திற்கு வந்துவிட எந்தவிதமான அயோக்கியதனத்தையும் செய்ய தயங்கவில்லை .. அத்தனை சனநாயக மரபுகளும் காற்றில் பறக்கவிடபடுகிறது 29 தொகுதிகளில் கட்ட்வச்ச காசை கூட பறிகொடுத்த கட்சி எங்கணம் அதிக இடங்களில் வெல்ல முடிகிறது..
..
எல்லாவற்றையும் திருவாளர்.பொதுசனம் பார்த்துக்கொண்டிருக்கிறான் .. என்பதை மதிப்பிற்குரிய நியாயவான்கள் கருத்தில் கொள்ளவேண்டும் .. ஆட்சியாளர்களும் தான்
Democratic assassination
..
ஆலஞ்சியார்

தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்

  தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்
தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள் மங்களூரில் ஈஸ்வரி மேன்பவர் சொல்யூஸன்ஸ் லிமிட்டட் என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. அந்த நகரத்தில் பஞ்ரங் தள் (இந்த அமைப்பு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அணி. விஸ்வ ஹிந்து பரிஷத் என்பது ஆர்எஸ்எஸின் கலாச்சார அமைப்பு) குண்டர்கள் மால்களையும் கடைகளையும் அவ்வப்போது தாக்குவதால் ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்க வேண்டுமென்றால், இந்த நிறுவனத்திடமிருந்துதான் ஆட்களை வாடகைக்கு அமர்த்த வேண்டும்.
அவர்களை அமர்த்திக்கொண்டுவிட்டால், பஜ்ரங் தள் குண்டர்கள் அந்த மால்களை நெருங்க மாட்டார்கள்.
இப்படி பஜ்ரங் தள்ளுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த நிறுவனத்தை நடத்துவது ஷரன் பாம்ப்வெல். இவர்தான் தெற்கு கர்நாடக பஜ்ரங் தள்ளின் அமைப்பாளர். புரியவில்லையா? பஜ்ரங் தள் குண்டர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கிறது ஒரு நிறுவனம்; அந்த நிறுவனத்தை நடத்துவது பஜ்ரங் தள் அமைப்பாளர் – குழப்பமாக இருக்கிறதா?
குழப்பமே வேண்டாம். முதலில் கடைகளை பஜ்ரங் தள் தாக்கும். பிறகு, ஈஸ்வரி மேன்பவர் ஆட்கள் உங்களை அணுகி பாதுகாப்பு அளிப்பதாக சொல்வார்கள். நீங்கள் ஒப்புக்கொண்டால், பாதுகாவலர்கள் அனுப்பப்படுவார்கள். அந்தப் பாதுகாவலர்கள் பஜ்ரங் தள்ளைச் சேர்ந்தவர்கள். அவர்களை அனுப்பிவைப்பது பஜ்ரங் தள் அமைப்பாளர்!! அதாவது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் அவர்களே.. பாதுகாவலர்களை அனுப்புவதும் அவர்களே..

இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்  

தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்
தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள்

2008 செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்ட்ராவில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், விசைத் தறி தொழிற்சாலைகள் நிறைந்த மாலேகாவ்ன் பகுதியில் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. இது குறித்த புலன் விசாரணையைத் துவங்குகிறார் ஹேமன்த் கார்கரே. இந்த ஹேமந்த் கார்கரேவின் விசாரணையின்போதுதான், மாலேகாவ்ன் குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்து பயங்கரவாத அமைப்பான அபினவ பாரத் இருப்பது தெரியவருகிறது.
இதைத் திட்டமிடுவதில் முக்கியப் பங்கு வகித்தவர் லெப்டினன்ட் கர்னல் புரோஹித். இந்த குண்டுவெடிப்புகளை நடத்த ஆட்களை சப்ளை செய்தவர், ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் முன்னாள் தொண்டரான சாத்வி பிரக்யா சிங் தாகுர். இந்த வழக்கை விசாரித்துவந்த ஹேமந்த் கார்கரே அதே ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின்போது கொல்லப்படுகிறார்.

பயங்கரவாத அமைப்புகள் என்றாலே இஸ்லாமிய அமைப்புகள்

இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகள் என்றாலே இஸ்லாமிய அமைப்புகளும் நக்ஸல் அமைப்புகளும்தான் மனதில் தோன்றும்  ஆனால், இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள், இவற்றைவிட பயங்கரமானவை. காரணம், அவை இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மதத்தின் பெயரால் செயல்படும் அமைப்புகள். இருந்தபோதும், பொதுவாக இந்த அமைப்புகள் குறித்தும் அவை எப்படி செயல்படுகின்றன, எந்தெந்த பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டன, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், இவற்றை இயக்குவது யார் என்பதெல்லாம் பெரிதாக பேசப்படுவதில்லை.
இந்த நிலையில்தான் பத்திரிகையாளரான தீரேந்திர கே. ஜா இந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் Shadow Armies. வெளியிட்டிருப்பது Juggernaut பதிப்பகம். இதில் எட்டு இந்து பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 1. சனாதன் சன்ஸ்தான் 2. பஜ்ரங் தள் 3. ஹிந்து யுவ வாஹினி 4. அபினவ பாரத் 5. ஸ்ரீ ராம சேனா 6. ராஷ்ட்ரீய சீக் சங்கட் 7. ஹிந்து ஐக்கிய வேதி 8. போன்சாலா மிலிட்டரி ஸ்கூல்.

குண்டுவெடிப்பின் பின்னணி

ஒவ்வொரு அமைப்பைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அசர வைக்கின்றன. மாலேகாவ்ன் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த அபினவ பாரத் அமைப்பை ஒரு கட்டத்தில் இயக்கியது கோபால் கோட்ஸேவின் மகளும் ‘தேச பக்தர்’ வீர் சாவர்க்கரின் தம்பியான நாராயண் சாவர்கரின் மருமகளுமான ஹிமானி சாவர்க்கர்!!
அதேபோல, உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்ய நாத்திற்காக மாநிலம் முழுவதும் கலவரங்களிலும் கொலைகளிலும் ஈடுபடும் அமைப்புதான் ஹிந்து யுவ வாஹினி!!
பெயர்களைப் பாருங்கள்.. ஸ்ரீ ராம சேனா, ஹிந்து ஐக்கிய வேதி, சனாதன் சன்ஸ்தான்….இந்த அமைப்புகளைப் பற்றி கேள்வியெழுப்பினாலே இந்து விரோதி என்று பட்டம்கட்ட ஏதுவாக வைக்கப்பட்ட பெயர்கள்..
ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இந்தியா எவ்வளவு பெரிய அபாயத்தில் உள்ளது என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது சுரீரென உரைக்கிறது. விலை. 499/-
நன்றி:தெரிந்து கொள்ளுங்கள் இந்துத்துவத்தின் நிழல் முகங்கள் Muralidharan Kasi Viswanathan

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left