Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்! ஆதாரம் தைப் பொங்கல்!

தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்!
ஆதாரம் தைப் பொங்கல்!
வருடந்தோறும் தமிழர்கள் ளால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

இன்றைய சூடான், எகிப்திய பகுதிகளில் வாழ்ந்த பண்டைய ஆப்பிரிக்கர்கள் எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு இடையில் சூரிய வட்டம் பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன.
பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர்.
பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் “அவ்வல்” ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு.
தமிழர்கள் தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். இது பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும்.
தமிழர்கள்

தமிழர்கள்
 தமிழர்கள்  Written By Kalai Marx

பி ஜே பி யின் டிஜிட்டல் படையின் ரகசியங்கள்

பி ஜே பி டிஜிட்டல் பிரிவில் பணிபுரிந்த எழுத்தாளரும் பட இயக்குனருமான சாத்வி கோஸ்லா.

பா.ஜ.கவின் டிஜிட்டல் பிரிவில் பணிபுரிந்த எழுத்தாளரும் பட இயக்குனருமான சாத்வி கோஸ்லா.
ஊடகவியலாளர் சுவாதி சதுர்வேதியின் “I am a troll” புத்தகம் பி.ஜே.பியுடைய டிஜிட்டல் படையின் ரகசியங்களை அம்பலப்படுத்தி மோடியின் குட்டை உடைத்திருக்கிறது. இந்நூலில் முக்கிய சாட்சியமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பவர், பி.ஜே.பி.யில் தன்னை ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்டு அவர்களின் சமூக ஊடக மையமான NDOC (National Digital Operations Centre)இல் பணியாற்றிய சாத்வி கோஸ்லா. அவருடைய நேர்காணலொன்று கேரவன் இதழில் வெளிவந்திருக்கிறது. தான் அமைப்பில் இணைந்தது பற்றியும் அவர்களோடு முரண்பட்டு வெளியேற நேர்ந்ததைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான், இந்தியாவில் வளர்ந்துவரும் சகிப்பின்மை குறித்துத் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். கடந்த ஐந்தாறு மாதங்களாக இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளைப் (கல்புர்கி, பன்சாரே, தாத்ரி படுகொலைகள்) பார்க்கும்போது பாதுகாப்பின்மையும் அச்சவுணர்வும் மேலோங்கி இருப்பதாகவும் தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா என்று தன் மனைவி கேட்டதாகவும் சொல்லித் தனது கவலையைப் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அவருக்கு எதிரான கோஷங்கள் தீவிரமாகப் பரவின. அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கங்கள் எழுந்தன. ஸ்நாப் டீலின் விளம்பரத் தூதுவராக இருந்த அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்கள். தொடர்ந்து ஸ்நாப்டீல் மட்டுமல்ல, இந்திய சுற்றுலாத்துறையும் (தனது தூதுவராக இருந்த) அவருடனான ஒப்பந்தத்தைக் கைவிட்டது. கூச்சலிட்டவர்கள் ஒரு வெற்றியை ருசிபார்த்தபடி கலைந்து போனார்கள்.
ஆனால், இவர்கள் யார்? ஒரு மக்கள் திரளா? சிறு குழுவா? கார்ப்பரேட் நிறுவனமே பின்வாங்குகிற அளவுக்குப் பெரும் அரசியல் சக்தியா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சாத்வியின் நேர்காணலில் விடை இருக்கிறது. சாத்வி கோஸ்லா பாரம்பரியமாகவே காங்கிரஸ் ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவரைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் தலைமையில் ஒரு வெற்றிடம் இருப்பதாக உணர்கிறார். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தின் வழியாக ஆட்சி மாற்றத்தைக் கருதுகிறார். அப்போது அவர் முன் இரண்டு தேர்வுகள்தான் இருந்தன. ஒன்று அண்ணா அசாரே. மற்றொன்று மோடி. தனது ட்விட்டர் பக்கத்தில் (அன்றைய ஆளும்) காங்கிரஸின் மீதான விமர்சனங்களை எழுதுகிறார். இந்த ட்வீட்ஸ்தான் பி.ஜே.பி.யின் பார்வையை அவர்மீது விழவைத்தது. பி.ஜே.பி.யில் இணைந்து கொள்ளும்படி உடனடியாக அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. கட்சியில் சேர மறுத்துவிட்ட அவர், ஒரு தன்னார்வலராகப் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். எனவே, தங்களது Mission 272+ இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு தன்னார்வலராகப் பணியாற்றும்படி அவர் வரவேற்கப்பட்டார்.
பதிவுசெய்துகொண்டதும் NDOC (National Digital Operations Centre)இல் அவர் ஒரு தன்னார்வலர் ஆனார். தன்னார்வலர்களுக்கான பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களிலும் அவர் இணைக்கப்பட்டார். ஒரு எம்.பி.ஏ பட்டதாரியான அவருக்குத் தன்னைப்போலப் படித்த பட்டதாரிகளும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் கார்ப்பரேட் பின்புலம் உடையவர்களும் ஒருங்கிணைந்து அங்கே பணியாற்றுவது பெரிய உற்சாகத்தை அளித்தது. தன்னைப் போன்ற நிறைய தன்னார்வலர்களை அமைப்பிற்குள் கொண்டுவருவது, ஸ்மிருதி இராணி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களுக்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க உதவுவது, மோடியின் “Chai Pe Charcha” எனும் தேர்தல் பிரச்சார நிகழ்வை நடத்துவது என ஆரம்பத்தில் ரொம்பவும் உத்வேகத்துடனும் இந்திய அரசியலில் ஒரு மாற்றம் நிகழப்போகும் நம்பிக்கையுடனும் அவர் தனது பணிகளைச் செய்தார். எனினும் ஒரு காந்தியவாதியான அவருக்குத் தான் பணியாற்றுகிற அமைப்பின் ஆபத்தைப் புரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை. கருத்தியல்ரீதியான விவாதங்களாக இல்லாமல் சிறுபான்மையினர், மாற்றுக்கருத்துடையவர்கள், தனது அரசியல் எதிரிகள் எனப் பலரையும் இவர்கள் குறிவைத்துத் தாக்குவதையும் வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்புவதையும் விரைவிலேயே கண்டுணர்கிறார்.
NDOC இன் தலைமைப் பொறுப்பில் இருந்த அரவிந்த் குப்தா ஒரு ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திடும்படி வாட்ஸ் ஆப் மெசேஜ் ஒன்றை சாத்விக்கு அனுப்பினார். அந்தப் பெட்டிஷன் அமீர்கானை ஸ்நாப்டீல் விளம்பரத்தூதர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்னும் கோரிக்கையாக இருந்தது. சாத்வி சொல்கிறார் : சிறுவயதில் இருந்தே அமீர்கான், ஷாருக்கான் படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர்கள் எங்களுடைய ஹீரோக்கள். திடீரென அவர்கள் “முஸ்லிம்”களாக்கப்பட்டபோது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
யார் மீதெல்லாம் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலே இருப்பதாகவும் அதில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் மட்டுமல்லாமல் பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போன்ற ஊடகவியலாளர்களும் அடக்கம் என்றும் சாத்வி சொல்கிறார். இவற்றையெல்லாம் பார்த்தபின்பு அவநம்பிக்கையோடும் அதிர்ச்சியோடும் இவர்களுடனான தொடர்பை முறித்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்படி ஒன்றிரண்டு தன்னார்வலர்களை இழப்பது அவர்கள் மூலமாக உண்மை வெளிவருவது குறித்தெல்லாம் பி.ஜே.பிக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்படியானவர்களை காங்கிரஸின் கையாட்கள் என முத்திரை குத்துவது, கொலைமிரட்டல் விடுப்பது, பெண்களாக இருக்கும்பட்சத்தில் பாலியல் அவதூறுகளை அள்ளிவீசுவது என்பதாக எதிர்வினையாற்றுகிறார்கள்.
சாத்வியும்கூட இந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு இப்படியான எதிர்வினைகளைச் சந்தித்தபடிதான் இருக்கிறார். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தபோதும் சாத்வி இந்த உண்மைகளைப் பகிரங்கப்படுத்தியதற்குக் காரணம், இனி சமூக ஊடகங்களில் பார்க்கப்போகும் மீம்ஸ்களோ, ட்ரோல் படையோ, வாட்ஸ் ஆப் தாக்குதலோ தற்செயலானது அல்ல என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.பி.ஜே.பி.யின் டிஜிட்டல் உலகம் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. அங்கே தன்னார்வலர்களும் முழுநேர ஊழியர்களும் மட்டுமல்ல விலை கொடுத்து வாங்கப்படும் நெட்டிசன்களும் எண்ணற்ற பேர் இருக்கிறார்கள். அதாவது சமூக வலைத்தளங்களில் லைக் போடுவதற்கும் பகிர்வதற்கும் ரீட்விட் செய்வதற்கும் அவற்றில் கணக்கு வைத்திருப்பவர்கள் விலைகொடுத்து வாங்கப்படுகிறார்கள். ஏழு ட்விட்கள் பகிர்வதற்கு 40 ரூபாய் பணம் கொடுக்கப்படுவதாக “I am a troll” நூலாசிரியர் சுவாதி சதுர்வேதி சொல்லியிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, பி.ஜே.பி இப்படி விலைகொடுத்து வாங்குவதை கோப்ராபோஸ்ட் இணையதளமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியில் அவர்கள் ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்துகிறார்கள். அரசியல்வாதிகளுடனான வியாபாரத்திற்காக (நேர்மையற்ற வழியில் அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லுதல்) பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிற சில ஐ.டி கம்பெனிகளில் நடத்தப்பட்ட அந்த ரகசிய புலனாய்வில்தான் மேற்கூறிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 24 (சிறிய அளவில் மட்டுமே அறியப்பட்ட) ஐ.டி கம்பெனிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கோப்ராபோஸ்டின் இணை ஆசிரியர் சையத் மஸ்ரூர் ஹசன் இந்த ஆய்வை மேற்கொள்கிறார். மேற்சொன்ன அந்த 2 டசன் கம்பெனிகளையும் அணுகி இப்படிச் சொல்கிறார்: எங்கள் தலைவர் நேதாஜி வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். அவருக்காகச் சமூக ஊடகங்களில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்க வேண்டும். அதேசமயம் அவரது அரசியல் எதிரிகளின் நன்மதிப்பைக் குலைத்து அவர்கள்குறித்த ஒரு எதிர்மறைப் பிரச்சாரத்தையும் செய்ய வேண்டும்.
இப்போது அந்த எல்லாக் கம்பெனிகளும் சையத்திற்கு தங்களால் எப்படியெல்லாம் ”உதவ முடியும்” என்பதைப் பட்டியலிட்டன. அவை: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போலிக் கணக்குகளை உருவாக்கி அதன்மூலம் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் சமூக ஊடகங்களில் ஒரு மாய ஆதரவு அலையை உருவாக்க முடியும். அதாவது எங்களின் போலிக்கணக்காளர்கள் மூலம் பிரபலப்படுத்தவேண்டிய அரசியல்வாதியின் பக்கத்திற்குச் சென்று அவரது ஸ்டேட்டஸ்களை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் லைக் செய்வது, ஷேர் செய்வது, ரீடிவிட் செய்வது, கணக்கைப் பின்தொடர்வது எனத் தங்களால் ஒரு தலைவரைப் பெரிய பிரபலம் ஆக்க முடியும். மேலும் அத்தலைவர் மீது எந்த விமர்சனக்கறையும் படிந்துவிடாதபடி அவரது பக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து அவரது ஸ்டேட்டஸ்களில் அவருக்கு எதிரான கமெண்டுகள் பதியப்பட்டால் உடனடியாக அதை நீக்குவது. அவரது எதிரிகள்மீது ஒரு எதிர்மறை பிம்பத்தைக் கட்டமைத்து அவர்களது நற்பெயரைக் குலைப்பது, . அப்புறம் யூடியுபில் ஒரு வீடியோவை வைரல் ஆக்குவது. எனப் பல்வேறு தளங்களிலும் செயல்பட முடியும்.
ஆக, வெகுமக்களின் கருத்துச்சுதந்திரத்திற்கான வெளியாகவும் உரையாடல் களமாகவும் அறியப்படுகிற சமூக ஊடகங்களை இவர்கள் இப்படியொரு வியாபாரப் பண்டமாக்குகிறார்கள். இதை இவர்கள் (ஐ.டி.கம்பெனியினர்) யாருக்காக வேண்டுமானாலும் செய்வார்கள். தன்னை அணுகி வியாபாரம் பேசுகிற எந்தக்கட்சிக்காகவும்தான் செய்வார்கள் என்றாலும் இதில் அதிகமாக அடிபடுவது பி.ஜே.பி மற்றும் மோடியின் பெயர்தான் என்று இந்த ஆய்வு சொல்கிறது. இப்படியான கம்பெனிகளில் மோடிக்காக இரவு பகலாகப் பலரும் உழைத்துக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இந்தத் திரைமறைவு வேலைகளெல்லாம் சட்டவிரோதமானவை. தகவல் தொழில்நுட்பச்சட்டம் 2000, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, வருமான வரிச்சட்டம் 1961 ஆகியவற்றை மீறுபவை; தண்டனைக்குரியவை. எனினும் தனது அரசியல் லாபத்திற்காக இப்படிச் சட்டத்தை மீறப் பி.ஜே.பி தயங்கவில்லை.
இன்னொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த வெறுப்புப் பிரச்சாரங்களும் அவற்றை வைரல் ஆக்குவதும் ஏதோ, அடிமட்ட அளவில் தலைமையின் கண்ணுக்குத் தெரியாத வகையில் நடைபெறுவது அல்ல. இப்படியான சட்டவிரோதச் செயல்களை ஒருவகையில் தலைமையின் ஒப்புதலோடு இவர்கள் செய்வதற்கு இரண்டு சாட்சிகளைச் சொல்ல முடியும். ஒன்று: மிகமோசமான, ஆபாசமான வார்த்தைகளால் பெண்களை அவதூறு செய்வது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வன்முறையில் ஈடுபடுபவர்களின் ட்விட்டர் கணக்குகளைக்கூட பிரதமர் மோடி பின்தொடர்வதாகச் சாத்வி கோஸ்லா சொல்லியிருப்பது. மற்றொன்று: சமீபத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி மீது நடத்தப்பட்ட வாட்ஸ் ஆப் தாக்குதல். பி.ஜே.பி.யின் மீதான விமர்சனத்தை (சாத்வி கோஸ்லாவின் வாக்குமூலம்) தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததற்காக அக்கட்சியின் தொண்டர்கள் அவர்மீது மிகக் கீழ்த்தரமான ஆபாசத் தாக்குதலை நடத்தினர். ஒரு வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி அதில் ஜோதி அவர்களின் எண்ணையும் இணைத்து ஆபாச மொழிகளால் அவரைத் தாக்கி மெசேஜ்களை அனுப்பினர். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் செய்ததோடு பி.ஜே.பியின் மோடி, அமித் ஷா, தமிழிசை சவுந்தராஜன் ஆகிய தலைவர்களுக்கும் கடிதத்தின் மூலம் தெரிவித்தார். தாக்குதல் தொடுத்தவர்கள் ரொம்பவும் வெளிப்படையாக இதைச் செய்திருக்கிறபோதும் கட்சி மேலிடம் அவர்கள்மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இனி இப்படியான தரக்குறைவான தாக்குதலில் யாரும் ஈடுபடக் கூடாது என எச்சரித்ததாகவும் தெரியவில்லை.
ஆக, தங்களின் அபாரமான தேர்தல் வெற்றிக்குப் பின் யார் என்ன செய்துவிட முடியும் (அ) யாரையும் என்னவும் செய்துவிட முடியும் என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதே சமூக ஊடகங்களைத் தேர்தல் வெற்றிக்கு முன் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர்கள் எப்படியெல்லாம் திட்டமிட்டுப் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட முடியாது.
தேர்தல் பிரச்சாரத்தின் மிகமுக்கியக் களமாகச் சமூக ஊடகங்கள் மாறிப்போனது 2014 நாடாளுமன்றத் தேர்தலில்தான். அதிலும் இவ்வூடகத்தின் மூலைமுடுக்கைக்கூட விட்டுவைக்காமல் மொத்தமாக ஆக்ரமித்த ஒரே தலைவராக மோடிதான் இருந்தார். ட்விட்டரில் மிக அதிகமான நபர்களால் பின்தொடரப்பட்ட அரசியல் தலைவராக மோடி அறியப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்தவர்கள் 8.59 மில்லியன் பேர். முகநூலில் 26 மில்லியன் லைக்குகள் அவர் பக்கத்தில் விழுந்தன. (இந்த எண்ணிக்கைகளின் அரசியலைத்தான் சுவாதி அம்பலப்படுத்தி இருக்கிறார்). யூ டியுப் மற்றும் கூகுள் பிளஸ்ஸில் தனது கணக்கைத் தொடங்கிய முதல் அரசியல் தலைவரும் மோடிதான்.
இங்கு மோடிக்குப் போட்டியாக இருந்த ஒரு அரசியல்வாதியைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்தான். இருந்தாலும் மோடியிடம் இருந்ததைப் போன்ற ஒரு அசாதாரணமான டீம் கெஜ்ரிவாலிடம் இல்லாமல் போனது. வேறு எந்தத் தலைவரிடமுமே கூட இல்லாமல் போனதுதான் மோடியின் வெற்றியை இங்கே தீர்மானித்தது. அந்த டீமின் முக்கியப் புள்ளிகளாக (2014 தேர்தல் சமயத்தின்போது) மூன்று பேரைச் சொல்கிறார்கள்.
1.ஹிரென் ஜோஷி. மோடியின் குஜராத் அரசில் உயர் பதவியில் இருந்தவர். மோடியின் வலைப்பக்கம், இணையதளம், ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் ஆகியவற்றையெல்லாம் நிர்வகித்தவர் இவர்தான். தேர்தலுக்காகப் பல புதுமையான எண்ணங்களை நடைமுறைப்படுத்தினார். மோடியின் ட்வீட்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தார். மோடியின் இணையதளத்தை ஹிந்தியிலும் சமஸ்கிருதத்திலும் தொடங்கினார்.
2.அரவிந்த் குப்தா. ஐஐடியில் படித்து முடித்த வெளிநாடுவாழ் இந்தியர். 2013 ஆம் ஆண்டு பி.ஜே.பி.யின் தலைமையகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக NDOC (National Digital Operation Centre)ஐ தொடங்கியது இவர்தான். மோடியை பொதுமக்களுடன் தொடர்புகொள்ள வைப்பதற்கான Mission 272+ இணையப் பக்கத்தையும் இவர் உருவாக்கினார். மோடியின் தேர்தல் உரைகள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் ஆப், ட்விட்டர், பேஸ்புக், யூ டியுப் ஆகியவற்றில் எல்லாம் தீயாகப் பரவச் செய்தவர் இவர்தான்.
3.ராஜேஷ் ஜெயின். இணைய தொழில்முனைவோர். லட்சக்கணக்கான இளைஞர்களிடம் மோடியைக் கொண்டு சேர்த்த வாக்காளர் அட்டை பதிவுசெய்தல் பிரச்சாரம், NaMo தன்னார்வலர் நிகழ்வுகள் ஆகியவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர். மோடிக்கான ஆதரவைப் பரவலாக்கிய India272.comஐ தொடங்கியவர். தன் சொந்தக்காசைக்கூட போட்டு மோடிக்காக “NitiCentral” இணையதளத்தை அவர் தொடங்கினார். தற்போது அந்த இணையதளம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஏன் திடீரெனச் செயலிழந்து போனது என்று கேட்டபோது இவர்கள் சொன்னார்கள். : அந்த இணையதளம் அதன் குறிக்கோளை அடைந்துவிட்டது. அதாவது மோடி 2014 தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார்.
பி ஜே பி இப்படிச் சமூக ஊடகத்தின் மூலம் திட்டமிட்டு தேர்தல் வெற்றியை அடைந்தவர்கள்தான் இன்று அதே ஊடகத்தில் திட்டமிட்டு அவதூறுப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு இதுவொன்றும் புதிதல்ல. “கம்யூட்டர் சிப்ஸ் வேண்டும்; உருளைக்கிழங்கு சிப்ஸ் வேண்டாம்” என்று தொண்ணூறுகளிலேயே முழங்கிய இவர்கள், இணைய உலகமொன்று புதிதாக உருவானபோது அதன் ஒரு அங்கமாகிப்போனார்கள். அதுமுதலே தங்கள் பேச்சு, எழுத்து மற்றும் அவதூறுப் பிரச்சாரங்களை இணையத்தில் உலவவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அநேகமாக இவர்களால் அதிக அளவில் அவதூறு செய்யப்பட்ட முதல் நபர் நேருவாகத்தான் இருப்பார். ஊடகவியலாளர் அமுல்யா கோபாலகிருஷ்ணன் இணையத்தில் நேரு எப்படியெல்லாம் அவதூறு செய்யப்படுகிறார் என்பதைத் தொகுத்திருந்தார். அவற்றில் சில: நேரு அலகாபாத்தில் வேசிகளின் இல்லத்தில் பிறந்தவர். ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கி அப்பெண் இந்தியாவை விட்டு விரட்டப்பட காரணமானவர். பாலியல் நோயால் தாக்கப்பட்டு இறந்தவர். அமிதாப்பச்சன் அவருடைய மகன்தான்.
இறுதியாகச் சொல்வதென்றால், சமூக ஊடகங்களை இப்படி எல்லாத் திசைகளிலும் சென்று கையகப்படுத்தியதன் மூலம் எதிர்காலத் தலைமுறையை நோக்கியும் இவர்கள் பாசிசத்தை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த ஊடக வலிமையை எதிர்த்து நிற்கும் பலம் பாசிச எதிர்ப்புச் சக்திகளிடம் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. இனி, பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் என எந்த ஒன்றிலும் நாம் பார்க்கும் அரசியல் பதிவுகள் எதேச்சையான தனிநபரின் கருத்து மட்டுல்ல என்ற விழிப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் தேவை.
 
Thanks By Ippothu.com 

டெல்லியின் கொம்பைப் பிடி” தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு

  1. டெல்லியின் கொம்பைப் பிடி”
    தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு!
  2. அன்பார்ந்த தமிழ் மக்களே,
    தமிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?.
    ஜல்லிக்கட்டு
  3. அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை.
  4. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி வந்திருக்கிறார்கள் அதிமுக எம்பிக்கள்.
    அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களிலெல்லாம் போலீசு குவிக்கப்பட்டுள்ளது.
  5. “ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம்” என்று காளை வளர்ப்பவர்களிடம் எழுதிக் கையெழுத்து வாங்குகிறது தமிழ்நாட்டு போலீசு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்! நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் இவர்கள் நிலைநாட்டுகிறார்களாம்!
  6. நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?
    நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?
  7. காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர் அழிவதற்கும், விவசாயிகள் நெஞ்சடைத்து சாவதற்கும், உழவு மாடுகளும் பால்மாடுகளும் தண்ணீருக்குத் தவிப்பதற்கும் யார் காரணம்?
  8. காவிரி நீர் உரிமையைப் பறிப்பதற்கு கள்ளத்தனமாகக் கர்நாடக அரசுக்குத் துணை நின்றதுதான் இந்த உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீருக்காகக் கதறிய போதும், “தீர்ப்பை அமல்படுத்த முடியாது” என்று கர்நாடக அரசு திமிர்த்தனம் செய்தபோது, வாயை மூடிக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றத்துக்குத் தமிழகத்தின் மீது அதிகாரம் செலுத்த என்ன அருகதை இருக்கிறது?
  9. தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதில் கர்நாடக அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சிய கிரிமினல்தான் மோடி அரசு. காவிரி ஆணையம் அமைப்பதைத் தடுத்து, தமிழகத்துக்கு நிரந்தரமாகக் காவிரி நீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி.
  10. தமிழ்நாட்டின் விவசாயத்தை அழித்த மோடியிடம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தருமாறு கெஞ்சுவதும் மனுக் கொடுப்பதும் கேவலமில்லையா?
  11. “ஒரு நாடு – ஒரு சட்டம்” என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆடுகிற ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம், பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்படும் உச்சுக்குடுமி மன்றத்தின் நீதிபதிகளுக்கும், உச்சுக்குடுமி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் தமிழ்நாடு என்றாலே வேப்பங்காயாய்க் கசக்கிறது
  12. தமிழ் மக்களுக்குச் சொந்தமான சிதம்பரம் நடராசர் கோயிலை, அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி, அங்கே மணியாட்டும் பார்ப்பன தீட்சிதர்களுக்குச் சொந்தமாக்கி தீரப்பளித்தது உச்ச நீதிமன்றம்தான்.
    சாதிப் பாகுபாடின்றி அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக நியமிக்க முயன்றது தமிழக அரசு
  13. . “பார்ப்பன அர்ச்சகர்களைத் தவிர மற்றவர்கள் சாமி சிலையைத் தீண்டக் கூடாது”என்று தீர்ப்பளித்து, சாதியையும் தீண்டாமையையும் நிலை நாட்டியது உச்ச நீதிமன்றம்தான்.
    “தமிழ்நாட்டு கோயில் தமிழ் மக்களுக்குச் சொந்தம். தமிழில் வழிபடுவதும் தமிழர்களை அர்ச்சகர்களாக நியமித்துக் கொள்வதும் தமிழ் மக்களின் உரிமை. அதில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கோ மத்திய அரசுக்கோ அதிகாரம் இல்லை” என்று நாம் குரல் எழுப்பவேண்டிய நேரம் இது.
  14. தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு என்ன பாடத்திட்டம் என்பதை சொல்வதற்கு மத்திய அரசு யார்? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திட்டத்தையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் இந்தி திணிப்பையும் தூக்கி வெளியே வீச வேண்டிய நேரம் இது
  15. தமிழக மாணவர்கள் படிப்பதற்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி கட்டினால், அதில் யாருக்கு சீட் கொடுப்பது என்று நீட் தேர்வு வைத்து டில்லி முடிவு செய்யும் என்கிறது உச்ச நீதிமன்றம்
  16. . அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அதே முறையைக் கொண்டுவரப் போவதாகச் சொல்கிறது மோடி அரசு.
    கேடி கிரிமினல்களும் ஹவாலா பேர்வழிகளும் வக்கீலாகத் தொழில் நடத்திக் கொண்டிருக்கையில், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்த தமிழ்நாட்டு வக்கீல்களுக்கு மட்டும் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில். பாரதிய ஜனதாக் கட்சிக்காரன்தான் இதற்கும் தலைவர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
  17. அணு உலை வேண்டாமென்று கேரள மாநிலம் விரட்டியடித்தால் அது கூடங்குளத்தில் திணிக்கப்படுகிறது. “கெயில் எரிவாயுக் குழாய் எங்கள் விவசாயத்தை அழிக்கும்” என்று தமிழக விவசாயிகள் முறையிட்டாலோ, அதனை நிராகரித்து விளைநிலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம்.
  18. “சட்டத்தின் ஆட்சி” என்ற பெயரில் திணிக்கப்படும் நியாயத்துக்குப் புறம்பான இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்கு எதற்காக நாம் கட்டுப்பட வேண்டும்?
  19. “கரசேவை செய்யப்போகிறோம்” என்று சொல்லி உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடப்பாரை சேவை செய்து, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் பாரதிய ஜனதாக் கட்சியினர். மசூதியை இடித்து மதவெறியைத் தூண்டி ஆட்சியையும் பிடித்து விட்டார்கள். ஆனால் மசூதியை இடித்த குற்றத்துக்கு இவர்களை இதுவரை நீதிமன்றம் தண்டிக்கவில்லை.
  20. டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
  21. மகாராட்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடக்கும் “உறியடித் திருவிழா”வில் மனிதக் கோபுரம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தபோது, “உச்ச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட முடியாது” என்று வெளிப்படையாகவே அறிவித்து விழாவை வழக்கம்போல நடத்தியது பாஜக சிவசேனா அரசு. உச்ச நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை
  22. ஆனால் சேதுக்கால்வாய் திட்டத்துக்காகத் தமிழகத்தில் கடையடைப்பு நடந்தபோது மட்டும் “ஆட்சியைக் கலைப்போம்” என்று திமுக அரசை மிரட்டியது. இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நடுநிலை. சட்டத்தை மதிக்குமாறு தமிழகத்துக்கு உபதேசம் செய்யும் அருகதை பாஜக-வுக்கோ, இந்த நீதிமன்றத்துக்கோ கிடையாது.
  23. எல்லா விசயங்களிலும் இரட்டை வேடம் போடும் பாரதிய ஜனதா, வழக்கம்போல இந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுகிறது
  24. . “விஜில்” என்ற ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பினைச் சேர்ந்த ராதா ராஜன் என்பவர்தான் ஜல்லிக்கட்டுத் தடைக்குக் குரல் கொடுப்பவர். மாடுகளின் மீது பெருங்கருணை கொண்டுள்ள இந்த அம்மையார், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டி அக்லக் என்ற இசுலாமிய முதியவரைக் கொலை செய்தார்களே, அந்தக் கொலையை நியாயப்படுத்துபவர்.
  25. மதத்தின் பெயரில் மனிதப் படுகொலை நடத்தும் இத்தகைய பார்ப்பன மேட்டுக்குடியினர்தான், விலங்குகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் “பீட்டா” போன்ற அமைப்புகளிலும் நிறைந்திருக்கின்றனர்
  26. . “விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடையை மூடு, கோயில் நகரங்களில் கறிக்கடையே கூடாது, மாட்டுக்கறியை தடை செய்” என்பன போன்ற கோரிக்கைகளுக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கும் அதிக வேறுபாடு இல்லை
  27. . “மாட்டை அடக்குபவர்கள், மாட்டை வெட்டுபவர்கள், புலால் உணவு புசிப்பவர்கள் போன்றோர் கீழானவர்கள், அவர்களது பண்பாடும் கீழானது” – என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் கருத்து.
  28. மாட்டை அடக்குவதுதான் வீரம், அதுதான் உயர்ந்த பண்பாடு” என்பதல்ல நம் கருத்து. ஜல்லிக்கட்டு முதல் கோயில் திருவிழாக்கள்வரை தமிழகத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றில் ஊடுருவியிருக்கும் சாதிப்பாகுபாட்டையும் தீண்டாமைக் கொடுமையையும் நாம் ஒருபோதும் “தமிழ் வீரம்” என்று கொண்டாட முடியாது.
  29. மாட்டுக்கொம்பால் குத்துப்பட்டு சாவதற்கும் தயாராக இருக்கும் வீரர்கள், உச்ச நீதிமன்றம் தடை விதித்தவுடனே மொட்டைப் போட்டு ஒப்பாரி வைப்பதேன்?
  30. காவிரியைத் தடுத்தும் மணற்கொள்ளை அடித்தும் தமிழகத்தின் விவசாயத்தை அழித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளைக் கடனுக்கும் சாவுக்கும் தள்ளிய எதிரிகளுக்கு எதிராகத் தமிழ் வீரம் கிளர்ந்து எழாதது ஏன்? விவசாயம் அழிந்த பின், விவசாயி அழிந்த பின், மாடுகள் ஏது? மஞ்சு விரட்டு ஏது? சிந்திக்க வேண்டாமா?
  31. பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராகக் கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி.
  32. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?
  33. உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு.
  34. இதன் பெயர்ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
    இவண்.
    ராஜு,
    மாநில ஒருங்கிணைப்பாளர்,
    மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

இர‌ண்டாம் உல‌க‌ப்போர் வ‌ர‌லாற்றில் இருட்ட‌டிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ உண்மை

“இர‌ண்டாம் உல‌க‌ப்போர் வ‌ர‌லாற்றில் இருட்ட‌டிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ உண்மை” இது
– ஜேர்ம‌னி முற்றாக‌ தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு முன்ன‌ரே, 1943 ம் ஆண்டு சோவிய‌த் யூனிய‌னில் நாஸிக‌ளின் போர்க்குற்றங்களை‌ விசாரிக்கும் நீதிம‌ன்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌.
– போர்க்குற்ற‌ நீதிம‌ன்ற‌ அம‌ர்வுக‌ள் ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் முன்னிலையில் ந‌ட‌ந்துள்ள‌ன‌. பாதிக்க‌ப் ப‌ட்ட‌ யூத‌ர்க‌ள் வ‌ழ‌ங்கிய‌ சாட்சிய‌ங்க‌ள் யாவும் ப‌திவு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. குற்றம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌, நூற்றுக்க‌ண‌க்கான‌ நாஸி கிரிமின‌ல்க‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
– நாஸிக‌ள் கைப்ப‌ற்றிய‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ளில் தான், முத‌ன் முத‌லாக‌ யூத‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
– லாட்வியா, உக்ரைன் போன்ற‌ சோவிய‌த் குடிய‌ர‌சுக‌ளை சேர்ந்த‌ தேசிய‌வாதிக‌ள் நாஸிகளுட‌ன் ஒத்துழைத்த‌ன‌ர். பெரும்பாலும் அவ‌ர்க‌ளே யூத‌ர்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். நாஸிக‌ள் அவ‌ற்றை ஆவ‌ண‌ப் ப‌டுத்தி வைத்த‌ன‌ர்.
இர‌ண்டாம் உல‌க‌ப்போர் இன‌ப்ப‌டுகொலைக்கு த‌ப்பிய‌ யூத‌ர்க‌ள், சோவிய‌த் செம்ப‌டையில் சேர்ந்து கெரில்லாத் தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்தி இருந்த‌ன‌ர்.
– மேற்கத்திய‌ நாடுக‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ நியூர‌ன்பேர்க் போர்க்குற்ற‌ விசார‌ணை நீதிம‌ன்ற‌ம், நான்கு நாஸி குற்ற‌வாளிக‌ளை ம‌ட்டும் தூக்கிலிட்ட‌து.
– ப‌ல‌ருக்கு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்ட‌ ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை, ஆயுள் த‌ண்ட‌னையாக‌ மாற்ற‌ப் ப‌ட்டு, சில‌ வ‌ருட‌ங்க‌ளின் பின்ன‌ர் விடுத‌லை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
நியூர‌ன்பேர்க் நீதிம‌ன்ற‌ விசார‌ணைக‌ளில் நாஸி குற்ற‌வாளிக‌ள் வ‌ழ‌ங்கிய‌ வாக்குமூல‌ங்க‌ள்
– //சோவிய‌த் யூனிய‌ன் ஜேர்ம‌னிக்கு எதிராக‌ போர் தொடுப்ப‌த‌ற்கு முன்ன‌ர் முன் எச்ச‌ரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ சோவிய‌த் யூனிய‌ன் மீது ப‌டையெடுத்தோம்.//
– //யூத‌ர்க‌ள் எல்லோரும் க‌ம்யூனிஸ்டுக‌ள் என்ப‌தால் தான் யூத‌ர்க‌ளை கொன்றோம். குழ‌ந்தைக‌ளை விட்டுவைத்தால் அவை நாளை பெரிய‌வ‌ர்க‌ளாக‌ வ‌ள‌ர்ந்த‌ பின்ன‌ர் எதிரிக‌ளாக‌லாம் என்ப‌தால் யூத‌க் குழ‌ந்தைக‌ளையும் கொன்றோம்.//
இர‌ண்டாம் உல‌க‌ப்போர் சோவிய‌த் செம்ப‌டை வென்றிருக்கா விட்டால், நாஸிக‌ள் இனப்படுகொலை ஆதார‌ங்க‌ள் அனைத்தையும் அழித்து விட்டிருப்பார்க‌ள். ஏற்க‌ன‌வே ப‌ல‌ த‌ட‌ய‌ங்க‌ள் அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌. ஆனால், செம்ப‌டை மிக‌ வேக‌மாக‌ முன்னேறிய‌தால் எல்லாவ‌ற்றையும் அழிக்க‌ முடிய‌வில்லை. சோவிய‌த் இராணுவ‌ம் ஜேர்ம‌னியை பிடித்திரா விட்டால், நியூர‌ன்பெர்க் நீதிம‌ன்ற‌மும் ந‌ட‌ந்திருக்காது
 
இர‌ண்டாம் உல‌க‌ப்போர் Written By Kalaimarx

இர‌ண்டாம் உல‌க‌ப்போர்

 

பசு மாடு வளர்ப்பு/ இந்திய ரூபாய் என்ன தொடர்பு?

பசு மாடு வளர்ப்பு/ இந்திய ரூபாய் என்ன தொடர்பு? 1922 வாக்கில் இந்திய ரூபாய் மதிப்ப 1அமெரிக்க டாலர்=1
இதற்க்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால் நம்ப முடியுமா, நம்பித்தான் ஆகவேண்டும்.
2 பசு மாடு வளர்ப்பு மாதம் ரூ35000 கிடைக்கும் என்ற பதிவு பார்த்திருப்பீர்கள்.
அது மட்டுமா
பசுவின் பாலில் இருந்து தயிர், நெய்,வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும்,
பசுவின் சாணம் எருவாட்டியாக அடுப்பெரிக்க உதவியதும்,
அந்த சாம்பல் கொண்டு பல் துலக்கியதும்,
திருநீர் செய்யபயன்படுத்தப்பட்டதும்,
சாணம், தயிர், கோமேயம் இன்னபிற பொருட்களை கொண்டு பஞகவ்யம் எனும் உரம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்ப்ட்டது.
மேலும் கோமேயம் பூச்சி,புழு விரட்டியாக கூட உபயாகப்பட்டுள்ளது.
சரி இது அனைத்திற்க்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்…
காலையில் பல்விளக்க பேஸ்ட்,
அடுப்பெரிக்க அரபு நாட்டு பெட்ரோலிய பொருள்கள்,
கிருமி நாசினி டெட்டால்,
விவசாய உணவு உற்பத்திக்கு உரங்கள்,
உழவு செய்ய டிராக்டர்கள்,
அதற்காக பெட்ரோலிய பொருட்கள்,
விவசாய பண்ணை தொழிலுக்கு தேவையான பலவற்றை இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவு ருபாய் மதிப்பு குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது
மேற்சொன்னபடி
பசு வளர்ப்பில் கிடைத்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டதால் அன்று ரூபாய் மதிப்பு குறையாமல் இருந்து இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் உளவு மாடு உபயோகம் ஒரு மாபெரும் வரப்பிரசாதம்,
நிலம் உழுதிட,
விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல,
மக்கள் வாகனப்பயன்பாட்டிற்க்கு என பலவகையில் உபயோகிக்கப்பட்டு உள்ளது.
இவை அனைத்தும் ரூபாய் மதிப்பு குறையாதிருக்க மறைமுக காரணங்களாக இருந்து இருக்கும்.
இப்போது ஜல்லிக்கட்டு தடையின் மாபெரும் உள்நோக்கத்தை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சற்று சிந்தித்துக் கொண்டே
பசுவதை எதிர்ப்புக்கும் ஆதரவு குரல் கொடுக்க சிந்திக்கலாம்.
நாட்டு மாடு வகைகள்:
1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு
அனைவரும் பகிருவோம்!!!
 
 

பசு மாடு வளர்ப்பு
பசு மாடு வளர்ப்பு

 

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left