Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

புதிய அணுகுமுறைகள் புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில்


புதிய அணுகுமுறைகள் புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில்

புதிய அணுகுமுறைகள் புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில்

ர்த்தக ரீதியாக புதிய அணுகுமுறைகள், மாற்று யுக்திகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் குறைவான பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் ரீதியாக, புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில் வேகமெடுத்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு உலக நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ அதாவது மாணவர் குடியிருப்பு என்ற புதிய வடிவத்தை ரியல் எஸ்டேட் வல்லுனர்களும், நிதி ஆலோசகர்களும் பரிந்துரை செய்வது கவனிக்கத்தக்கது. 

‘ஸ்டூடண்ட் ஹவுசிங்’

அதாவது, ஒவ்வொரு வருடமும் கல்வி பெறும் வாய்ப்புகளுக்காக இந்தியாவின் வெவ்வேறு பகுதியிலிருந்தும், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் இந்தியாவின் பல முக்கியமான நகரங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் பல இடங்களில் தங்கி கல்வி கற்க வேண்டியதாக இருக்கிறது. 

ஏற்கெனவே, ஹாஸ்டலில் தங்கி படிப்பது என்ற வழக்கமான முறை இருந்துவரும் சூழ்நிலையில், ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ என்ற புதிய முறையில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் பட்சத்தில், அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களின் கவனத்தையும் அது கவருவதாக இருக்கும் என்று வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலை நாடுகளில் பிரபலம்

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ முறையில் அதன் உள்கட்டமைப்பு உள்ளிட்ட கச்சிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் போன்றவை அங்கு உள்ள மாணவர்களை கவர்ந்திருக்கிறது. மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு, பல இடங்களிலிருந்து வருங்காலங்களில் உயர்கல்வி பெறும் நோக்கத்துடன் மாணவர்கள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு தேவைப்படும் சகல வசதிகளோடு அமைக்கப்படும் ‘ஸ்டூடண்ட் ஹவுசிங்’ என்ற மாணவர் குடியிருப்பு அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருக்கும் பட்சத்தில் நல்ல வரவேற்பை பெறும்.

‘சர்வீஸ் அபார்ட்மெண்ட்’

தொழில் அல்லது வியாபார ரீதியாக சென்னையில் சில மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என்ற சூழலில் இருக்கும் வர்த்தகர்கள் உள்ளிட்ட இதர தொழில் முனைவோர்களுக்கு தற்போது ‘சர்வீஸ் அபார்ட்மெண்ட்’ என்ற குடியிருப்புகள் பல இடங்களிலும் இருந்து வருவது கவனிக்கத்தக்கது. அவர்களுக்கு அங்கு உணவு மற்றும் தங்கும் இடம் போன்ற வசதிகள் மாதாந்திர கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன. 

வருட ஒப்பந்தம்

மாணவர் குடியிருப்புகளை வருடாந்திர ஒப்பந்த முறையில் மாணவர்கள் அல்லது மாணவியர்களிடம் அவர்களது பெற்றோர்கள் அல்லது நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் அளிப்பதோடு, இரு தரப்புக்கும் நன்மைகளை தரும் விதத்தில் ஒப்பந்தத்தை அமைத்துக்கொள்வதும் முக்கியமானது என்பதை வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள். மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியான குடியிருப்புகள் இருக்கவேண்டும் என்ற கருத்தும் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய யுக்திகள் அவசியம்

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும் அளவில், மேற்கண்ட திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மேலை நாட்டின் வியாபாரம் மற்றும் வர்த்தக வடிவங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தாது என்ற வணிக அடிப்படைகளையும் நிபுணர்கள் கவனத்தில் கொண்டுள்ளார்கள். மேற்கண்ட முறை புதியதாக இருந்தாலும், அவற்றின் தேவைகள் உலகமெங்கும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

Buy Properties in Chennai 

வீட்டுமனை அளவுகளை கணக்கிடும் எளிய முறைகள்



வீட்டுமனை அளவுகளை கணக்கிடும் எளிய முறைகள்


ழைய காலங்களில் நிலத்தின் அளவுகள் குழி, வேலி, மா என பேச்சு வழக்கத்திலும், ஏக்கர், ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்பட்டு வந்தது.




 வீட்டு மனைகளை பொறுத்தவரை சதுர அடி கணக்குகளில் சொல்லப்படுவது இப்போது நடைமுறையாகும். சென்னை போன்ற நகர்ப்
வீட்டுமனை அளவுகளை கணக்கிடும்  எளிய முறைகள்
Add caption
புறங்களில் கிரவுண்டு என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுவதும் நடைமுறையில் உள்ளது.

வெவ்வேறு அளவுகள்


குறிப்பாக வீட்டு மனைகள் வாங்கும்போது சதுர அடி, சென்ட் மற்றும் கிரவுண்டு அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிலமானது சதுர அடி, சென்ட் அல்லது கிரவுண்டு போன்ற அளவுகளில் இருக்கும்போது அதை வேறொரு அடிப்படை அளவாக எவ்வாறு மாற்றி, அறிந்து கொள்வது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். வீட்டு மனை அளவானது சதுர அடியில் இருந்தால், அதை எவ்வாறு சென்ட் அளவில் மாற்றுவது..? அல்லது சென்ட் அளவை எவ்வாறு சதுர அடியாக மாற்றுவது..? என்ற சுலபமான வழிமுறையை இங்கே காணலாம். 

வித்தியாசமான அளவுகள்


பொதுவாக, சம்பந்தப்பட்ட இடம் எவ்வகையாக இருந்தாலும் அதற்கு நான்கு எல்லைகள் இருப்பது வழக்கம். ஒரு சில இடங்களில் நான்கு எல்லைகளுக்கும் மேற்பட்டு ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் கொண்ட நிலங்கள் அல்லது மனைகள் இருப்பதும் உண்டு. இன்னும் சில இடங்களில் மூன்று பக்க அளவுகள் மட்டும் கொண்ட முக்கோண வடிவ மனைகளும் இருப்பதுண்டு. அவற்றின் மொத்த அளவை கணக்கிடுவது சற்று சிக்கலான முறையாக இருப்பதால், நான்கு பக்கங்கள் உள்ள மனை அல்லது இடங்களுக்கான கணக்கீட்டு முறைகளை மட்டும் இங்கே  காணலாம்.

சம அளவு மனை


வழக்கமாக, மனையின் அளவுகள் நான்கு பக்கங்களிலும் சமமாக இருக்கும் பட்சத்தில், அதன் நீளம் மற்றும் அகலத்தை பெருக்கி வரும் அளவுதான் அதன் மொத்த அளவாகும். அதாவது, ஒரு மனை நீளவாக்கில் இரு புறங்களிலும் 50 அடிகள் இருப்பதாகவும், அகலவாக்கில் இரு புறங்களிலும் 25 அடிகள் இருப்பதாகவும் கொண்டால் அந்த மனையின் ஒட்டு மொத்த அளவானது 1250 சதுர அடியாகும்.


Ads by ZINC
வெவ்வேறு அளவுகள்

ஒரு இடம் அல்லது மனையானது தனது நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகளை கொண்டதாக இருக்கும் பட்சத்தில், அதன் எதிரெதிரான பக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது மனையில் நீளவாக்கில் எதிரெதிராக உள்ள இரு பக்கங்களிலும் உள்ள அளவுகளை கூட்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு கூட்டி வரக்கூடிய விடையை இரண்டால் வகுத்து அந்த எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, மனையின் அகல வாக்கில் எதிரெதிராக உள்ள இரு பக்கங்களிலும் உள்ள அளவுகளை கூட்டிக்கொள்ளவேண்டும். வரக்கூடிய விடையை இரண்டால் வகுத்து அந்த எண்ணை குறித்துக்கொள்ளவேண்டும். மேற்கண்ட முறைகளில் கிடைத்த இரண்டு எண்ணிக்கைகளையும் பெருக்கினால் வரக்கூடிய அளவுதான் மனையின் மொத்த அளவாகும். 

அதாவது, மனையின் இரு பக்க நீளங்கள் முறையே 48 மற்றும் 54 என்று இருப்பதாகவும், இரு பக்க அகலங்கள் முறையே 28 அடி மற்றும் 24 அடி என்று இருப்பதாகவும் கொள்வோம். நீள வாக்கில் உள்ள அளவுகளை கூட்டினால் 102 அடி வரும். அதை இரண்டால் வகுத்தால் 51 அடி வருகிறது. 

அகல வாக்கில் உள்ள அளவுகளை கூட்டினால் 52 அடி வரும். அதை இரண்டால் வகுத்தால் 26 அடி வருகிறது. ஆக, மேற்கண்ட 51 மற்றும் 26 ஆகியவற்றை பெருக்கினால் வரக்கூடிய விடையான 1326 என்பதுதான் மனையின் மொத்த சதுர அடி அளவாகும்.   

சென்ட் அளவு







பொதுவாக, ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடியாக கணக்கிடப்படுகிறது. ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் கொண்டதாகும். அதையே சதுர அடியில் குறிப்பிடுவதென்றால், ஒரு ஏக்கர் என்பது 43560 சதுர அடிகள் கொண்டதாகும். குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 435.6 என்ற அளவால் வகுத்தால் கிடைக்கும் அளவானது அந்த மனையின் மொத்த சென்ட் அளவாகும். அதாவது,  1326 சதுர அடி கொண்ட மனையின் அளவை 435.6 என்ற அளவால் வகுத்து கிடைக்கும் 3.04 (3 சென்ட்) என்பதுதான் மனையின் சென்ட் அளவாகும்.  

கிரவுண்டு அளவு


ஒரு கிரவுண்டு என்பது 2400 சதுர அடிகள் கொண்டதாகும் எனவே, குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 2400 என்ற அளவால் வகுத்தால் கிடைப்பது மனைக்கான கிரவுண்டு அளவு ஆகும். மேற்கண்ட மனையின் மொத்த சதுர அடியான 1326 என்பதை 2400 என்ற அளவால் வகுத்தால் வரக்கூடிய 0.55 என்ற விடை (அரை கிரவுண்டுக்கு சற்று கூடுதல்) மனையின் கிரவுண்டு அளவாகும்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்

  தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து ஆவணப்படுத்தலாம் என்ற முயற்சியில் இறங்கினோம்..குடிநீர் பஞ்சம் பெரிய அளவில் இருப்பது அனைவரும் அறிந்ததே..ஆயினும், களத்திற்கு சென்ற போதுதான் புரிந்தது நிலைமை நாம் நினைப்பதை விட பன்மடங்கு மோசமாக உள்ளது..
களத்தில் சகோதரிகளும் தாய்மார்களும் பேசிய சில வார்த்தைகளை மட்டும் கனத்த இதயத்தோடு இங்கு பதிவிடுகிறேன்..

குளித்து சுத்தமா இருனு சொல்றாங்க..தூய்மை பத்தி எல்லாம் பேசுறாங்க…ஆனால, எங்க மாதவிடாய் காலத்தில கூட குளிக்க முடியல..எங்களை சுத்தமா வைச்சுக்க முடியல…குளிச்சு 5 நாள் ஆச்சு…என்ன செய்ய சொல்றீங்க…
3 நாள் கழித்து 1 குடம் தண்ணீர் பத்து ரூபாய்னு வாங்கிட்டு வந்து அதுல சமைச்சு நானும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டிருக்கோம்…3 நாளா சமைக்கிறதுக்குக் கூட தண்ணியில்ல…
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்
சாக்கடை தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்குது…வேற வழி…காசு இருக்கிறவங்க காசு கொடுத்து தண்ணீரை வாங்கிக்கிறாங்க…நாங்க ஏழைங்க என்ன செய்ய முடியும்…
ராமாநாதபுரம், சிவகங்கை அருகே உள்ள கிராமங்களில் குழந்தைகள் ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் காட்சியைப் பார்த்த உடன் உள்ளமெல்லாம் அப்படி ஒரு வலி…அனைத்துக் குழந்தைகளும் தர்ஷிணியாகவே என் கண்களில் பட்டனர்…
குடிநீர் பஞ்சம் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் நிலவுகின்றது என்பதை அரசு உடனே புரிந்து கொண்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்…டாஸ்மாக் கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதிலும் காட்ட வேண்டும்….இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும் கூட பல இடங்களிலும், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப நீரையும் ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கொடுக்கும் சகோதரிகளையும், தாய்மார்களையும் பார்க்க முடிந்தது…ஆட்சியாளர்கள் கவனத்திற்கு நாம் குடிநீர் பிரச்னையில் அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றோம் என்பதை இப்போதாவது உணர்ந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்..
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் Written by Senthil Velu
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புதிய தலைமுறையின் சாமானியரின் குரல் நிகழ்ச்சியில்..” தண்ணீர் கண்ணீர்

இந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல்

இந்தி பூர்வீக மொழியா

 
 

 இந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல்

முகலாய (இஸ்லாமிய) மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போது அரசவையிலும் , படை பிரிவிலும் , நீதிமன்றங்களிலும், பேச பொதுவான ஒரு மொழி தேவைப்பட்டது அப்போது அரபி , ஃபார்ஸீ மூலம் இஸ்லாமிய மன்னர்களால் உருது உருவாக்கப்பட்டது பின்னர் பரந்து விரிந்த இந்தியாவில் வட்டார வழக்கு மொழிகளை காட்டிலும் வேகமாக பரவியது உருது மொழி …

 இந்தி பூர்வீக மொழியா

உருது மொழி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதால் இந்த உருது மொழியை இந்தியாவின் விடுதலைக்கு முன்பே உருதுக்கு பதில் வேறு மொழி கொண்டு வர ஆர் எஸ் எஸ் பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து நாக்பூரில் உருவாக்கப்பட்டது தான் “இந்தி”
உருது மொழியின் சொல்லாடலும் சமஸ்கிருத எழுத்துகளை கொண்டும் உருமாற்றம் செய்து இந்தி என பெயர் சூட்டி சில சொல்லாடல்களையும் , சமஸ்கிருத வார்தைகளையும் இணைத்து இந்தி மொழி உருவானது ….

இந்தி திணிப்பால் இந்தியாவின் முதன்மை மொழியாகிவிட்டது “இந்தி”

உதாரணத்திற்கு 1942 ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் ஆங்கிலேயர் களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதும் போது உருது மொழியில் எழுதிய சான்று தான் கிழே உள்ள கடித நகல் …
குறிப்பு :- இந்தி உருவானது பற்றிய சிறு தகவல் தான் நேரம் கிடைத்தால் இந்தி உருவானது பற்றிய முழுமையான தகவல் இன்ஷாஅல்லாஹ்
ஜெ. ரஹிம்

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் உக்ரைனில் பஞ்சம் ஏற்பட்டதற்கு, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் என்ற, அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்பு அபாரமானது.

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்

Stalin Tamil News

ஸ்டாலின் கொண்டு வர விரும்பிய கூட்டுத்துவ பண்ணை முறையை, கூலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். ஏனென்றால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படவிருந்தன. நிலவுடமையாளர்கள், கூலாக்குகள் கைது செய்யப் பட்ட காலத்தில், அவர்கள் தம்மிடம் இருந்த பயிர்களை அழித்து, கால்நடைகளை கொன்றனர்.
சோவியத் மக்களுக்கு, அதனால் ஏற்பட்ட சொத்து இழப்புக்களை யாராவது கணக்கிட்டார்களா? ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர், உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருந்த வெண் படைகளும், அவர்களுக்கு உதவியாக போர் புரிந்த பன்னாட்டுப் படைகளும், கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தார்களா?
Russian Stalin mems
Russian Stalin mems

Russian Stalin mems

அவர்கள் செய்த நாச வேலைகள் எத்தனை? அவர்களால் அழிக்கப் பட்ட கிராமங்கள் எத்தனை? தீ மூட்டி எரிக்கப் பட்ட வயல்களினால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? கொள்ளையடிக்கப் பட்ட பயிர்கள், கால்நடைகளால், இளம் சோவியத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அவற்றை யாராவது கணக்கிட்டார்களா?
உலகம் முழுவதும், எதிரிக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதற்காக, படையினர் இவ்வாறான நாச வேலைகளில் ஈடுபடுவது வழமையானது. வெண் படையினர், கூலாக்குகள் செய்த நாச வேலைகள், அதனால் உண்டான பொருளாதார இழப்புக்கள் குறித்த தகவல்கள் எங்கே? ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை? அப்படி ஒன்று நடந்ததை கூட சொல்லாமல் மறைப்பது ஏன்?
எதிர்ப்புரட்சியாளர்களின் நாசவேலைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், அழித்தொழிப்புகள் எல்லாவற்றையும், அவற்றை எதிர்த்துப் போராடிய ஸ்டாலின் என்ற தனி மனிதனின் கணக்கில் எழுதும், அறிவுஜீவிகளின் திறமை வியக்க வைக்கிறது
Written & Thanks By Kalai Marx
சராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம்

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

அகண்ட இந்து பாரதக் கனவு

அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது.. விரைவில், யாழ்ப்பாணத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப் படலாம். மாடு திருடியவனை சாகும் வரை அடித்ததை நியாயப்படுத்தும் கனவான்கள், திடீரென மாட்டின் மீது பாச மழை பொழிவது கவனிக்கத் தக்கது.
முகநூல் எங்கும் “மாடு எங்கள் குடும்ப உறுப்பினர்” என்று உணர்ச்சிகரமான ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதனின் உயிரை விட, மாட்டின் உயிர் மேலானது என்று வாதாடுகின்றனர். மாடு திருடினால் கடுமையான தண்டனை வழங்குவது சரிதான் என்கிறார்கள். விரைவில், திருட்டுக்கு கை வெட்டும் “இந்து – ஷரியா” சட்டத்தை முன்மொழிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதைத் தான்… இதையே தான் இந்துத்துவா பாசிச சக்திகள் யாழ்ப்பாணத்தில் கொண்டு வர விரும்புகின்றன. இதற்காகவே இந்திய துணைத் தூதரகமும், சிவசேனையும் தீயாக வேலை செய்து கொண்டிருந்தன. அவர்களது முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. இந்து பேரினவாதம் யாழ்ப்பாணத்தில் காலூன்றி வருகின்றது.
சிரியாவில் உள்ள ஐ.எஸ். என்ற இஸ்லாமிய தேசம் மாதிரி, யாழ்ப்பாணத்தில் இந்து தேசத்தை உருவாக்கலாம். சிரியா, ஈராக் இரண்டு நாடுகளினதும் எல்லைகளை அகற்றி ஒன்று சேர்க்கும் நோக்குடன் தொடங்கப் பட்டது தான் ஐ.எஸ்.
ISIS என்ற அதன் ஆரம்ப கால பெயரே அந்த நோக்கத்தை வெளிப் படுத்துகின்றது. அதே பாணியில் இந்தியா, இலங்கை எல்லைகளை அகற்றி இரண்டையும் ஒன்றாக்கும் நோக்கில் இந்துத்துவா சக்திகள் செயற்படுகின்றன. இனி என்ன? அகண்ட இந்து பாரதக் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது

Written By Kalai Marx

ஆர் எஸ் எஸ் அதன் உண்மை முகமும் அதன் தீவிர வாத முயற்சியும்

 

ஆர் எஸ் எஸ் அதன் உண்மை முகமும் அதன் தீவிர வாத முயற்சியும்

ஆர் எஸ் எஸ்

  1. ஆர் எஸ் எஸ்RSS ஐ சேர்ந்த நாதுராம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை படுகொலை செய்தான்.

பின்னர் அது இஸ்மாயில் இல்லை, RSS ஐ சேர்ந்தவன் என்று நிரூபணம் ஆனது.
2. மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஹம்மது அக்லாக்கை படுகொலை செய்தார்கள், பின்னர் அது ஆட்டிறைச்சி என்று நிரூபணம் ஆனது.

3. சுவாதியை பிலால் மாலிக் படுகொலை செய்ததாக பரப்பினார்கள். பின்னர் பிலால் மாலிக் கொலை செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது.
4. ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறினார்கள். பின்னர் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று நிரூபணம் ஆனது.
5. தென்காசி, மாலேகான், சம்ஜோத்தா ரயில், பீகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பை நடத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் என்றார்கள், பின்னர் அது RSS தீவிரவாதிகள் என்று நிரூபணம் ஆனது.
6. சத்தியமங்கலத்தில் நள்ளிரவில் கோவில் சிலையை சேதப்படுத்தி, தென்காசியில் நள்ளிரவில் கோவில் தேரை எரித்து, பொழுது விடியும்போது முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்ததாக போஸ்டர் ஒட்டினார்கள், பின்னர் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 48 மணிநேரத்திற்கும் முன்பே போஸ்டர் அடித்து விட்டதாக விசாரணையில் வாக்குமூலம் கொடுத்தார்கள்.
7. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களில் ஆர் எஸ் எஸ் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு முஸ்லிம்கள் செய்ததாக பரப்பப்பட்டு பின்னர் விளம்பரத்திற்காகவும், கட்சியில் பதவி பெற வேண்டும் என்பதற்காகவும் தங்களுக்கு தாங்களே பெட்ரோல் குண்டு வீசியதாக கண்டுபிடிக்கப்பட்டது.
8. குஜராத்தில் சபர்மதி ரயிலை முஸ்லிம்கள் எரித்ததாக கூறி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். பின்னர் ரயில் உள்ளிருந்து தீப்பிடித்து எரிந்ததாக விசாரணையில் நிரூபணம் ஆனது.
9. கோவிலில் மாட்டிறைச்சியையும், பள்ளிவாசலில் பன்றியையும் வீசி மதக்கலவரத்தை தூண்டினார்கள். கர்நாடகா மாநிலத்தில் நள்ளிரவில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி தேசிய கொடியை தீ வைத்து கொளுத்தி அருகில் போட்டார்கள். பின்னர் அனைத்திலும் RSS ஐ சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
10. பாபர் மஸ்ஜிதில் ராமன், லட்சுமணன், சீதையின் சிலையை வைத்து ராமன் பிறந்ததாக கூறி பள்ளிவாசலை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.
இப்படி ஆயிரமாயிரம் பட்டியலிட முடியும்….
தமிழா உறங்காதே
புதைத்துவிடுவார்கள்…
தமிழா உறங்காதே புதைத்துவிடுவார்கள்

மதுவுக்கு எதிராக போராடும் அன்பு மணி ராமதாஸ்

மதுவுக்கு எதிராக போராடும் அன்பு மணி ராமதாஸ்

அன்பு மணி


அன்பு மணி


இணையத்தில் உலாவரும் ஒருசெய்தி என்னவென்றால் நெடுஞ்சாலையில் இருக்கும் மது கடைகள் மூடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி காரணம் அல்ல, எதோ வடக்கே இருக்கும் ஊனமுற்ற ஒருவர் தான் கரணம் என்று ஒரு செய்தி உலாவருகிறது .
உண்மை என்னவென்றால் சிகரெட் மற்றும் மது பான தடை ஏற்படுத்த 10 வருடத்திற்கு முன்பே அன்பு மணி வித்திட்ட ஒரு முயற்சி தான் itc மற்றும் காஜா பீடி கம்பெனிகள் வேறு தொழிலை நோக்கி நகர தூண்டியது
காஜா பீடி தைலம் விக்கவும் itc காரன் கோதுமை மாவு மற்றும் பிசுகட் வியாபாரம் நோக்கி நகர காரணமாய் இருந்தது
உண்மை இப்படி இருக்க எதோ வடக்கத்தி காரன் தான் இதற்க்கு காரணம் என்று ஊடகங்கள் உண்மையை திரித்து கூறி வருகிறது என்னை பொறுத்த வரையில் மதுவுக்கு எதிராக மிக சிறப்பாக களப்பணி ஆற்றி வருகிறார் அன்பு மணி ராமதாஸ்…
குறிப்பு நான் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவன் அல்ல
Abu Meeran Tahir

ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது

அல்லிராஜா சுபாஸ்கரன்
லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம் இருபது மில்லியன் பவுன்ஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கை செல்வதாக வெளிவந்த தகவல், பலதரப் பட்ட வாதப் பிரதிவாதங்களையும், எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியதால், அந்தப் பயணத்தை இரத்து செய்வதாக ரஜனி அறிவித்திருந்தார்.
ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது:
//லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.//
வீடுக‌ள் க‌ட்டிக் கொடுப்ப‌து என்ப‌து ஒரு வியாபார‌ “போட்டி” அல்ல‌. அது முத‌லீட்டுக்கான அருமையான‌‌ வாய்ப்பு. ஒரு நாட்டில் போர் முடிந்த‌ பின்ன‌ர், அழிவில் இருந்து மீள‌க் க‌ட்டியெழுப்ப‌ முத‌லாளிக‌ளுக்கு கிடைக்கும் வாய்ப்புக‌ள். ஏற்க‌ன‌வே ஆப்கானிஸ்தான், ஈராக்கில் பெரிய‌ அள‌வில் ந‌ட‌ந்த‌து. அமெரிக்க‌ அர‌சே டென்ட‌ர் போட்டு யார் யாரெல்லாம் முத‌லிட‌லாம் என்று தெரிவு செய்த‌து.
அங்கெல்லாம் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் மூலதன பலம் கிடையாது. அது அந்தளவு பெரிய நிறுவனம் அல்ல. ஆனால், இலங்கையில் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் பண பலம் உள்ளது. “இலவச” வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் பின்னணியில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு தொழிற்துறையில் முதலீடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.
லைக்கா நிறுவனம், ஐரோப்பாவில் வரி கட்டாமல் ஏமாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தான், வவுனியாவில் 150 வீடுகள் கட்டப் பட்டன. உண்மையில் அந்த “தான தர்மம்” கூட, லைக்கா பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணத்தை விடக் குறைவு! 
முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அல்லது கன்சவேர்ட்டிவ் கட்சிக்கான நிதியாக, £2.2 மில்லியன் பவுன்ஸ் “தானம்” செய்திருந்த விடயம் ஏற்கனவே அம்பலமானது. முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சனின் தேர்தல் செலவையும் லைக்கா பொறுப்பேற்றிருந்தது.
லைக்காவின் மொத்த வருடாந்த வருமானம் சுமார் 1.5 பில்லியன் பவுன்கள். பிரித்தானியாவில் வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், போர்த்துக்கலுக்கு சொந்தமான மாடேயிரா தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கில் வைப்பிலிடப் படுகின்றது. வருமான வரி மட்டுமல்ல, மதிப்புக் கூட்டு வரியும் (VAT) கட்டாமல் பெருந்தொகைப் பணம் பதுக்கப் படுகின்றது. இதற்கென இருபதுக்கும் குறையாத போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. சட்டவிரோத கருப்புப் பணத்தை தூய்மைப் படுத்துவதும், அதை இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்குவது மட்டுமே இந்தப் போலி நிறுவனங்களின் வேலை.
லண்டன் தபால் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் கட்டுக் கட்டாக பண நோட்டுக்கள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப் படுவது கண்டுபிடிக்கப் பட்டது. அதை அடுத்து, பாரிஸ் நகரில் உள்ள லைக்கா கிளை அலுவலகம் கடந்த வருடம் பொலிஸ் சோதனைக்கு உள்ளானது. அங்கு 130,000 யூரோ தாள்களும், மேலதிகமாக வங்கியில் இருந்த 850,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப் பட்டன. பிரான்ஸில் பதினேழு மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் பிரெஞ்சுக் கிளை நிர்வாகி Alain Jochimek உட்பட ஒன்பது பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது.
(முழுமையான விபரங்களுக்கு இந்த இணைப்பில் வாசிக்கவும்:The French Connection: How Paris Police Closed In On Cameron’s Biggest Donor)
மேலும் இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன், ஐரோப்பிய தீவிர வலதுசாரி அரசியல்வாதிளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார். பாரிஸ் பொலிஸ் சோதனையில் பிடிபட்டு கம்பி எண்ணிய அலென் ஜோகிமிக் இஸ்ரேலிய அரசுடன் தொடர்புடைய யூத வலதுசாரி நிறுவனம் ஒன்றை  நடத்துகிறார். பிரிட்டனில், முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூன், முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் போன்றோர் கன்சவேர்ட்டிவ் கட்சியை சேர்ந்த வலதுசாரிகள். கன்சர்வேட்டிவ் கட்சி, ஈழப்போர் நடந்த காலத்தில் வெளிப்படையாகவே சிறிலங்கா அரசை ஆதரித்திருந்தது.
தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் அகராதிப் படி, “லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு இனத் துரோகி!” இருப்பினும், ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் யாரும் லைக்காவின் கிரிமினல் வேலைகளை கண்டுகொள்வதில்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். அவர்கள் யாரும் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்ல, மாறாக முதலாளித்துவ ஆதரவு வலதுசாரிகள்.
//”லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு “ஈழத் தமிழர்”. “தனது செலவில்(?)” தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்…”// என்று போலித் தமிழ்த்தேசியவாதிகள் லைக்காவின் கிரிமினல் குற்றங்களுக்கு துணைபோகின்றனர். இனம் இனத்தோடு தான் சேரும். வர்க்கம் வர்க்கத்தோடு தான் சேரும். பணம் பணத்தோடு சேரும்.
எதிர்பார்த்த‌ மாதிரியே அர‌சிய‌ல் நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ர‌ஜ‌னிகாந்துக்கு எதிராக‌வே க‌ம்பு சுற்றுகிறார்கள். “லைக்கா மாமா ந‌ல்ல‌வ‌ராம், ர‌ஜ‌னி மாமா கெட்ட‌வ‌ராம்!” என்று குழ‌ந்தை – ஊட‌க‌விய‌லாள‌ர் ஒருவ‌ர் சிணுங்குகிறார். இவர் கஜேந்திரகுமார் – விக்னேஸ்வரன் தலைமையில் நம்பிக்கை வைத்திருப்பவர். அவரைப் போன்றே தீவிர வலதுசாரிகளான த.தே.ம.மு. கட்சி ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் பிரபல நடிகரான ரஜனிகாந்திற்கு எதிராக கம்பு சுற்றுவதன் மூலம், லைக்காவின் குற்றங்களை மறைப்பதற்கு உதவுகிறார்கள்.
திரைப்ப‌ட‌ த‌யாரிப்பாள‌ரான‌ லைக்கா நிறுவ‌ன‌ம் நினைத்தால் ர‌ஜ‌னியை ம‌ட்டும‌ல்ல‌, ந‌மீதாவையும் கூட்டி வ‌ந்து விள‌ம்ப‌ர‌ம் தேட‌ முடியும். எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து மாதிரி, முத‌லீட்டாள‌ர் இருக்க‌ கூத்தாடிக‌ளை எதிர்க்கிறார்க‌ள். இது அவ‌ர்க‌ள‌து முத‌லாளிக‌ளுக்கு ஆத‌ர‌வான‌ வ‌ர்க்க‌க் குணாம்ச‌த்தின் வெளிப்பாடு.
இந்த விடயத்தில் ரஜனிகாந்த் நல்லவர் என்று சொல்ல வரவில்லை. அவருக்கும் சில அரசியல் ஆதாயங்கள் இருக்கலாம். தனக்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே தனது இலங்கைப் பயணம் தொடர்பான தகவலை வெளிவிட்டிருக்கலாம். ஒரு காலமும் அரசியல் பேசாத ரஜனி, பயணத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கமளித்த கடிதத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.
ஏற்கனவே, ரஜனிகாந்த் தன்னை இந்துத்துவா சார்பானவராக காட்டி வந்துள்ளார். இந்தக் கடிதத்திலும் புலிகளின் ஈழ விடுதலைப் போரை “புனிதப் போர்” என்று குறிப்பிடுள்ளார். இவ்வளவு காலமும் ஒன்றில் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமே புனிதப் போர் என்ற கருதுகோளை கொண்டிருந்தனர். தற்போது இந்து மத அடிப்படைவாதிகள் அதைப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். புலிகளின் ஈழ விடுதலைப் போர், இந்துத்துவா வாதிகளின் கண்களுக்கு புனிதப் போராகத் தெரிகின்றது.
லைக்கா இல‌ங்கைக்கு அழைப்ப‌தாக சொன்ன‌தும், அத‌ற்கு எழுந்த‌ எதிர்ப்பும், அத‌ன் விளைவாக‌ ப‌ய‌ண‌த்தை இர‌த்து செய்த‌தும் முன்கூட்டியே திட்ட‌மிட‌ப் ப‌ட்ட‌ நாட‌க‌மாக‌ இருக்க‌லாம். இவ‌ர்க‌ள் எல்லோரையும் பாஜ‌க‌ பின்னால் இருந்து ஆட்டுவித்திருக்கிற‌து.
ர‌ஜ‌னிகாந்தின் க‌டித‌த்தில் பாஜ‌க‌ அர‌சிய‌லே தொக்கி நிற்கிறது. அத்துட‌ன் ர‌ஜ‌னியின் வ‌ருகையை எதிர்ப்ப‌தாக‌ காட்டிக் கொண்ட‌ ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும், ம‌றைமுக‌மான‌ இந்திய‌ அடிவ‌ருடிக‌ள் தான். அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே, இந்து ம‌த‌வெறி அமைப்பான‌, சிவ‌சேனையின் வ‌ருகையை வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.
Written By Kalai Marx

​குடியரசு தலைவராகிறாரா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

​குடியரசு தலைவராகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ?

இந்த செயல் ஆர் எஸ் எஸ் பிஜேபி பார்ப்பன பாசிசத்தின் உச்சம்
நாட்டின் மிக முக்கியமான குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.ஸ்.ஸ். தலைவர் மோகன் பகவத் பெயரை பரிந்துரை செய்துள்ளாராம் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்.
வருகின்ற ஜூலை மாதத்துடன் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் ஆட்சிக்காலம் நிறைவடைகின்றது. பிரனாப் முகர்ஜி காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்து பின்னர் குடியரசு தலைவர் ஆனார்.
இதனால் பிரனாப் முகர்ஜியின் ஆட்சியின் காலம் முடிந்தவுடன் பாஜக அரசுக்கு சாதகமான ஒருவரையே குடியரசு தலைவராக நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இதில் எல்.கே. அத்வானி முதல் மோகன் பகத் பெயர் வரை பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குடியரசு தலைவர் பதவிக்கு தகுதியானவர் என சிவசேனா சஞ்சய் ரவுத் என செய்தியாளர் மத்தியில் பேசியுள்ளாராம்.

குடியரசு தலைவராகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ?
குடியரசு தலைவராகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ?

மோகன் பகத் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் தான் இந்தியாவைப்
இந்து நாடாக மாற்ற முடியும் என சஞ்சய்
ரவுத் பேசியுள்ளார் ஏற்கனவே இந்திய
என்ன ஜனநாயக நாடாகவா செயல் பட்டுவருகிறது ?
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகத்தை ஜனாதிபதியாக நியமிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் இந்த மாதிரி முடிவுகளால் நாட்டின் வளர்ச்சியைவிட வீழ்ச்சியே இந்தியா கான வேண்டி வரும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசை எச்சரிக்கிறோம் …
Written on குடியரசு தலைவராகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ?
அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்…

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

Shalin Maria Lawrence :

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

ஜெயலலிதா பதவிக்கு வந்தவுடன் ஒரு விஷயம் மட்டும் கண்டிப்பாக செய்திருப்பார் . அது தன் அரசியல் எதிரிகளை பழிவாங்குவது . அதில் மட்டும் தான் அவர் தீவிரமாக இருந்திருப்பார் .
சொத்துக்குவிப்பும் , ஜோசிய பைத்தியக்காரத்தனங்களும் , மக்கள் நலன் புறக்கணிப்பும் 1989 ஆம் ஆண்டு சசிகலாவுடன் போயஸ் தோட்டத்தில் வந்து குடியேறிவைகள் .

தற்கொலை முயற்சிகளுக்கும் மனப்பிறவிழற்கும் பரிச்சயமான நடிகை ஜெயலலிதாவை அரசியல்வாதி ஜெயலலிதா ஆக்குகிறார் சசிகலா .
தன் alter – ego வாக சசியை பார்க்கிறார் ஜெயலலிதா .
கிடைக்காத அன்பு கிடைத்த பூரிப்பில் ஆளகிடைத்த மாநிலத்தை தோழியின் காலடியில் சமர்பிக்கிறார் ‘Iron lady ‘
1991 ஆண்டு முதல் 2016 வரை அதிமுக ஆட்சி என்ற பெயரில் நம்மை ஆண்டது இன்று ‘வேலைக்காரி’ என்று பலரால் விமர்சிக்கப்படும் சசிகலா மற்றும் அவரது குடும்பம் .
கூட்டணியாய் செய்த அனைத்து அநீதிகளுக்கு ஜெயலலிதாவின் sticker மட்டுமே ஒட்டப்படுகிறது .
புதியதாய் கிடைத்த குடும்பத்தின் அரவணைப்பில் நாடு நாசமாய்ப்போய்
கொண்டிருப்பதை மறந்து ஆழ்ந்த நித்திரையில் தள்ளப்படுகிறார் முதல்வர் .
நித்திரை தெளிந்த நேரம் எல்லாமே
முடிந்திருந்தது . திருத்தி கொள்ள நேரம் கிடைக்கவில்லை , சுதந்திரமும் கிடைக்கவில்லை .
33 வருடங்களாக நடத்தப்படும் சதுரங்க நாடகம் முடிவு பெறுகிறது .
ராணி சாய்கிறது .
Modi Magic in TN ADMK…

இந்த 33 வருடங்களாக மக்களை எலி கறி சாப்பிடவைத்ததும் , கஞ்சி தொட்டி திறப்புகளும் , சாதி கலவரங்களும் , சசி பெருமாளை பலிவாங்கியதும் , கோவனை ஜெயிலில் தள்ளியதும் , மாற்று திறனாளிகளை கொன்றதும் , நீரில் என் நகரத்தை அழித்ததற்கும் ,உயிர் காக்கும் மருத்துவமனையை சதிகூடாரமாக மாற்றியதும் இன்னும் லட்சம் ஆராஜகங்களை செய்ததும் இந்த ஒற்றை நாற்காலிக்காக என்றால் … அது உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும் .
Shalin
ஜெயலலிதா

'சசிகலா இப்படித்தான் மிரட்டுவார்!' கங்கை அமரன் அனுபவக் கதை

‘முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நிச்சயம் மிரட்டியிருப்பார்” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி.

சசிகலா

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன காரணம்?
என்னுடைய கருத்து யாருக்கும் ஆதரவு கிடையாது. தமிழ்நாட்டின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு மனக்குமுறலுடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரது மனநிலையை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பேட்டியின் போது சசிகலா, மிரட்டியதாக தெரிவித்தார். நிச்சயம் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பையனூர் பங்களாவை சசிகலா என்னிடம் எப்படி மிரட்டி வாங்கினார் என்பது எனக்குத் தெரியும். அதுபோல இன்னும் சில வி.வி.ஐ.பி.க்களிடமிருந்து சசிகலா தரப்பு சொத்துக்களை மிரட்டி வாங்கி உள்ளது.
உங்களை சசிகலா எப்படி மிரட்டினார்?
பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லுங்கள். அவர் எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்று சொல்லி உள்ளனர். இதனால் என்னுடைய மனைவி மிகவும் பயந்து விட்டார். ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் சசிகலாவிடம் போனில் பேசினேன். அதற்கு அவர், அப்படியா… நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதன்பிறகு அதுபோன்ற மிரட்டல் போன் அழைப்புகள் இல்லை. ஆனால் என்னுடைய வீட்டை போலீஸார் மப்டியில் கண்காணித்தனர். என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணித்தனர். இவ்வாறு மறைமுகமாகவே எனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. பையனூர் பங்களாவை என்னிடமிருந்து பெறப்பட்ட போது எனக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் இடம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை சசிகலா நிறைவேற்றவில்லை.
சசிகலாவை நீங்கள் எதிர்ப்பதற்கு இதுமட்டும்தான் காரணமா?
சசிகலா குடும்பத்தினர் பலரிடமிருந்து சொத்துக்களை வாங்கி குவித்து விட்டனர். இதன்பிறகும் அவர்கள் தங்களது செயல்பாட்டிலிருந்து மாறவில்லை. மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் பதவி ஆசையில் சசிகலா செயல்படுகிறார். ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அவரது மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவின் பதவியில் அமர ஆசைப்படலாமா. ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி, கட்சியினரிடையும், மக்களிடையையும் ஆதரவை பெறாமல் முதல்வராக சசிகலா ஆசைப்படுகிறார். தமிழகத்தில் குடிநீர் பிரச்னை, வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் சசிகலா பதவியேற்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார். இதுபோல சசிகலாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நான் மட்டுமல்ல… மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீங்கள் பா.ஜ.க.வில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா?
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் அதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஒரு அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், தேச மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமை கொண்டு இருக்கிறேன். பா.ஜ.க.வில் இருப்பதில் பெருமைக் கொள்கிறேன்” என்றார்.
Thanks   By Anandhavikatan

அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள்

 

அஞ்சு வருஷத்துல மூணு பேரு, இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள்

எங்க ஸ்டேட் கர்நாடகாவுல சிலபல வருஷம் முந்தி பீஜேப்பீ பவர்ல இருந்தாங்க. அந்த டைம்ல, எடியூரப்பா, சதானந்த கௌடா, ஜெகதீஷ் ஷெட்டர்னு மூணு சீஎம்கள் இருந்தாங்க. அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள் பிடிக்காம, அடுத்த எலக்‌ஷனில் காங்கிரஸ் ஜெயிச்சி, சித்தராமய்யா முதல்வர் ஆனார். கடந்த மூணரை வருஷமா அவர்தான் சீ.எம். பீஜேப்பீ ரூலில் சிலபல ஆட்கள் பண்ணிய டுபாக்கூர்களும் காரணம். ஜனார்த்தன் ரெட்டி ஒரு உதாரணம்.
என்ன திருகுதாளம் போட்டாலும் டமில்நாட் போல வராது. பீஜேப்பீல வந்த மூணு பேருமேகூடப் பழுத்த அரசியல் அனுபவம் உள்ளவங்க. ஆனால் டமில்நாட்ல அதெல்லாம் தேவையில்ல போலன்னு இப்போ தெரிஞ்சிட்டதால, இவங்கல்லாம் செம்ம காண்டுல இருக்காங்க. டமில்நாட்ல சி.எம் ஆக என்னன்ன தகுதிகள் வேணும்னு யோசிச்சா, கட்டாயம் பீஹார்தான் நினைவு வரும். பீஹார் பத்தி, ட்ரெய்ன்ல ஆடு கோழியெல்லாம் ஏத்துவாங்க, மொக்க ஊர்ன்னு இப்போகூட பலரும் பேசுவாங்க. அரசியலிலும் அதேதான்.
இருந்தாலும், என்னதான் தலைகீழா தண்ணி குடிச்சாலும், அரசியலில் டமில்நாட் போல வராது. சினிமா, இலக்கியம் இந்த ரெண்டுலயும் நம்மூரு எந்த நிலைல இருக்குன்னு ஒலகத்துக்கே தெரியும். அரசியலிலும் அப்படித்தான் இருந்திச்சு. ஆனால் இலைமறை காய்மறையா. இப்போதான் வெளிப்படையா வெடிச்சி சிதறிருக்கு.
மொத்தமா எல்லாத்துலயும் ஊத்தி மூடியிருக்கும் டமில்நாட்டைப் பார்த்து, இதெல்லாம் போனமாசமே நடக்கும்னு எதிர்பார்த்தேன். அதுல ஒரு குட்டியூண்டு ஏமாற்றம்.
களப்பிரர் காலம் பத்திப் படிச்சிருப்பீங்க. இதோ அதையெல்லாம் பார்த்து அனுபவிக்கும் காலம். சுக்ஹானுபவம்.
இவண்ணம், கன்னடிக டமிலன் சென்தேள் சென்காயிரம்

சங்பரிவார கைக்கூலி தடா ரஹீம் கழன்றது காவி முகமூடி

தடா ரஹீம் சங்பரிவார கைக்கூலி  கழன்றது காவி முகமூடி
கோடாரிக்காம்பு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மரத்தை வெட்டுவதற்கு வெறும் இரும்புத்துண்டு மட்டும் இருந்தால் போதாது. அந்த மரத்தின் ஒரு கிளையை ஒடித்து அதில் இரும்புத்துண்டை மாட்டி வெட்டினால்தான் அந்த மரம் சாயும்.
அதுபோலத்தான் இஸ்லாமிய சமுதாயம் என்னும் மரத்தைச் சாய்க்க வெறுமனே காவிச்சூழ்ச்சிகளும் தூண்டுதல்களும் மட்டும் போதாது. அந்தச் சமூகத்தில் இருப்பவர்களையே அதற்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் என்னதான் தொண்டை கிழிய சிலை வணக்கம் இணைவைப்பு என்று போராடினாலும் விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு முஸ்லிம் பெண்கள் பூசை செய்வது போலக் காட்டி வெற்றி அடைந்து விடுவதே காவிச்சூழ்ச்சி!
பழனிபாபாவின் பெயரைப் பயன்படுத்தி இந்திய தேசிய லீக் கட்சியின் பேனரை வைத்து தன்னை வெளிக்காட்டிக் கொண்டு சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தன்னை வளப்படுத்தி வந்து தன்னை இஸ்லாமிய போராளியைப் போல காட்டிக்கொள்ளும் தடா.ரஹீம்., உளவுத்துறை மற்றும் சங் பரிவாரத்தின் கைக்கூலியாக செயல்படுகின்றார் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா? அங்குதான் சங்பரிவாரத்தின் சூழ்ச்சி வெற்றிபெற்றிருக்கின்றது. தடா ரஹீம் சங் பரிவாரம் மற்றும் இந்திய உளவுத்துறையின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என்பதற்கு சில ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
#முதல்_ஆதாரம்:
இஸ்லாத்தினையும் இறைத்தூதரையும் தொடர்ந்து இன்றுவரை கொச்சைப்படுத்தி விசத்தை தூவிவரும் காவிபயங்கரவாதி கல்யாணராமனை ஒவ்வொரு சகோதரர்களும் எதிர்த்து வருகின்றார்கள். அவனுக்கு இதுவரைக்கும் எந்த ஒரு முஸ்லிமும் லைக் போட்டது கிடையாது. ஆனால் தன்னை ஒரு தேசியக்கட்சியின் தலைவராகக் காட்டிக் கொள்ளும் கோடாரிக்காம்பு சமுதாய துரோகி தடா ரஹீம் கல்யாணராமனின் பதிவுக்கு லைக் போடுகின்றார்.
இதைப்பார்த்து அனைவருக்குமே ஆச்சரியம். ஒருவேளை கை தவறி லைக் பட்டன் விழுந்திருக்கும் என்று அனைவருமே நினைத்தார்கள். ஏன் கல்யாணராமனுக்கு லைக் போட்டார்? என்று விவாதம் பரபரப்பாகிப் போக தேசியலீக்கில் இருக்கும் சில தொண்டர்கள் இதை அவரது பார்வைக்கு அனுப்பினார்கள். அதற்கு பதில் போட்டான் பாருங்கள், என் வீட்டு சிறுகுழந்தைகள் விளையாடும் போது கை தவறி லைக் பட்டன் விழுந்தது என்று சொல்லி மழுப்ப எனக்கென்ன பயமா? நான்தான் லைக் போட்டேன். பல நேரங்களில் கல்யாணராமனுக்கு இன்பாக்ஸில் இஸ்லாம் குறித்து(?) தகவல் கொடுப்பேன், பல கருத்துக்களை விவாதிப்பேன் என்று சொல்லி சிம்பிளாக முடித்தான் தடா ரஹீம்.
#இரண்டாவது_ஆதாரம்:
கல்யாணராமனுக்கு லைக் போட்டதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஹெச்.ராசாவின் பதிவிற்கு லைக் போட்டார் தடா ரஹீம். ஹெச்.ராசாவிற்கு ஏன் லைக் போட்டான் என்று இன்றுவரை விளக்கவில்லை. அதன் பிறகுதான் தம்பி தடா ரஹீமை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துக் கண்கானிக்க ஆரம்பித்தோம்.
#மூன்றாவது_ஆதாரம்:
சென்ற ஹஜ் பெருநாளைக்கு ஒட்டகம் அறுக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. எவ்வித சிக்கலும் இல்லாமல் மிகச்சாதாரணமாக தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்ததால் அதைப் பயன்படுத்தி ஒட்டகத்தை அறுத்து விடலாம், அதன்பிறகு வழக்கு போடுவார்கள் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தங்களின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப் படி அமைதியாக இருந்தது.
தடையை மீறி ஒட்டகத்தை அறுப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல இடங்களில் பேசி வந்தது. இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் இருந்ததால் அதை மேலும் உறுதிப்படுத்த சங் பரிவார கும்பலுக்கு ஒரு இஸ்லாமிய அமைப்பின் மேல் முறையீடு தேவைப்பட்டது. அதற்கு களமிறக்கப்பட்டார் தடா ரஹீம். ஒட்டகத் தடையை நீக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்வதைப் போல செய்து தீர்ப்பை மேலும் இறுக்கமாக்கினார். ஒட்டகத்தை அறுப்பதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், கண்கானிக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் ஒட்டகம் அறுக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது தடா ரஹீமால் சாத்தியமானது. பிடி மேலும் இறுகியது.
#நான்காவது_ஆதாரம்:
முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் மரணத்தில் ஒரு அதீத குழப்பம் நிலவியது. பன்னீர் ஒருபுறமும், சசிகலா ஒருபுறமும் பிரிந்து நின்றார்கள். இதில் யார் காவி பயங்கரவாதிகளுக்குத் துணை போகின்றார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நம்முடைய தளத்தில் சில நிகழ்வுகளை வைத்து பன்னீர்தான் பாஜகவுடன் கைகோர்கிறார் அதற்காக சசிகலாவை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள் என்று எழுதினோம். சசிகலாவை குற்றவாளியாக்கி அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டு அதிமுகவைக் கைப்பற்ற விதவிதமான கதைகளை காவி பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்டார்கள்.
ஜெயாவை மாடியில் இருந்து தள்ளி விட்டார் சசிகலா என்றெல்லாம காவி கம்ப்யூட்டர் படைகள் கதையெழுதின. இந்த நிலையில் இதை பூதகரமாக்க ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதற்கும் தடா ரஹீம் களமிறக்கப்பட்டார். ஜெயா மரண சந்தேகத்தைத் தீர்க்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டு அப்பல்லோவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி சசிகலாவை குற்றவாளி என உறுதி செய்ய தடா ரஹீமை களமிறக்கியது சங் பரிவார கும்பல்.
ஜெயா குறித்து எவ்வித சம்பந்தமும் இல்லாத தடா ரஹீமுக்கு ஏன் இந்த அக்கறை என பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஜெயாவின் அனைத்து விவகாரங்களும் நன்கு தெரிந்த திருநாவுக்கரசர் கூட ஜெயாவின் மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என சொல்லியபோதும் கெடா ரஹீமை அப்பல்லோ நோக்கி திருப்பி விட்டு சசிகலாவை சாய்க்கப்பார்த்தது காவி கும்பல்.
#ஐந்தாவது_ஆதாரம்:
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை முழுக்க முழுக்க பாஜகதான் இயக்குகின்றது என அனைவரும் அறிந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தீபாதான் வர வேண்டும் என்று அண்ணன் தடா ரஹீம் அவர்கள் ஊளையிட்ட போது இன்னும் கொஞ்சம் கிழிந்தது தடா.ரஹீமின் முகமூடி. இப்போது தீபா யாரால் இயக்கப்படுகின்றார் என்பது வெளிச்சமாகி விட்ட நிலையில் இப்போதும் தீபாவை தடா ரஹீம் ஆதரிப்பது ஏனோ? சொல்லமுடியுமா?
தடா ரஹீமின் ரசிகரும் உறுப்பினருமான கப்பலாண்டி கஞ்சா அபூபக்கர் GPM இன்று வரை தீபாவை உயர்த்திப் பிடித்து அந்தப் பதிவுகளை தடா ரஹீமிற்கு டேக் செய்து விடுவதோ ஏனோ? சொல்ல முடியுமா?
#ஆறாவது_ஆதாரம்:
இதுதான் முக்கியமான ஆதாரம். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையினரால் அடக்குமுறை செய்யப்பட்ட கலைக்கப்பட்டது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை உண்டாக்கியது. குடியரசு தின விழாவிற்கு மெரினாவை பாதுகாக்க வேண்டியது பொதுப்பணித்துறையின் வேலை. அதனால்தான் மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்த அதை திசை திருப்புவதற்காக தடியடி நடந்த பிறகு முதல்வர் பன்னீர் செல்வம், கூட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து விட்டதாக அறிக்கை வெளியிட, சொல்லி வைத்தார் போல ஹெச்.ராசா தன்னுடைய டிவிட்டில் தேசியலீக் தொண்டர் ஒசாமா பின்லேடன் படத்துடன் பைக்கில் செல்லும் காட்சியை வெளியிட்டார்.
TN05BC 3957 எண் கொண்ட வாகனத்தின் எண்ணை பரிசோதித்துப் பார்த்த போது அது ராஜி என்பவருக்கு சொந்தமனாது என சோதனையில் தெரியவந்தது. ஆனால் அதற்கு முன்னதாக அந்த வாகனத்தில் வந்தவர் தேசியலீக் தொண்டர் என்றும், அது ஜாஹீர் நாயக் தடை விவகாரத்தில் நிகழ்ந்தது என்றும் தமிழக அரசுக்கு தகவல் அனுப்பினார் தடா ரஹீம். ஆனால் இதில் ஏகப்பட்ட கசமுசாக்கள் நடந்து வருவதை சம்பவங்களின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.
நேற்று இரவு(28/01/2017) தந்தி தொலைக்காட்சியில் மயிலை துணை கண்கானிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் கலந்து கொண்ட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஒசாமா படம் ஒட்டிய வாகனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அது போலியான வாகனப்பதிவு என்றும், அந்த வாகனத்தில் வந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்றும் சொன்னார்.
மயிலை துணைக் கமிஷனர் அந்த வாகனப்பதிவு எண் போலி என்று சொல்கின்றார். ஆனால் அந்த வாகனத்தில் வந்தவர் என் கட்சியின் தொண்டர் என்று சொல்கிறார் தடா ரஹீம். ஒருவேளை அந்தப் படம் 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இதுநாள் வரை யாருமே அந்தப் படத்தை வெளியிடாத போது எச்.ராசா எப்படி அந்தப் படத்தை வெளியிட்டார்? அவரது கைக்கு எப்படி வந்தது?
அதுவும் ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த தடியடியை நியாயப்படுத்தும் வகையில் இத்துனைநாள் பாதுகாக்கப்பட்ட படம் எப்படி வெளிவந்தது? இதை விசாரித்தால் திடுக்கிடும் தகவல் கிடைக்கிறது.
எச்.ராசாவிற்கு அந்தப் படம் இரண்டு மாதங்களுக்கு முன்பே கிடைத்திருந்தால் அதை அவர் அப்போதே வெளியிட்டிருப்பார். ஜாஹீர் நாயக்கை தடை செய்ய இன்னும் அது பலமாக இருந்திருக்கும்.
ஆனால் அதுபோல எதுவும் முன்னர் வெளியாகாத போது மோடிஜீயின் அரசின் தடியடியை விவகாரத்தைக் காப்பாற்ற இந்தப் படத்தை தடா ரஹீமைத் தவிர எச்.ராசாவிற்கு வேறு யாருமே அனுப்பி வைத்திருக்க வாய்ப்பேயில்லை. எச்.ராசாவுடன் தடா ரஹீம் எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறார் என்பதற்கு இந்த பைக் விவகாரம் ஒரு ஆதாரம்.

தடா ரஹீம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ISIS டீ.சர்ட்டை மாட்டியிருந்த இளைஞர்களைத் தேடித்தேடி கைது செய்த காவல்துறை, ஒசாமா படம் ஒட்டிய  தடா ரஹீம்  மின் தொண்டரை கண்டு கொள்ளாமல் இருப்பதும், வண்டி ஓட்டியவர் என் தொண்டர் என்று தடா ரஹீம் சொல்வதும், யாரென்றே தெரியாது என்று காவல்துறை சொல்வதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது. அதுமட்டுமின்றி தடா ரஹீம் வாக்குமூலம் கொடுத்தும் அதை காவல்துறை சட்டை செய்யாமல் இருப்பதும் காவிகளுக்கும் தடா ரஹீமிற்கும் உள்ள உறவை பலப்படுத்துகின்றது. தடா ரஹீமை இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சதக்கத்துல்லாதான் இணைத்து வைத்தார் என்றும் கூறப்படுகின்றது.
பணத்துக்காக எதையும் செய்யும் கொள்கையை உடைய தடா ரஹீம், இன்றைக்கு சமுதாய துரோகியாய், சமுதாயத்தை வீழ்த்தும் கோடாரிக்காம்பாய் மாறி நிற்பதை இந்தச் சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்

அஹ்மத் கபீர்.

மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

 

மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும் மெரினாவின் கடைசி நிமிடங்களைக் கடந்துவர இன்னும் இயலவில்லை. இன்னும் அந்தக் கிழிந்த கால்சட்டையைக் கழற்றாமல் அமர்ந்திருக்கிறேன். அதிகாரிகள் நடத்திய நாடகங்கள், கண்முன் வெளிப்படையாகச் செய்த சூழ்ச்சிகள், சினிமாவைவிட அதிபயங்கரமாக இருந்தன. ஓர் அதிகாரக்குரலின் கூச்சலில் விடிந்த அந்தப் பொழுதில் கண் விழிப்பதற்குள் விழுந்தது அடி. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மீண்டும் இரு அடிகள். அனைத்து இளைஞர்களும் பொதுமக்களும் கடலை நோக்கி ஓடத் தொடங்கினோம். லத்தியுடன் துரத்திக்கொண்டே வந்தனர் போலீஸ்காரர்கள். சேலைக்கட்டி ஓட முடியாமல் சில பெண்கள் தடுமாற, அவர்களை ஒரு பொம்மைப்போல் தூக்கி வீசினர் காவல் துறையினர். நான்கு திசைகளிலும் சிதறி ஓடினோம்; கடலுக்குள் இறங்கினோம்; காலில் விழுந்து மன்றாடினோம். சில மாணவர்கள் அப்படியே கடல் அலைகளுக்குள் மூழ்கினார்கள். இறந்துவிடுவார்களோ என்று பயந்து பின்வாங்கியது காக்கிச் சட்டை. அவர்களை மீட்டுவந்து மனிதச் சங்கிலி அமைத்தோம்; ‘போலீஸ் வெளியேற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தோம்; பெண்களையும் குழந்தைகளையும் எங்கள் மையத்தில் வைத்தோம்.

நிலைமை சற்றுச் சீரான பிறகு சுற்றிலும் அழுகுரல்கள், தேடல்கள். ‘தனது நண்பரின் கை முறிக்கப்பட்டு அவர் துடித்தபோதிலும்… தொடர்ந்து அடித்தனர் போலீஸார் என்றும், சில மாணவர்கள்… அவரை, தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர் என்றும், அடிபட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கரு கலைந்துவிட்டது’ எனவும் அழுதுகொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 8 ஆயிரம் மக்கள் இருந்தோம். கூட வந்த உறவுகள் எங்கே எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருக்க, இங்கிருந்து கலைந்துசென்ற மாணவர்களில் சிலர் பட்டினம்பாக்கம் வழியாக மெரினாவை நோக்கி ஓடிவந்தனர். அவர்களைத் தடுக்க போலீஸார் லத்திகளுடன் ஓடினர். மாணவர்களுள் சிலர், கடலில் குதித்து நீச்சல் அடித்து எங்களுடன் வந்து சேர்ந்தனர். மற்றவர்கள்ம் அப்படியே நின்றனர். மேலும், சிலர் விவேகானந்தர் இல்லத்தின் வலப்புறம் இருந்து ஓடிவந்தனர். இந்தத் தடியடி சம்பவத்தை அறிந்த குப்பத்து மக்களும் மீனவர்களும் துறைமுகச் சாலையின் வழியே வந்து போராட்டக் குழுவோடு இணைந்தனர். 9 மணியளவில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடிவிட்டோம். நேரம் ஆக ஆக… பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக கழிப்பறை தேடி அலைமோதினர்.
சில பெண்கள், காவல் துறையினர்களிடம் சென்று பையோ டாய்லெட்டை உபயோகிக்க அனுமதி கேட்டனர்; மறுத்துவிட்டனர். ‘அதை எடுத்துவந்து இங்கே வைத்துக்கொள்ளலாம்’ என்று எங்களுள் சிலர் முன்னேற… லத்திகளுடன் ஓடி வந்தனர் போலீஸார். வேறு வழியின்றிச் சில பெண்கள்  வயிற்றைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துகொண்டனர். இதைப் பார்த்த மாணவர்கள் உடனே, கடற்கரை மணலில் பெரிய குழிதோண்டி… தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்களையும் துணிப் பைகளையும் கிழித்து, கட்டைகள் வைத்து கழிப்பறை கட்டத் தொடங்கினர். இதைக் கண்ட மீனவ மக்கள், ‘நாங்க தங்குற குடிசை இருக்கு; பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துட்டோம்; இதைச் சுத்தி துணியைக் கட்டி கழிவறையா பயன்படுத்திக்கோங்க’ என்றனர். நெகிழ்ந்துவிட்டோம். தங்கள் இருப்பிடத்தைக்கூட மாணவர்களுக்காக கழிப்பறையாக மாற்றித் தந்தனர் மீனவர்கள். கழிப்பறை காட்டியதை காணொலியாகப் பதிவுசெய்தோம்.
 
 

 
 
 
அந்தக் குடிசையைச் சுற்றி நம் மாணவர்கள் நின்றுகொண்டு, எந்த போலீஸாரும் வராமல் பார்த்துக்கொண்டனர். மாணவர்களுக்காகக் கொண்டுவந்த உணவையும், நீரையும் தடுத்துநிறுத்தி போலீஸார் பிடுங்கி உண்டனர். மிச்சம் இருந்த உணவுகளைக் கழிவறையில் கொட்டினர். இந்தத் தகவல் அறிந்த மீனவர்கள், சிறிது நேரத்தில் உணவு மற்றும் நீருடன் ஒரு பெரிய லாஞ்சு போட்டுடன் அங்கு வந்தனர். கரையில் இருந்த மீனவர்கள் தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு சென்று உணவுகளை நிரப்பிவந்தனர். மேலும், இரண்டு படகுகளில் இருந்து உணவும் நீரும் வந்தது. ‘தம்பி கோட்ரஸ்ல சொல்லிட்டோம். கடனுக்கு டீசல் வாங்கிக்கொண்டு வர்றாங்க. இன்னும் எத்தனை பேருக்கு சாப்பாடு தேவைன்னு சொல்லுங்க தம்பி, எங்க புள்ளைகளுக்கு நாங்க கொண்டு வர்றோம்’ என்று குதூகலித்தனர் மீனவத் தோழர்கள். அவர்களுக்கு பதில் கூறும்முன் போலீஸார் லத்திகளுடன் எங்களை நோக்கி ஓடிவந்தனர்.
மிரண்ட எங்கள் கூட்டத்தினர் அனைவரும் ஒரு வட்டமாகச் சேர்ந்தோம். குப்பத்து பாட்டி ஒருவர், ‘இங்கிட்டு வாங்க புள்ளைகளா, எங்களைத் தாண்டி உங்களை அடிக்கமாட்டாங்க’ என்று சிவப்புச் சீலையை கொடிபோல ஆட்டி பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முன்சென்று நின்றார். ஒன்றுகூடி கோஷமிட்டதனால் ஓடி வந்த காவல் துறையினர் ஒடுங்கி நின்றனர். கலைந்து செல்லச் சொல்லி எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடற்கரைச் சாலையின் பின் இருந்து, கறும்புகை கிளம்பிக் கொண்டிருந்தது. பெரிய தீ விபத்து நடந்ததுபோல இருந்தது. ‘உங்கள் மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். இப்போது நீங்கள் கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்துவோம்’ என்றார் போலீஸ் உயர் அதிகாரி.
கலைந்து சென்ற நம் மாணவர்களுள் சிலர், விவேகானந்தர் இல்லத்தின் வலது புறம் இருந்த கோட்ரஸின் மாடியில் நின்றிருந்தனர். அவர்களுக்கு போன் செய்து விசாரித்ததில், காவல் துறையினர்தான் வண்டிகளுக்குத் தீ வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ‘நம் மாணவர்கள் யாரும் அங்கு இல்லை’ என்று கூறினர். அப்போது, திடீரென காவல் துறையினர் மீது எங்கள் கூட்டத்தில் இருந்த சிலர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இதனால், ஆவேசமான காவல் துறையினரை நாங்கள் தடுத்து நிறுத்தி, செருப்புகளையும் கற்களையும் எறிந்தவர்களைப் பிடித்து அவர்களிடம் ஒப்படைத்தோம். போலீஸாரும், அவர்களைச் சிரித்துக்கொண்டே அரவணைத்துக்கொண்டனர். காரணம், எங்கள் கூட்டத்துக்குள் மஃப்டியில் இருந்த போலீஸார்தான் இந்த அநாகரிகச் செயலை செய்தது. ‘எங்கள்மீது இன்னொரு முறை செருப்புகளோ பாட்டில்களோ விழுந்தால் கண்டிப்பாக தடியடி நடத்துவோம்’ என்றார் உயர் அதிகாரி. எங்கள் மீது தடியடி நடத்தியே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் இருந்து கலவரத்தைத் தூண்ட சில போலீஸார் அங்கு நின்றிருந்தனர். காவல் துறையின் இந்தச் சதியை அறிந்து அனைவரும் அப்படியே தரையில் அமர்ந்தோம். அமர்ந்தவர்களைச் சுற்றி மனிதச் சங்கிலி போட்டு அரணாக நின்றனர் சில மாணவர்கள்.

மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

மேலும், எவரும் காவல் துறையினரை நோக்காமல் கடலை நோக்கியே திரும்பி உட்கார்ந்தோம். எங்கள் கூட்டத்துக்குள் கற்களை போலீஸார் மீது வீசக் காத்திருந்த சில விஷமிகளை மாணவர்களுள் சிலர் வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்களுள் சிலர், போலீஸாருடன் கைகோத்தனர். ‘வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம்’ என குரல் வற்ற கத்திய போராட்டக் குழு, அவ்வளவு அழகாகவும் வழிநடத்திக் கொண்டிருந்தது. அதையும் மீறி போலீஸார் மீது எறியப்பட்ட செருப்புகளையும்… பாட்டில்களையும் நாங்கள் தடுத்தபோதிலும் போலீஸார் எங்கள் மீது தடியடி நடத்தினர். சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் தடியடி நடத்தக் கூடாது என்று தடை வாங்கி வந்தனர். எந்த ஒரு வன்முறையும் நடக்கக் கூடாது என்று அவ்வளவு உறுதியாகத் திட்டம் வகுத்தனர் மாணவர்கள். உச்சிவெயில், தண்ணீர் இல்லாததால் சில மாணவர்கள் மயங்கிவிழுந்தனர். அவர்களை தூக்கிக் கொண்டு ஓடினர், கூட்டத்தினர். தகவல் அறிந்து தண்ணீருடன் ஓடிவந்த சில மாணவர்களைத் தடுத்து, அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடினர் காவல் துறையினர். எங்கள் கண்முன்னே அந்தத் தண்ணீரை… அவர்கள் பகிர்ந்து அருந்தினர். இவ்வளவு வெறியாட்டம் இங்கே நடந்துகொண்டிருக்க, சில நியூஸ் சேனல்களில் – ‘மெரினாவில் மாணவர்கள் கலைந்துசென்றனர். தற்போது தேசியக்கொடியை எரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்’ என்று செய்திகள் வெளியாகின. அவ்வளவு நாள் எங்களுக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரும், ‘வெளியேறுங்கள்’ என்று கூறி கைவிட்டார்கள். பிறகு லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் வந்ததும்… தோழர் தியாகு மற்றும் நீதிபதிகள் வந்ததும் நடந்ததும் நாடறிந்ததே…
‘சட்டம் இயற்றப்பட்ட பிறகும்… ஏன் அங்கு அமர்ந்திருந்தீர்கள்’ என்று கேட்கும் அன்பர்களே…
நாங்கள் அவ்வளவு உறுதியாக அங்கே அமர்ந்திருந்ததற்கான காரணமும்… எங்கள் கேள்விகளும் இதுதான்…
மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

 
அன்று மாலை எங்களிடம் பேச வந்த நீதிபதி ஹரி பரந்தாமன், ‘சற்றுநேரத்துக்கு முன்தான் எங்களுக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கானஅதிகாரபூர்வமான அறிக்கை வந்தது’ என்றார். ‘சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமல் நாங்கள் எப்படிக் கலைந்துசெல்ல முடியும்’ என்று காவல் துறையினரிடம் கேட்டதற்கு, ‘நீங்கள் செல்லவில்லை என்றால்… தடியடி நடத்துவோம்’ என்றனர். ‘சரி, மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். அவகாசம் கொடுங்கள்’ என்று மன்றாடினோம். இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்திருந்தால், மக்களுக்கு அதைப் புரியவைத்து கலைந்து சென்றிருப்போம். பத்து நிமிடம்கூட அவகாசம் கொடுக்காமல் வேண்டுமென்றே அடித்துவிரட்டினார்கள், போலீஸார்.
அத்தனை மக்களும் அங்கு அமர்ந்திருக்க… கலவரம் செய்தது யார் என்று உங்களுக்குத் தெரியாதா? எந்த ஒரு வெற்றியும் இன்றி, 6 நாட்கள் வெந்துகிடந்த இந்த மாணவர்கள் எப்படி கலைந்துசெல்வர்? எங்களுக்குள் இருந்த விஷமிகளை நாங்கள் தடுத்துவிட்டோம். கலவரத்தை உண்டு பண்ணியது காவல் துறைதான் என்பதும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இன்று அந்தக் குப்பத்து மக்கள் மீதும்… மீனவர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது காவல் துறை. இப்படியொரு வெறியாட்டத்தை காவல் துறையினரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
அந்த மக்களுக்கோ, கைது செய்யப்பட்ட எங்கள் மாணவர்களுக்கோ அநீதி இழைக்கப்படுமெனின்.
மீண்டும் ஒரு போராட்டம் நடக்கும்.
நாளை காவல் துறையினருக்கு ஓர் அநீதியெனில்கூட,
மீண்டு வர போராட்டம் நடக்கும்!’
 
Thanks Vikatan

மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?

மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?

மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?

மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?

மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ? போராட்டத்தில் தேச விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பது வழக்கமான பா.ஜ.க ப்பாட்டு.
ஜே.என். யூவில் அவர்கள் செய்ததை ஐ, ஐ.டியில் அவர்கள் செய்ததை இப்போது மெரீனா போராட்டத்திலும் செய்கிறார்கள்.
மொழி உரிமைக்கு, இன உரிமைக்குப் போராடுவது தேச விரோதம் என்றால் அந்தத் துரோகத்தை ஒவ்வொரு தமிழர்களும் மனமுவந்து செய்வார்கள்.
தேசிய கொடி அவமதிக்கப்பட்டது போன்ற விஷயத்தை யாராவது செய்திருந்தால் அவர்களை விசாரிக்கவேண்டுமே தவிரஒட்டு மொத்த மக்களையும் ஏன் தண்டிக்க வேண்டும்? மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ? அவர் என்ன கடவுளா?
கடவுளையே விமர்சித்த மண் இது. ஒசாமா பின்லேடன் படம் ஸ்கூட்டரில் ஒட்டி இருந்தது என்றெல்லாம் ஒரு முதலமைச்சர் கூச்சம் இல்லாமல் சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்போலப் பேசுகிறார்.
பின்லேடன் படம் ஒன்றும் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட படம் இல்லையே? அதை ஒருவர் வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?
மகத்தான மக்கள் எழுச்சியை பொறுக்கிகள் போராட்டம் என்று சொன்ன சுப்பிரமணியம் சுவாமிக்கும் போராடிய மக்களை வன்முறையாளர்கள்
என்றுசொல்லும் இன்றைய முதல்வருக்கும், அவருக்கும் கீழே இருக்கும் காவல்துறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மெரீனாவில் தேசிய கீதத்தை இசைத்துக்கொண்டும் அப்துல் கலாம் படத்தை வைத்துக்கொண்டும் பலரும் போராடிகள்,
அவர்களும் தேசவிரோதிகளா” சமூக விரோதிகளா? முதலமைச்சர் போராடும் இளைஞர்களின் கண்ணியத்தைப் பாராட்டிய 24 மணி நேரத்தில் அவர்களைச் சமூக விரோதிகள் என்கிறார்.
இளைஞர்களின் எழுச்சியை யுகப்புரட்சியாய் விளம்பர இடைவேளை இன்றிக் காட்டிய ஊடகங்கள் இப்போது அவர்களைச் சமூக விரோதிககளாகக் காட்டும் கருத்துக்களை இடைவிடாமல் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன.
உண்மையில் இவர்கள் எல்லாம் எப்போதாவது மக்கள் பக்கம் மனப்பூர்வமாக நின்றிருக்கிறார்களா?
(உயிர்மை ‘ மெரீனா தமிழ் வசந்தம்’ சிறப்பிதழுக்கு எழுதிக்கொண்டிருக்கும் தலையங்கத்திலிருந்து)
மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?
Written By Manushya Puthiran

தேச துரோகிகள் கோவையில் கூடும் நாள் மக்களே கவனம்

  1. தேச துரோகிகள் கோவையில் கூடும் நாள் 29.01.2017…தமிழக மக்களே கவனம்!!!.
    கோவையில்
  2. நாட்டு நாய்களுக்கு உதவுவது போல் சேகரித்து கூண்டோடு அழிக்கும் ஹுயூமன் அனிமல் சொசைட்டி(HAS).
  3. ஜல்லிக்கட்டுக்கு ( நாட்டு நாய் )  எதிராகச் செயல் படும் பீட்டாவின் துணை அமைப்பான ஹுயுமன் அனிமல் சொசைட்டி (HAS)ஆனது வருகின்ற 29/01/2017 அன்று கோவை PSG CAS ல் பின்னணி பாடகி சித்ரா கலந்து கொள்ளும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  4. இதற்கு அனுமதி கட்டணமாக ரூ.5,000, 2,500, எனப் பல லட்சங்கள் கோவை மக்களிடமிருந்து நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
  5. இந்தப் பணத்தை சல்லிக்கட்டு எதிரான வழக்கு தொடர்வதற்கும், ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்காகவும் பயன் படுத்த உள்ளனர்.
    நாட்டு நாய்
  6. பொதுமக்களிடமிருந்து பல லட்சம் வசூல் செய்து பொதுமக்களின் ஆதரவு பெற்ற ஜல்லிக்கட்டை எதிராக அமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சியைத் தடைசெய்ய கோரி கோவை
  7. காவல்துறை ஆணையர் அவர்களிடம் கோவை வழக்கறிஞர்கள் சார்பாக இன்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
  8. நமது பணத்தை பெற்று நம்மை அடக்க நினைக்கும் இது போன்ற அமைப்புகளை வண்மையாகக் கண்டிப்பதுடன் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம்.
  9. தேச துரோக கும்பலை அடையாளம் காண்போம்…
    ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க யார் காரணம்?…எத்தனை அமைப்புகள், யாரெல்லாம் எதிராக மனு செய்தனர், தெரியுமா?.
    கோவையில்
  10. ஜல்லிக்கட்டுப் போட்டிக்குக் கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதிக்க எத்தனை அமைப்புகள் மனு செய்தன, யாரெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்தார்கள் என்ற விவரம் வௌியாகி உள்ளது.
  11. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற புகாரின் அடிப்படையிலும்,
  12. தமிழ்நாடு ஜல்லிகட்டு நெறிமுறை சட்டம் 2009ன்கீழ், விலங்குகள் நலச்சட்டங்களுக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மே 7-ந்தேதி போட்டி நடத்த தடைவிதித்து உத்தரவிட்டது. அதன்பின், கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.
  13. இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டுப்போட்டிக்காகத் தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியுள்ளது.
  14. ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை உருவாகக் காரணமாக இருந்த விலங்குகள் நல அமைப்புகள், உறுப்பினர்கள்குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
  15. இதன்படி 12 தொண்டு நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு தடைக்கு ஒன்று சேர்ந்து உழைத்துள்ளன.5 விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
  16. மேலும், தனிப்பட்ட முறையில் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
  17. ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை உருவாகக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் அமைப்புகள்-
    1. பீட்டா
    2. ஏ.டபிள்யு.பி.ஐ.(இந்திய விலங்குகள் நல வாரியம்)
    3. எப்.ஐ.ஏ.பி.ஓ.( இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு)
    4. எச்.ஏ.எஸ். (ஹியூமேன் அனிமல் சொசைட்டி)
    5. சி.யு.பி.ஏ.(கம்பேஷன் அன்லிமிடட் பிளஸ் ஆக்‌ஷன்)
    6. எஸ்.பி.சி.ஏ. ( மிருகவதை தடுப்புக்கான சமூகம்)
    7. பி.எப்.ஏ.(பீப்பிள் பார் அனிமல்ஸ்)
    8. பி.எப்.சி.ஐ. (இந்திய கால்நடைகளுக்கான ஆதரவு அமைப்பு)
    9. யு.எஸ்.ஐ. (யூனியன் சொசைட்டி இன்டர்நேஷனல்)
    10. ப்ளூ கிராஸ் (ப்ளூ கிராஸ் இந்தியா)
    11. எச்.எஸ்.ஐ. (ஹியுமேன் சொசைட்டி இன்டர்நேஷனல்)
    12. டபிள்யு. எஸ்.பி.ஏ.(உலக அளவிலான விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு)
  18. ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள்
    1. பீட்டா
    2. எப்.ஐ.ஏ.பி.ஓ.(இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு).
  19. 3. சி.யு.பி.ஏ.(கம்பேஷன் அன்லிமிடட் பிளஸ் ஆக்‌ஷன்)
    4. பி.எப்.ஏ.(பீப்பிள் பார் அனிமல்ஸ்)
  20. 5. எச்.எஸ்.ஐ. (ஹியுமேன் சொசைட்டி இன்டர்நேஷனல்)
    மேற்குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்புகளில் பிரதிநிதிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள்.
    1. பூர்வா ஜோஷிபுரா(பீட்டா,
  21. தலைமை நிர்வாக அதிகாரி, இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துணை உறுப்பினர்)
    2. சின்னி கிருஷ்ணா, துணைதலைவர், (இந்திய விலங்குகள் நலவாரியம்), தலைவர், (பி.ஐ.ஏ.பி.ஓ., ) (யு.எஸ்.ஐ.ஞத்தலைவர், ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவர், (டபிள்யு.எஸ்.பி.ஏ). சர்வதேச இயக்குநர்
    3. நந்திதா கிருஷ்ணா (சின்னி கிருஷ்ணாவின் மனைவி)
    எச்.ஏ.எஸ். அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர், ப்ளூகிராஸ் அமைப்பின் துணைத்தலைவர், எச்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர்.
    4. ஆர்.எம். கார்ப், தலைவர், (விலங்குகள் நல வாரியம்)
    5. மேனகா காந்தி, தலைவர், (பி.எப்.ஏ.)
    6. கவுரி மவுலேகி, துணை உறுப்பினர் (இந்திய விலங்குகள் நலவாரியம்), (எஸ்.பி.சி.ஏ. டெஹ்ராடூன்) நிர்வாகச் செயலாளர், (பி.எப்.ஏ.) துணைத்தலைவர்
    7. சவுமியா ரெட்டி, துணை உறுப்பினர்(இந்திய விலங்குகள் நலவாரியம்), கர்நாடகமகிளா காங்கிரஸ் மாநிலச் செயலாளர்(கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர்ராமலிங்காரெட்டியின் மகள்)
    8. அருண் பிரசன்னா, (பி.எப்.சி.ஐ) நிறுவனர்.
    உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஆவணங்கள் தாக்கல் செய்தோர் பட்டியல்
    1. மணிலால் வலியாட்டே, (இந்திய விலங்குகள் நலவாரியத்தின் அதிகாரி), (கால்நடை மருத்துவர், பீட்டா)
    2. அபிஷேக் ராஜே, (இந்திய விலங்குகள் நலவாரிய அதிகாரி)
    3. மனோஜ் ஓஸ்வால் (பீட்டா ஆர்வலர், இந்திய விலங்குகள் நலவாரியத்தின் அதிகாரி)
    தனிநபராக மனு செய்தவர்கள் பட்டியல்
    1. ராதா ராஜன்
    (விஜிஆன்லைன், இணையதள நாளேட்டின் ஆசிரியர்),
    2. சவுமியா ரெட்டி, துணை உறுப்பினர்(இந்திய விலங்குகள் நலவாரியம்) , கர்நாடாக மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலாளர்(கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர்ராமலிங்காரெட்டியின் மகள்)
    3. கவுரி மவுலேகி, துணை உறுப்பினர் (இந்திய விலங்குகள் நலவாரியம்), நிர்வாகச் செயலாளர், (எஸ்.பி.சி.ஏ. டெஹ்ராடூன்), (பி.எப்.ஏ.) அமைப்பின் துணைத்தலைவர்
    இதில் உள்ள தேசத் துரோக கொடியவர்களை அடையாளம் காணும் நேரம் வந்து விட்டது.
  22. அனைவரும் அடையாளம் காண செய்யுங்கள்.
    இச்செய்தியை அனைவருக்கும் பகிரவும்.!
    நடத்துபவர்கள மட்டும் தேச துரோகி அல்ல.
    இடம் கொடுப்பவரும், காண வருபவர்களுமே பீட்டா ஆதரவு தேச துரோகிகள்தான்.
  23. “என் மக்கள்”
    கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
  24. My People

மெரினாவில் நடக்கவிருந்த மத கலவரம் ஒன்று

  1. மெரினாவில் நடக்கவிருந்த மத கலவரம் ஒன்று மக்களின் ஒற்றுமையால் நடக்காமல் தடுக்க பட்டுள்ளது மெரினா புரட்சி அல்லது ஜல்லிக்கட்டு புரட்சி என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்
  2. ஆனால் அதில் பங்கேற்றவர்களில் உணர்வு ஒரே புள்ளியில் தான் இருந்தது அப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் எந்த வித மத சயமோ அல்லது ஜாதிகளின் பெயர்சொல்லியோ கலந்து கொள்ளவில்லை,
  3. எல்லா மதத்தினரும் ஜாதியினரும் கலந்துகொணடனர் போராடினர் ஆனால் சில கருப்பு ஆடுகள் அதில் உள்ளே இருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது
  4. இந்திய தேசிய லீக் கட்சி தொண்டரை கைது செய்ய வேண்டும் என நேரிடையாக சொல்லாமல் இந்த வாகனம் ஓட்டியவரை கைது செய்யுங்கள் என சிலர் பரப்புரை செய்கின்றனர்…
    இந்த இருசக்கர வாகனம் இந்திய தேசிய லீக் கட்சி தொண்டருடையது தான்
    இந்த இருசக்கர வாகனம் BJP RSS தொண்டர்களுடையது இல்லை…

    இதை பலமுறை முகநூலில் செய்தி போட்டாச்சு
    இந்த பதிவு போட்டவர்களிடம் அலை பேசியிலும் தொடர்பு கொண்டு பதிவை நீக்க சொல்லி பல முறை முயன்றும் பலன் இல்லை
    காவல் துறை இந்த வாகனம் இந்திய தேசிய லீக் கட்சி தொண்டருடையது என முதல்வருக்கு தகவல் கொடுத்து முதல்வர் சட்ட மன்றத்தில் பேசியுள்ளார்…
    பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை நடந்த போது எடுத்த புகைப்படத்தை பிஜேபி எச்.ராஜா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுத்தது என பதிவு போட்டு சர்ச்சையை ஏற்படுதியதை …
    இந்திய தேசிய லீக் கட்சி மீது வன்மம் கொண்ட சில சகோதர அமைப்பு தலைவர்கள் எங்களை நேரிடையாக எதிர்க்க முடியாமல் தங்களின் தொண்டர்கள் மூலம் இந்த பிரச்சனையை பெரிது படுத்தி உள்ளனர் ..
    BJP RSS அமைப்புகளை எதிர்க்க பல வழிகள் இருந்தும் இந்த பொய்யான செய்தியை பரப்பி இந்திய தேசிய லீக் கட்சியை அழிக்கலாம் என நினைக்கின்றனர் …
    அல்லாஹ் நாடியதை தவிர வேறு எதுவும் நம்மை வந்து அடையாது …
  5.  தற்பொழுது இந்தியதேசிய லீக் கட்சி… தலைவர் தடா ரஹீம் வெளியிட்ட தகவல்
  6. மத கலவரம்

    மத கலவரம்

    மத கலவரம்

    .
  7. மத்திய அமைச்சரின் பேச்சை கேலி செய்து ஒருவர் பதிவு இது 
  8. போராட்டக்களத்தில் அவர்கள் ஏன் தொழுகை நடத்தினர்? – பொன்.ராதாகிருஷ்ணன்.
  9. அவனுக்குத் தமிழன் என்ற உணர்வு இருக்கு. அதனால் வர்றான் அய்யாசாமி
  10. உங்க கும்பலுக்கு இந்தியன் என்கிற உணர்வு தவிர ஏதும் இல்லையே அய்யாசாமி
  11. டேஷ் பக்தி மட்டும் போதாது. மொழிப்பற்று கொஞ்சமாவது வேணும் அய்யாசாமி
  12. இந்தி சம்ஸ்கிருதம் எனச் சட்டி தூக்கிட்டு இருக்கிற உங்க கும்பலுக்குத் தமிழோட அருமை எப்படி தெரியும் அய்யாசாமி!
  13. அங்க முருகன் கோவிலுக்கு மாலை போட்டவனும் வந்திருந்தான் அய்யாசாமி.
  14. அவனுக்கு கோவிலுக்குப் போனா சந்தோசம்.
    சிலுவை போட்டவன் வந்திருந்தான் அய்யாசாமி.
    அவனுக்குச் சர்ச் போய்க் கும்பிட்டா சந்தோசம்.
  15. முஸ்லீம் வந்திருந்தான். அவனுக்கு மேற்கு திசையே கோவில் தான் அய்யாசாமி.
  16. அவன் மசூதிக்குத் தனியா போகாம அங்கேயே தொழுதானே அய்யாசாமி.
    அவனவன் பார்வையில் இருக்குது அய்யாசாமி.
    அங்கே மாலை போட்டவனும், சிலுவை போட்டவனும் சேர்ந்து தான், குல்லா போட்டவனும் தொழுகை நடத்த ஏற்பாடு பண்ணினாங்க.
  17. அது அவங்க ஒற்றுமை அய்யாசாமி.
    அது உங்களை மாதிரி கழிசடைகளுக்கு பிடிக்காது அய்யாசாமி.
    திருடுன பிரியாணி அண்டாவை உங்க க்ரூப் இன்னும் திருப்பித் தரல அய்யாசாமி
    #ஆனந்த்குமார்_சித்தன்

உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.

  1. காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில்,
  2. தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. “அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!” என்று அரச கைக்கூலிகள் அறிவித்தபின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது.
    போராட்டம்
  3. மாணவர்கள்மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.
    பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். “மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.
  4. அரசியல் பேசக் கூடாது.” அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.
    இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும்.
  5. இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும்.
  6. அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டிப் புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களைச் சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?
  7. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், “தேசியக் கொடி பிடித்தால்,
  8. தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது” என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்
  9. . “ஜனகண மண” பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவைச் சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
  10. தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும்பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
  11. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை.
  12. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.
  13. ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில்
  14. , பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.
    போராட்டக் களத்திற்குள் இடது சாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசைப் பீதியுற வைத்துள்ளது.
  15. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள்.
  16. இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.
  17. இனிவரும் காலங்களில் இடது சாரி அமைப்புகள்மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம்.
  18. “தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்” என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம்.
  19. அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
    சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடது சாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
  20. (நாம் தமிழர் என்ற வலது சாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)
    மேலும்,
  21. “பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், “தோழர்” என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்” சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
  22. அதன் அர்த்தம் என்ன? இடது சாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?
  23. பெற்றோரே பிள்ளைகளைக் காட்டுக் கொடுக்க வேண்டும்” என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
  24. Written By Kalai Marx 
  25. https://youtu.be/hf80oy0gK3g   

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left