Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜல்லிக்கட்டு போரட்டம் எப்போதும் கண்டிராத கூட்டம்

ஜல்லிக்கட்டு போரட்டம் மிக அதிகமான ஆதரவையும் எப்போதும் இது கண்டிராத கூட்டத்தை கூட்டி இருக்கிறது .இதற்கு மேல் என்ன எதிர்ப்பு இருந்தாலும் கூட்டம் அடங்காது , இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டு இருந்தாலும் அங்கே பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் பதிவு இங்கே தருகிறோம்
இது_ஒரு_சகோதரியின்_பதிவு
3 நாட்களாகப் பகலில் மட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். நேற்று இரவுப் போராட்டம் தீவிரமடைய அங்கயே இரவு முழுவதும் அமர்ந்திருந்தேன்…
வித்தியாசமான பல கோஷங்கள்.
இளைஞர்களின் உற்சாகம்.
இளைஞர்களின் உத்வேகம்…
“ஏம்மா காலேஜ் கிளம்பிட்டியா… இந்தப் பக்கமா போகாத… பக்கத்துல இருக்குற பொறுக்கி பசங்க போற வரப் பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு திரியுதுங்க. பாத்து போ”
இந்த மாதிரியான ஆண்களைப் பார்த்துப் பார்த்து ஆண்கள் எல்லாருமே இப்படித்தானோ.? என்ற எண்ணம்…
நம்ம அப்பா கூட அம்மாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படித்தான் இருந்திருப்பாரு போல. என்றெல்லாம் எண்ண தோன்றும்.
டெல்லி, கேளம்பாக்கம் போன்ற இடங்களில் நிகழ்ந்த கற்பழிப்பு போன்ற கோர சம்பவங்களைக் கேள்விபடும்போதெல்லாம் ஆண்களைப் பற்றிய தவறான எண்ணம் கொழுந்து விட்டு எரியும்.
ச்சா… என்ன ஆண்கள் இவர்கள்…. எப்படி சலித்துக் கொள்வேன்.
ஆனால் நேற்று ஒரு இரவில்., என் தந்தையுடன் அமர்ந்திருந்தேன். இளைஞர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்…
ஒரு பக்கம் மைக்கில் ஒருவர் ஒருவராகத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படித்தி பேசிக் கொண்டிருந்தார்கள்… கைத்தட்டல் விசில் சத்தமுமாக இருந்தது… ஒருபுறம் வாட்டர் பாக்கெட்டுக்களும், மற்றொரு புறம் இரவு உணவு பொட்டலங்களும் பிஸ்கெட் பாக்கெட்டுக்களும் பறந்து கொண்டிருந்தன…
4 நாட்களாகத் தொடர் போராட்டத்திலும் சற்றும் சோர்வடையாமல் அங்கும் இங்குமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
“சாப்பாடு எல்லாருக்கும் வந்துருச்சா? வரலைன்னா கைய தூக்குங்க”
வியப்பு…
இரத்த உறவு இல்லை… முன் பின் தெரியாது… இப்படியிருந்தும் அவ்வளவு பாசம்…
“பாஸ் நாங்க சாப்பிட்டோம்… சாப்பிடாதவங்களுக்கு கொடுங்க… பர்ஸ்ட் நீங்கச் சாப்பிட்டீங்களா.?”
என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது.
ஆயிரம் தந்தைகளுடனும் லட்சக்கணக்கான சகோதர சகோதரியுடனும் ஒருபிடி சாதம் உண்ட உணர்வு எப்படி இருந்தது தெரியுமா.
அப்படி இருந்துச்சு. சொல்ல வார்த்தை இல்லை. சாப்பிட்டு முடிப்பதற்குள் 2 வாட்டர் பாக்கெட்டுகள் என்னிடத்தில்….
லட்சக்கணக்கான ஆண்களைக் கடந்தே இயற்கை உபாதைகளுக்குச் செல்ல நேர்ந்தாலாலும் ஒருவரின் நிழல் கூட என்மீது விழவில்லை…
முதல் முறை எழுந்து செல்லும்போது அப்பா கூடப் பாதுகாப்புக்கு வந்தார்… 2 வது முறை செல்கையில் எழுந்திருக்க முயற்சி செய்த தந்தையின் தோளில் அழுத்தி நீ இங்கயே இருங்க நாப்போயிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு தனியாவே கூட்டத்தில் சென்றேன்…
அன்றைய இரவிலும் கூட அனைத்து ஆண்களும் என் கண்களுக்கு அழகாகவே காட்சியளித்தனர்…
வித்தியாசமான அடுக்குமொழி வசனங்கள்.
விடியும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது…
விடியற்காலையில் வீடு திரும்புகையில்
அப்பா வண்டி எடுத்திட்டு வர்றேன். இங்கயே இரு’னு சொல்லிட்டு போனாரு.
குப்பைகளை அகற்ற சில இளைஞர்கள் பைகளுடன் சுற்றி கொண்டிருந்தனர்…
குப்பை அள்ளும் ஒருவன்… என்னைக் கண்டு புன்னகைத்தான்… அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு… அப்பா செல்லும் வரை கவனித்திருப்பான் போல.
அப்பா அன்று சொன்ன பொறுக்கி பசங்கள்ல ஒருத்தன்… பதிலுக்கு நானும் புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தேன்…
ஆண்களைப் பற்றிய அத்துனை தவறான எண்ணங்களையும் உடைத்தெறிந்தது…
காலை 8.30 க்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்…
தமிழன்டா.

ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு ஜனநாயக போராட்டம்

  1.  ஜல்லிக்கட்டு போராட்டம்  தமிழ்நாட்டில்  ஒரு ஜனநாயக போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது.
  2. இது வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயம் அல்ல. தற்போது இடது சாரிகளும் கூடப் போராட்டக் களத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
  3. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம். ஆனால், போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு விட்டுக் கொடுக்காது
  4. . இவ்வளவு நாளும் மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 360 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
  5. .இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது.
    ஜல்லிக்கட்டு தடை
  6. வலது சாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே “ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்” என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  7. வணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசுகின்றன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
  8. அதன் மூலம் பாரவையாளர் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்கின்றன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை மூடி மறைக்கின்றன.
  9. அரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம்
  10. . குறிப்பாக இடது சாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்திலிருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.
  11. ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்கின்றன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நிற்கிறார்கள். வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்
  12. Written By Kalai Marx

பீட்டா ஒரு தீவிரவாத அமைப்புதான்! ஆதாரங்கள்

பீட்டா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி விளங்குகளிற்கு எதிரான ஒரு தீவிரவாத ? அமைப்புதான் இது வெறுமனே பீட்டா மீது உள்ள தனிப்பட்ட காழ்புணர்ச்சியோ அல்லது தனிப்பட்ட பீட்டா எதிர்ப்புக்காகவோ அல்ல,  இதோ படியுங்கள் மற்றும் ஒரு  தெளிவான பதிவ ,ஆனந்த விகடன்   முதலில் நமது தளத்தில் தான் இதை பற்றித் தெளிவாக எழுதி இருந்தோம், அதற்கு முன்பு எந்த ஒரு பலம் வாய்ந்த பிரபலமான ஊடகமும் தமிழில் முதலில் வெளிப்படுத்தவில்லை, 18/1/2017 அன்று பதிவிட்டு இருந்தோம் ஆகவே நிச்சயமாகப் பீட்டா தடை செய்ய வேண்டிய அமைப்புதான்
தமிழக இளைஞர்களுக்குள் இருந்த போராட்ட குணத்தையும், இன உணர்வையும் வெளிக் கொண்டு வர முக்கிய பங்காற்றிய பீட்டா அமைப்பு தன்னை விலங்குகள் உரிமைக்காக போராடும் அமைப்பு என உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் அது அடையாளம் அல்ல, பீட்டாவின் ரத்த சாயம் பூசிய முகமூடி என்று அதிர்ச்சித் தகவல்களை போட்டு உடைக்கிறது Peta Kills Animals(PKA) என்ற அமைப்பு. பீட்டா எப்படி ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாக உலகம் முழுவதும் இயங்கி வருகிறதோ, அதே அளவு பலத்துடன் Peta Kills Animals(PKA) அமைப்பும் பீட்டாவை எதிர்த்து முழு வீச்சில் இயங்கி வருகிறது.
பீட்டா
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பீட்டாவின் தலைமையகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற விலங்குகளுக்கான காப்பகத்தை இயக்கி வருவதாக பதிவு செய்திருக்கிறது பீட்டா. இங்கு தான், கடந்த 1978-ம் ஆண்டு முதல் 2015 வரை 27 ஆண்டுகளில் மட்டும் 34,970 நாய் மற்றும் பூனைகளை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடுகிறது (PKA).
விர்ஜீனியாவின் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம், மேற்கூறிய ஆண்டுகளில், பீட்டா எத்தனை விலங்குகளை எடுத்துக் கொண்டுள்ளது, அதில் எத்தனை விலங்குகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றியுள்ளது, தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது, எத்தனை கருணை கொலை செய்யப்பட்டது போன்ற தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்.
 
பீட்டா
பீட்டாவுக்குள் நுழைந்த 40,328 நாய் மற்றும் பூனைகளில், 5468 மட்டுமே உயிருடன் வெளியே சென்றிருப்பது தெரியவந்துள்ளது. நாய் மற்றும் பூனைகளை சேர்த்து கொல்லப்பட்டவை மொத்தம் 34,970. அதாவது, பீட்டாவுக்குள் வரும் 87 – 90% விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.
அந்நாட்டு சட்டப்படி, ஆதரவற்றதாக கருதப்படும் விலங்குகளை 15 நாட்களுக்கும் மேலாக யாரும் சொந்தம் கொள்ளவோ, தத்தெடுக்கவோ வராவிட்டால் கருணை கொலை செய்யலாம் என்கிறது. ஆனால், இந்த விதிமுறையை பீட்டா பின்பற்றவே இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது.  பீட்டா தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்ட 84% விலங்குகள்,  24 மணி நேரத்துக்குள் கொலை செய்யப்பட்டுள்ளன. இதனை கருணை கொலை என்கிறது PETA
கொண்டு வரப்பட்ட விலங்குகள் எதுவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவையோ, காயமடைந்து உயிருக்கு போராடும் வகையில் இருந்ததாகவோ பீட்டா கூறவில்லை. 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், 24 மணி நேரத்துக்குள் விலங்குகளை கொலை செய்ய அப்படி என்ன தேவை வந்தது என்பதற்கு பீட்டாவிடம் பதில் இல்லை. ஆக, நன்றாக இருந்த நாய் மற்றும் பூனைகளை ஏன் பீட்டா! கொல்ல வேண்டும்?.
சரி கருணை கொலை செய்ததாகவே வைத்துக் கொள்வோம். சோறு போடும் சாமியாக தமிழர்கள் கருதும் காளைகளையும், அவற்றை சிறப்பிக்க நடத்தும் திருவிழாவான ஜல்லிக்கட்டையும் துன்புறுத்தல் என்று கூறும் பீட்டா அமைப்பு, கருணை கொலைக்கு பதில் அந்த விலங்குகளை காப்பாற்றுவதற்கான வழியை மேற்கொண்டிருக்கலாமே. இதை செய்வதற்கு பீட்டாவிடம் நிதி உதவி இல்லை என்று கூற முடியாது. உலகம் முழுதும் 3 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள சினிமா மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களை இவர்கள் விளம்பரத் தூதர்களாக நியமிக்கிறார்கள். பல லட்சம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து, வழக்குகள் நடத்த பல நூறு கோடிகளை செலவிடுகிறார்கள். அக்கவுண்டில் பல்க்காக பணம் வைத்திருக்கும் அந்த அமைப்புக்கு நாய், பூனைகளை காப்பாற்ற எவ்வளவு செலவாகி இருக்கப் போகிறது.
பீட்டா
பீட்டாவின் நோக்கம் விலங்குகள் நலன் இல்லை, அதையும் தாண்டி அதில் வேறு ஏதோ காரணம் இருப்பதாக PKA அமைப்பு சந்தேகிக்கிறது. அதற்கும் ஒரு எவிடென்ஸை காட்டுகிறது அந்த அமைப்பின் இணையதளம்.
2010-ம் ஆண்டு, பீட்டாவிடம் நாய் ஒன்றை ஒப்படைக்க விர்ஜீனியாவை சேர்ந்த பெண் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் “நாங்கள் எந்த விலங்கையும் ஏற்றுக் கொள்வதில்லை” என்று அதன் நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர். உடனே அந்த பெண், இந்தத் தகவலை விர்ஜீனியா விவசாயம் மற்றும் வாடிக்கையாள சேவை மையத்திடம் புகாராக தெரிவிக்கிறார்.
“தாங்கள் விலங்குகள் காப்பகத்தை நடத்தி வருவதாக பதிவு செய்துள்ள பீட்டா ஏன் இப்படி சொல்ல வேண்டும்”  என்று யோசித்த அதிகாரிகள், பீட்டா தலைமை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்தனர்.அந்த ஆய்வு பற்றிய அறிக்கையை டேனியல் கோவிச் என்ற அதிகாரி சமர்ப்பித்திருக்கிறார். அந்த அறிக்கையும் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
Peta Kills Animals
அதில் “ பீட்டாவின் வரவேற்பாளர், தாங்கள் எந்த வித விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளனர். கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளும் இதே பதிலை தந்தனர். ஆனால் சற்று நேரம் கழித்து வந்த, உயர் அதிகாரி ஒருவர், அங்கிருந்த மூன்று அறைகளைக் காட்டி இவற்றில் தான் விலங்குகள் பாதுகாக்கப்படுவதாக கூறினார். அந்த மூன்று சிறிய அறைகளைத் தவிர வேறு அறைகள் அங்கு இல்லை. இந்த காப்பகம் பொதுமக்களிடம் இருந்து விலங்குகளை ஏற்றுக்கொள்வதில்லை. Peta ஊழியர்கள் மூலம் கொண்டு வரப்படும் விலங்குகள் மட்டுமே இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்” என்று ஆய்வில் நடந்தவற்றை அந்த அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.
மேலும் ஆய்விலிருந்து தெரியவருவது “ கடந்த சில ஆண்டுகளில் அந்த அமைப்பு கையாண்ட விலங்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், விலங்குகளை வைக்கும் இடம் சிறியதாக இருக்கிறது. இது அரசின் நெறிமுறைகளுக்கு உட்படாத வகையில் உள்ளது. PETA தனக்கென்று உருவாக்கிக் கொண்ட விதிமுறைகளைக் கூட இங்கு பின்பற்றவில்லை. இவ்வளவுக்கும் மேல், பீட்டாவின் ஊழியர்களுக்கு இங்கு விலங்குகள் காப்பகம் செயல்படுவதே தெரியாமல் இருந்திருக்கிறது. மேலும், பீட்டாவில் எடுத்துக் கொள்ளப்பட்ட 85% விலங்குகளை, 24 மணி நேரத்துக்குள் கருணை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, அந்த அமைப்புக்கு விலங்குகளை பராமாரித்து வேறு காப்பகங்களுக்கோ, தத்துக் கொடுக்க முயற்சிப்பதோ நோக்கம் இல்லை என்பது தெளிவாகிறது” என்று அறிக்கையில் போட்டு உடைத்திருக்கிறார் டேனியல்.
PETA KILLS ANIMALS
இது மட்டும் அல்ல, இன்னும் PETA திரைக்கு பின் செய்யும் அநீதிகள் ஏராளமாக இருப்பதாகவும் PKA அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் பீட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கை நீக்கவும் அந்த அமைப்பு, அரசாங்கத்துக்கு குரல் கொடுக்க தனது இணையதளம் மூலம் அழைக்கிறது.
இந்த குற்றச்சாட்டுகள் எதற்கும் பீட்டா பதிலளிக்கவும் இல்லை, அஞ்சவும் இல்லை. ஒருவேளை, இது பீட்டா மீதான அவதூறாகவே இருந்தாலும், ஏன் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.  பீட்டாவுக்கு இருக்கும் பண பலத்துக்கு, சட்ட நடவடிக்கைகளால் அந்த இணையதளத்தை முடக்கி இருக்க முடியும். ஏன் இது எதையும் செய்யவில்லை PEEta? அப்படியானால் பீட்டாவின் கை ரத்தம் படிந்ததா?

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left