Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

திக்ரித்தில் போர் உச்சக்கட்டத்தை எட்டியது, ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள்




திக்ரித்தில் ராணுவம்- தீவிரவாதிகள் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னேறிவரும் ராணுவத்திற்கு தீவிரவாதிகள் எதிராக குளோரின் வாய்வை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

ஈராக்கில் தீவிரவாதிகளின்வசம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீழ்ந்து விட்ட, முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை மீட்கும் முழு முயற்சியில் ராணுவம் இறங்கி உள்ளது. இருதரப்பு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈராக் ராணுவ வீரர்களும், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு போராளிகளும், உள்ளூர் சன்னி பிரிவு பழங்குடியினத்தவரின் ஆதரவுடன் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கடும் முயற்சிக்கு பின்னர் திக்ரித் நகருக்குள் அவர்கள் நுழைந்து விட்டனர்.

அதன் வடபகுதியில் உள்ள காதிசியா மாவட்டத்தை ராணுவம் வசப்படுத்தியது. திக்ரித் பொது மருத்துவமனைக்குள்ளும் ராணுவம் நுழைந்தது. இதற்கு பதிலடி தருகிற வகையில் அந்த இயக்கத்தினர் அன்பார் மாகாணத்தில் ரமடி நகரில் ராணுவம், ராணுவ நிலைகள் மீது 13 கார் குண்டுவெடிப்புகளை நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தினர். திக்ரித் நகரை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் முன்னேறி, பல்வேறு பகுதிகளில் முன்னேறி வருகிறது. ராணுவத்திற்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே திக்ரித்தில் போர் உச்சக்கட்டத்தை எட்டிஉள்ளது. இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பலத்த பின்னடைவு ஆகும்.

முன்னேறிவரும் ராணுவத்திற்கு தீவிரவாதிகள் எதிராக குளோரின் வாய்வை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ ஆதரம் உள்ளது என்று பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஈராக் ராணுவப் படைகளை குறிவைத்து கெமிக்கல் அடங்கிய குண்டுகள் வெடிக்கச் செய்யப்படுகிறது என்று ஈராக் அரசும் தெரிவித்து உள்ளது. சாலை ஓரங்களில் வெடிக்க செய்யப்படும் குண்டுகளில் குளோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது.

முதல் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சுவளிமமாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது. சிறிதளவு குளோரினைச் சுவாசித்தாலும் அது நுரையீரலைத் தீவிரமாகப் பாதிக்கும். குளோரின் நீர்மம் தோலில் எரிச்சலூட்டி புண்ணாக்குவது. சுவாசத்தின்போது காற்றில் குளோரின் அளவு 1000 பிபிஎம் (மில்லியனில் ஒரு பகுதி) ஆக இருந்தால் இறக்க நேரிடும். காற்றில் அனுமதிக்கப்பட்ட இதன்அளவு 1 பிபிஎம் ஆகும்

கொல்கத்தா/டெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளர். சிறுமியை நேற்று மாலையில் இருந்து காணவில்லை. இந்நிலையில் அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் காலை கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் 22 வயது இளம்பெண் ஓடும் காரில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மதுரவை சேர்ந்த இளம் பெண் குர்கானில் இருந்து திரும்பிய போது அவரை கடத்தி சென்று மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மர்ம கும்பல் பெண்ணிடம் இருந்த ரூ. 5 ஆயிரத்தையும் கொள்ளை அடித்து சென்றுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் 35 வயது பெண் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மும்பை மாடல் ஒருவர் அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பராச் மாவட்டத்தில் கடந்த 2007ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி விக்கிக்கு மாவட்ட கோர்ட்டு 10 வருடம் ஜெயில் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாமிலியில் தந்தை மற்றும் தங்கையை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தன

2012-ம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மரணம்


கொல்கத்தாவில் 2012-ம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரிழந்தார். மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி, பெண் ஒருவர் ஓடும் காரில் கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சம்பவத்தன்று இரவுபெண் பப்பில் இருந்து வெளியே வந்தபோது, 6 வாலிபர்களால் காரில் அழைத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டம் நடத்தி வெளியுலகிற்கு தெரியவந்தவர். பல்வேறு போராட்டங்கள் நடத்திய பெண் இன்று காலை உயிரிழந்தார். உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சிலநாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்ணின் உடல்நலம் பாதிப்பு தொடர்பான முழுவிபரங்கள் வெளியாகவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் !

தமிழ் செய்திகள்   முக்கிய தகவல்கள்  நாட்டு . நடப்பு  உலக செய்திகள் ...
undefined முனிவர் ஒருவர், நடுக்காட்டில் ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவர் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தார். கடும் தவத்தின் காரணமாக சில சித்து விளையாட்டுக்கள் அவருக்கு தெரிந்திருந்தது. அதன் காரணமாக அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து முனிவரைப் பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். மக்களின் புகழ்ச்சியானது, முனிவர் மீது படத் தொடங்கியதும், அவருக்கு தன்னைப் பற்றிய கர்வமும் சற்று தலை தூக்கிவிட்டது. இந்த நிலையில் முனிவரைப் பார்ப்பதற்காக இளைஞன் ஒருவர் வந்திருந்தான். முனிவரை வணங்கிய அவன் பின்பு அவரிடம் பேசத் தொடங்கினான். ‘சுவாமி! உங்கள் சக்தி பற்றி கேள்விபட்டே நான் வந்திருக்கிறேன்’ என்றான். அவனது இந்த சொல் முனிவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து அவனிடம் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது யானை ஒன்று அந்த ஆசிரமத்தின் பக்கமாக வந்தது. அதைக் கண்ட இளைஞன், ‘சுவாமி! தங்களால் அந்த பலம் பொருந்திய யானையை கொல்ல முடியுமா?’ என்று கேட்டான். ‘இதெல்லாம் எனக்கு பெரிய காரியமே அல்ல. இப்போது பார்’ என்று கூறிய முனிவர், தன்னுடைய கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து மந்திரத்தை ஜெபித்து அந்த யானை இருந்த திசை நோக்கி வீசினார். அவ்வளவுதான். என்ன ஆச்சரியம். அந்த யானை அடுத்த வினாடியே சுருண்டு விழுந்து இறந்தது. இதை ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன் மீண்டும் முனிவரிடம் திரும்பி, ‘சுவாமி! உங்கள் மந்திர சக்தியைக் கண்டு பிரமித்து போய் விட்டேன்’ என்றான். முனிவருக்கு பெருமை பிடிபடவில்லை. கர்வத்துடன் அதை ஆமோதித்தார். பின்னர் அந்த இளைஞன், ‘சுவாமி! இப்போது இறந்து கிடக்கும் யானையை உங்களால், மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியுமா?’ என்று கேட்டான். ‘என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. நீ இப்போது கூறியதையும் கூட என்னால் செய்ய முடியும். இதோ பார்’ என்று கூறிய முனிவர், மீண்டும் கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து இறைவனை ஜெபித்து யானை மேல் தெளித்தார். அடுத்த வினாடியே யானை உயிர்ப்பெற்று, அங்கிருந்து ஓடி காட்டிற்குள் மறைந்தது. இப்போது இளைஞன், அந்த முனிவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டான். ‘சுவாமி! நீங்கள் முதலில் யானையைக் கொன்றீர்கள். பின்னர் அதைப் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன?. இதனால் என்ன ஆன்மிக வளர்ச்சியை அடைந்தீர்கள்? நீங்கள் இப்போது செய்த சித்து விளையாட்டு, கடவுளை நீங்கள் எளிதாகக் காண உங்களுக்கு உதவி புரியுமா?. அது மட்டுமில்லாமல், இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன், விலை மதிப்பில்லாத ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றை விட்டுவிட்டு சித்துக்களைச் செய்யத் தொடங்குவது தவறு இல்லையா? இந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் இறைவனுக்குப் பிடிக்குமா?. மேலும் கடவுளை அடைவதற்கு இந்த சித்து விளையாட்டுக்கள் தடை அல்லவா?’ என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான். இவ்வளவு பெரிய விஷயத்தை எளிதாக, தன் புத்தியில் உரைக்கும்படி எடுத்துக் கூறிய அந்த இளைஞனை, முனிவர் ஏறிட்டுப் பார்த்தார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த இளைஞர் அங்கிருந்து மாயமாய் மறைந்து போனான். ஆம்! இளைஞனாய் வந்தவர் இறைவன் தான். கண்ணீருடன் இறைவனை கையெடுத்துக் கும்பிட்ட முனிவர், அன்று முதல் தன்னுடைய சித்து வேலைகளை விட்டு விட்டு, தன் முழு கவனத்தையும் இறைவனின் மீதும், ஆன்மிக பணிகளின் மீதும் செலுத்தத் தொடங்கினார்

விவசாயிகள் தற்கொலை விவகாரம்: சட்டசபையில் மராட்டிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு


undefined மும்பை, விவசாயிகள் தற்கொலை விவகாரம் மற்றும் விவசாய விளை பயிர்கள் நாசம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி சட்டசபையில் மராட்டிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கண்டனம் மராட்டிய சட்டசபையில் நேற்று ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினை மீதான விவாதத்தை பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சஞ்சய் குந்தே தொடங்கி வைத்தார். அப்போது பேசிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ‘‘விவசாயிகள் பெற்ற கடன் தொகையை மறுசீரமைப்பதை விட்டு விட்டு, அதை தள்ளுபடி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார். மேலும், ‘‘மின்கட்டணத்தை 29 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்து இருக்கிறது. ஏற்கனவே கடன்சுமையால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளின் காயங்கள் மீது உப்பை தடவக்கூடாது’’ என்றார். விவசாயிகள் ஏமாந்துவிட்டனர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, விவசாயிகளின் தற்கொலைக்காக அரசின் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று கூறிய நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார், தற்போது விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை கண்டு என்ன சொல்வார்? அவரது நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி கேட்டார். இதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், தேவேந்திர பட்னாவிஸ் பிரதமருக்கு மிகவும் பிடித்தமானவர். எனவே, மாநிலத்துக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. விவசாயிகள் ஏமாந்துவிட்டனர் என்று கூறினார்

வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம் வீடு புகுந்து காதலியை தாக்கி விட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை குடிபண்டே அருகே பரபரப்பு


கோலார் தங்கவயல், தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் காதலியை வீடு புகுந்து தாக்கி விட்டு, அங்கேயே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடிபண்டே அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– தனியார் நிறுவன ஊழியர் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா மோடமாக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 26). பட்டதாரி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த கவிதா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிதாவிற்கு அவரது பெற்றோர் இன்னொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கவிதா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரிடம் ராமகிருஷ்ணா பேச முயன்றார். ஆனால் ராமகிருஷ்ணாவிடம், கவிதா பேச மறுத்ததோடு, தனது செருப்பால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கவிதாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரை தொடர்ந்து போலீசார், ராமகிருஷ்ணாவை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். தற்கொலை இந்த நிலையில், நேற்று முன்தினம் கவிதா மீண்டும் மோடமாக்கனஹள்ளி கிராமத்திற்கு வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, ராமகிருஷ்ணா அங்கு சென்று கவிதாவிடம் பேச முயன்றார். ஆனால் கவிதா, ராமகிருஷ்ணாவிடம் பேசாமல் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணா வீட்டில் இருந்த கட்டையை எடுத்து கவிதாவின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் கவிதா இறந்ததாக கருதி அவரது வீட்டிலேயே ராமகிருஷ்ணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், கவிதாவின் வீட்டிற்கு அவரது பெற்றோர் வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கவிதாவை மீட்டு குடிபண்டே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணை இதுபற்றிய தகவல் அறிந்ததும், குடிபண்டே டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ராமகிருஷ்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடிபண்டே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குடிபண்டே டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னை காதலித்த விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்த காதலியை தாக்கி விட்டு அவரது வீட்டிலேயே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மோடமாக்கனஹள்ளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்காக ஆஸ்திரேலிய வாலிபர், தற்கொலை படை தாக்குதல் நடத்தி, பலி ஆனார்


undefined சிட்னி ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்காக தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் ஆஸ்திரேலிய வாலிபர் ஒருவர் பலி ஆனார். ஆஸ்திரேலிய வாலிபர் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வாலிபர்களும் சேர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 18 வயது வாலிபர் ஜேக் பிலார்டியும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மெல்போர்ன் நகரில் இருந்து புறப்பட்டு, துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகர் வழியாக ஈராக்கிற்கு சென்றார். அங்கு அவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டு வந்தார். தற்கொலை படை தாக்குதலில் பலி அவர் ஈராக் செல்வதற்கு முன் தனது வீட்டில் ஏராளமான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளையும் விட்டுச்சென்றது தெரிய வந்தது. அதைக் கண்ட அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, உஷார்படுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஜேக் பிலார்டி தனது பெயரை அபு அப்துல்லா அல் ஆஸ்திரேலி என்று மாற்றிக்கொண்டு, அன்பார் மாகாணத்தில் உள்ள ரமடி நகரில் வெடிகுண்டுகள் நிரப்பிய வேனில் சென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் அவர் உடல் சிதறி பலியாகி விட்டார். இது தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஜேக், ஒரு வெள்ளை நிற வேனில், அபு அப்துல்லா அல் ஆஸ்திரேலி என்ற பெயரும், கடவுள் இவரை ஏற்றுக்கொள்வாராக என்ற வாசகங்களும் எழுதப்பட்டு காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தற்கொலை படை தாக்குதலில் ஜேக் கொல்லப்பட்டு விட்டதை ஐ.எஸ். தீவிரவாத இயக்க தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. வலைத்தளம் எழுதியவர் இது தொடர்பாக அந்த இயக்கத்துடன் தொடர்புடைய ‘டுவிட்டர்’ பக்கங்களில், ‘‘உஸ்பெகிஸ்தான், ரஷியா, சிரியா, எகிப்து, பெல்ஜியம், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த போராளிகளுடன் இணைந்து ரமடியில் நடத்திய தொடர் கார் குண்டு தாக்குதல்களில் பிலார்டி பலியாகி விட்டார் என கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஜேக் பிலார்டி, ‘மெல்போர்ன் நகரில் இருந்து ரமடி (ஈராக் நகரம்) வரையில் எனது பயணம்’ என்ற தலைப்பில் வலைத்தளத்தில் எழுதி வந்திருப்பதும், இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதில் அவர் ஆஸ்திரேலியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறி இருந்தது தெரிய வந்திருக்கிறது. இப்போது அந்த வலைத்தள பக்கங்கள் நீக்கப்பட்டு விட்டன. டோனி அப்போட் கருத்து மேலும் ஜேக் பிலார்டி கடந்த டிசம்பர் மாதம் பி.பி.சி.க்கு பேட்டி அளித்ததாகவும், அதில் அவர் ‘நான் மரணத்தை துரத்திக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் ஆகி உள்ளேன்’ என குறிப்பிட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஜேக் பிலார்டி தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியாகி இருப்பது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘‘ உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த தகவல்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரத்துக்கு மற்றொரு உதாரணம் ஆகும். இது ஒரு பயங்கரமான சூழ்நிலை. இப்படிப்பட்ட கொடூரமான சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்கள் கவர்ந்து இழுப்பதிலிருந்து, நாம் நமது வாலிபர்களை முடிந்த அளவு காப்பாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்’’ என கூறினார்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் ’ஜெய் ஹோ’ஆவணப்பட டிரைலர் வெளியீடு


undefined ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை மற்றும் இசை குறித்த ’ஜெய் ஹோ’ ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 60 நிமிட ஆவணப்படமாக உருவாகிறது. இதில் ஏ.ஆர் ரஹ்மான் பணி புரிந்த இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா உள்பட பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்று உள்ளது .இந்த ஆவண படத்தின் இரண்டரை நிமிடம் டிரைலர் வெளியிடபட்டது. ’ஜெய் ஹோ’ ஆவண படத்தை சிறந்த ஆவணப்பட தயாரிப்பாளர் உமேஷ் அகர்வால் இயக்குகிறார். இந்த ஆவணப்படம் நியூயார்க்கில் திரையிடபட்டது. இதில் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு இதழ் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டனர் இதில் இயக்குனர் உமேசும் , ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டனர்.இந்த ஆவணபடம் பார்வைளர்களின் வரவேற்பை பெற்றது. ஆவணபடத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஸ்டைல் ஆப் மியூசிக்,வாழ்க்கை, குடும்பம், நெருங்கிய நண்பர்கள், மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள், குறிப்பாக லணடனில் உள்ளவர்கள்,லாஸ் ஏஞ்சல்ஸ்,மும்பை,சென்னையில் சூட் செய்யபட்டு உள்ளது. விளம்பர திரைப்பட இயக்குனரும், புகழ் பெற்ற இசையமைப்பாளருமான ஆண்ட்ரூ லாய்ட் வெபர் கூறும்போது, அவரை போன்ற வேறு எந்த இசையமைப்பாளரையும் நான் அறிந்ததில்லை. அவரது பாடல்களில் ஒன்றை நீங்கள் எப்பொழுதும் கூற முடியும் என கூறியுள்ளார். பட இயக்குனரான மணிரத்னம் கூறும்போது, ’மெட்ராசின் மொசார்ட்’ உடன் பணியாற்றுவது என்பது சுலபமானதல்ல என கூறியுள்ளார். மற்றொரு இயக்குநரான சேகர் கபூர் கூறுகையில், மேற்கத்திய இசையில் இருந்து இந்திய இசைக்கு வருவது போல் வந்து பின் மேற்கத்திய கிளாசிக் இசைக்கு செல்வது போன்ற இசை நடை அவருக்கு உள்ளதாக கூறியுள்ளார். ஜெய் ஹோவின் இயக்குநரான உமேஷ் அகர்வால், இந்தியாவில் பணத்திற்காக செய்தி வெளியிடுவதை மையமாக கொண்டு உருவான, புரோகனிங் நியூஸ் - மீடியா, மணி (பணம்) மற்றும் மிடில்மென் (இடை தரகர்) என்ற டாக்குமெண்ட்ரி (ஆவண படம்) ஒன்றை இயக்கியதற்காக புகழ் பெற்றவர். ஜெய் ஹோ ஆனது, ’ஜெய் கோ’ ஆவண படத்தை பொது சேவை ஒளிபரப்பு டிரஸ்ட் (PSBT) மற்றும் வெளிவிவகார அமைஅச்சகம் பொது தூதரக பிரிவு தயாரித்து உள்ளது.இந்தியாவில் இந்த ஆவணப்படம் ஏப்ரல் மாதம் முதல் புதுடெல்லியில் திரையிடப்படுகிறது.

அஜித்தின் மங்காத்தா ரீ மேக்கில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் இடையே போட்டா போட்டி


undefined அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படம் இந்தியில் எடுக்க தீவிர முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான் இப்படத்தை பாலிவுட்டில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ‘மங்காத்தா பாலிவுட் ரீமேக் சாத்தியம் என்றால் அஜித் இப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தை ஏற்பார்’ என்று ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியிருந்தார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த அசோகா இந்தி படத்தில் நடிகர் அஜித் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஷாருக்கான், ஜூஹி சாவ்லா,உள்பட பலர் நடித்திருந்தனர்.பின்னர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகி விட்டதால் பாலிவுட் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. மங்காத்தா இந்தி படத்தில் அஜித் நடிப்பதாக கூறப்பட்ட்து ஆனால் இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவுல் இல்லை. ஆனால் மங்காத்தா இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கதாநாயகர்களிடையே மிகுந்த போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடிக்க சல்மான் கான் – அக்‌ஷய் குமார் இடையே மிகுந்த போட்டி உள்ளது. மங்காத்தா இந்தி ரீ மேக்கை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கபோவது இல்லை. அவர் பல் வேறு புராஜக்ட்களில் பிஸியாக இருப்பதால் அவர் இயக்கபோவது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்கு பெரும் தீங்கு இழைத்தார் வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார், மகாத்மா காந்தி நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை

புதுடெல்லி பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. தற்போது, அவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார். ‘காந்தி–ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையை சற்று நேரத்தில் 1,300–க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில், மார்கண்டேய கட்ஜு எழுதி இருப்பதாவது:– இந்த கட்டுரை எனக்கு கண்டனத்தைப் பெற்றுத் தரலாம். ஆனால், நாட்டு நலனுக்காக இதை சொல்ல வேண்டும் என்று கருதுகிறோம். மகாத்மா காந்தி, வெள்ளையர்களின் ஏஜெண்டாக இருந்தார். நாட்டுக்கு பெரும் தீங்கு இழைத்தார். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்தியா, பல்வேறு சாதி, மொழி, மதங்களைக் கொண்ட நாடு. இதை உணர்ந்த வெள்ளையர்கள், பிரித்தாளும் கொள்கையை பின்பற்றினர். காந்தியும் தன் பங்குக்கு பல ஆண்டுகளாக, அரசியலில் மதத்தை புகுத்தியதன் மூலம், வெள்ளையர் கொள்கைக்கு உரம் சேர்த்தார். அவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 1915–ம் ஆண்டில் இருந்து அவர் இறந்த 1948–ம் ஆண்டுவரை, அவர் தனது பேச்சிலும், எழுத்திலும் ‘ராமராஜ்யம், பசு பாதுகாப்பு, பிரம்மச்சர்யம், வர்ணாசிரமம்’ போன்ற இந்துமத தத்துவங்களை வலியுறுத்தி வந்தார். தன்னை ஒரு சனாதனி இந்து என்றும், வர்ணாசிரமத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றும் அவர் எழுதி வந்தார். அவரது கூட்டங்களில், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற இந்து பஜன் ஒலிக்கும். இவையெல்லாம், முஸ்லிம்களை ‘முஸ்லிம் லீக்’ போன்ற முஸ்லிம் அமைப்புகளை நாடச் செய்தன. இது, வெள்ளையர்களின் ‘பிரித்தாளும் கொள்கை’க்கு உதவிய செயல்கள் தானே? பகத்சிங் போன்றவர்கள், வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சி இயக்கம் தொடங்கினர். ஆனால், காந்தி, சத்யாகிரக பாதைக்கு விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பினார். இதுவும், வெள்ளையர்களுக்கு உதவியது. இந்தியா–பாகிஸ்தான் பிரிவினையின்போது, கலவரத்தை தணிக்க காந்தி நவகாளி யாத்திரை சென்றதை பலரும் துணிச்சலான செயல் என புகழ்கிறார்கள். ஆனால், அவர்தான் அரசியலில் மதத்தை புகுத்தி, இந்த கலவரத்துக்கே வித்திட்டவர். முதலில் வீட்டை கொளுத்தி விட்டு, பிறகு தீயை அணைக்க முயற்சிப்பதுபோல் நாடகமாடுவது சரிதானா? இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது

கோழிகோடு, கேரளாவில் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் மீது, முன்னாள் காதலி பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்து உள்ளார். கோழிகோடு மாவட்டம் கோராஷந்து பகுதியை சேர்ந்த வாலிபர் ஷமீர்(வயது 29) தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். இதனை பேஸ்புக்கில் பார்த்த அவருடைய முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, என்னுடன் சுற்றிவிட்டு இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவுசெய்து வாலிபரை கைது செய்தனர்

கூலித்தொழிலாளிக்கு 21 ஆண்டு ஜெயில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தீர்ப்பு

நாள்:ஞாயிறு, மார்ச் 08,2015, 4:00 AM ISTபதிவு செய்த நாள்:சனி, மார்ச் 07,2015, 8:32 PM IST ஈரோடு, பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 21 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மாணவி பலாத்காரம் ஈரோடு ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 29). சுமை தூக்கும் கூலித்தொழிலாளி. இவர் கடந்த 11–8–2013 அன்று அந்த பகுதியில் 9–ம் வகுப்பு படித்துவந்த பள்ளிக்கூட மாணவி ஒருவரை ஏமாற்றி ரெயில்வே குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச்சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 21 ஆண்டு ஜெயில் வழக்கை நீதிபதி திருநாவுக்கரசு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பள்ளிக்கூட மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்ற குற்றத்துக்கு ஒரு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். இதுபோல் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தார். இந்த 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 3 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் இந்த தீர்ப்பில் கூறி இருந்தார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக கூடுதலாக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தார். அதன்படி குற்றவாளியான கோபால கிருஷ்ணன் 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் 7 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றார். இதில் 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்திலும் 7 ஆண்டு ஜெயில் தண்டனையை ஆயுள்தண்டனை காலத்துக்கு பிறகும் அனுபவிக்க வேண்டும் என்று மொத்தம் 21 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி திருநாவுக்கரசு அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்

நாகாலாந்தில் ஜெயில் கைதி அடித்துக்கொலை: நடந்தது கற்பழிப்பு அல்ல; சம்மதத்துடன் கூடிய உடலுறவு மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

புதுடெல்லி நாகாலாந்து மாநிலத்தில் கற்பழிப்பு புகாரின் பேரில், சையது சரிப் கான் என்பவர் கடந்த மாதம் 24–ந் தேதி கைது செய்யப்பட்டார். திமாபூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கடந்த 5–ந் தேதி ஒரு கும்பல், ஜெயிலுக்குள் புகுந்து வெளியே இழுத்து சென்று அடித்துக்கொன்றது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில அரசு ஓர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில், ‘சையது சரிப் கான் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது விருப்பத்துடன் இரண்டு தடவை அழைத்துச் சென்று ‘செக்ஸ்’ உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அப்பெண் கூடுதலாக பணம் கேட்டதற்கு, தான் மறுத்ததால், கற்பழிப்பு புகார் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இது கற்பழிப்பு அல்ல, இருவரின் விருப்பத்துடன் நடந்த ‘செக்ஸ்’ உறவு என்று தோன்றுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது

நைஜீரியாவில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 34 பேர் பலி

பவுச்சி நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் வடகிழக்கு நைஜீரிய நகரமான மைடுகுரியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு சந்தையில் நேற்றுமுன்தினம் இளம் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இந்த தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மைடுகுரி சந்தையில் கடந்த சனிக்கிழமை நடந்த தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 54 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது

காரில் சென்ற இளம் பெண் கடத்தி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்

சண்டிகார், அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் ஹார்சோலா கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் கர்ஜிந்த் மாவட்டம் ரோப்கர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சிலர் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். கார் கண்ணாடி உடைக்கப் பட்டது. கார் நின்றதும், அந்த பெண்ணின் உறவினர்களை யும் அடித்து உதைத்தனர். அப்போது, திடீர் என்று காரில் இருந்த பெண்ணை 6 பேர் கொண்டகும்பல் இழுத்தச் சென்றது. பின்னர் அருகில் உள்ள வயல் பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்தனர். அந்த பெண் கதறி கூச்சலிட் டார். உடனே அந்த கும்பல், ’இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அந்த தலித் பெண்ணை எச்சரித்து விட்டு ஓடி விட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தாழ்த்தப் பட்டோர் வன்கொடுமை சட் டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலித் பெண்ணை கற் பழித்தவர்களில் கண்டீலா கிராமத்தைச் சேர்ந்த சந்திர சேகர், மனோஜ், ஜிதிந்ரா, காலா, சந்தீலா ஆகிய 5 பேர் அடையாளம் தெரிந் தது. மேலும் ஒருவரை யும் போலீசார் தேடி வரு கிறார்கள். மருத்துவ பரிசோதனை யில் அந்த பெண் கற்பழிக் கப்பட்டிருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. குற்றவா ளிகள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஜிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் ஜார்வால் தெரிவித்தார்

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left