Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

மகனை கொன்றதால் ஆத்திரம்: 25 தீவிரவாதிகளை கொன்று குவித்த தாய்

undefined
ஆப்கானிஸ்தானின் பரா மாகாணத்தில் போலீஸ் அதிகாரியான தனது மகனை சுட்டு கொன்ற தலீபான் தீவிரவாதிகளை பழிக்கு பழி வாங்கும் விதத்தில் அவரது தாய் துப்பாக்கியால் பதிலுக்கு சுட்டு 25 தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளார்.

தலீபான் தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் குறிப்பாக மேற்கு மாகாண பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்த பரா மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி தலீபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அதிகாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சோதனை சாவடி
அதனால் எழுந்த சத்தத்தை அடுத்து ரெசா குல் என்ற பெண்மணி தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்துள்ளார்.  அவர் கிராம பகுதியில் அமைந்த சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு சென்று தனது மகனை தேடியுள்ளார்.  அங்கு தனது மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியாகி கிடப்பதை பார்த்துள்ளார்.

துப்பாக்கி சூடு
இதனால் ஆத்திரமுற்ற குல் அங்கு கிடந்த துப்பாக்கி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.  அவர் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.  அவருடன் சேர்ந்து அவரது கணவர், மகள், இளைய மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

மருமகள் பேட்டி
இது குறித்து குல் உடைய மகள் பாத்திமா கூறுகையில், தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு குடும்ப போரை நாங்கள் நடத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.  அவரது மருமகள் சீமா, சண்டை நடந்த பகுதிக்கு நாங்கள் சென்றபோது அது தீவிரமடைந்து இருந்தது.  எளிய மற்றும் உயர் ரக துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடந்து கொண்டு இருந்தது.  எனவே, துப்பாக்கியின் கடைசி குண்டு தீரும் வரை நாங்கள் போரிட வேண்டியிருந்தது என்று கூறியுள்ளா

ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 54 தீவிரவாதிகள் பலி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆப்கான் ராணுவமும், நேட்டோ படையினரும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள ஹாஸ்னி, காந்தஹார், லக்மேன், பார்யாப் மற்றும் ஷாரி புல் மாகாணங்களில் நேற்று ஆப்கான் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 49 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் ஹெல்மந்த் தெற்கு மாகாணப்பகுதியில் நடந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களில் 2 ராணுவ வீரர்கள் இறந்ததாக ஆப்கான் ராணுவம் தெரிவித்து உள்ள

கற்பழிப்பு பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

undefined

இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறுமிகள் இளம் வயதிலேயே உடலுறவில் ஈடுபடும் நிலை அதிகரித்து உள்ளது. இதனை தவிர்க்க இங்கிலாந்து அரசு புதிய யுக்தியை தொடங்கி உள்ளது. பெண் குழந்தைகளுக்கு 11 வயதில் இருந்தே கற்பழிப்புக்கும், சம்மதத்துடன் கூடிய உடல் உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்றுத்தருகிறார்கள்.

இந்த ஆண்டில் இருந்து தொடங்கும் இந்த வகுப்புகளில், படுக்கையில் எப்படி படுப்பது என்பது உள்பட பாலுணர்வு, கட்டாயப்படுத்துதல், சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுதல் போன்ற பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து அவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. கல்வித்துறை செயலாளர் நிக்கி மோர்கன் கூறும்போது, ‘‘இன்று சிறுமிகள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பல அழுத்தங்களை சந்திக்கிறார்கள். நமது மகள்கள் பள்ளியை விட்டு செல்லும்போது, அவர்களுக்கு இந்த அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இது நமது கடமை’’ என்றார்.

இது சைக்கிளா? அல்லது காரா?

அமெரிக்காவில் சைக்கிளையும், காரையும் ஒருங்கிணைத்து ஒரு புதுவித வாகனத்தை உருவாக்கியிருக்கிறார் ராப் காட்டர். இவர் முன்னாள் கார் பந்தய தொழில்நுட்ப நிபுணர். முட்டைக் கூடு போல உள்ள இந்த வாகனத்தில் ஒருவர் பயணிக்கலாம். நீங்கள் விரும்பும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்ய விரும்பினாலோ சைக்கிள் போல பெடல் செய்து ஓட்டலாம். வேகமாக செல்ல நினைத்தால் சூரியசக்தியில் இயங்கும் மோட்டாரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெடல் செய்யும்போது மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்திலும், மோட்டாரை பயன்படுத்தினால் 56 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும். இதில் 250 கிலோ எடையை பயன்படுத்தலாம். உள்ளூர் மளிகை கடைகளுக்கு செல்ல ஏற்ற வாகனம். ஒரு பயணி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றிவர இது சரியாக இருக்கும் என்கிறார் கார்ட்டர். இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் விலையுள்ள இது, 18 மாதங்களில் 450 வாகனங்கள் விற்றுவிட்டன. இதனால் பெரிய அளவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா,

மத்திய இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுலாவேசி மாகாணத்தின் வடகிழக்காக 58 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது மையம் கொண்டு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வர்ணம் பூசப்படும் சாதி கொலைகள்

undefined
‘‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ளபடி’’ என்பதுதான் தமிழ்நாட்டில் காலம்காலமாக கூறப்படும் நெறிமொழி. அவ்வையார் பாடிய பாடல் இது என்றாலும், இதைத்தான் தந்தை பெரியார் உள்பட அனைத்து சமுதாய சீர்திருத்த தலைவர்களும் கற்றுக்கொடுத்தார்கள். ஆதிகாலத்தில் அவரவர் செய்துவந்த தொழிலை வைத்துத்தான், சாதிகளின் பெயர் சூட்டப்பட்டு சாதிகள் உருவாகின. ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. இந்த தொழிலை இன்னார்தான் செய்வார்கள் என்ற நிலையெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எல்லா தொழில்களையும் எல்லோரும் செய்யும்போது, இன்னும் இந்த சாதிகளை வைத்து பிரிவினைகள் ஏன்?, மோதல்கள் ஏன்? என்பதைத்தான் ஆன்றோர் ஒருவர் தன் உரைகளில் எப்போதும் கூறிவருகிறார். ஒருபக்கம் சாதி மோதல்கள், மறுபக்கம் மதவேறுபாடுகள் என ஆங்காங்கு திடீர் திடீரென முளைத்து, ஒரு இடத்தில் தொடங்கி காட்டுத் தீ போல பரவுவது வேதனையளிக்கிறது என்றும் அவர் தன் கவலையை தெரிவிக்கிறார். இன்றும் மேலை நாடுகளில் சாதிகளே இல்லை. மதங்கள் மட்டுமே இருக்கிறது.

அமைதியான நதியில் செல்லும் ஓடம்போல சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டின் நல்லிணக்கம் இப்போது தென்மாவட்டங்களில் சுனாமியால் சிக்கி தவிக்கும் கடலில் செல்லும் படகுபோல ஆகிவிட்டது. கடந்த சில மாதங்களாக ஆங்காங்கு சாதி மோதல்கள் நடந்துவருகிறது. தமிழ்நாட்டிலேயே தாமிரபரணி ஒரு ஆறுதான் இந்த பூமியில் உருவாகி இங்கேயே கடலில் கலக்கிறது என்ற பெருமைக்கு சொந்தக்காரர்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சாதி சண்டைகள் நடந்து 20–க்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல ஊர்களில் இதுநாள் வரை தாயாய், பிள்ளையாய் ஒட்டி உறவாடிவந்த 3 சாதி மக்கள், இப்போது கடந்த ஒரு ஆண்டாக ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்கு ரத்த வெறியோடு இருக்கிறார்கள் என்றால், ஏதோ திடீரென்று இவர்களுக்கு வந்த சாதி வெறியால் அல்ல. இந்த இருமாவட்டங்களிலும் அதிகமாக நடக்கும் மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, வட்டி வசூல், ரியல் எஸ்டேட், காதல், அதைத் தொடர்ந்து ஆணையோ, பெண்ணையோ கடத்தி செல்லுதல் போன்றவைகள் தான் திடீரென உருவாகும் சாதி மோதல்கள், கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களும், அதைச் செய்தவர்களும் தனிப்பட்டவர்கள் என்றாலும், தங்களுக்கு வலுசேர்க்க உடனடியாக அந்த சம்பவத்துக்கு சாதி வர்ணம் பூசிவீடுவது தான் சாதி மோதலாக தலையெடுத்து விடுகிறது. தனிப்பகை சாதி பகையாக ஆக்கப்பட்டு விடுகிறது.

சாதி பெயரை சூட்டிவிட்டால் பிரச்சினை வேறுபக்கம் போய்விடுகிறது என்ற திட்டத்தில் திசையை மாற்றி விடுகிறார்கள். தனிப்பட்ட பகையால் நடந்த குற்றத்துக்கு சாதி காரணம் கூறப்பட்டுவிடுகிறது. இதனால் நேற்று வரையில் உயிர் நண்பர்களாக இருந்தவர்கள்கூட ஜென்ம விரோதிகள்போல மாறிவிடுகிறார்கள் அல்லது மாற்றப் பட்டுவிடுகிறார்கள். ஊரும் இரண்டுபட்டுவிடுகிறது. எனவே, சாதி மோதல்களை தடுக்கும் வகையில் போலீசார் இதுபோன்ற குற்றங்களை சட்டத்தை மீறிய ஒரு குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும். சாதி பிரச்சினை என்று கனிவு காட்டிவிடக்கூடாது. ஒரு குற்றமோ, கொலையோ நடந்தால், அதன் பிரதிபலிப்பாக மற்றொரு குற்றம் நடந்துவிடக்கூடாது என்ற கண்காணிப்பில் விழிப்போடு இருக்கவேண்டும். சாதி மோதல்களாக மாறுவதற்கு அடிப்படை காரணங்களாக உருவெடுக்கும் குற்றங்களை அடியோடு களைய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

படப்பிடிப்பில் இருந்து மாயமான நடிகை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனார்

undefined
மலை உச்சியில் நின்று நடிக்க பயந்து, ஒரு நடிகை படப்பிடிப்பில் இருந்து திடீர் என்று மாயமாகி விட்டார். சொல்லாமல் கொள்ளாமல் அவர் சொந்த ஊருக்கு ஓடிப்போய் விட்டார்.

மலை உச்சியில்...

4 புதுமுக கதாநாயகர்கள், 4 புதுமுக கதாநாயகிகள் இணைந்து நடிக்க, கேசவன் டைரக்ஷனில், ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. இதில், பூவரசன் என்ற புதுமுக கதாநாயகனுக்கு ஜோடியாக டெல்லியை சேர்ந்த அனுபமா பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

தனிமை துயரில் வருந்துகிற கதாநாயகன் பூவரசனுக்கு கதாநாயகி அனுபமா பிரகாஷ் ஆறுதல் சொல்வது போல் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். பாடல் காட்சியை கொடைக்கானலில் உள்ள தின்னவரை என்ற மலை உச்சியில் படமாக்கிக்கொண்டிருந்தார்கள்.

காய்ச்சல்

உயரமான பாறைகளின் மீது அனுபமா பிரகாசை நிற்க வைத்து படமாக்கினார்கள். அனுபமா பிரகாஷ் பயந்து கொண்டே பாறைகளின் மீது நின்றபடி நடித்துக்கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் நனைந்ததால், அனுபமா பிரகாசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவசரம் அவசரமாக படமாக்கிவிட்டு, அவரை ஓட்டலுக்கு அனுப்பிவைத்தார்கள். மறுநாள் காலை அவரை படப்பிடிப்புக்காக தேடியபோது, காணவில்லை. அவருடைய செல்போன், ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

திடீர் மாயம்

படப்பிடிப்பு குழுவினர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவர் திடீர் மாயமாகி விட்டார். விசாரித்ததில், அவர் சொந்த ஊரான டெல்லிக்கு சென்ற விவரம் தெரியவந்தது. கதாநாயகி இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.

உடனடியாக தயாரிப்பாளர் கதிரவன் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அனுபமா பிரகாசை சந்தித்து பேசினார். அப்போது, இவ்வளவு உயரமான மலை உச்சியில் நின்று நடிக்க வேண்டும் என்பதை தன்னிடம் முன்பே சொல்லவில்லை என்று அனுபமா பிரகாஷ் வருத்தப்பட்டார்.

அவரை தயாரிப்பாளர் கதிரவன் சமாதானப்படுத்தி, மீண்டும் கொடைக்கானலுக்கு அழைத்து வந்து நடிக்க வைத்தார். இந்த முறை அவரை மலை உச்சியில் நிற்க வைக்காமல், காட்சிகளை மாற்றி படமாக்கினார்கள்

கிறிஸ்தவ தேவாலயங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல், பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

லாகூர்,  

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
 
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூர் அருகே உள்ளது யுஹானாபாத். இங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்திலும், ஏசு கிறிஸ்து தேவாலயத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். -அப்போது தலீபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 2 பேர் இந்த தேவாலயங்களை குறி வைத்து வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 6 பேர் உடல் சிதறி பலியானார்கள் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியது.

பெண்கள், குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லாகூர் ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடித்ததும் பீதி அடைந்த பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓடினர். இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமான ஒரு வாலிபரை ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் அடித்துக்கொன்றது. பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்தது. இதற்கிடையே காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும், சிலர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

குண்டுவெடிப்பு தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 80 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக்கொலை வாலிபர் கைது

undefined
கோவை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவி

கோவையை அடுத்த சூலூர் திருச்சி ரோடு மதியழகன்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் ரூபா (வயது 17). இவர் காங்கயத்தில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்திருந்தார்.

இவருடைய வீட்டின் அருகில் வசிப்பவர் கண்ணன். இவருடைய மகன் சுரேஷ் (23). பெயிண்டர். இவர் ரூபாவிடம் தன்னை காதலிக்குமாறு கூறி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. அதற்கு ரூபா, தன்னை பின்தொடர்ந்து வரவோ, பேசி தொந்தரவு கொடுக்கவோ வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

குத்திக்கொலை

சம்பவத்தன்று சுரேஷ், ரூபாவை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய் துள்ளார். அதை ரூபா ஏற்க மறுத்ததால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவி ரூபாவின் கழுத்தில் குத்தி உள்ளார். இதனால் வலியால் துடித்த ரூபாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ரூபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுரேசை தேடி வந்தனர். அப்போது சூலூர் குப்பைக் கிடங்கு அருகே மறைந்திருந்த சுரேசை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தன

விடுதியில் தங்கி படித்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: ஒடிசாவில் 3வது சம்பவம்

மால்கன்கிரி,

ஒடிசாவில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வரும் 9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பிணியாக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோராபுட் மாவட்டத்தில் 3 சிறுமிகளும் மற்றும் கந்தமால் மாவட்டத்தில் ஒரு சிறுமியும் என கடந்த 2 மாதங்களில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிகாரிகள் இந்த தகவலை கூறியுள்ளனர்.

பணி இடை நீக்கம்
கச்சேலி கிராமத்தை சேர்ந்த 9வது படிக்கும் அந்த மாணவி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின முன்னேற்ற துறை விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்.  விடுதி நிர்வாகத்திற்கு இது குறித்து தெரிந்தவுடன் அதன் காப்பாளர் சபீதாராணி சர்கார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கைது
இது தொடர்பாக விடுதி நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது.  போலீசாரும் சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான நபர் யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர்.  அதில், மாணவி விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு செல்லும்போது அங்கு ஒரு பையனுடன் தொடர்பு ஏற்பட்டிருக்க கூடும் என நம்பப்படுகிறது.  எனவே, போலீசார் அவனை கைது செய்து உள்ளனர்.

விசாரணை தொடருகிறது.  முறையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளி மீது புகார் பதிவு செய்யப்பட்டு மாணவிக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மால்கன்கிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்கிஷோர் தாஷ் கூறியுள்ளார்

பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்




* சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்
* பெரம்பூரில் விபத்து திருவள்ளூரில் உடல் மீட்பு

சென்னை: பெரம்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற விளையாட்டு வீரரின் உடல் ரயில் மோதி மேலே தூக்கியெறியப்பட்டு, இன்ஜின் முன்னுள்ள கொக்கியில்  சிக்கியது. பெரம்பூரில் இருந்து திருவள்ளூர் வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இன்ஜினில் தொங்கியபடி உடல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர் ஜவகர் நகர், வெற்றி நகரை சேர்ந்தவர் லோகநாதன். எண்ணூர் துறைமுகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பவித்ரன் (21). இறகு பந்து விளையாட்டு வீரரான இவர் தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இறகு பந்து பயிற்சிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்ப பெரம்பூர் லோகோ அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு நோக்கி இரவு 10.40 மணிக்கு புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பவித்ரன் மீது மோதியது. படுவேகத்தில் வந்த ரயில் மோதியதால் மேலே பவித்ரன் தூக்கியெறியப்பட்டார்.
அதே வேகத்தில் கீழே வந்த அவரது உடல், ரயில் இன்ஜின் கொக்கியில் சிக்கிக்கொண்டது. இரவு நேரம் என்பதால் உடல் ரயில் இன்ஜினில் சிக்கி இருப்பது தெரியாமல், ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது இன்ஜினில் தொங்கிய பவித்ரனின் கால்கள் ரயில்வே தண்டவாளத்தில் தேய்ந்தப்படியே சென்றது. இதனால் ரயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் தெரித்தது. சில கற்கள் ரயிலின் ஜன்னல் ஓரம் உட்கார்ந்திருந்த பயணிகள் மீதும், ரயில் நிலையத்தில் நின்று இருந்த பயணிகள் மீதும் சரமாரியாக பாய்ந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்குள் பெரம்பூர் லோகோ, ஆவடி, அம்பத்தூர் உள்பட பல்வேறு ரயில் நிலையங்களை கடந்து, இன்ஜினில் தொங்கிய உடலுடன் ரயில் சென்று கொண்டிருந்த காட்சி பார்த்தவர்களின் இதயத்தை திடுக்கிட வைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி இன்ஜின் கொக்கியில் சிக்கிய பவித்திரனின் உடலை மீட்கும்படி டிரைவருக்கு உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி 30 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து திருவள்ளூருக்கு நள்ளிரவு 11.20 மணிக்கு வந்த ரயிலை நிறுத்தினர். அதன்பிறகு இன்ஜினில் தொங்கியபடி கிடந்த பவித்ரனின் உடலை அரை மணி நேரம் போராடி ரயில்வே போலீசார் மீட்டனர். அவரது இரு கால்களும் சிதைந்திருந்தன. இதனால் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்றது. அதன்பிறகு பவித்ரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையறிந்து நேற்று காலை திருவள்ளூர் வந்த அவரது பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு பவித்ரனின்  சடலத்தை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பெரம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி தொங்கியபடி 30 கிலோ மீட்டர் தூரம் விளையாட்டு வீரரின் உடல் இழுத்து சென்ற சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left