Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழச்சி ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்

தமிழச்சி  ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம் என்பது என் கருத்து. எல்லா அரசியல் சமுதாயங்களும் ஆள்வோர் / ஆளப்படுவோர் என இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை.
ஆனால் இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், இந்தப் பிரிவினை கால இட வேறுபாடின்றி ஒரே மாதிரியானதாக படிநிலை அடிப்படையில் அமைந்து ஆள்வோர் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுவோர் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருப்பதேயாகும்.

நம்மை நாமே ஆண்டு கொள்கிறோமா என்பது குறித்துப் பொதுவாக மக்கள் கவலைப்படாததாலேயே இவ்வாறு நிகழ்கிறது.
ஓர் அரசாங்கத்தை அமைப்பதோடு திருப்தியடைந்து அந்த அரசாங்கம் தங்களை ஆள்வதற்கு விட்டுவிடுகிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாக அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாக என்றும் இல்லாதிருந்ததற்கும் உண்மையில் ஏன் அது பரம்பரை பரம்பரையாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களை வழிவழியாக ஓர் ஆளும் வர்க்கத்தால் ஆளப்பட்டு வந்த அரசாங்கமாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கும் இதுவே காரணமாகும்.
நேர்மையற்ற இந்த அரசியலமைப்பு முறைதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இத்தகைய பரிதாபகரமான தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் காரணமாகத்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தால் சாமானிய மக்களுக்கு அது அளித்திருந்த வாக்குறுதியை, சுதந்திரத்தை, சொத்துரிமையை, சுபிட்ச வாழ்வை அவர்களுக்கு அளிப்பதாக அது தந்திருந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியவில்லை.
– தோழர் அம்பேத்கர்
[தொகுதி:17, பக்கம்:75]

தமிழச்சி ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்
மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம்.
மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.

உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும் வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்

Written and Thanks  by Thmizhazhi  Tamizhazhi
 
தமிழச்சி   ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்

முதலமைச்சர் ஜெயலலிதா வின் இறுதி நிகழ்வு ஏன் அவசர அவசரமாக நடத்தப்பட்டது?

முதலமைச்சர்  ஜெயலலிதா வின் மரணச் செய்தி வெளிவந்த கிட்டதட்ட 14 மணி நேரத்திற்குள்ளாக இறுதிச்சடங்கு நட்த்தபட்டிருக்கிறது

முதலமைச்சர் ஜெயலலிதா வின் இறுதி நிகழ்வு ஏன் அவசர அவசரமாக நடத்தப்பட்டது?

முதலமைச்சர் ஜெயலலிதா வின் இறுதி நிகழ்வு ஏன் அவசர அவசரமாக நடத்தப்பட்டது என்கிற கேள்வி அதிமுகவினருக்கானது மட்டுமல்ல?
முதலமைச்சராக இருப்பவரின் மரணம், ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, ஆட்சியில் இருக்கும் கட்சி, இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற நிலையில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்கான இறுதிச்சடங்கை இவ்வளவு அவசரமாக நட்த்தி முடிக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்ட்து என்கிற கேள்வியை எளிதில் கடந்து விட முடியாது?.
ஒருவித பதட்டத்தையும், நெருக்கடியையும் செயற்கையாக ஏற்படுத்தியும், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடுவை காவல்கார்ராக அமர்த்தியும், ஆளுனரை முன்னிலைப்படுத்தியும் இந்த செயல் ஏன் இவ்வளவு அவசரமாக நட்த்தப்ப்ட வேண்டும்.
தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் இறுதி நிகழ்வில் பங்கெடுப்பதும், மரியாதை செலுத்துவதும், தனது தலைமைக்கு நேரில் முகம்பார்த்து அஞ்சலி செலுத்துவதும் ஏன் நட்த்தப்பட வில்லை?.
அனைத்தும் முடிந்து நாளை முதல் சராசரி இயல்பு வாழ்க்கையை உடனடியாக கொண்டுவருவதன் அவசியம் எங்கிருந்து வருகிறது?. நாளை வழக்கம் போல பரபரப்பான வாழ்க்கை சூழலிலும், பணப்பற்றாக்குறையிலும், வங்கியின் வாசலிலும் இந்த மரணம் மறக்கடிக்கப்படச் செய்யப்பட வேண்டியது எதற்காக?
மக்களால் அங்கீகரிக்கப்பட்டவரோ அல்லது மரியாதை கொடுக்கப்பட்டவருக்கோ இறுதி மரியாதை கொடுக்கும் நிகழ்வு அனைவரையும் உள்ளடக்கியே நட்த்தப்பட்டுவருகிறது. இப்படியான நிகழ்வு ஒரு எழுச்சியையோ, துக்கத்தின் ஆழத்தையோ, உறுதிப்படுத்தலையோ நிகழ்த்துகிறது. அறிஞர் அண்ணா முதல் அனைவரும் இப்படியான ஒரு பதிவினை தங்களது இறுதி நிகழ்வில் ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் பிற இடங்களிலும் இது போன்றே நடத்தப்பட்டது
இம்மாதிரியான மக்கள் திரள் ஏற்படுவதை சாத்தியப்படுத்தவே ஈழப்படுகொலையின் போது தோழர்.முத்துக்குமாரின் உடலை மூன்று நாள் பாதுகாத்தோம். அது வரலாற்று சிறப்புமிக்க ஊர்வலத்த்னை பதிவு செய்த்து. ஆனால் அதன் பின்னர் அனைத்து ஈகியருக்கும் இப்படியான வாய்ப்பினை அரசு தடுத்த்து. இன்றுவரை இயக்க அரசியலில் இப்படியான நெருக்கடிகளே கொடுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து காணமுடிகிறது,. இந்த வழிமுறைகளுக்கு துணை போன கட்சியினருக்கும் இதே நிலை ஏற்பட்டிருப்பது. ஏன் இது நடந்தது?
பிராந்திய கட்சிகளின் ஆதிக்கத்தினை நிறுத்திடுமா ஜெயல்லிதாவின் மரணம், திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தேசிய கட்சிகளுக்கு நகரும் முக்கிய தருணம் இது, ஜெயல்லிதா விட்டுச் செல்லும் இடத்தை வைத்து பாஜக தமிழக அரசியலை கைப்பற்றவேண்டுமென சு.சாமி சொல்வது என பல்வேறு புள்ளிகளை இணைத்தால் இந்த அவசர இறுதி நிகழ்வின் அரசியல் புரியும்.
வெங்கைய நாயுடு ஏன் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் அருகே நிற்க வேண்டும்? அவர் கட்சி உறுப்பினரோ, முதலமைச்சர் ஜெயலலிதா நண்பரோ, உறவினரோ, குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. ஒரு கேபினட் அமைச்சர் அவ்வாறு அங்கே ஆக்கிரமித்து நிற்கவேண்டிய அவசியம் என்ன? தொலைக்காட்சிகளில் பார்ப்பன பாஜக உறுப்பினர்கள்/ ஆதரவாளர்கள் ஏன் முன்னிறுத்தப்பட வேண்டும்.? எந்த அரசியலை திணிக்க விரும்புகிறார்கள்?
மிக நுணுக்கமாக திட்டமிட்டு இறுதி நிகழ்வு அவசர அவசரமாக நடத்தப்பட்டது. குறைந்த பட்சம் ஜெயல்லிதா உடல் புதைக்கப்படும் நிகழ்வின் இட்த்தில் போதுமான வெளிச்சமோ, காட்சிப்படுத்தலோ நட்த்தாமல் போனதை கவனிக்காமல் இருக்க இயலாது.
மக்கள் திரளாக சேர்வதற்கு முன்பே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வந்து சேர்வதற்கு அவகாசம் கொடுக்காமல், அப்படியான திட்டமிடலுக்கு வாய்ப்பினை கொடுக்காமல், அதிமுகவின் கட்சியினரின் முடிவிற்கு விடாமலும், அதை முடிவெடிக்க்க் கூடிய சூழலை அனுமதிக்காமலும் இந்நிகழ்வு மோடி அரசினால் கட்டுப்படுத்தப்ப்ட்ட்தையே கவனிக்க முடிகிறது.
ஜெயல்லிதாவிற்கு பெரும்திரளாக மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் மாநில அரசியல் திரட்சி மேலும் வலுப்பெறும் ஒரு நிகழ்வாக ஜெயல்லிதாவின் இறுதி நிகழ்வு அமைந்துவிடும் என்பதை மோடி அரசுக்கு உணர்ந்தே இருக்கிறது. இதுவே மிகமுக்கிய காரணம் என்பதே உண்மை.
மேலும், இந்திய தொலைக்கட்சிகளில் ஏன் ஜெயல்லிதா உடல் எரிக்கப்படாமல் புதைக்கப்பட்ட்து எனும் விவாதம் வைக்கப்படுகிறது.
அதாவது இங்கிருக்கும் மாநில அரசியல் மற்றும் அதன் அடையாளங்கள், திரட்சியடைதல் என்பதை இந்திய அரசு விரும்பவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகின்றன.
மேலும் அதிமுக கொடி மறைக்கப்பட்டு, இந்தியக் கொடி முன்னிலைப்படுத்தப்பட்ட்து எதனால்? தந்தி தொலைக்காட்சி வர்ணனையாளர் ‘இந்திய அரசியலுக்கும், நலனுக்கும் முன்னிலை கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என திரும்ப திரும்ப வலிறுத்தியது எதனால்?
நேற்றிலிருந்து பாஜகவின் வெங்கய்ய நாயுடுவிற்கு இங்கு என்ன வேலை? எனும் கேள்வியிலிருந்தே விவாதங்கள் துவங்குகிறது.
மரபாகவே குறைந்த்பட்சம் 24 மணி நேரம் உடல் பார்வைக்கும், மரியாதைக்கும் வைப்பது எனும் நடைமுறையை யார் மாற்றியது எனும் கேள்வி எளிதில் சாகாது?. ஜெயல்லிதாவின் இறுதி நிகழ்வில் அதன் தொண்டர்கள் பெருமளவு பங்கேற்கமுடியாமல் செய்யப்பட்ட கேள்வியை எழுப்ப வேண்டியது அவசியம்.
ஏன் அவசர அவசரமாக முதலமைச்சர் ஜெயலலிதா இறுதி நிகழ்வு நடத்தப்பட்டது என்கிற கேள்வி அதிமுகவினருக்கானது மட்டுமல்ல.
Thirumurugan Gandhi

ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர் இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்

ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர். இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஆட்சியாளர்களின் ஊழல்களையும், சட்ட விரோத செயல்களையும் அதற்கு இணக்கமாக செயல்படுபவர்களையுமே ஆட்சிக்கு வரும் ‘கட்சி அரசியல்வாதிகள்’ தலைமை செயலாளராக நியமித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்ற போது தனது ஆட்சியின் தலைமை செயலாளராக ‘ராம் மோகன் ராவ்’ என்பவரை நியமித்தார்.
தலைமை செயலாளர் ஆவதற்கான தகுதி அடிப்படையில் ‘ராம் மோகன் ராவ்’ நியமிக்கப்படவில்லை. அவரைவிட தகுதியும் அனுபவமும் மிக்க நேர்மையான அதிகாரிகள் 1981 ஆம் ஆண்டு பிரிவில் 22 பேர்கள் உள்ள நிலையில், 1985 ஆம் ஆண்டு பிரிவில் 13வது நபரான ராம் மோகன் ராவ்வை ஜெயலலிதா எதற்காக தேர்ந்தெடுத்தார்?
“சோனியாவுக்கு கிடைத்த பினாமி மன்மோகன் சிங் போன்று ஜெயலலிதாவுக்கு கிடைத்த பினாமி பன்னீர் செல்வம். அத்வானிக்கு பினாமி மோடி.”
பினாமிகளாக அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு என்று சில குணங்கள் இருக்க வேண்டும். அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நன்றியுள்ள நாய் போன்று அவர்களை சுற்றித் திரிய வேண்டும். எப்போதாவது எலும்பும் துண்டு போன்று சில அதிகார பதவிகளை அரசியல்வாதிகள் தூக்கி போடுவார்கள். அதைக் கவ்விக் கொள்ள வேண்டும். அந்த பதவியின் அதிகாரத்தை அந்த அரசியல்வாதிகளுக்காக சட்டங்களையும் வளைத்து நெளித்து அரசியல்வாதிகளுக்கு ஏற்றார் போல் சட்ட விரோத செயல்களை சட்ட ஆதரவுடன் நடப்பதாக காட்ட வேண்டும்.
இந்த பினாமிகளில் மோடிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே டீ கடையில் வாழ்க்கையை ஆரம்பித்த பாமர மனிதர்கள். படிப்பறிவற்றவர்கள். மோடிக்கு கிடைத்த பதவி பிரதமர். பன்னீருக்கு மட்டும் எப்போதுமே எடுபிடி முதல்வர்.
பாருங்கள்….. “ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர். இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்….”
நேற்று முன்தினம் இந்த எடுபிடி முதல்வர் பினாமி பிரதமரை சந்திக்கிறார். அப்போதே ஜெயலலிதாவின் இருட்டுக்குள் நடந்த மறுபக்க அரசியலின் ஆவணங்கள் அனைத்தும் மோடியிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. அதற்கு பிறகே தமிழ்நாட்டுக்குள் இராணுவ பாதுகாப்போடு தலைமை செயலகத்திற்குள் ராம் மோகன் ராவ் அறைக்குள் விசாரணை. அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் பினாமி முதல்வர் தலைமை செயலகத்தை விட்டு வெளியேறுகிறார். இது ஒட்டு மொத்த மக்களாட்சிக்கு எதிரான தலைகுனிவு.
தமிழ்நாட்டுக்குள் நடத்திய இதே அணுகுமுறையை மோடி மேற்கு வங்காள முதல்வர் மம்தா தலைமை செயலகத்திற்குள் இராணுவ பாதுகாப்புடன் சோதனையிட உள்நுழைந்த போது தலைமை செயலகத்தின் கதவை பூட்டு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார் அந்த பெண் முதல்வர். அது எதிர்புணர்ச்சி. பயந்து போன மோடி ஓடிப்போனது மட்டுமல்ல அவமானப்பட்டதும் அங்கேதான். ஆனால் தமிழ்நாட்டு பினாமி முதல்வர் ஆள்காட்டி வேலையைத்தானே செய்து கொண்டிருக்கிறார்?
ஆயிரம் இருந்தால் என்ன? அவர் பச்சை தமிழர் என்பதால் அவரை ஆதரிப்போம் என்று போலி தமிழ் தேசியவாதி சீமான் போன்ற குள்ள நரிகள் ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
இப்போது புது தலைமை செயலாளராக மாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மாமி எஸ்.வி.சேகர் (பா.ஜ.க) ஆத்து உறவுக்காரர். இந்த மாமியை யார் தமிழக செயலாளராக நியமித்தார்கள் என்று சில மணி நேர குழப்பத்திற்கு பிறகு தமிழக கவர்னர் நியமித்தார் என்று செய்தி வருகிறது.
கவர்னருக்கு அந்த அதிகாரம் இல்லையே என்று இப்போது சர்ச்சைகள் வலுத்துள்ள நிலையில், கிரிஜா தமிழ் பேசும் பார்ப்பனத்தி. ‘தமிழ் பேசும் பார்ப்பனரும் தமிழரே’ என்று இப்போதும் சீமான் போன்ற அரை வேக்காடுகள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
ஆனால் இந்த மாமி பா.ஜ.க உளவாளி. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பா.ஜ.கவின் விசுவாசிசாக இருந்து இனி ஆட்டி வைக்கப் போகும் பார்ப்பனீய சூத்திரத்தாரி.
இப்போதும் இந்த ஆரியர் / திராவிடர் எதிர்ப்பு அரசியல் தமிழர்களுக்கு பிடிபடவில்லை என்றால் மீண்டும் முதல் பத்தியை வாசித்து பாருங்கள்.
ஜெயலிலதா, சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக மட்டுமே தனக்கு இணக்கமான நபரை தேர்ந்தெடுத்தார். ஆனால் கிரிஜா என்ற தேர்வு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் பின்புலம் அதிபயங்கரமானது. அதன் அரசியல் மத/சாதி/மனிதநேயத்திற்கு எதிரானதாக உருவெடுத்து ஜனநாயகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழீனத்தையும் நாசப்படுத்திவிடும்.
#தமிழச்சி
23/12/2016

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left