Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஏசுநாதர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தைகளால் வாழ்த்துக் கூறினார்

ஏசுநாதர்   எடேbபேயர், இங்கிலாந்து நாட்டின் பிரசித்திப்பெற்ற உதைப்பந்தாட்ட வீரர். சமீபத்தில் இஸ்லாம் மதத்தை தழுவி, ஏன் இஸ்லாத்தைத் தழுவினேன் என்பதற்கான 13 உறுதியான காரணங்களை வெளியிட்டார்.
1. ஏசு நாதர் (நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்), ‘ஓர் இறைவனே உள்ளான், ஓர் இறைவனே வணங்கப்பட வேண்டும் என கற்பித்தார்கள். (டியூட் 6:4, மார்க் 12:29).
முஸ்லிம்களும் இதையே நம்புகிறார்கள். (திருக்குர்ஆன் 4:171)
2. ஏசு நாதர் ஒருபோதும் பன்றி இறைச்சி சாப்பிடவில்லை. (லெவிட்டிகஸ் 11:7)
அதே போல் முஸ்லிம்களும் சாப்பிடுவது இல்லை (திருக்குர்ஆன் 6:145.)
3. ஏசுநாதர் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தைகளால் வாழ்த்துக் கூறினார். (ஜோன் 20:21.)
இது போலவே முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக் கொள்கிறார்கள்.
4. ஏசு எப்போதும், “இறைவன் நாடினால்” (இன்ஷா அல்லாஹ்) என்றுக் கூறினார்கள்
முஸ்லிம்கள் திருக்குர்ஆன் வாசகங்கள் கூறுவது போல், எதைச் செய்வதானாலும் முதலில் இதைச் சொல்லிவிடுகிறார்கள். (திருக்குர்ஆன் 18:23-24)
5. ஏசுநாதர் தொழுகைக்கு முன் தன்னுடைய முகம், கைகள், பாதங்களைக் கழுவினார்கள்
முஸ்லிம்களும் அதையே செய்கிறார்கள்
6. ஏசுநாதரும் பைபிலில் குறிப்பிடப்படும் ஏனய நபிமார்களும் தங்களின் சிரசை நிலத்தில் வைத்தே தொழுதுள்ளார்கள். (மத்தீயு: 26:39.)
திருக்குர்ஆன் கற்றுக்கொடுத்தது போல் முஸ்லிம்களும் அப்படியே தொழுகிறார்கள். (திருக்குர்ஆன் 3:43)
7. ஏசுநாதர் தாடி வைத்திருந்தார்கள். நீண்ட அங்கியை அணிந்திருந்தார்கள். முஸ்லிம் ஆண்களும் அதே போல் செய்துக்கொள்கிறார்கள்.
8. ஏசுநாதர் கட்டளைகளைப் பின்பற்றினார்கள். எல்லா நபிமார்களையும் நம்பினார்கள். (மத்தியு 5:17.)
திருகுரானிய வசனங்கள் 3:84, 2:285 கூறுவது போல் முஸ்லிம்களும் அப்படியே செய்கிறார்கள்.
9. ஏசுநாதரின் தாயார் மேரி (மர்யம் அலைஹிஸ்ஸலாம்) தன் முழு உடலையும் மறைத்து, தலையில் முந்தானை (ஹிஜாப்) இட்டு ஒழுக்கமான ஆடை அணிந்திருந்தார்கள். (திமோத்தி 2:9, ஜெனஸிஸ் 24:64-65, கொரின்தியன்ஸ் 11:6.)
முஸ்லிம் மாதர்கள் திருக்குர்ஆன் போதிப்பது போல் இவ்வாறே ஒழுக்கமாக ஆடை அணிகிறார்கள்.
(திருக்குர்ஆன் 11:6.)
10. ஏசுநாதரும் பைபிலில் கூறப்படும் ஏனைய நபிமார்களும் 40 நாட்கள் வரை நோன்பு நோற்று உள்ளார்கள். (எக்சோடஸ் 34:28, தானியல் 10:2-6, கிங்ஸ் 19:8, மத்தீவ் 4:1.)
இதையே முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் செய்கிறார்கள். முஸ்லிம்கள் கடமையான 30 நாட்கள் நோன்பை நோற்க வேண்டும். (திருக்குர்ஆன் 2:183)
சிலர் ஒருபடி மேலேயேச் சென்று, 6 நாட்கள் மேலதிக நோன்பையும் நோற்று நற்கூலிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
11. ஒரு வீட்டினுள் நுழையும் போது, “இந்த இல்லத்திற்கு சாந்தி சமாதானம் உண்டாகட்டும்” என்று கூறுமாறு ஏசுநாதர் கற்பித்துக் கொடுத்தார்கள். (லூக் 10:5)
ஏசு நாதர் செய்த, கற்பித்துத் தந்த அதனையே முஸ்லிம்களும் செய்கிறார்கள். நாம் இல்லங்களுக்குள் நுழையும்போதும் மற்றவர்களுடைய இல்லங்களுக்குள் நுழையும்போதும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுகிறோம். (திருக்குர்ஆன் 24:61)
12. ஏசுநாதர்’கத்னா’ செய்யப்பட்டிருந்தார்கள். முஸ்லிம் ஆண்கள் கத்னா செய்யும்படி கேட்கப்பட்டுள்ளார்கள். ஏசுநாதர் எட்டு நாட்கள் பாலகராக இருக்கும்போது கத்னா செய்யப்பட்டார்கள். (லூக் 2:21)
முஸ்லிம்கள் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டுள்ளார்கள். (திருக்குர்ஆன் 16:123)
நபி முஹம்மத் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், “நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் 80 வயதாக இருக்கும்போது கத்னா செய்துக்கொண்டார்கள்.”
13. ஏசுநாதர் அரமாயிக் மொழியையே பேசினார்கள். இறைவனை “எல்லாஹ்” என்று அழைத்தார்கள். அது “அல்லாஹ்” என்றே உச்சரிக்கப்படும். அரமாயிக் “எல்லாஹ்”வும் அராபிய “அல்லாஹ்”வும் ஒன்றே.
ஆகவே ஏசுநாதரின் இறைவனும் முஸ்லிம்களினதும் முழு மனித குலத்தினதும் இறைவனும் ஒன்றே என்பதையும் அவன் மாத்திரமே உள்ளான் என்பதையுமே இவை யாவும் நிரூபிக்கின்றன
இப்போது சொல்லுங்கள், யார் ஏசுநாதரை உண்மையாகப் பின்பற்றுபவர்கள்
E. Adebayor
E. எடேbபேயர
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்
நல்லதைப் பகிருங்கள், நற்கூலி உண்டு
உலக முஸ்லிம் செய்திகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள, எம் பக்கத்தை லைக் செய்து எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்:
உலக முஸ்லிம்
ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்! பீதியை கிளப்பவேண்டாம்

மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு,

மோடி.
கேள்வி :- டொன் ஒசோக் அவர்களே, அடிக்கடி பார்ப்பனர்களை விமர்சிக்கிறீர்களே?  பார்ப்பன பெண் யாரையாவது காதலித்து தோல்வியடைந்தவரா நீங்கள்?
-பாஷ்யம் ரங்கநாதன்,
சிறீரங்கம்
பதில்:- பார்ப்பனக் காதலி பற்றி கடைசியில் சொல்கிறேன். கண்முன் இருக்கும் பிரச்சினையில் இருந்து துவங்குவோம். மோடியின் துக்ளக் தர்பாரில் நடக்கும் இந்த 1000/500 ரூபாய் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல், இந்தக் கொடுமையை இணையத்தில் ஆதரித்துப் பேசுகின்றவர்களில் 10க்கு 9பேர் பார்ப்பனர்கள்.
இரவு 9மணிக்கு மோடி பஞ்ச் டயலாக் பேசினால் 8மணி 59நிமிடத்தில், “ஆஹா ஓஹோ.. இதனால இந்தியா வல்லசரசு ஆயிரும். அதுவரைக்கும் பக்கத்து வீட்ல கடன் வாங்குங்க. கிட்னியை வைத்து சட்னி வாங்குங்க. ஜெய்ஹிந்த்,” என்று வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
பூணூல் தெரிய சட்டை அணிந்துகொண்டு, “மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு. சாட்டிலைட்டுகுள்ள கேக்கு வச்சிருக்காரு…,” என வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
“ஏழைங்க எல்லாம் எப்படி சில்லறை இல்லாமல், ரூபாய் நோட்டு இல்லாமல் சாப்பிடுவாங்க?” என யாராவது கேட்டால், “ரேஷன்ல அரிசி ஃப்ரீதானே? நாட்டுக்காக ரெண்டு நாள் பட்டினி கிடந்தா ஒன்னும் செத்துவிட மாட்டாங்க,” என க்ரெடிட் கார்டு திமிரில் பதில் போடுகின்றவன் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.
தேவர் ஜெயந்தி வந்தால் முதல் ஆளாக வாழ்த்து போடுவதுபோல அந்த சாதி இளைஞர்களை உசுப்பிவிட்டு குளிர்காயும் ஆள் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.
இன்று மட்டுமல்ல, காலங்காலமாய் ஏழைப் பாழைகள், உரிமைக்காக போராடுபவர்கள், கல்விக்காக ஏங்குபவர்கள் இப்படி அனைவரையும் ஈவிரக்கமின்றி நசுக்க முற்படுபவர்களில் முதல் வரிசையில் நிற்பவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
சரி இவர்கள் செய்யும் அநியாயத்தில் கொஞ்சமேணும் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
இடஒதுக்கீடு ஏதோ நாட்டையே கெடுப்பதுப்போல பொய்பேசும் இவர்கள் மேனேஜ்மண்ட் சீட்டுகள் இருப்பதை பற்றி என்றாவது பேசியிருக்கிறார்களா?
ஏழையிடம் பணம் பிடுங்குவதில் காட்டும் அக்கறையை ஏன் ஸ்விஸ் வங்கியில் குவிந்திருக்கும் கறுப்புப்பணத்தை பிடிங்குவதில் காட்டவில்லை மிஸ்டர்.மோடி என கேட்டிருக்கிறார்களா?
நீதிமன்றம் கேட்ட 500கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய பணக்கார கடன்காரர்களின் லிஸ்டை ஏன் இன்னும் கொடுக்கவில்லை என யாராவது மோடியை கேட்டிருக்கிறார்களா?
நாய் மேல் காட்டும் பரிவை, காளைகள் மேல் காட்டும் பரிவை உடுமலை சங்கர்கள் மேல் காட்டியிருக்கிறார்களா? ஏதாவது சாதி ஒழிப்பு, மறுப்பு போராட்டங்களில் தென்பட்டிருக்கிறார்களா? அல்லது ஒரு கண்டனமாவது தெரிவித்திருக்கிறார்களா?  இட ஒதுக்கீட்டை ஒருபக்கம் திட்டினாலும், இன்னொருபக்கம் தலித்துகளுக்கு எதிராக ‘இட ஒதுக்கீட்டுப்போராளி’ அய்யா ராமதாஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினால் நெய் ஊற்றி எரியவிட முதல் ஆளாக போய் அமர்ந்திருக்கிறார்கள்.
சரி. அப்படியே அவர்களில் யாராவது ஒருவன் மதவாதத்தை எதிர்த்து, மோடியை எதிர்த்து, அநியாயத்தை எதிர்த்து எழுதினால், “ஆஹா நமக்கொரு தோழன் கிடைத்துவிட்டான்,” என நிமிர்வதற்குள், அவனும் அரேபிய ஆடுகளை ஏமாற்றிக் கூட்டிப்போய் யாக நெருப்பில் போடுகின்றவனாக அல்லவா இருக்கிறான்?
இவர்களுக்கு 3000 ஆண்டுகளாக சமூகப்படிநிலையில் ஆண்டு அனுபவிக்கும் தங்கள் இடத்தை காத்துக்கொள்ள சாதி வேண்டும்.  அதற்கு மதம் வேண்டும்.  அதற்கு அழகான பட்டு அங்கியாக தேசப்பற்று என்ற சொல்லாடல் வேண்டும்.  அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள்.
கேட்டால், முன்பு போல் இல்லை அவர்கள் எல்லாம் சாந்தசொரூபிகள் என்பீர்கள்.  தனியார் துறையில் வேலை பார்க்கும் எவனாவது ஒருவனை தன் டூவீலரிலோ, அல்ல கணிணியிலோ பெரியார் படத்தை ஒருமாதம் வைக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்.  ஒன்பது ஓட்டைகளிலும் ரத்தம் வரும் அளவிற்கு வேலையைக் காட்டுவார்கள்.     திராவிட இயக்கம் ஆழ வேரூன்றியுள்ள தமிழகத்திலேயே இதுதான் நிலைமை.
எனக்கும் தேசப்பற்று உண்டு. தேசம் என்பது அந்த தேசத்தின் மக்கள் தானேயொழிய, தேசப்பற்று என்பது அந்த மக்களின் மீது நாம் கொள்ளும் பற்றுதானேயொழிய, தேசம் என்பது தனியாக வானத்தில் இருந்து குதித்தது இல்லை. ஒருநாளைக்கு நூறு ஜெய்ஹிந்த் சொல்லும் ஆட்களை விட எனக்கு தேசப்பற்று நிறையவே உண்டு.
சார். நான் சாதி எல்லாம் பார்ப்பதில்லை.  மக்கள் விரோதமாக எழுதும் கயவர்களாக பார்த்து கண்டிக்கிறேன்.  அவர்களில் 99% பேர் பார்ப்பனர்களாக இருப்பது என் தவறில்லை.

பூணூல் தெரிய சட்டை அணிந்துகொண்டு, “மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு

காதலியைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? ஆம். சிறு வயதில் எனக்கொரு பார்ப்பனக் காதலி இருந்தாள்.  அவள் பத்து க்ரெடிட் கார்டுகள் வைத்துக்கொண்டு தேசப்பற்று பேசும் பெரிய பணக்காரி எல்லாம் கிடையாது. இந்நேரம் தன் குழந்தைகளை வைத்துக்கொண்டு பேங்கிலோ, ஏடிஎம்யிலோ வரிசையில் நின்று கொண்டிருப்பாள். சில்லறைக்காக வெயிலில் அலைந்து கொண்டிருப்பாள்.  சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு இந்நேரம் அவளைப் போல எத்தனையோ பெண்கள்  சிரமப்பட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் சேர்த்துதான் என்னைப் போன்றவர்கள் காட்டுக்கத்தல் கத்திக் கொண்டிருக்கிறோம்.

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left