Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழா

  1. ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழாவை ஆப் செய்து விட்டார்கள் தேச பக்தகோடிகள்.
  2. தேசியக் கொடியைக் கீழே போட்டு இழிவுபடுத்தினார்கள், முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல விசயங்களில் உரிமை மறுக்கிறது என்று சொல்கிறார்கள்,
  3. காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி துரோகம் செய்து விட்டார் என்கிறார்கள்,
    ஹிப் ஆப் தமிழா
  4. சொல்லப்போனால் மோடிஜீயை நார் நாராகக் கிழிக்கிறார்கள், சில அமைப்புகள் போராட்டத்தைத் திசை திருப்புகின்றன அதனால்தான் நான் போராட்டத்திலிருந்து வாபஸ் வாங்கி விட்டேன் என்று ஹிப் ஆப் தமிழா ஆதி சொல்ல,
  5. சபாஷ் நீதான்டா உண்மையான தமிழன் என்று பாஜக எச்சி.ராசா சொல்ல, ஒரே கூத்தும் கும்மாளமுமா கெடக்குது.
  6. முதலில் ஒன்றை இங்கே புரிந்து கொள்ள வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் மத்திய அரசின் துரோகத்தையும் மாநில அரசின் நாடகத்தையும் எதிர்த்துதான்
  7. துவக்கப்பட்டது. பீட்டா என்ற அமைப்பிற்கு எதிராகப் போராட்டம் துவக்கப்படவில்லை.
  8. காரணம் பீட்டா என்ற அமைப்பு ஒரு தனியார் அமைப்பு, அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளவர்கள்
  9. . ஆகப் பீட்டா என்ற அமைப்பு வெறும் பேனர் மட்டும்தான்.
    இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களை இந்த ஹிப் ஆப் தமிழா ஆதி போன்ற சோமாரிகள் உள்ளே புகுந்து என்னவோ பீட்டா என்ற அமைப்புதான் எல்லாவற்ற்கும் காரணம் என்பது மாதிரியும்,
  10. மத்திய அரசு ஐஸ் குச்சியைச் சப்பிக் கொண்டு போஸ் கொடுக்கும் சின்னக் குழந்தை மாதிரியும் பீட்டா மட்டும்தான் ஜல்லிக்கட்டை தடை செய்தது மாதிரியும் பீட்டா பீட்டா எனப் பீட்டாவை மட்டும் வில்லனாக்கி மக்களைத் திசை திருப்பி விட்டார்கள்.
  11. ரயில் நிலையத்தில் வேகமாக வரும் ரயிலை ஸ்டேசனில் ட்ராக் மாற்றி விடுவதைப் போல ஹிப் ஆப் தமிழா ஆதி போன்ற பாஜக புல்லுருவிகள் போராட்டத்திற்குள் புகுந்து மக்களைத் திசை மாற்றி விட்டனர். பீட்டா என்பது வெறும் கிளைதான், அதன் ஆணிவேர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்பதை மக்கள் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்கள். பீட்டாவைத் தடை செய்தால் அடுத்து டாட்டா என்ற பெயரில் வேறு அமைப்பு வரும். ஆகக் கிளையை வெட்டுவதை விட ஆணி வேரைப் பிடுங்குவதுதான் சரியானது என்பதை உணர்ந்துதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தை மத்திய அரசை நோக்கித் தங்களை போராட்டத்தை மீண்டும் திருப்பினார்கள்.
  12. தேசியக் கொடியை அவமதித்தார்கள் என்று ஆதி சொல்கிறார். ஆனால் மரத்தமிழர்கள் எப்போதும் தேசியக் கொடியை அவமதித்தார்கள் என்று சொல்வதெல்லாம் பச்சைப் பொய். தேசியக் கொடியைத் தலைகிழாக ப்ரொபைலாக வையுங்கள் என்று சிலர் சொன்னார்கள்,
  13. அதைத்தான் அவமதித்து விட்டார்கள் என்று சொல்கிறார் ஆதி. இது அவமதிப்பது அல்ல! நாட்டு மக்களின் கொந்தளிப்பில் எழுந்த ஒரு வகையான எதிர்ப்பு. இதைத்தான் ஆதி அவமரியாதை என்கின்றார்.
  14. ஆனால் இன்றைக்கு அவர் போய்ச் சேர்ந்திருக்கும் இடத்தில் உள்ளவர்கள் அதே தேசியக் கொடியை விரித்து வைத்துச் சீட்டு விளையாடினார்களே! அதைக் கேட்டாரா?
  15. பிரதமர் மோடி தேசியக் கொடியில் முகம் துடைத்தாரே! அதைக் கேட்டாரா?
  16. மலேசியாவிற்கு உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் இந்தியாவின் தேசியக்கொடி தலைகீழாக இருந்ததை ஜப்பான் நாட்டு அதிபர் சுட்டிக் காட்டி கொட்டு வைத்தாரே! அது அவமரியாதையாகத் தெரியவில்லையா?
  17. ஹிப் ஆப் தமிழா ஆதியைப் பாராட்டும் எச்.ராசா உறுப்பினராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அலுவலகங்களில் இன்றுவரை தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்ற கொள்கை வைத்துள்ளார்களே! அது அவமரியாதையாகத் தெரியவில்லையா  ஹிப் ஆப் தமிழா ஆதி?
  18. பாவம் நீலச்சாயம் வெளுத்துப் போன நரியைப் போல ஹிப் ஆப் தமிழா ஆதியின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.
  19. அஹ்மத் கபீர்.

ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்

 

அலை அலையாக ஜல்லி கட்டுக்கு ஆதரவு தரும் வெளி நாட்டு  தமிழர்கள்

பீட்டாவே த‌மிழ‌ர்க‌ளின் மிக‌ப் பெரிய‌ எதிரி” என்று ப‌ட‌ம் காட்டிய‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! ஒரு க‌ண‌ம் சிந்திப்பீர். த‌மிழ‌ர்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி, வீடுக‌ளை எரித்த‌து, சொத்துக்க‌ளை நாச‌மாக்கிய‌து த‌மிழ‌க‌ காவ‌ல்துறை தான்.
த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் இத‌ற்கு தீர்வு வ‌ந்து விடுமா? அப்போதும் இதே “த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை” தானே இருக்க‌ப் போகிற‌து? த‌னித் த‌மிழ் நாட்டில் த‌மிழ்ப் பொலிஸ் த‌மிழ‌ர்க‌ளை அடிக்காதா?
அர‌ச‌ இய‌ந்திர‌ம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் க‌ருவி தான். அது சிங்க‌ள‌ அர‌சாக‌ இருந்தால் என்ன‌, த‌மிழ் அர‌சாக‌ இருந்தால் என்ன‌, அட‌க்குமுறை ஒன்று தான். அட‌க்க‌ப் ப‌டும் ம‌க்க‌ளும் ஒன்று தான்.
இது அர‌சிய‌லில்‌ அடிப்ப‌டையான‌ பால‌ பாட‌ம். இந்த‌ நிலைமையை மாற்றுவ‌த‌ற்கு த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. அத‌ற்கொரு ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்
Written by Kalai Marx 
 
 
Copy செய்து #பகிருங்கள்… மெரினா அனைத்து லைவ் வீடியோ கமெண்ட்களிலும் போஸ்ட் செய்யுங்கள்..
044 24951490,
044 24951492,
044 24951493,
044 24951494,
044 24951495.
If police attacked anyone just dial the above Human rights commission, Share this to all….
.
காவல்துறை தாக்கினால் மேற்கண்ட human rights எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
 
நெஞ்சுக்குள் நீதி….
நேற்று போலிஸ் அடக்குமுறையை ஏவிவிட்டதும் போராட்டக்களத்தில் தம்பி தங்கைகள்…. கடற்கரையில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்ற போது மனம் பதபதைத்தது… ஒரு பெரிய அலை வந்திருந்தாலும் என்னவாகியிருக்கும் … அப்போது மீனவர்கள் அருகில் உள்ள குப்பத்தில் இருந்து ஓடி வந்த காட்சி…. அவர்களை விடுங்கள் கடலிலே பிறந்து கடலிலே வாழ்பவர்கள் …. சீமான் அங்கு ஏன் வரவேண்டும் ? அதுவும் கடல் மார்க்கமாக?
மீனவர்கள் வந்ததை பற்றி சிலாகித்து பேசுபவர்கள் இவரை பற்றி வாய் திறக்கவில்லையே…. ஏன்? அரசியலா? பாராட்டி எல்லாம் கூட பேச வேண்டாம்…. சிலர் கேவலமாக எழுதுகிறார்கள்…. அரசியல் பண்ண கடல் மார்க்கமாக சென்று இருக்கவேண்டாம்… பத்திரிக்கை பேட்டி போதுமே…. இல்லை பஸ் மறியல் பண்ணயிருக்கலாமே…. ஏன் அங்கு செல்ல வேண்டும்

கொஞ்சம் யோசிச்சு பாருங்கய்யா…
பாராட்டவேண்டாம் ….. திட்டாமல் இருங்க….

மாணவர்களே அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும்?

  1. அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே,
    வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க

    ஓர் அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை நாடு முழுமைக்கும் நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்.
  2. கடந்த ஒரு வாரக் காலமாக எந்தவொரு அசம்பாவித சம்பவமும் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறீர்கள்.
  3. இது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே குறிப்பிடத் தக்க போராட்டமாக இடம் பெறும் என்பது நிச்சயம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி இப்படி ஒன்றுபட்டு நின்று போராடியதற்கு முன்னுதாரணம் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    ஜல்லிக்கட்டு தடை
  4. போராட்டத்தின் துவக்கத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமே கோரிக்கையாக இருந்தது, பிற்பாடு அது பல்வேறு பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாக மாறியது.
  5. காவிரி நீர், விவசாயிகள் தற்கொலை, நீட் நுழைவுத் தேர்வு எனப் பல பிரச்சினைகளுக்காகவும் குரல்கள் எழுந்தன. அனைத்துக்கும் மையமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி என்ற கோரிக்கையே இருந்தது.
  6. உங்கள் கோரிக்கையின்படி அரசு இறங்கிவந்து, மத்திய அரசுடன் கலந்து பேசி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டை நடத்த வழிசெய்து விட்டது. ஆக, உங்கள் போராட்டத்துக்கு நேற்றே வெற்றி கிட்டி விட்டது.
  7. இந்தச் சூழலில் போராட்டத்தை நிறுத்தாமல் பொதுமக்களை வாட்டும் மிக முக்கிய பிரச்சனைகள் குறித்தும் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தது உங்கள் நல்ல மனதைக் காட்டும் அடையாளமாகவே பார்க்கிறோம்
  8. . ஆயினும், இது மிகவும் அபாயகரமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
    மெரினாவில் மாணவர்கள் போராட்டம்

    எந்தவொரு போராட்டத்தையும் எப்போது நடத்த வேண்டும் என்பது மட்டுமல்ல, எப்போது முடித்துக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.
  9. அது தவறிப்போகும்போது, போராட்டத்தைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகள் உள்ளே நுழையக்கூடும். அதன் காரணமாகத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்படக்கூடும். அதன் பின்விளைவாகத் தமிழக அரசியல் சூழலே மாறக்கூடும்
  10. . அதனினும் முக்கியமாக, இத்தனை நாளும் அமைதியாகப் போராடியது எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகப் போகும்.
  11. நாட்டுக்கே முன்னுதாரணமாக நடைபெற்ற போராட்டம் என்பதெல்லாம் மறந்து போகும்,
  12. கடைசியில் நடந்த கசப்பான சம்பவங்கள் மட்டுமே நினைவில் பதியும்.
  13. ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள் தமது போராட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொண்டு இல்லம் திரும்புமாறு வேண்டுகிறோம்.
  14. உங்கள் முன்னே போராடுவதற்கு நிறையவே பிரச்சினைகள் இருக்கின்றன. இப்போது போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்.
    ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்
  15. இந்தப் போராட்டத்தில் கிடைத்த அனுபவங்களை மதிப்பிடுங்கள், பரிசீலியுங்கள்,
  16. எதை இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம், எதை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கலாம், வெற்றி கிடைத்தது எதனால் என்று யோசியுங்கள்.
  17. இன்னும் தெளிவடையுங்கள். அடுத்த போராட்டத்தில் இன்னும் தெளிவான கோஷங்களுடன், இன்னும் வீரியத்துடன் இறங்கலாம்.
  18. இந்த நாட்டின் எதிர்காலம் நீங்கள்தான். எதிர்காலத்தை அனுபவிக்கப் போகிறவர்கள் மட்டுமல்ல, தீர்மானிக்கப் போகிறவர்களும் நீங்கள்தான்.
  19. உங்கள் செயல் இனி வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், ஒரு பாடமாக இருக்க வேண்டும். கசப்பான நினைவுகளின் பதிவாக இருந்துவிடக் கூடாது.
  20. நீங்கள் அடைந்திருப்பது உண்மையான – முழுமையான வெற்றி. அவசரச்சட்டமும், அதன் அடிப்படையில் சட்ட சபையில் நிறைவேற்றப்பட இருக்கிற சட்டமும் முழுமையானவை. உங்கள் கோரிக்கையை எந்தக் குறைவுமின்றி நிறைவேற்றக்கூடியவை.
  21. தகுந்த நேரத்தில் நீங்கள் செயல்பட வேண்டியது இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் எவ்வளவு முக்கியமோ அதுபோலத் தகுந்த நேரத்தில் நீங்கள் உங்கள் செயல்பாட்டைத் தற்காலிகமாய் நிறுத்தி வைப்பதும் மிக மிக முக்கியம்.
  22. இதனைப் புரிந்து கொண்டு, இத்தனை நாட்களும் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த, உங்களை நம்பியிருக்கும் பெற்றோர்,
  23. குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்காக, போராட்டத்தை முடித்துக்கொண்டு, இயல்புநிலைக்குத் திரும்புமாறு வேண்டுகிறோம்.
  24. இப்படிக்கு
    உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
    நாளைய தமிழகம்
    # வழக்கத்துக்கு மாறாக டேக் செய்வதற்கு நண்பர்கள் மன்னிக்கவும். அதிமுக்கியம் என்பதால் செய்கிறேன்.
    # இது சரியென்று உடன்பட்டால் உடனே உங்கள் காலக்கோட்டில் காபி பேஸ்ட் செய்து பகிரவும்.
    – Shan Karuppusamy

பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..

பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..

ஜல்லிக்கட்டு தடை நீக்க மாணவர்கள் போராடியது ,அரசியல் ஆக்கப்பட்டது , அதாவது மாணவர்கள் போராடியது  தங்கள் அரசியல் உரிமைக்காக தான் ஆனாலும் அவர்கள் அந்த நோக்கத்திற்காக எந்த அரசியல் கட்சி அல்லது எந்த ஒரு தனிப்பட்ட நபரை முன் நிறுத்தி அவர்கள் போராட வில்லை ஆனால் அவர்கள் போராட்டம் அரசியல் ஆக்க பட்டு விட்டது நேற்று இரவு அதற்கான முதல் அத்யாயம் ஆரம்பம் ஆனது. இன்று காலை முதல் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள பட்டது , மாணவர்கள் தங்கள் உரிமைக்காக ஜன நாயக முறையில் போராடி கொண்டு இருக்கையில் காட்டு மிராண்டி தனமாக அவர்கள் தாக்க  பட்டர்கள் மாணவர்கள் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தான் பார்த்து கொண்டார்கள் மாணவர்கள் மேற்கொண்டது அரசியல் அற்ற அரசியல் , ஆனாலும் ஆளும் வர்க்கம் இப்படி தங்கள் சுயரூபத்தை காட்டி விட்டது ஆனாலும் சென்னையில் கோடம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று தரமணியில் டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரை ஆங்காங்கே சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பதற்றமும் நிலவி வருகிறது
  பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!.. 
மெரினாவில் உள்ள காவல்துறையினரை சிதரிக்கடிக்க வேண்டும் என்றால், சென்னை முழுக்க சாலைமறியல் நடத்தப்பட வேண்டும். அதுவும் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும்,
இனி மெரினாவிற்கு யாரும் செல்ல இயலாது, அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. அண்ணாசாலையில் கூடுங்கள், அண்ணா சாலை மொத்தமாக ஸ்தம்பித்தால், காவல்துறை அங்கே அதிகம் தேவைப்படும்.
சென்னையில் எந்த நேரமும் வன்முறை நிகழலாம், அதற்காக சில சமூக விரோதிகள் காத்திருக்கின்றார்கள்.
நமக்கு வன்முறை தேவையில்லை, போராட்ட களம் என்பது மெரீனா மட்டும் அல்ல, அது சென்னை மொத்த நகரமும் போராட்டக்களம்தான் என்ற நிலை உருவாக வேண்டும்.
– பீட்டா என்ற அமைப்பு தடை செய்யப்படும் வரை நமது போராட்டம் ஓயாக் கூடாது.
அந்த நாய்கள் எப்படியும் தடை வாங்கிவிடுவார்ர்கள்.

.https://www.facebook.com/SunNewsTamil/videos/1332033723520007/

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left