Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜோதிமணி எதிர்கட்சிகளுக்கு ஓர் அறிக்கை

ஜோதிமணி எதிர்கட்சிகளுக்கு ஓர் அறிக்கை

ஜோதிமணி எதிர்கட்சிகளுக்கு ஓர் அறிக்கை, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் 2004 ல் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு அரசு உத்திரவு பிறபிக்கப்பட்டது
அப்பொழுது நான் கவுன்சிலராக பொறுப்பில் இருந்தேன் குடிநீர்,விவசாயம் இவற்றைக் கருத்தில் கொண்டு 5 ஆண்டுகாலம் மணல் அள்ளுவதற்கு எதிராக விவசாயிகள்,பொதுமக்களைத் திரட்டிப் போராடி 2008 ல் நீதிமன்றத்தில் நிரந்தர தடை ஆணையை பெற்றுள்ளேன்!
இத்தடை உள்ள பகுதிகளில் நீதிமன்றத் தடை ஆணை இருப்பதால் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கமுடியாது
யாரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வெளியூறுக்கு விற்பனை செய்ய முடியாதபடி ஊர் கண்காணிப்பு எங்கள் பகுதியில் அமலில் உள்ளது எப்பொழுதும் இருக்கும்
அதே நேரம் தற்பொழுது கரூர்,மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் காவிரி ஆற்றில் மணல் உள்ள பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை நடந்துவருகிறது திருச்சி மாவட்ட நிர்வாகம் உள்ளுர் தேவைகளுக்கு மட்டும் மாட்டு வண்டியில் மணல் அள்ள முறையாக அனுமதி சீட்டு வழங்கியுள்ளது

மாட்டு வண்டிக் காரர்களிடம் பணம் பறிப்பது

ஆனால் கரூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் கரூர் மாவட்ட நிர்வாகம் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்காமல் தடுத்து, இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபடுவது
தாங்களே அனுமதி இல்லாமல் மாட்டுவண்டியில் மணல் ஓட்டி லாரியில் ஏற்றி வெளியூறுக்கு விற்பனை செய்வது,மாட்டு வண்டிக் காரர்களிடம் பணம் பறிப்பது என்று தொடர்ந்து அராஜகத்தில் இறங்கியுள்ளனர்  இதுதான் கரூரில் அவர்கள் ஆற்றிவரும் ஒரே மக்கள் சேவை!
இதனால் ஆற்றங்கரையில் இருந்தும் ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு மணல் கிடைக்காமல் கரூரில் இருந்து வெளியூறுக்கு விற்பனை செய்யப்பட்ட அதே மணலை,வெளியூரிலிருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது
தேர்தல் பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டி ஓட்டிப் பிழைக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவரை மாட்டுவண்டி விவசாயிகளோடு சந்தித்து மணல் சேமிப்பு அதிகம் உள்ள இடங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளூர் தேவைகளுக்கு மட்டும் மணல் அள்ள
மாட்டு வண்டிகளுக்கு சட்டப்படி முறையான அனுமதி வழங்கும்படியும்,
மாட்டுவண்டியில் மணல் எடுத்து யாரவது வெளியூருக்கு லாரியில் ஏற்றி விற்பது தெரிந்தால் தயவுதாட்சண்யம் இல்லாமல் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படியும்

செந்தில் பாலாஜி

சட்டவிரோதமாக ஆளுங்கட்சியின் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடும் இயந்திரங்களை பறிமுதல் செய்து உடனடியாக அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வாங்கல் வனப்பகுதியில் சட்டவிரோதமாக 200 லோடு மணல் குவிக்கப்பட்டிருப்பது கவனத்திகு வந்தது. உடனடியாக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுபினர் செந்தில் பாலாஜி மாவட்ட வருவாய்த்துறை ஆய்வாளர்,மாவட்ட வனத்துறை அதிகாரி இவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதால் நடவடடிக்கை எடுக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மணல் விசயத்தில் எவ்விதமான சமரசத்திற்கு அன்றும்,என்றும் இடமில்லை என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.
நான்கு நாட்களாக வேலை மெனக்கெட்டு வழக்கம்போல கடுமையாக உழைத்து பொய்,அவதூறுகளை பரப்பிய பிஜேபி / ஆர் எஸ் எஸ் ஆதரவு இணையதளத்திற்கும், கரூர் மாவட்டத்தில் செயல்படும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும், ஆளும்கட்சியின் அதிகார முகமூடி அணிந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த அனைவருக்கும் சகோதரியாக ஒரு இலவச அறிவுரை  உங்கள் சக்தியை மக்களுக்குப் பயனுள்ள நல்லவழிகளில் பயன்படுத்துங்கள்
செந்தில் பாலாஜி ஜோதிமணி

மேலும் தொடர்ந்து பொய்செய்திகளை பரப்பும் வரலாற்றுக் கடமையை செய்ய விரும்பினால் இன்னும் ஐந்தாண்டுகள் இருக்கிறது
களைப்படைந்து விடாமல் இருக்க கொஞ்சம் பொறுமையாகப் பொய் செய்திகளைப் பரப்புங்கள். அவற்றை வழக்கம்போல புன்னகையோடு, நிதானமாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் எனது அன்பு!💐😀
செ.ஜோதிமணி
பாராளுமன்ற உறுப்பினர்,கரூர்

நாளை நாடாளுமன்றம் வருகிறது எம் திராவிடர் படை

நாளை நாடாளுமன்றம் வருகிறது எம் திராவிடர் படை

காத்திரு பகையே நாளை நாடாளுமன்றம் வருகிறது எம் திராவிடர் படை இதுவரை பார்த்திருந்த முகமன்று அஞ்சிபிழைத்த அருகதையற்றோரை கண்டு மகிழ்ந்திருந்ததெல்லாம் காற்றோடு போனது
கடூம்சீற்றமாய் அறநெறியோடு ஆற்றல் நல்படை வருகிறது  சொல் செயல் இரண்டும் சமநேர்கோடோடு சுட்டெரிக்கும் சூரியனின் பிள்ளைகள் வருகிறார்கள்
அணுகழிவு எம்மீது கொட்டலாமென்ற இருமாப்பை தகர்த்தெரிய
நீட் எனும் அரக்கனை எம் இன துரோகியை கொண்டே எம் கண்ணில் குத்திய கொடுஞ்செயலுக்கு பழிதீர்க்க
தமிழகத்தின் மறைமுகமாய் ஆட்சி செய்யும் பாசிசத்தின் சங்கறுக்க தளபதி படை வருகிறது காத்திரு பகையே
கர்நாடக ஒன்றும் குப்பை மேடல்ல என்று பாஜக எடியூரப்பா சொல்கிறார் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்

இங்கே ரொட்டி துண்டிற்கு வாலாட்டும் தமிழிசை போன்ற கருங்காலிகள் அணுக்கழிவை கொட்டுவதால் ஆபத்தில்லை என்கிறது  தண்ணீர் தட்டுபாடு ஏன் என்றதற்கு
எட்டாண்டுக்கு முன்பு ஆண்ட திமுகவும் காங்கிரஸும் காரணமாம் 

மும்மொழி கொள்கை என்னானதென்றால் திமுகவை கேட்கவேண்டியதுதானே சேக்கிழார் பதில் சொல்கிறார் .. புளித்தமாவிற்கெல்லாம் உலகத்தர செய்தியை வெளியிட்டு தண்ணீர் பஞ்சத்தை மறக்கடிக்க நினைக்கிற நான்காம் தூண்களை இனியும் நம்புவதென்பதென்பது முட்டாள்கள் செயல் 
பதினொரு பேரின் தகுதிநீக்க வழக்கென்னானது என கேள்வி எழுப்ப முடியவில்லை நீதிமன்றம் வாய்மூடி இருக்க ‍சொல்கிறது 
தகுதியில்லாதவன் ஐந்தாண்டு முடியும் வரை பதவியில்  வாக்குபதிவு இயந்திரம் பதிவைவிட அதிகம் காட்டுவதை தேர்தல் ஆணையமே ஒப்புகொண்டு ஜனநாயகம் வென்றதென முரசு கொட்டுகிறது
இப்படி நிறைய அநீதிகள்  இனியும் பொறுப்பதோ.


சிறந்த ஜனநாயகத்தை படிப்பிக்க .. தலைசிறந்த ஆசிரியர்களை அனுப்புகிறது தமிழகம் .. அறம் தவறா ஜனநாயக மரபுகளை மறந்து போன இந்தியாவிற்கு பாடம் எடுக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் .. காயிதெ மில்லத்தையும் அறிஞர் அண்ணாவையும் இரா.செழியனையும் , மாறனையும் தந்த தமிழகம் இன்று புதிய எழுச்சிமிகு இளைஞர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது .. அனுபவமும் கொண்டவர்களும் புதிய ஆளுமைகளையும் பல்வேறு துறை சார்ந்தவர்களையும் இலக்கியவாதிகளையும் மக்கள் தொண்டர்களையும்
அனுப்புகிறது .. இனி தமிழகத்திற்கு ஒரு கேடு எனில் இந்த புரட்சிகாரர்கள் பொங்கியெழுவார்கள்
மேசையை தட்டி பூயுட்டிபுல் காஷ்மீர் என்றவரை பார்த்து களித்திருந்த இந்திய நாடாளுமன்றம் இனி பி கேர்புல் இந்தியா என கேள்வி கணைகளை தொடுக்கும் படைவீர்களை காண போகிறது ..
..
அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு .. ஜனநாயகத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட தமிழர் படை இது தளபதி எனும் ஆற்றல்மிகு தலைவரின் வழிகாட்டுதலோடு .. நாடுவிரும்பிகளாய் நாட்டுமக்களின் நலம் விரும்பிகளாய் மொழி இனம் கலாச்சார காவலர்களாய்

பகுத்தறிவு பகவலவனின் ஒளிச்சுடர்களாய் .. கலைஞர் பெருமகனிடம் நேரடி பயற்சி பெற்ற தளபதிகளாய் வருகிறார்கள் ..
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
..
காத்திரு பகையே ..
..
ஆலஞ்சியார்

ம‌த‌வாதிக‌ளின் பார்வையில் க‌ம்யூனிச‌மும் ஒரு "போத‌னை"

ம‌த‌வாதிக‌ளின் பார்வையில் க‌ம்யூனிச‌மும் ஒரு “போத‌னை”

ம‌த‌வாதிக‌ளின் பார்வையில் க‌ம்யூனிச‌மும் ஒரு “போத‌னை” தான். ஏனெனில் அவ‌ர்க‌ள் அப்ப‌டித் தான் வ‌ள‌ர்க்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். மசூதிக‌ளில் குரான் போதிப்ப‌து மாதிரி, “கம்யூனிச‌ நாடுக‌ளில் க‌ம்யூனிச‌ம் போதிக்கிறார்க‌ள் போலும்” என்று சிறுபிள்ளைத்த‌ன‌மாக‌ நினைக்கிறார்க‌ள்.
ஒரு வாத‌த்திற்கு, பொஸ்னியா ப‌ற்றிய‌ இவ‌ர‌து கூற்றை ச‌ரியென‌ எடுத்துக் கொள்வோம்.
பொஸ்னியாவில் சேர்பிய‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது முஸ்லிக‌ளுக்கும் க‌ம்யூனிச‌ம் போதித்து இருப்பார்க‌ள் தானே? உண்மையிலேயே அது ந‌ட‌ந்திருந்தால், இன்று வ‌ரை சேர்பிய‌ர்களும், முஸ்லிம்க‌ளும் த‌ம‌து இன‌, ம‌த‌ அடையாள‌ங்களை துற‌ந்து, ம‌னித‌ர்க‌ளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்திருப்பார்க‌ள். யுத்தமும் ந‌ட‌ந்திருக்காது. ஏனெனில் கம்யூனிச‌ம் ச‌கோத‌ர‌த்துவ‌த்தை போதிக்கிற‌து.

உண்மையில், யூகோஸ்லேவியா சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில், பொஸ்னியாவில் தான் பெரும‌ள‌வு க‌ல‌ப்புத் திரும‌ண‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌ன‌. க‌ம்யூனிச‌ம் தான் சேர்பிய‌ர்க‌ளையும், முஸ்லிம்க‌ளையும் ஒன்று சேர்த்து வைத்திருந்த‌து. ஆனால் தொண்ணூறுக‌ளுக்குப் பிற‌கு த‌லைதூக்கிய‌ தேசிய‌வாத‌மும், ம‌த‌ அடிப்ப‌டைவாத‌மும் அந்த‌ ம‌க்க‌ளை பிரித்து வைத்த‌து.
பொஸ்னிய‌ போருக்கு கார‌ண‌ம் ஒரு ப‌க்க‌ம் சேர்பிய‌ தேசிய‌வாத‌ம், ம‌றுப‌க்க‌ம் முஸ்லிம் தேசிய‌வாத‌ம். இல்லாவிட்டால் ஒரு ப‌க்க‌ம் கிறிஸ்த‌வ‌ மத அடிப்ப‌டைவாத‌ம், ம‌று ப‌க்க‌ம் இஸ்லாமிய‌ மத அடிப்ப‌டைவாத‌ம். அந்த ம‌க்க‌ள் க‌ம்யூனிச‌த்தை ம‌ற‌ந்து போன‌தால் ஏற்ப‌ட்ட‌ விளைவு. பொஸ்னியாவில் முன்பு ச‌கோத‌ர‌ர்க‌ளாக‌ வாழ்ந்த‌ ம‌க்க‌ளை, இன‌வெறியும், ம‌த‌வெறியும் தான் ஜென்ம‌ப் ப‌கைவ‌ர்க‌ளாக மாற்றின‌. இந்த‌ உண்மையை ஒத்துக் கொள்ள‌ ம‌றுப்ப‌து ஏனோ? இதை எழுதிய‌வ‌ருக்கு (Ahmed Jamsath Ahamedsha) உண்மையை பார்க்க‌ விடாம‌ல் ம‌த‌வெறி க‌ண்ணை ம‌றைக்கிற‌து.
த‌க‌வ‌லுக்காக‌: சோஷ‌லிச‌ம் (க‌ம்யூனிச‌ம் என்ப‌து வேறு) என்றால் அது ஒரு பொருளாதார‌க் க‌ட்ட‌மைப்பை குறிக்கும். பாட‌சாலையில், ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் மார்க்சிய‌ லெனினிச‌ம் த‌னிப் பாட‌மாக‌ ப‌டிப்பித்தாலும் அதை எல்லோரும் க‌வ‌ன‌மெடுத்து ப‌டிப்ப‌தில்லை. ஏனெனில் அர‌சிய‌லில் எல்லோருக்கும் ஆர்வ‌ம் இருப்ப‌தில்லை. அது ம‌னித‌ இய‌ல்பு
Written By Kalai Marx

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left